Contact us at: sooddram@gmail.com

 

திராவிட கட்சிகளையும் விட்டு வைக்கவில்லை விக்கிலீக்ஸ்

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த மு.க.அழகிரி, கார்த்தி சிதம்பரம்: அமெரிக்க தூதரின் ரகசிய செய்தி மூலம் அம்பலப்படுத்தியது விக்கிலீக்ஸ்

தேர்தல் நேரத்தில் வாக்காளர் களுக்கு பணம் கொடுப்பது தென் இந்தியாவில் சாதாரண விஷயம் என்று அமெரிக்க அரசின் தலை மையிடத்திற்கு, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி அனுப்பிய ரகசிய செய்தியில் கூறப்பட்டிருப்பதைவிக்கிலீக்ஸ்இணையதளம் அம்பலப்படுத்தி யுள்ளது. மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் மத்திய உள்துறை அமைச் சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி ஆகியோர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார்கள் என்றும் அமெரிக்க தூதர் விலாவாரியாக அனுப்பியுள்ள ரகசிய செய்தி, ‘விக்கிலீக்ஸ்தகவல் மூலம் வெளிச் செத்திற்கு வந்துள்ளது.

உலகெங்கும் உள்ள அமெரிக் கத் தூதரகங்கள் தங்கள் நாட்டின் வெளியுறவுத்துறைக்கு அனுப்பிய பல்வேறு ரகசிய தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டு வருகிறது. இதில் இந்தியா தொடர்பான விவ ரங்களை விக்கிலீக்ஸ், ‘தி இந்துநாளிதழுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

இதுவரை விக்கிலீக்ஸ் வெளியிடாத இந்தத் தகவல்களை செவ்வாய்க்கிழமை முதல்இந்துநாளேடு வெளியிட்டு வருகிறது. அதில் கூறப்பட்டுள்ள விபரங்களில் முக்கிய அம்சங்கள் வருமாறு:

2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது வாக்காளர் களுக்கு பணம், பொருட்கள் கொடுத்ததாக ஆந்திரா மற்றும் தமிழக அரசியல்வாதிகளும், அவர் களின் உதவியாளர்களும் ஒப்புக் கொண்டதாக சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரக அதி காரி பிரடரிக் கப்லான், அமெரிக்க வெளியுறவுத் துறை தலைமை யகத்திற்கு அனுப்பிய கேபிளில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரகக் குழுவிடம் கார்த்தி சிதம்பரம், ரசாயனத்துறை அமைச்சர் மு.க. அழகிரியின் நம் பிக்கைக்குரிய முன்னாள் மதுரை மேயர் எம்.பட்டுராஜன், ஆந்திரா வைச் சேர்ந்த மஜ்லிஸ்முத்தா கிதுல் முஸ்லிமீனைச் சேர்ந்த எம்.பி. அசாதுதீன் ஒவைசி ஆகி யோர் தேர்தல் பிரச்சாரத்தின்போது தாங்களும், தங்கள் உதவியா ளர்களும் வாக்காளர்களுக்கு எவ் வாறு பணப் பட்டுவாடா செய்தோம் என்று ஒளிவுமறைவின்றி பேசி யுள்ளனர்.

13-5-2009 அன்று அனுப்பப் பட்டுள்ள கேபிளில், கப்லான், தேர்தல் பணிகளை பண பலம் எவ் வாறு ஆட்டிப் படைக்கிறது என்று இந்த துறையில் உள்ள பலரிடம் சேகரித்த தகவல்களை அனுப்பி யுள்ளார்.

வாக்காளர்களுக்கு அரசியல் வாதிகள் பணம், பொருள் முதலி யவை கொடுப்பது என்பது தென் இந்தியாவில் சாதாரணமான ஒன்று. ஏழை வாக்காளர்கள் வேட்பாளர்கள் ஏதாவது கொடுக்க மாட்டார்களா என்று எதிர்பார்க்கின் றனர். அவர்களும் வாக்காளர் களின் எதிர்பார்ப்புகளை எப்படியா வது பூர்த்தி செய்கின்றனர். கிணறு வெட்ட பணம் கொடுப்பதில் இருந்து, காலையில் செய்தித்தாள் கொடுக் கும்போது அதற்குள் பணத்தை வைத்துக் கொடுத்து, வாக்காளர் களை தங்கள் பக்கம் இழுப்பது வரை தாங்கள் செய்தவற்றை எல்லாம் அரசியல்வாதிகளும், அவர்களது ஆட்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதற்கான பணம், கட்சி நிதி திரட்டுவதன் மூலம் கிடைக்கிறது. இவ்வாறு பணம் கொடுப்பதால் வாக்காளர்களின் மனம் மாறு கிறதா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை என்றாலும், சில நேரங்களில் நிச்சயம் மனம் மாறத் தான் செய்கிறது என்று தூதரக அதிகாரியின் கேபிளில் கூறப் பட்டுள்ளது.

கப்லானும், அவரது ஊழியர் களும் சென்ற இடங்களில் எல் லாம் பத்திரிகையாளர்கள், அரசி யல்வாதிகள், வாக்காளர்கள் லஞ் சம் என்பது தேர்தல் நேரத்தில் ஏற் றுக்கொள்ளப்பட்ட உண்மை என்றே கூறினர்.

இந்தக் குழு சென்னை மற்றும் ஐதராபாத்தில் உள்ள சேரிப் பகுதி களுக்கு சென்றபோது, தேர்தல் நேரத்தில் அங்குள்ள மக்கள் ஏதா வது கிடைக்காதா என்று எதிர் பார்ப்பதை தெரிந்து கொண்டனர்.

அரசியல் வல்லுநர் ஒருவர் அவர்களிடம் கூறுகையில், பிரச் சாரத்திற்கு சேரிப்பகுதிகள் மிகவும் முக்கியமானவை. அங்குள்ள மக் கள் தொகையும், அவர்களது வறு மையும் லஞ்சம் மூலம் அவர்களை சுலபமாக வாங்கிவிடச் செய்கிறது என்றார்.

தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் அரசியல் கட்சிகளின் ஏஜெ ண்டுகள் அரிசி மூட்டையில் பணத் தைக் கொண்டு வருவார்கள். அவர் களிடம் இருக்கும் வாக்காளர் பட் டியலில் உள்ள பெயர்களின் அடிப் படையில் பணப்பட்டுவாடா செய் வார்கள். ஏஜெண்டுகள் வழக்க மாக தேர்தல் ஆணையம் தூங்கும் போது நடு இரவில் குறிப்பாக 2 முதல் 4 மணிக்குள் தான் வரு வார்கள்.

இன்னொரு செய்தித்தாள் கிடைக்குமா?

இதுவரை தமிழகம் கண்டிராத அளவுக்கு அரசியலில் பணப்புழக் கத்தை விட்டவர் மு.க.அழகிரி என் பது கப்லானின் கருத்து. அழகிரி யின் நம்பிக்கைக்குப் பாத்திர மான பட்டுராஜன், கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த திருமங்கலம் இடைத் தேர்தலுக் காக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதை ஒப்புக் கொண் டார். இது ஒன்றும் பெரிய ரகசியம் எல்லாம் கிடையாது. அழகிரி திரு மங்கலத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ. 5 ஆயிரம் கொடுத்தார் என்று பட்டுராஜன் ஒப்புக் கொண்டுள்ளார் என கப்லானின் கேபிள் கூறுகிறது.

இன்னொரு செய்தித்தாள் கிடைக்குமா என்ற தலைப்பில் கப் லான் எழுதிய தகவலில், திருமங்க லத்தில் திமுக எவ்வாறு பணப் பட்டுவாடா செய்தது என்று விளக் கமாக கூறியுள்ளார்.

வழக்கமாக நடு இரவில் வாக் காளர்களுக்கு பணம் கொடுப்ப தற்கு பதிலாக, திருமங்கலத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ளவர் களுக்கு செய்தித்தாள்களில் ஒரு கவரில் பணம் வைத்து கொடுக் கப்பட்டது. அந்த செய்தித்தாள் களில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுகவின் வாக்காளர் சீட்டு பூத் சிலிப் வைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயமாக லஞ்சம் வாங்க நிர்ப்பந் திக்கப்படுத்தப்பட்டுள்ளனர். செய் தித்தாள்களில் வைத்து பணம் பட்டுவாடா செய்யப்பட்டதை பட்டு ராஜனே ஒப்புக் கொண்டுள்ளார்.

மதுரையில் உள்ள காங்கிரஸ் நிர்வாகி எஸ். கண்ணன் என்பவர், தூதரக ஊழியர்களிடம் கூறுகை யில், திருமங்கலத்தில் தலைக்கு ரூ. 5 ஆயிரம் கொடுக்கப்பட்டது அனைத்தையுமே மாற்றிவிட்டது. இது முன்பு கொடுக்கப்பட்ட ரூ. 500 என்ற தொகையை விட அதிகம் என்றார்.

2009ம் ஆண்டு நாடாளு மன்ற தேர்தலின்போது, திருமங் கலத்தில் செய்ததுபோல் பணம் பட்டுவாடா செய்வதில் சிரமம் ஏற் பட்டது. ஏனென்றால் சட்டசபை தொகுதியை விட மக்களவை தொகுதி 7 மடங்கு பெரியது. இருப் பினும் செய்தித்தாள் முறை மூலம் பணம் கொடுக்கத்தான் அழகிரி திட்டமிட்டார்.

கார்த்தி சிதம்பரம்

மத்திய அமைச்சர் ப.சிதம்பரத் தின் 2009ம் ஆண்டு மக்கள வைத் தேர்தல் பிரச்சாரத்தை அவ ரது மகன் கார்த்தி சிதம்பரம் தான் கவனித்துக் கொண்டார்.
கார்த்தி சிதம்பரம் ஓட்டுக்கு பணம் கொடுக் கவில்லை என்று மறுத்தார். அதே நேரத்தில்அவ்வாறு செய்வது தவறு என்றெல்லாம் ஒன்றும் இல்லை. சிவகங்கை தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது சாத் தியம் இல்லை என்று தான்என ஒப்புக் கொண்டார்.

கேபிளில் பெயர் குறிப்பிடாத தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் சென்னையில் உள்ள தூதரக குழுவிடம் கூறுகையில், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் சிறப்பாக செயல்படுகிறார். அவர் சிலருக்கு பணம் கொடுத்துள்ளார். ஆனால் அவரது தந்தை அவ் வாறு செய்யமாட்டார் என்றார்.

தனது தந்தையை ஆதரிக்கும் சில கிராம மக்களுக்கு பணம் கொடுத்ததை கார்த்தி ஒப்புக் கொண்டுள்ளார். பெரும்பாலான கிராமங்கள் உள்ளூர் கோயில் களுக்கும், சத்திரங்களுக்கும் நன் கொடை கேட்டன என்றார்.

இது தவிர ஐதராபாத்தில் ஒவைசி, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை ஒப்புக் கொண்டார். நான் கிணறு வெட்ட பணம் கேட் டவர்களுக்கு கட்சியினர் மூலம் ரூ.25 ஆயிரம் கொடுத்து, அவர் கள் கிணறு தான் வெட்டுகிறார் களா என்று கண்காணிக்குமாறு கூறினேன். நான் வாக்காளர் களுக்கு நேரடியாக பணம் கொடுக் கவில்லை, அவர்களின் தேவை களை பூர்த்தி செய்தேன். நான் ஒரு அனாதைப் பெண்ணின் திரு மணத்திற்கு ரூ. 35 ஆயிரம் கொடுத் தேன் என்று ஒப்புக் கொண்டார். இவ்வாறு பணம் கொடுப்பது சட்ட விரோதமில்லையா என்று கேட்ட தற்கு, ஆமாம், ஆனால் இதுதான் ஜனநாயகம் என்று பதில் அளித் தார் என அமெரிக்க தூதரக அதி காரி கப்லானின் ரகசிய கேபிள் களில் கூறப்பட்டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com