Contact us at: sooddram@gmail.com

 

லண்டன்

23வது தியாகிகள் தின நிகழ்வுகள்

தமிழ் பேசும் மக்களின் போராட்டத்தில் உயிர் நீத்த அனைத்து போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்துவதற்காக பத்மநாபா EPRLF  இனரால் தியாகிகள் தினம் வருடா வருடம் அனுஸ்டிக்கப்பட்டு  வருகின்றது. தமிழ் பேசும் மக்களின் தீர்க்க தரிசனம் மிக்க இளம் தலைவராக இருந்த தோழர் பத்மநாபா புலி பாசிஸ்டுக்களினால் படு கொலை செய்யப்பட தினமான ஜூன் 19 ம் திகதியே தியாகிகள் தினமாகும். தியாகிகள் தின நிகழ்வுகள் இன்று 22 ஜூன் -மாலை வடக்கு லண்டனில் Northoltcommunity மண்டபத்தில் தோழர் சிராப்பின்  தலைமையில் இடம்பெற்றது.

தோழர் ரவி அவர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

மறைந் தோழர்களின் புகைப்படங்கள் மற்றும் பெய்ர்ப்பட்டியல்கள் மண்டபம் முழுவதும் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் மறைந்த தோழர்களின் ஒளிப்பட காட்சி ஒன்றும் காண்பிக்கப்பட்டது

தோழர் பரமன் அவர்கள் தோழர் திவான் எழுதிய ஒற்றுமையை வலியுறுத்தும் கவிதை ஒன்றை வாசித்தார்

இந்நிகழ்வில் EPRLF உறுப்பினர்களுடன், TULF ,PLOTE, TELO , EPDP அமைப்புக்களின் லண்டன் பிரதிநிதிகளும் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசியல் ஆய்வாளர்கள் என பல  தரப்பட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் உரையாற்றிய TULF பிரதிநிதியும் முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினருமான  ிரு அரவிந்தன் அவர்கள் தான் தோழர் நாபாவை நேரில் சந்திக்கவில்லை எனினும் EPRLF தலைவர்களில் ஒருவரான மறைந்த  தோழர் ராபர்ட் உடன் யாழ் மாநகரசபை உறுப்பினராக செயற்ப்பட்ட காலங்களை நினைவு கூர்ந்தார். மேலும் TULF இன் தலைவர்கள் திரு அமிர்தலிங்கம் திரு யோகேஸ்வரன் ஆகியோர்  ுலிகளால் படுகொலை செய்யப்பட்டபோது நிலவிய அராஜக  சூழலில்பல தடைகளையும் உடைத்துவடக்கு கிழக்கில்  மறைந்த  தலைவர்களுக்கான இறுதி யாத்திரையை தோழர் நாபவும் EPRLF இனரும்முன்னின்று ஏற்பாடு  செய்தமையை தனது கட்சியின் சார்பில் நன்றியுடன் நினைவு கூர்வதாக கூறினார்.

அதனை தொடர்ந்து இந்நிகழ்வுக்கான முக்கிய உரையை நிகழ்த்திய பிரபல அரசியல் ஆய்வாளர் தோழர் சிவலிங்கம் அவர்கள், 13வது திருத்தம் பற்றியும் அதிகார பரவலாக்கம் பற்றியும் சமகால அரசியலில் அனைத்து  தமிழ் தரப்பினராலும் பேசப்படுவதும், 13வது திருத்தத்தை பலவீனமாக்க கூடாது என்று கோரப்படுவதும், 24 வருடங்களுக்கு முன்னரே இதே கோரிக்கைகள் EPRLF  இனரால் முன்வைக்கப்பட்டமை தோழர் பத்மனாபாவினதும் EPRLF இனரதும் தீர்க்கதரிசனதிற்க்கு ஒரு எடுத்துக்காட்டு  என்றார். மேலும் அவர் தனது நீண்ட உரையில் தமிழ் தரப்பினர் இன்றைய சூழலில் நடைமுறை சாத்தியமான அணுகுமுறைகள் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் இந்த விடயத்தில் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் EPRLF இனரும் ஆக்க பூர்வமான பங்களிப்புக்களை வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

அதனை தொடர்ந்து பேசிய டாக்டர் பாலா அவர்கள் தோழர் நாபா தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்த காலங்களில் பேராதனை பல்கலை கழகத்தில் தனது விடுதியில் தங்கி இருந்த காலங்களை நினைவு கூர்ந்தார். 13வது திருத்தத்தினூடான அதிகாரப்பரவலாக்கல் முயற்சிகள் EPRLF  இன அணுகுமுறை களினாலேயே செயலற்றதாகியது என்ற பொருள் பட கருத்துக்களையும் முன்வைத்தார்.

அடுத்ததாக ஸ்ரீ லங்காவில் இருந்து விடுமுறையில் வந்திருந்த திரு சிவசோதி (தோழர் பௌசி)அவர்கள் EPRLF இன் ஆரம்பக்கால நினைவுகளையும் தோழர் நாபாவின் எளிமையான வாழ்க்கை முறையையும் நினவுகூர்ந்ததுடன் தமிழர் தரப்பினர் சாதுரியமாக செயற்பட வேண்டும் என்றும் பிரித்து ஆளும் தந்திரங்களுக்கு இடம் கொடுக்க கூடாது என்றும் குறிப்பிட்டார்.

சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான திரு பௌசர் அவர்கள் இன்றைய காலகட்டத்தில் 13வது திருத்தம் பற்றிய EPRLF  இனரத அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார் அத்துடன் EPRLF  ஒரு சமூக மாற்றத்தை வேண்டி நின்ற இயக்கமாகவே தன்னால் பார்க்க முடியும் என்றும் தேசிய விடுதலைக்கான ஒரு பிரதானமான இயக்கம் என்பதை தன்னால் ஏறுக்கொள்ள முடியாமல் உள்ளது என்றும் தெரிவித்தார்.

தோழர் லாபீர் தோழர் நாபாவின் தலைமைத்துவ பண்புகளையும் தீர்க்க தரிசனமான செயல் பாடுகளையும் நினைவு கூர்ந்தார்.

இறுதியாக உரையாற்றிய தோழர் சாந்தன், 13வது திருத்தத்தின் அடிப்படையிலான வடக்கு கிழக்கு மாகாண  அரச தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு கௌரவமான தீர்வொன்றை ஐக்கிய இலங்கைக்குள் ஏற்படுத்துவதில் எதிர் கொண்ட சவால்கள் பற்றி குறிப்பிட்டதுடன் பிரேமதாசா வுடன் சேர்ந்து அம்முயற்சிகளை சீர்குலைக்க புலிகளும் அவர்களுடன் நின்ற அரசியல் சக்திகளும் மேற்க்கொண்ட பிரச்சாரங்களையும் சுட்டிக்காட்டினார்.

இந்த பிரச்சாரங்களின் அடிப்படையில் முன்வைக்கப்படும் ஒரு கருத்து EPRLF  இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன் படுத்த வில்லை என்பதாகும்.

புலிகளின் இந்த பிரசாரங்களை தங்களை அறியாமலே கற்பிதமாக கொண்டவர்கள் அன்றைய EPRLF  இன முயற்சிகளை சிறுமைப்படுத்த முனைவதும், EPRLF  இன் தலைவர்கள் மீது தனிப்பட்ட முறையில் சேறுபூச முயல்வதும் துர்ப்பாக்கியமானது என்ற பொருள் பட பேசினார்.

EPRLF இன் நடைமுறைகளில் அன்று ஏற்பட்ட சில தவறுகள் வருந்ததக்கவை ஆனால் EPRLF மேற்கொண்ட அரசியல் அணுகுமுறை நிதானமாக அனுமானிக்கப்படல் வேண்டும் என்றும் இதய சுத்தியுடன் பார்க்கப்படல் வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தோழர் சிராப்பின் நன்றி உரையுடன்  அஞ்சலி நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com