Contact us at: sooddram@gmail.com

 

8.9 ரிச்டர் பூகம்பம்

ஜப்பானில் சுனாமி

ஐப்பானின் கிழக்குக் கரையோரப் பிரதேசமான ஹொன்ஷ¤ பிரதேசத்தில் நேற்று அதிகாலை 8.9 ரிச்டர் அளவில் பாரிய பூகம்பம் ஏற்பட்டது. இந்தப் பூகம்பத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தால் பெரும் பகுதி நீரில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதுடன், பெரும் எண்ணிக்கையான சொத்துக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. சுனாமி அனர்த்தத்தால் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் சூழ்நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான அச்சம் காணப்படுகிறது. சர்வதேச நேரப்படி அதிகாலை 5.46 மணியளவில் (ஜீ.எம்.ரி) இந்தச் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டது. சொத்துக்களுக்கு பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது. பல வாகனங்கள், படகுகள், கப்பல்கள் மற்றும் பல கட்டடங்கள் நீரில் அடித்துச் சென்றுள்ளன.

ஜப்பானின் தலைநகர் டோக்கி யோவிலிருந்து 400 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கரையோரப் பிரதேசத்திலேயே சுனாமி தாக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை முதல் ஜப்பானின் பல்வேறு பிரதேசங் களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வந்த நிலையிலேயே நேற்று சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. சுமார் 20 அடிக்கு மேலெழுந்து சுனாமி அலைகள் தாக்கி யுள்ளன. சுனாமி அனர்த்தத்துக்கு உள்ளான பிரதேசங்களிலுள்ள எரிபொருள் களஞ்சியங்கள், மின் உற்பத்தி நிலையங்களின் சில தீவிபத்துக் குக்குள்ளாகியுள்ளன. 4 மில்லியன் வீடுகளுக்கு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சுனாமி அனர்த்தத்திற்கு உள்ளான இடங்களிலுள்ள அணு உலைகளிலிருந்து கதிர் தாக்கங்கள் எதுவும் வெளி யேறவில்லையென ஜப்பான் பிரதமர் நாடோ கான் தெரிவித்துள்ளதுடன், மக்களைப் பதற்றமடையாமல் அமைதியாக இருக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். சுனாமி அனர்த்தத்தால் ஜப்பானில் உயிரிழந்தவர்கள் பற்றிய சரியான தகவல்கள் உடனடியாக வெளியாகாத போதும், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

20 நாடுகளில் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து ரஷ்யா, இந்தோனேசியா, குவான்டமாலா, எல். சல்வடோர், கொஸ்டா ரிக்கா போன்ற மத்திய அமெரிக்க நாடுகள், ஹவாய் தீவுகள் உட்பட 20 நாடுகளில் சுனாமி அனர்த்தம் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் சுனாமி அனர்த்தம் தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது. கடந்த 140 வருடங்களில் ஜப்பானில் ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சி இதுவாகும். சுனாமியினால் உருவான 13 அடி உயர கடல் அலைகள் கட்டிட இடிபாடுகள், வாகனங்கள் மற்று படகு களை கடலுக்குள் இழுத்துச் செல்லும் காட்சிகளை ஜப்பானின் என். எச். கே. தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

ஒரு பாரிய கப்பலை சுனாமி அலைகள் கசனுமா நகரில் சுனாமி அலைகள் அலை தடுப்பு அணைக்க(கிrலீak watலீr) நேரடியாக இழுத்துச் செல்லப் படுவதையும் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இந்த பயங்கர பூமியதிர்ச்சி ஏற்பட்ட 30 நிமிடங்களில் 7.3 ரிச்டர் அளவிலான மற்றொரு பூமியதிர்ச்சி அதே பிரதேசத்தை தாக்கியது. இந்த பூமியதிர்ச்சியையடுத்து பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் ரஷ்யா, குவாம், தைவான், பிலிப்பைன்ஸ், இந்தோனீசியா மற்றும் அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்துக்கு உடனடியாக சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை பின்னர் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கும் விஸ்தரிக்கப்பட்டது. எனினும் இந்த எச்சரிக்கை சிறிய அளவிலான சுனாமி எச்சரிக்கை என்ற வகையிலேயே இருந்தமை குறிப்பிடத்தக்கது.

றிப்பிட்ட இப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகவே பூமியதிர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை 7.2 ரிச்டர் களபிபான பூமியதிர்ச்சி இதே பிரதேசத்தை தாக்கியிருந்தது.

1933 இல் இதே பிரதேசத்தில் ஏற்பட்ட 8.1 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சியில் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். உலகளாவிய ரீதியில் அதிர்வு பிரதேசங்களில் ஒன்றாக கருதப்படும் ஜப்பானில் அடிக்கடி பூமியதிர்ச்சிகள் ஏற்படுவதுண்டு.

6 ரிச்டர் அளவுக்கு மேல் இடம்பெறும் உலகளாவிய பூமியதிர்வுகளில் 20 சதவீதமானவை ஜப்பானிலேயே இடம்பெறுகின்றன.

1896 இல் சென்ரிகு நகரில் ஏற்பட்ட 8.5 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சியில் 27 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

ஜப்பானில் ஏற்பட்ட மிகவும் மோசமான பூமியதிர்ச்சி 1923 இல் ஏற்பட்டதாகும்.

இதில் ஒரு லட்சத்து 43 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அண்மையில் 1995 இல் கோபே நகரில் ஏற்பட்ட 6.9 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சியில் 5 ஆயிரத்து 502 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (10ம் திகதி) வியாழக்கிழமை சீனாவின் யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட 5.8 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சியில் 25 பேர் கொல்லப்பட்டதுடன் 250 பேர் காயமுற்றனர்.

உலகில் ஏற்பட்ட மிகவும் உயரமான சுனாமி அலை 1958இல் லிதுயா பேயில் இடம்பெற்றது. அந்த சுனாமி அலையின் உயரம் 524 மீற்றர் (1742 அடி)

இதுபோன்ற இரண்டாவது மெகா சுனாமி வெஜோன்டாம் சுனாமியாகும். 1963 இல் ஏற்பட்ட இந்த சுனாமி அலையின் உயரம் 250 மீற்றர். (750 அடி) ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவும் பொருட்டு விசேட தகவல் கருமபீடமொன்றை அமைத்திருப்பதாக வெளிவிவகாரா அமைச்சு அறிவித்துள்ளது.

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி அனர்த்தம் ஆகியவற்றைத் தொடர்ந்து அங்குள்ள தமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ள ஏதுவாக அமைக்கப்பட்டிரு க்கும் கருமபீடத்தை 0114719593 begin_of_the_skype_highlighting              0114719593      end_of_the_skype_highlighting, 0115743362 begin_of_the_skype_highlighting              0115743362      end_of_the_skype_highlighting, 0772267929 begin_of_the_skype_highlighting              0772267929      end_of_the_skype_highlighting ஆகிய தொலை பேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ள முடியும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

இதுதவிர டோக்கியோவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றும் முதலாவது செயலாளர் சந்தன வீரசேன அவர்களைத் தொடர்புகொள்ள முடியுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள நிலைமைகளை வெளிவிவகார அமைச்சும், டோக்கியோவிலுள்ள இலங்கைத் தூதரகமும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com