Contact us at: sooddram@gmail.com

 

லிபியாவின் பல நகரங்களிலும் தொடர்ந்தும் மோதல்

இங்கிலாந்து அதிரடிப்படை வீரர்கள் பிடிபட்டனர்

லிபியாவில் அரச எதிர்ப்பு படைகள் வசம் உள்ள பல நகரங்களை மீள கைப்பற்றும் முயற்சியில் கடாபி ஆதரவு இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் லிபியாவின் பல பகுதிகளிலும் கடும் மோதல் இடம்பெற்று வருகிறது. இதன்படி பின் ஜவாத், டொப்ருக், ராஸ் ரனுல் மற்றும் மிசுரேட் பகுதிகளில் தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த பகுதிகளில் விமா னங்கள், யுத்த டாங்கிகள் மூலம் தாக் குதல் நடத்தி அங்கு தமது கட்டுப்பாட்டை நிலைநிறுத்த கடாபி ஆதரவு படை முயற்சித்து வருகிறது. எதிர்ப்பாளர்கள் வசமிருந்த பின் ஜவாத் பகுதியை கடாபி ஆதரவுப் படை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது. எனினும் அங்கு மீண்டும் தமது கட்டுப் பாட்டை நிலைநாட்ட எதிர்ப்பாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் பின் ஜவாத் பகுதியில் கடாபி ஆதரவுப் படையை காணக்கிடைக்க வில்லை என வெளிநாட்டு ஊடகம் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

மிஸ்ராடாவில் மோதல்

அதேபோன்று தலைநகர் திரிபோலிக்கு 200 கிலோ மீற்றர் கிழக்கே உள்ள மிஸ்ராடாவிலும், கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. கடாபி ஆதரவு படைகள் கனரக ஆயுதங்களுடன் கடந்த சனிக்கிழமை மிஸ்ராடாவிற்குள் நுழைய முயன்றனர். எனினும் எதிர்ப் பாளர்களின் கடுமையான தாக்குதலால் அவர்கள் அங்கிருந்து பின்வாங்கினர்.

அங்கு தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. நேற்றைய மோதல்களின் போது கொல்லப்பட்ட 20 உடல்கள் அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டதாகவும் மேலும் 100 பேர் அளவில் காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள மருத்துவர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இந்த மோதல் தொடர்ச்சியாக 6 மணி நேரம் அளவில் நீடித்ததாகவும் அந்த மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோதலின் போது கடாபி ஆதரவு படை மருத்துவ களஞ்சியசாலை, மருத்துவமனைக்கு அருகாமையிலுள்ள பகுதிகள் மற்றும் 5 பள்ளிவாசல்களை குண்டு வீசி தகர்த்ததாக மிஸ்ராடாவில் வசிக்கும் மொஹமட் பென்ரசாலி பி.பி.சி செய்திச் சேவைக்கு குறிப் பிட்டுள்ளார்.

இதன்போது அரசின் ஒரு யுத்த டாங்கி தகர்க்கப்பட்டதாகவும், 16 கடாபி ஆதரவு வீரர்கள் கொல்லப்பட்ட தாகவும் அந்த குடியிருப்பாளர் தெரிவித்தார்.

லிபியாவின் கிழக்கு பகுதியிலுள்ள மிஸ்ராடா நகரில் சுமார் மூன்று இலட் சம் பேர் வசிக்கின்றனர். கடாபி எதிர்ப்பாளர்கள் வசமுள்ள மிகப் பெரிய நகரம் இதுவென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மிஸ்ராடா நகரின் எதிர்ப்பாளர் தலைவராகவும், மக்கள் குழு உறுப்பினராக வும் உள்ள மொஹம்மட் அலி, அல் ஜkரா செய்திச் சேவைக்கு கூறியதாவது;

மிஸ்ராடா எமது முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. நாம் கடாபி ஆதரவுப் படையின் பலரையும் கைது செய்துள்ளோம். அவர்கள் மீது விசாரணை நடத்தப்படும். அத்துடன் அவர்கள் தொலைக் காட்சியிலும் காண்பிக்கப்படுவர் என்றார்.

எனினும் கடாபி ஆதரவுப் படையினர் விமானம் மூலம் தாக்குதல் நடத்துவது பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் எனவே உடனடியாக விமானங்கள் பறக்க தடை விதிக்குமாறு மொஹம்மட் அலி சர்வதேசத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

திரிபோலியில் தொடர்ந்து மோதல்

இதனிடையே அரச கட்டுப்பாட்டிலுள்ள தலைநகர் திரிபோலியில் கடும் மோதல் நிலவி வருகிறது. அங்கு தமது கட்டுப்பாட்டை நிலை நிறுத்த எதிர்ப்பாளர் கள் போராடி வருகின்றனர்.

எனினும் திரிபோலி பகுதியில் எந்த மோதலும் இடம்பெறவில்லை எனவும் அங்கு 100 வீதம் அரச கட்டுப்பாடு நிலவுவதாகவும் லிபிய அரசின் பேச்சாளர் மூஸா இப்ராஹிம் ராய்ட்டருக்கு தெரி வித்துள்ளார்.

எவ்வாறாயினும் திரிபோலி நகருக்கு அருகாமையில் குண்டு, வெடிச் சத்தங்கள் கேட்பதாக அங்கிருக்கு அல் ஜkரா செய்தியாளர் தெரிவித்துள்ளார். எனினும் அந்த சத்தம் குறித்து தெளிவாக ஊகிக்க முடியாதுள்ளது எனவும் அவர் குறிப் பிட்டுள்ளார்.

நாட்டின் கிழக்கு, மேற்குப் பகுதிகளில் உள்ள நகரங்கள் கிளர்ச்சியாளர்கள் வசமே உள்ளன. இப்பகுதிகளை கடாபி ஆதரவாளர்கள் மீண்டும் கைப்பற்றுவதென் பது எளிதான காரியமல்ல. கிளர்ச்சியாளர்கள் கை தொடர்ந்து ஓங்கி வருகிறது என்று மக்கள் தரப்பில் கூறப்படுவதாக அல் ஜீரா தொலைக் காட்சி கூறுகிறது.

கடாபி உறுதி

கடந்த 18 நாட்களாக கடாபிக்கு எதிராக கிளர்ச்சி நடந்து வருகிறது. பதவியை விட்டு விலகக் கோரி அமெ ரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகள் அவருக்கு தொடர்ந்து நெருக்கடி அளித்து வருகின்றன. இருப்பினும் பதவி விலக முடியாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார். உங்களுக்கு முடிந்ததை செய் யுங்கள்’. என்று அந்நாடுகளுக்கு சவால் விடுத்துள்ளார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் நாட்டு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த போட்டியில் அவர் கூறியதாவது,

லிபியாவில் என்ன நடக்கிறது என் பதை நிச்சயம் உலக மக்கள் அறிந்தே ஆகவேண்டும். இதனால் லிபியாவுக்கு தனிக் குழுவை ஐ. நா. வோ, ஆபிரிக்க யூனியனோ அனுப்பி வைக்கலாம். இதில் எனக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை.

லிபியாவில் அக்குழு சுதந்திரமாக விசாரணை நடத்தலாம். அக்குழுவுக்கு எவ்வித இடையூறும் வராது என்று உறுதி அளிக்கிறேன். விசாரணைக் குழு லிபி யாவுக்கு வந்தால் உண்மை தெரியவரும். அதன் மூலம் தன் தலைமையிலான அரசின் மீது உலக மக்கள் கொண்டிருக்கும் தவறான அபிப்பிராயம் நிச்சயம் மாறும். பிலியாவில் இப்போது ஏற்பட்டுள்ள கிளர்ச்சி மக்கள் புரட்சியல்ல என்றார்.

லிபியாவுக்கு ஐ. நா. பிரதிநிதி

இதேவேளை லிபியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை விசேட பிரதிநிதி ஒருவரை நியமித்துள்ளது. அத்துடன் மனிதாபிமான குழுவை அங்கு அனுப்பு வதற்கு ஐ.நா. சபை தீர் மானித்துள்ளது.

முன்னாள் ஜோர்தான் நாட்டு அமைச்சரை லிபியாவுக்கான ஐ.நா. வின் விசேட பிரதிநிதியாக ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ளார். இவர் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து லிபியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.

அத்துடன் ஐ. நா. வின் மனிதாபிமான குழுவொன்று லிபிய தலைநகர் திரி போலிக்கு வருவதற்கு லிபிய அரசு அனுமதி அளித்துள்ளது.

இங்கிலாந்து அதிரடிப்படை வீரர்கள் பிடிபட்டனர்

இதனிடையே லிபியாவில் கடாபிக்கு எதிரான சக்திகளுக்கு ஆதரவாக களம் புகுந்த இங்கிலாந்து அதிரடிப் படை வீரர்கள் பிடிபட்டுள்ளனர். கடாபிக்கு எதிரான சக்திகளுடன் இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் ரகசியமாகச் சந்தித்து பேசு வதற்கு இந்த படை ஏற்பாடு செய்தது.

அப்போது கடாபிக்கு எதிரான சக்திகளின் வீரர்கள் இங்கிலாந்து இரா ணுவ வீரர்களை பிடித்தனர். இந்த சம்பவம் அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் பென்காசி நகரில் நடந்தது.

வெளிநாட்டு சக்திகள் தங்கள் நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை கடாபி தனக்கு சாதகமாக பயன்படுத்தி தேசபக்தி சக்திகளை தனக்கு ஆதரவாக திரட்டி விடக்கூடும் என்ற பீதியால் அவர்கள் இங்கிலாந்து வீரர்களை சிறை பிடிக்கும்படி உத்தரவிட்டனர்.

பிடிபட்ட இங்கிலாந்து வீரர்கள் ஆயுதங்கள் வைத்து இருந்தனர். ஆனால் சீருடை இல்லாமல் சாதாரண உடையில் இருந்தனர். லிபிய எதிர்ப்பாளர்களுக்கு என்ன உதவி தேவை என்பதை அறிவதற்காகவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை அளிப்பதற்காகவும் லிபியாவுக்கு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இங்கிலாந்து இராணுவ வீரர்கள் பிடிபட்டதை அந்த நாட்டு அரசாங்கம் உறுதி செய்துள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com