Contact us at: sooddram@gmail.com

 

வடமாகாண - யாழ் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தல்

யாழ்ப்பாணத்தில் அனைத்து சட்டவிரோதச் செயற்பாடுகளும் ஒரு மாதகாலத்திற்குள் முடிவிற்கு கொண்டுவரப்படவேண்டும். யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் திடீரென அதிகரிப்பதற்குக் காரணமென்ன என கேள்வியெழுப்பியுள்ள வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்ற அனைத்து சட்டவிரோதச் செயற்பாடுகளும் ஒரு மாத காலத்தில் சட்டத்தின் துணைகொண்டு ஒழிக்கப்பட வேண்டும் என வடமாகாணம் மற்றும் யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.

வீதிகளில் சண்டித்தனம் செய்வோர், ரவுடித்தனத்தி;ல் ஈடுபடுவோர், கோஸ்டிகளாக மோதிக்கொள்பவர்கள், வாள் வெட்டுக்களில் ஈடுபடுபவர்கள் என, பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற அனைத்து நபர்களையும், உடனடியாகக் கைது செய்து நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்துமாறு இந்த உயரதிகாரிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பல அடாவடித்தன நடவடிக்கைள் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதனால், அனைத்து அடாவடித்தன நடவடிக்கைகளையும் சட்டத்தின் துணைகொண்டு, உடனடியாக ஒழிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை அந்த அதிகாரிகளுக்கு நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்காக, வீதிகளில் பெண்கள், மாணவிகளைப் பின்தொடர்ந்து இம்சிப்பவர்கள், சந்திகளில் கூடிநின்று, பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்களை, தண்டனை சட்டக் கோவையின் கீழான அலைந்து திரிபவர்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ் கைது செய்வதுடன், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் வகையிலும் வீதிகளில் கூடி நின்று அடாவடித்தனம் செய்பவர்களை தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் கைது செய்து நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்துமாறும் நீதிபதி பொலிஸ் உயரதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி அறிவுறுத்தியுள்ளார்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதைப் பழகத்தைத் தூண்டுகின்ற பான் பராக், மதன மோகனம், லேகியம் போன்ற போதையூட்டுகின்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் வியாபாரிகளை மிகவும் அவதானத்துடன் கண்காணிக்குமாறும், அவர்கள் விற்பனை செய்யும் பொருட்களை இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி, அவசியம் ஏற்படின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி பொலிசாருக்கு வழிகாட்டியுள்ளார்.

மாலை 6 மணிக்குப் பின்னர் பெண்கள் வேலைக்கு அனுமதிக்கப்படுவதில்லை. தாதியர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றார்கள். இந்த நிலையில் 6 மணிக்குப் பின்னர் பிரத்தியேக வகுப்புக்களை நடத்துகின்ற அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களையும் அழைத்து, உரிய சட்ட ரீதியான விளக்கங்களை வழங்கி, மாலை 6 மணிக்குப் பின்னர் மாணவ மாணவிகளுக்கு பிரத்தியேக வகுப்புக்கள் நடத்துவதைத் தவிர்க்குமாறும், அதனையும் மீறிச் செயற்பட்டு, ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் இடம்பெறுமானால், அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்துமாறும் நீதிபதி பொலிஸ் உயரதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

யாழ்ப்பானம் நகர்ப்பகுதிகளில் உள்ள மதுபான சாலைகள் நேரம் கெட்ட நேரத்தில் திறந்து, நேரம் பிந்தி பூட்டுவதும், அடாவடித்தனங்களில் ஈடுபடுபவர்களுக்கு முக்கிய இடமாகவும், முக்கிய காரணமாகவும் இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி இத்தகைய மதுபான சாலைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ஆலயங்கள், சமய நிறுவனங்கள் மற்றும் பாடாசலைகளுக்கு அருகில் உரிய அனுமதிபபத்திரம் பெற்றுச் செயற்பட்டு வருகின்ற மதுபானசாலைகளின் பெர்ப்பட்டியல்களையும் விபரங்களையும் திரட்டி, இவற்றுக்கு சட்ட வரம்பு எல்லைகளுக்கு முரணாக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி, பொலிஸ் மா அதிபர் ஊடாக, மதுவரி ஆணையகத்திற்கு அனுப்பி, உள்ளக நிர்வாக நடைமுறைகளின் மூலம் சீர் செய்யுமாறும் நீதிபதி வழிகாட்டி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்களினதும், தமிழ் சமூகத்தினதும், முக்கியமான விடயங்களான கல்வி, பெண்களின் கௌரவம், மற்றும் அவர்களின் பாதுகாப்பு என்பவற்றைப் பாதிக்கின்ற செயற்பாடுகள் அவர்களின் உணர்வுகளைத் தூண்டி விடுவதாக அமையும். உணர்வுபூரவமான இந்த விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து, அத்தகைய செயற்பாடுகளை முளையிலேயே கிள்ளி எறிவதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமானால், ஒரு மாத காலத்தில் யாழ்ப்பாணம் அமைதிப் பூங்காவாக மாற்றம் பெறும் என்றும் நீதிபதி இளஞ்செழியன் பொலிஸ் உயரதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சட்டத்தையும் ஒழங்கையும் நிலைநாட்டுவதற்காக எற்கனவே தாங்கள் எடுத்துள்ள சட்ட நடவடிக்கைகள் தடுப்புச் செயற்பாடுகள் பற்றி வடமாகாணம் மற்றும் யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் நீதிபதிக்கு விளக்கமளித்தனர்.

இதனையடுத்து, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள அனைத்து சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள், பிராந்திய பொலிஸ் அதிகாரிகள், அவர்களுக்குக் கீழ் பணியாற்றுகின்ற பொலிஸ் அதிகாரிகள், தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள், மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு இந்த அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் வழங்கி,இந்த மாவட்டங்களில் சமூக விரோதச் செயற்பாடுகளை ஒரு மாத காலத்தில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று நீதிபதி இளஞ்செழியன் வடமாகாணம் மற்றும் யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com