Contact us at: sooddram@gmail.com

 

மாகாணசபை முறையில் கைவைக்கும் உரிமை இரு நாடுகளுக்கும் கிடையாத  - சங்கரி

'மாகாணசபைத் தேர்தல் முறைமையானது இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்டது. அரசியல் தெரியாத தேரர்களினால் மாத்திரமன்றி இதில் கைவைக்கும் உரிமை இந்தியா மற்றும் இலங்கைக்கு கூட கிடையாது' என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்தார். 'இந்த நாட்டில் சிறுபான்மையினர் இல்லை என்று அரசாங்கம் சொல்லி வருகின்றது. அவ்வாறு சிறுபான்மை இனத்தினர் இல்லை என்ற உணர்வை அரசாங்கமே தனது நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று திங்கட்கிழமை யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இந்த நாட்டில் இருபது வருடங்களாகவே ஜனநாயகம் இல்லை. காசு கொடுத்து அனைவரையும் அழைத்துவந்து மூன்றில் இரண்டைக் காட்டி ஆட்சி நடத்துப்படுகின்றது இந்த அரசாங்கம். ஆனால், ஜனாதிபதியிடம் கூறியுள்ளேன், நாட்டை உம்மிடம் தந்துள்ளதே தவிர உம் சீடர்களிடம் தரவில்லை. நாட்டை நீர் பாதுகாக்க வேண்டுமே தவிர உமது சீடர்கள் பாதுகாக்க கூடாது. நாட்டை உம் சீடர்கள் அழிக்கின்றார்கள்' என்று கூறியதாக அவர் சுட்டிக் காட்டினார்.

'2010ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் முன்பு இனம் அழிந்து போகின்றது. ஒற்றுமையாக செயற்பட வேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம்; என கேட்ட போது யாரும் ஒத்துவரவில்லை. நான் பொய் பேசுவதில்லை, இலஞ்சம் பெற்றதுமில்லை. அதனால் நிறைய வாய்ப்புக்களை இழந்துள்ளேன்' என்றார்.

 'ஊடகத்தொழில் என்பது இன்று ஒரு பயங்கரமான தொழிலாக இந்த நாட்டில் மாறிவிட்டது. இங்கு நடக்கும் அனைத்து விடயங்களையும் 10 நிமிடங்களில் உலகம் பூராகவும் வெளிப்படுத்தக்கூடிய நிலையில் இன்றைய விஞ்ஞான உலகம் வளாந்து நிக்கின்றது.

இந்த வகையில் ஊடகங்கள் உண்மையான விடயங்களை மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டும். இவ்வாறான பயங்கரமான தொழிலை மேற்கொள்பவர்கள் தாங்கள் எழுதுவதை நன்றாக யோசித்து எழுத வேண்டும்' என்றும் வலியுறுத்தினார்.

'1959ஆம் ஆண்டு தொடக்கம் நான் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றேன். 60 வருட கால அரசியல் அனுபவத்தினை நான் பெற்றிருக்கின்றேன். இந்த அரசியலில் நான் நிறைய அடிவாங்கயிருக்கின்றேன். என்னை அழிப்பதற்கு பலர் முயற்சித்தார்கள். ஆனால் அவர்களால் என்னை அழிக்க முடியவில்லை.  என்னை எவராலும் அழிக்க முடியாது.

இந்த உலகத்தில் ஒரு மனிதனுக்கு எவ்வளவு நல்ல குணங்கள் இருக்கின்றதோ அதற்குட்பட்டவனாகவே நான் வாழந்து வருகின்றேன் என்னை அழிப்பற்கு ஆண்டவன் ஒருவனால் தான் என்னை அழிக்க முடியும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'நேர்மையாக இருந்த காரணத்தினால் பல வாய்ப்புக்களை நான் இழந்திருக்கின்றேன். கிளிநொச்சி இன்று ஒரு சிறந்த நகரமான விளங்குவதற்கு நானும் ஒரு காரணம். நான் இல்லாவிட்டால் கிளிநொச்சி இந்தளவிற்கு வந்திருக்காது' என்றார்.

'கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். இருப்பினும், யுத்தம் முடிந்த பின்னர் இராணுவத்தின் தொகையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று தெரிவித்திருந்த முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விரும்பியது. தேர்தல் முடிந்த பின்னர் எல்லோரும் ஒன்று சேரவேண்டும் என்று சம்மந்தன் அழைப்பு விடுத்திருந்தார்' என்றார்.

'இன்று கூட்டமைப்பு வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணங்களை மேற்கொண்டு வருகின்றது. இந்த பயணங்களின் போது எனக்கு ஒரு அழைப்பையேனும் விடுப்பது கிடையாது. அல்லது வெளிநாட்டில் கதைப்பதற்கு ஏதாவது யோசனை வைத்திருக்கின்றீர்களா என்றுகூட சம்மந்தன் கேட்பது கிடையாது.  ஆனால் நாடாளுமன்றத்தில் பேசும் போதும் மட்டும் ஆனந்த சங்கரி இவ்வாறு ஊடகங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறார் என்று தெரிவிப்பார்' என அவர் சுட்டிக்காட்டினார்.

'இந்த நாட்டில் சிறுபான்மையினர் இல்லை என்று நாங்கள் சொல்ல வேண்டும். அத்தகைய உணர்வை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். மாகாணசபைத் தேர்தல் முறைமையானது இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்டது. அரசியல்
தெரியாத தேரர்களினால் மாத்திரமன்றி இதில் கைவைக்கும் உரிமை இந்தியா மற்றும் இலங்கைக்கு கூட கிடையாது' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com