Contact us at: sooddram@gmail.com

 

காங்கிரஸின் 63 தொகுதிகள் அறிவிப்பு

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் கருணாநிதியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலுவும் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டனர்.

 3 அமைச்சர் தொகுதிகள்: திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகளில் 3 அமைச்சர்களின் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

 அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி (சென்னை அண்ணா நகர்), தா.மோ. அன்பரசன் (ஆலந்தூர்), என். செல்வராஜ் (முசிறி) ஆகியோரின் தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

 2006-ல் திமுக வெற்றிபெற்ற அறந்தாங்கி (உதயம் சண்முகம்), ராதாபுரம் (அப்பாவு) தொகுதிகளும் காங்கிரஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. மின்துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான ஆர்க்காடு வீராசாமியின் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது அக்கட்சியினரிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

 தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பல்லாவரத்திலும், வனத்துறை அமைச்சர் என். செல்வராஜ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மணச்சநல்லூர் (திருச்சி) தொகுதியிலும் போட்டியிட இருப்பதாகக் கூறப்படுகிறது.

 இதுதவிர கடந்த தேர்தலில் பாமக போட்டியிட்ட கலசப்பாக்கம் தொகுதி இப்போது காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

 சென்னையில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆர்.கே. நகர் தொகுதியில் மட்டுமே போட்டியிட்டது. ஆனால் இப்போது ராயபுரம், தியாகராய நகர், திரு.வி.க நகர், அண்ணாநகர், மயிலாப்பூர் ஆகிய 5 தொகுதிகள் கிடைத்துள்ளன.

 

மாவட்ட வாரியாக காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்

 திருவள்ளூர : திருத்தணி,

 பூந்தமல்லி (தனி), ஆவடி.

 சென்ன : திரு.வி.க. நகர் (தனி),

 ராயபுரம், அண்ணா நகர்,

 தியாகராய நகர்,

 மயிலாப்பூர்.

 காஞ்சிபுரம : ஆலந்தூர்,

 ஸ்ரீபெரும்புதூர் (தனி),

 மதுராந்தகம் (தனி).

 வேலூர : சோளிங்கர், வேலூர்,

 ஆம்பூர்.

 கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி, ஓசூர்.

 திருவண்ணாமல : செங்கம் (தனி),

 கலசப்பாக்கம், செய்யாறு.

 விழுப்புரம : ரிஷிவந்தியம்.

 சேலம : ஆத்தூர் (தனி),

 சேலம் வடக்கு.

 நாமக்கல : திருச்செங்கோடு.

 ஈரோட : ஈரோடு மேற்கு,

 மொடக்குறிச்சி.

 நீலகிரி : உதகமண்டலம்.

 கோவ : வால்பாறை (தனி),

 தொண்டாமுத்தூர்,

 சிங்காநல்லூர்.

 திருப்பூர : திருப்பூர் தெற்கு,

 காங்கேயம்,

 அவினாசி (தனி).

 திண்டுக்கல : நிலக்கோட்டை (தனி),

 வேடசந்தூர்.

 கரூர : கரூர்.

 திருச்சி : மணப்பாறை, முசிறி.

 அரியலூர : அரியலூர்.

 கடலூர : விருத்தாசலம்.

 நாக : மயிலாடுதுறை.

 திருவாரூர : திருத்துறைப்பூண்டி (தனி).

 தஞ்சாவூர : பாபநாசம்,

 பட்டுக்கோட்டை,

 பேராவூரணி.

 புதுக்கோட்ட : திருமயம், அறந்தாங்கி.

 சிவகங்க : காரைக்குடி, சிவகங்கை.

 மதுர : மதுரை வடக்கு,

 மதுரை தெற்கு,

 திருப்பரங்குன்றம்.

 விருதுநகர : விருதுநகர்.

 ராமநாதபுரம : பரமக்குடி (தனி),

 ராமநாதபுரம்.

 தூத்துக்குடி : விளாத்திக்குளம்,

 ஸ்ரீவைகுண்டம்.

 திருநெல்வேலி : வாசுதேவநல்லூர் (தனி),

 கடையநல்லூர்,

 நாங்குநேரி, ராதாபுரம்.

 கன்னியாகுமரி : குளச்சல், விளவங்கோடு,

 கிள்ளியூர்.

பாமக போட்டியிடும் தொகுதிகள்

திருப்போரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆர்க்காடு, போளூர், ஜோலார்பேட்டை, செஞ்சி, மயிலம், நெய்வேலி, மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, பவானி, தருமபுரி, பூம்புகார், திண்டுக்கல், ஆலங்குடி, மதுரவாயல், அணைக்கட்டு, ஜெயங்கொண்டம், பர்கூர், வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி, புவனகிரி, கோவில்பட்டி, திண்டிவனம், சோழவந்தான், வேதாரண்யம், பரமத்திவேலூர், பாலக்கோடு.

விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள்

விடுதலைச் சிறுத்தைகள் 10 தொகுதிகளில் 2 பொதுத் தொகுதிகளிலும் 8 தனித் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.

அந்தக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகள் விவரம்:

பொதுத் தொகுதிகள்: சோளிங்கநல்லூர், உளுந்தூர்பேட்டை.

தனித் தொகுதிகள்: செய்யூர், அரக்கோணம , கள்ளக்குறிச்சி,

திட்டக்குடி, காட்டுமன்னார்கோயில், சீர்காழி, அரூர், ஊத்தங்கரை.

தேர்தலுக்குப் பிறகு வசந்த காலம்: தங்கபாலு

 சென்னை, மார்ச் 15: தேர்தலுக்குப் பிறகு தமிழக காங்கிரஸýக்கு வசந்த காலம் பிறக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு நம்பிக்கை தெரிவித்தார்.

 திமுக கூட்டணியில் காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:

 கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்ற பெரும்பாலான தொகுதிகளை மீண்டும் பெற்றுள்ளோம்.

 2004 மக்களவைத் தேர்தலில் 10 தொகுதியில் போட்டியிட்ட எங்களுக்கு 2009-ல் 15 தொகுதிகள் கிடைத்தது. 2006 பேரவைத் தேர்தலில் 48-ல் போட்டியிட்ட எங்களுக்கு இப்போது 15 தொகுதிகள் அதிகமாக கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

 கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டியிருந்ததால் தருமபுரி, தேனி மாவட்டங்களில் எங்களுக்கு தொகுதிகள் கிடைக்கவில்லை. வரும் உள்ளாட்சித் தேர்தல், மேலவைத் தேர்தல்களில் இந்த மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

 மத்திய, மாநில அரசின் சாதனைகளைச் சொல்லி பிரசாரம் செய்வோம். அனைத்துத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாகத் தேர்தல் பணியாற்றுவார்கள்.

 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சி அடையும் வகையில் நல்ல செய்தி வரும், அதன் பிறகு வசந்த காலம் பிறக்கும் என்றார் தங்கபாலு.

மகிழ்ச்சியும், வருத்தமும்- இளங்கோவன்

 சென்னை, மார்ச் 15: காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகள் குறித்து முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியது: காங்கிரஸ் தரப்பில் கேட்கப்பட்ட பெரும்பாலான தொகுதிகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனாலும், பெரிதும் எதிர்பார்த்த கோபிசெட்டிப்பாளையம், திருச்சி, மாதவரம், பெரம்பூர் ஆகிய தொகுதிகள் கிடைக்காதது வருத்தமளிக்கிறது.

 அந்த கோஷ்டி, இந்த கோஷ்டி என்று பார்க்காமல் வெற்றி வாய்ப்புள்ள சரியான வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடமும், ஐவர் குழுவும் தேர்வு செய்தால் வெற்றி நிச்சயம். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் அவர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com