Contact us at: sooddram@gmail.com

 

தோழர் றொபேட் அவர்களின் 10 வது ஆண்டு நினைவு தினம்

தோழர் றொபேட் அவர்களின் 10 வது ஆண்டு நினைவு தினம் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் யாழ் பிராந்திய அலுவலகத்தில் நேற்று (14.06.2013) முற்பகல் 10.30 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது. தோழர் றொபேட்டின் உருவப்படத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சுகு மலர் ாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். கலந்துகொண்ட தோழர்கள் மலர் தூவி அஞ்சலி செய்தனர். தோழர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் தோழர் குமார், தோழர் ஞானசக்தி, தோழர் சுகு ஆகியோர் உரையாற்றினர்.

தோழர் றொபேட் கட்சி வழங்கிய எந்த ஒரு பணியையும், எந்த ஒரு பொறுப்பையும் ஏற்றுச் செயற்படுவதற்கு பின்நின்றதில்லை. நிதியில்லை என்றோ, ஆள்பலம் போதாது என்றோ ஒப்படைக்கப்பட்ட எந்த ஒரு பொறுப்பையும் அவர் தட்டிக்களித்ததில்லை. குறித்த பணியினை நிறைவேற்றுவதற்கான நிதி மூலங்களை தேடிக்கொண்டதுடன், ஆளணிகளை திரட்டிக்கொள்வதையும் தனது பொறுப்பாக ஏற்று காரியமாற்றியவர். தனது வேலைத்திட்டத்திற்கு பொருத்தமானவர்களை தேர்ந்தெடுப்பதிலும் அவர் வல்லவராயிருந்தார். என தோழர் மோகன் தனது தலைமையுரையில் குறிப்பிட்டார்.

தோழர் றெபேட் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயம் அவரோடு சிறையில் அடைக்கப்பட்டிருந்து, சிறைச்சாலையின் கொடுமைகளை அனுபவித்தவரான தோழர் குமார், தோழர் றொபேட்டின் ஆழுமை வியக்கத்தக்கதுஎனக் குறிப்பிட்டார். சிறையில் எமது கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் அவரை ரஞ்சன் தோழர் என்றே அழைக்கும் அளவிற்கு அனைவரதும் மதிப்பை பெற்றிருந்தார். என்ன நோக்கத்துக்காக அவர் தனது உயிரை அர்ப்பணித்தாரோ அதே இலட்சியத்திற்காக நாம் எம்மாலியன்ற பங்களிப்பை செய்வது தான் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலி எனவும் தோழர் குமார் தெரிவித்தார்.

1980 களிலிருந்தே தோழர் றொபேட்டுடன் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளில் பங்குகொண்டதாக தெரிவித்த தோழர் ஞானசக்தி தோழர் றொபேட் நெருக்கடியான காலகட்டங்களில் நிதிக்கஷ்டம், பாதுகாப்பு நெருக்கடி என்பவற்றுக்கு முகங்கொடுத்த போதும் தோழமை உணர்வோடும், கொள்கைப் பிடிப்போடும் செயற்பட்ட காலங்களை தோழர் ஞானசக்தி நினைவுபடுத்தினார். அவற்றை மறக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
கட்சியின்
பொதுச்செயலாளர் தோழர் சுகு தனது உரையில் தோழர் றொபேட் ஈபிஆர்எல்எவ் இல் இணைந்த பின்னர் மட்டுமல்ல அதற்கு முன்னரும் தனது ஊரில் சமூக பிரக்ஞை கொண்ட ஒருவராகச் செயற்பட்டது பலருக்கும் தெரிந்த அவரது ஊரவர்கள் நினைவு கூருகின்ற விடயமாகும். அவர் 1985 ம் வருடம் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பலத்த சித்திரவதைக்கு உள்ளானபோதும் அவரை விசாரணைக்கு உட்படுத்தியவர்களால் அவரிடமிருந்து எந்த ஒரு பயனுள்ள தகவலையும் பெற முடியவில்லை. அவரது ஓர்மம் அவரை விசாரணைக்கு உட்படுத்தியவர்களுக்கு வியப்பையும், அவர்மீது ஒரு மரியாதையையும் ஏற்படுத்தியிருந்ததை நான் அறிவேன் எனத் தெரிவித்தார். சிறையில் முகங்கொடுக்க நேர்ந்த எந்த ஒரு கஷ்டத்தையும் பிரச்சினையையும் துணிச்சலாக எதிர்கொண்டவர்.

அவர் எப்போதும் தோழர்களுடன் நெருக்கமான உறவை பேணிவந்தவர், அவர்களை மிகவும் மதித்து செயற்பட்டார். அவரைப்போன்ற திறமையுள்ள ஒருவர் தங்கள் அணிக்கு வாய்க்கவில்லை என யாழ் குடாநாட்டில் செயற்பட்ட புலிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டதை நாங்கள் அறிந்திருக்கிறோம். யாழ் மாநகர சபை உறுப்பினராக அவர் ஆற்றிய பணிகள் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் பலராலும் பாரட்டப்பட்டிருக்கின்றன. அவர் வெறுமனே இயக்கப் பணிகளில் மாத்திரமல்ல இலக்கியம், சினிமா போன்ற துறைகளிலும் ஈடுபாடு கொண்ட ஒருவராக ஆழுமையுள்ள ஒருவராக விளங்கினார் எனவும் பொதுச்செயலாளர் தனது உரையில் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com