Contact us at: sooddram@gmail.com

 

கனடாவில் 23 வது தியாகிகள் தினம் இன்று நடைபெற்றது.

கனடா ரொரன்ரோவில் இன்று பத்நாபா ஈபிஆர்எல்எவ் இனரால் 23 வது தியாகிகள் தினம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. தோழர் ஆனந்தனின் வழி நடத்தலில், தோழர்கள் சேகரன், யசீர், மதி,ரவி எனைய கனடா வாழ் தோழர்களின் ஒருங்கிணைப்புடனும் தோழர் ஜேம்ஸ் இன் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது. ஈபிடிபி, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், சுரேஸ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எவ், ரெலோ, ஈரோஸ். சம உரிமை இயக்கம், இலங்கையின் இடதுசாரிகள், முற்போக்கு கலை இலக்கிய அமைப்புக்கள், ஆர்வலர்கள் என பலதரப்பட்டவர்களும் இதில் கலந்தகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். 4 மணி நேரமாக இவ் நிகழ்வு நடைபெற்றது. மாற்றுக் கருத்தாளர்களின் தளமான இது உருவாகியிருந்தது சிறப்பு அம்சம் ஆகும். தியாகிகள் தினம் என்ற நிகழ்வுகளுக்கு அப்பால். இதில் ஒவ்வொருவரும் தமது கருத்துக்களை சுதந்திரமாக முன்வைக்குமாறு தலைவரால் அவரது தலைமையுரையில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த கால கட்டங்களில் நடைபெற்ற தவறுகளுக்கு ஏற்கனவே பல்வேறு தளங்களில் தலைமைத் தோழர்களால் மன்னிப்பும், சுயவிமர்சனமும், சுய விளக்கங்களும் முன்வைக்கப்பட்டதை நினைவு கூர்ந்து தோழர் ஜேம்ஸ் தனது உரையை ஆரம்பித்தார்.

மேலும் தமிழ் தேசிய இராணுவத்திற்கு என வலிந்த அணிதிரட்டல் நிகழ்வு தவறான செயற்பாடு என ஏற்கனவே கட்சியினால் ஏற்றுக்கொண்டதை மீண்டும் ஞாபகப்படுத்தி பேசிய தோழர் ஜேம்ஸ் 13 வது திருத்தச்சட்டம் தற்போது எங்கும் எதிலும் பேசுபொருளாக உள்ள நிலையில் முன்பு எப்போதையையும் விட இன்று பத்தமநாபாவின தேவை அதிகமாக உணரப்படுகின்றது என்று குறிப்பிட்டார். மனித நேயத்தின் உயர்நிலை பத்மநாபா என்றால் இதன் இழி நிலை பிரபாகரன் என்பது தமிழ் மக்களால் இன்று நன்கு உணரப்படுகின்ற ஒன்று என்றும் தெரிவித்தார். ஐக்கியத்திற்காகவும், 13 வது திருத்தச்சட்டதின் மூலம் அமைந்த வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையை நிறுவுவதில் பத்மநாபா தலைமையில் ஈபிஆர்எல்எவ் ஆற்றிய வரலாற்று சிறப்பு மிக்க பங்களிப்பை எடுத்துரைத்தார். தோழர் பத்மநாபாவினதும் ஈபிஆர்எல்எவ் இனதும் ஆயுதம் தாங்கிய போராட்டம் வெறும் தனிநாட்டை இலக்காக கொண்டது மட்டும் அல்ல முழு இலங்கையிற்குமான வர்க்கப்புரட்சியின் முதலாம் படியைக் கொண்ட போராட்டம் என்பதை தோழர் ஜேம்ஸ் மாத்திரம் அல்ல தோழர் வளவன், தோழர் சேகர் போன்றோர் எடுத்தியம்பினர். இப்பேச்சை வழிமொழிந்து பேசிய தோழர் சபேசன் தோழர் பத்தமநாபாவிற்கு நாம் செலுத்தும் அஞ்சலி அவர் தம் கனவை நனவாக்க இலங்கையர் அனைவரும் இன, மொழி, மத வேறுபாடுகளை மறந்து போராடப் புறப்படவேண்டிய தருணம் இது என்றார். இதற்கான அமைப்பை நிறுவி செயற்படும் காலம் இதுவே என்றும் தெரிவித்தார்.

தோழர் ஈழமணி பேசும் போது உட்கட்சியில் நடைபெற்ற முரண்பாடுகள் ஈபிஆர்எல்எவ்பலவீனப்படுத்தி இருந்த நிலையில் புலிகள் இலகுவாக ஈபிஆர்எல்எவ்ஆயுத ரீதியில் ஒடுக்க வாய்ப்பாக அமைந்துவிட்டது என்ற கருத்தை முன்வைத்தார்.

தோழர் சேகர் பேசும்போது நாம் எப்போதுமே இலங்கையர் என்ற கோதாவில் பேச்சுவார்தையில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதுவே இலங்கை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வின் வெற்றியை தீர்மானிக்கும் இராஜதந்திரமாக அமைந்திருக்கும் என்றார். திம்பு பேச்சுவார்தையின் முடிவில் இனி இலங்கையுடன் பேசுவதில் என்ற முடிவானது இந்தியா இலங்கை தமிழ் மக்களுக்கான தீர்வை போராளிகளுடன் கலந்தாலோசிக்காமல் தானே தயாரித்து முன்வைத்த நிலையை இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஏற்படுத்துவதற்கு வழிவிட்டதாக அமைந்து விட்டது என்றார். இணையங்களில் வெளிவரும் நாபா பற்றி அவதூறுகள்களை வன்மையாக கண்டித்த அவர் இதற்கான பதில் கட்டுரைகளை பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இன் பொறுப்புவாய்ந்தவர்கள் அவ்வப்போது வரையவேண்டி கட்டாயத்தை வலியுறுத்தினார்.

தோழர் மித்திரன் தனது கருத்துரையில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு செயற்படாமையே அதறகு பின்பு நடைபெற்ற அனைத்து மக்கள் அழிவிற்கும் காரணமாக அமைந்து விட்டது என்றும், இலங்கையில் தமிழ் மிதவாத தலைமைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பாராளுமன்றக் கதிரைகளுக்காக மட்டுமே செயற்பட்டுவந்தனர் என்றும் இன்றும் அவ்வாறே செயற்படுவதாக கருத்து தெரிவித்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி ஜெய்சங்கரி பேசும்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் நிலையில் அது தனது பொறுப்புக்களை உணர்ந்து செயற்படல் வேண்டும். மேலும் ஊடகங்கள் இலங்கையின் உண்மை தன்மைகளை பேசவேண்டும் மாறாக இலங்கை அரசின் ஊது குழல்களாக செயற்படல் கூடாது என்றார். மகிந்த ராஜபக்ஸ போரின் முடிவுக்குப் பின்னால் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்கியிருந்தால் தமிழ் கட்சிகளின் தேவைகள் இன்று இல்லாமல் இருந்திருக்கும் என்றார்.

தோழர் தேவன் பேசும் போது தோழர் பத்தமநாபாவின் செயற்பாடுகளை நாம் பாடங்களாக கொண்டு புதிய தலைமை அமைக்க முயலவேண்டும் என்றார். மக்களை நிறையவே நேசித்த தலைவர் பத்நாபா என்றும் வர்க்க விடுதலையை நாடிநின்ற ஈழவிடுதலைத் தலைவர் என்றும் கூறினார்.

தோழர் வளவன் பேசும்போது தற்போது முன்பு எப்போதையும் விட பத்மநாபாவின் தலைமை தீர்க்க தரிசனம் பல தலைவர்களாலும், அரசியல் ஆய்வாளர்கள், அரசியல் கருத்து தெரிவிப்பவர்களால் அதிகம் பேசப்படுகின்றது. ஆனால் மக்கள் மத்தியில் அவ்வளவாக இது பேசப்படுவது குறைவு. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று மிக கடினமான சூழலில் அவ் மாகாண சபையை கட்டியமைத்த பெருமை பத்மநாபா தலைமையிலான ஈபிஆர்எல்எவ் சாரும் என்றார். புலிகள் ஈபிஆர்எல்எவ்தடைசெய்த பின்பு மிகச் சிலரே தொடர்ந்தும் தமது அரசியல் செயற்பாட்டை தொடர்ந்தனர் என்றும் இது மேலும் போராட்டத்தை பலவீனப்படுத்திவிட்டது என்றார்.

ஈபிஆர்எல்எவ் இன் மீது சுதந்திரமான தமது கருத்துப் பதிவுகளை விமர்சனங்களாக முன்வைத்த பலரும் இந்திய இராணுவத்தின் பிரசன்ன காலத்தில் ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்கள் சிலர் இயக்க கட்டுப்பாட்டையும் மீறி மக்களுக்கு எதிராக செயற்பட்டனர் என்ற விடயங்கள் சம்பவ ரீதியாக எடுத்துரைத்தனர். இது தோழர் பத்மநாபாவின் ஏற்புடன் நடைபெற்றிருக்க வாய்ப்புக்கள் இல்லை என்று தாம் நம்புவதாகவும் கருத்துக்கள் தெரிவித்தனர். இப்படியான தவறுகளுக்கான சுய விமர்சனங்களையும், வருத்தங்களையும், மன்னிப்புக்களையும் தோழர் ஜேம்ஸ் தனது விளக்க உரையில் தெரிவித்திருந்தார்.

மாற்றுக் கருத்தாளர்கள் ஈழவிடுதலைப் போராட்டம் சம்மந்தமாகவும், ஈபிஆர்எலஎவ் சம்மந்தமாகவும் ஒரு மறுவாசிப்பை ஆரோக்கிமான தளத்தில் செய்தது போன்று இந்த வருட தியாகிகள் தினம் அமைந்தது. இதற்கான தளத்தை பத்மநாபா ஈபிஆர்எலஎவ் கனடா கிளையினர் எற்படுத்திக் கொடுத்தனர் என்பது இங்கு கூட்டத்தில் பங்குபற்றிய பலராலும் பாராட்டப்பட்ட விடயம் ஆகும். இது மேலும் எம்மை நம்பிக்கையுடன் மக்களை நெருங்க வாய்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது 23 தியாகிகள் தினத்தின் வெற்றியாகும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com