Contact us at: sooddram@gmail.com

 

கனடாவில் 25 வது தியாகிகள் தின நிகழ்வு

(எமது கனடா நிருபர்)

கனடாவின் ரொரன்ரோ மாநகரில் ஜுன் 20. 2015 அன்று நடைபெற்றது. ஈழ விடுதலைக்காக தம்மை அர்பணித்த அனைத்து போராளிகளுக்கும், அனைத்து இனப் பொது மக்களுக்கும் ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் தோழர் ஜேம்ஸ் இன் தலைமையில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் தோழர்கள் யசீர்இ ரவி, பிரதாப், மோகன், மதி போன்ற தோழர்களின் முன்னெடுப்பால் நிகழ்தப்பட்டது. கூட்டத்தை சிறப்பாக நடாத்தி முடிக்கு ஈபிஆர்எல்எவ் இன் ஏனைய தோழர்களும், ஏனைய அமைப்பு போராளிகளும் முன்னின்று செயற்பட்டது இங்கு சிறப்பு அம்சம் ஆகும். தோழர் தமது தலைமை உரையில் தோழர் நாபா மனித நேயம், ஜனநாயகத்தின் ஒரு குறியீடாக ஈழவிடுதலைப் போராட்டத்தில் பார்க்கப்பட வேண்டியவர் என்பதை தனது கருத்துவையில் நிறுவி நன்றார். மேலும் வர்க்கவிடுதலை என்பதை முன்னிறுத்தி செயற்பட்ட தோழர் பத்மநாபா என்றும் இசரின் வழியல் தோன்றிய ஆயிரம் ஆயிரம் போராளிகள் இந்தப்பாதையில் இன்றும் பயணிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையில் சகல இன சமூகப் பிரநிதித்துவததையும் உறுதிசெய்யும் வண்ணம் செயற்பட்டார் என்றும் குறிப்பிட்டார். ஒரு விடுதலைப் போராட்டத்தில் வெற்றிகள், தோல்விகள், சரிகள் பிழைகள் என எல்லாவற்றிற்கும் கூட்டுப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாடே சரியானது என்றும், இதற்கான பாதையிலேயே ஈபிஆர்எல்எவ் தனது விடுதலைப் பயணத்தை மேற்கொண்டது என்பதை ஆதாரங்களுடன் எடுத்தியம்பினார். 13 இல் ஆரம்பித்து இன்று 18. 19. 20 என்று 13 காணமல் போய்விட்ட நலமையில் இன்று நாம் இருக்கின்றோம். ஈழவிடுதலைக்கான யுத்தம் மரணத்தை நேசிக்கும். கொலையை விரும்பும் ஒரு பிரவை விட்டுச் சென்றுள்ளது. இதனை வெற்றிகரமாக செய்து முடித்த பெருமை தமிழீழ விடுதலைப் புலிகளையே சாரும் இவரகளின் வழித்தோன்றல்களான தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஈபிஆர்எல்எவ் இன் சுரேஸ் அணியினரும் சீரில் ஆரம்பித்து நெருப்பில் முடிவடைந்து முள்ளிவாய்கால் நிகழ்விற்கும் புலிகள் அளவிற்கு சம பங்காளிகளாக இருக்கின்றனர் என்பதை பதிவு செய்வதை இவர் தவறவில்லை. புலிகள் எவ்வாறு ஈஎன்எல்எவ் வை அதற்குள் புகுந்து பத்மநாபாவினால் துஸக்கிப்பிடித்த ஐக்கிய முன்னணியை இல்லாமல் செய்தார்களோ. இதே மாதிரியான செற்பாட்டை தோழர் வரதராஜப்பெருமாளின் முன்முயற்சியினால் ஏற்படுத்தப்பட்ட தமிழ் அரங்கத்தை இறுதியல் புகுந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சாசம் செய்தது. இதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியல் மீண்டும் ஏகபோகம் என்ற புலிகள் காலத்து செயற்பாடுகள் மீண்டம் தொடர வாய்ப்பை தமிழ் தேசயிக் கூட்டமைப்பினர் ஏற்படுத்திவிட்டனர் என்பதை வரலாற்று அவணங்களில் அடிப்படையில் எடுத்துக் கூறினார். ஆனாலும் நாம் தோற்றுப் போகவில்லை மீண்டும் எழுந்து வருகின்றொம் உண்மையான ஐக்கிய முன்னணி ஒன்றில் மூம் எமது மக்களின் அரசியல் தீர்வை இதனைத் தொடர்ந்த விடுதலையை பெற்றுக் கொடுக்க தொடரந்தும் பயணிப்பதே தோழர் நாபாவிற்கு எம்மால் செலுத்தப்படும் அஞ்சலியாகும் என்றும் தனது பேச்சில் குறிப்பிட்டார். மரணித்த போராளிகள் பொது மக்களுக்கான நினைவு கூரலுக்கான ஒரு பொதுவான தினத்தை நாம் கண்டு பிடிக்க வேண்டிய வரலாற்றுக் கடமையில் இருப்பதாகவும் இவ்விடயத்தை கடந்து பல வருடங்களாக எம்மைப் போல் பலரும் வலியுறுத்தி நிற்பதை இவ்விடத்தில் மீண்டும் பதிவு செய்தார் தோழர் ஜேம்ஸ்
இதனைத் தொடர்ந்து பேசிய தோழர் சேகர் விடுதலைப் போரட்டம் வெறும் நிலத்திற்கான போராட்டம் அல்ல மக்களுக்கான சமதர்ம சகோதரத்துவ விடுதலையை நாடி நின்றவர் தோழர் நபா என்றார். இதனால்தான் மலையகம், தமிழ் நாட்டின் பின்தங்கிய கூலித் தொழிலாளர் மத்தியலும் தனது அரசியல் வேலைகளில் பத்மநாபா ஈடுபட்டார் என்பதை தெரிவித்தார். சும உரிமை இயகத்தின் பிரதிநிதி 1970 களில் சிங்கள் மக்களை மையப்படுத்தி நடைபெற்ற போராட்டமும், 2009 வரையிலான தமிழ் மக்களை யைப்படுத்திய போராட்ட அனுபவங்களை நாம் உள்ளவாங்கி தமிழ், சிங்களம் என சகல தரப்பினரையும் உள்ளடக்கிய போராட்டமே வெற்றியளிக்க முடியும் அதற்கான பாதையிலேயே சம உரிமை இயக்கம் தனது பயணத்தை ஆரம்பித்திருக்கின்றது என்றார். ஈழவிடுதலை அமைப்புக்களிடையே அடி மட்ட மக்களின் விடுதலைக்காக யாழ் மையவாத தன்மையிலிருந்து விலகிச் செயற்பட்ட தலைவர் என்றால் அது தோழர் பத்தமநாபா என்றும் குறிப்பிட்டார்.
தோழர் மித்திரன் பேசும் போது குத்துக்கரணம் அடிக்காத தலைவர் என்றால் அது தோழர் பத்மநாபாவைக்கே பொருந்தும் என்றார். மேலும் தோழர் நபாபாவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாகாண சபையிலேயே இன்று எல்லோரும் இறுதியல் இன்று வந்து நிற்கின்றனர் என்றார். தோடர்ந்து பேசிய மோகன் ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புக்களுக்கும் விமர்சனங்களை முன்வைக்கக் கூடிய ஒரே ஒரு அமைப்பாக இருந்ததை தனது அனுபவங்கள் மூம் அறிந்திருந்ததாக குறிப்பிட்டார்இ சிங்கள் மக்களி ஆதரவுடனேயே தமிழ்p மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட முடியும் அந்த வகையில் ஈழவிடுதலைப் போராட்ட கால கட்டத்தில் எமது போராட்டதின் நியாயத் தன்மையை சிங்கள மக்கள் எடுத்துச் செல்வதில் ஈபிஆர்எல்எவ, புளொட் என்ற இரு அமைப்புக்கள் மாத்திர் ஈடுபட்டதை நினைவு கூர்ந்தார். ஒரு பொதுவான தினத்தை நாம் கண்டு பிடிக்க வேண்டிய நிலையில் உள்ளோம் இதன் மூலமே அனைத்து போராளிகள் பொதுமக்களின் நினைவுகள் பரந்துபட்ட ஆதரவுடன் நடைமுறைப்படுத்த முடியும் என்றார். தோழர் நாபா. தேவா இருவரும் புலிகளினால் ரெலோ தாக்கப்பட்ட போதும் ரேவோக் காப்பாற்றுவதில் முழு மூச்சுடன் செயற்பட்டனர் என்றார். இவ்வேளையில் மக்கள் பயந்திருந்து சந்தர்பத்திலும் ஆபிஆர்எல்எவ் ஆகிய நாமே பொதுமக்களையும் அணிதிரட்டி புலிகளின் ரெவோவிற்கு எதிரான ஆயுத நடவடிக்கைக்கு எதிராக போராட்டங்களை ஊர்வலங்களை நடாத்தியதை நினைவு கூர்ந்தார். தோழர் சிவா பேசும் போது விடுதலை அமைப்புகளிடையே புலிகளைத் தவர்த்து நாம் பிரிந்து நின்று செய்பட்டதை பார்க்வில்லை என்றும் தோழமையுடன் செயற்பட்டதாக தனது கருத்தை பதிவு செய்தார். தோடரந்தும் இவ்வாறே பயணிப்போம் என்றார்.
டீதாழர் மகேஸ் பேசும் போதும் புலிகள் தவிரந்த மாற்று இணகப் போராளிகள் பற்றி காணமல் போனோர் பற்றிய விசாரணைகள் மேற்கொளப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் நவநீதம்பிள்ளை , விக்னேஸ்வரன் போன்றவர்களிடம் நாம் முன்வைக்க தவறியைதை சுட்டிக்காட்டி இதனை இனிவரும் காலங்களிலாவது செய்யவேண்டும் என்றார். தோழர் நபா மாத்திரம் அல்ல தோழர் தேவாவும் தன்னை கொலை செய்ய பிரபாகரனால் அனுப்பி வைக்கப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டார் என்பதை பதிவு செய்தார். இறுதியாக தோழர் பிரதாப் தனது மாகாண சபைகாலத்து அரசியல் தொடர்பாளராக நாபா நியமித்தது தோழர்களின் செயற்பாட்டில் நம்பிக்கை வைத்து வளர்த்துவிடுவதில் அவருக்கு இருந்த ஈடுபாட்டை தன்னால் உணரக் கூடியதாக இருந்ததாக்வும் சகல இனப் பிரதிநிதிகனையும் இணைந்த மாகாணசபை அரசை உருவாக்கியதில் தோழர் நாபாவின் சாணக்கியத்தை தன்னால் உணர முடிந்தததை எடுத்து இயம்பி தியாகிகள் தனி நிகழ்வை சிறப்பாக நடாத்தி முடிக்க உழைத்த அனைத்து தோழர்கள், பொது மக்களுக்கு நன்றி கூறினார். சிற்றுண்டி பரிமாற்றத்துடன் தியாகிகள் தின நிகழ்வு நிறைவேறியது.
நிகழ்வின் இடைவெளிகளில் ஈபிஆர்எல்எவ்வின் வரலாற்று ஆவணங்கள் சிறப்பாக மரணித்த தோழர்களின் குறிப்புகள் புகைப்பட தொகுப்பாவும் காண்பிக்கப்பட்டது

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com