Contact us at: sooddram@gmail.com

 

ஈழத்தமிழருக்காக   

புதுடில்லியை நோக்கிய நெடும் நடைப் பயணம்

அதிகாரத்திற்கு வருவதற்கு முன் தமிழ் பேசும் மக்களின் உரிமை பற்றி பேசுவதும், வந்த பின் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதும் வரலாற்று ரீதியிலான சாதரண நடவடிக்கையாகவே உள்ளது என ரிபிசியின் பணிப்பாளர் லண்டன் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்

தலைவர் அவர்களே!

இங்கே வருகை தந்திருக்கின்ற பேச்சாளார்களே! கூட்டத்தில் கலந்து கொண்டியிருக்கின்ற தோழர்களே! தோழிகளே! வணக்கம்.

இன்று நாம் ஒரு ஜனநாயக ரீதியான நடவடிக்கையை ஆதரிப்பதற்காகவும், எதிர்காலத்தில் ஒற்றுமையாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக செயற்படுவதற்காகவுமே இங்கே கூடியிருக்கின்றோம்.

''இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் மற்றும் வடக்கு கிழக்கில் திட்டமிட்டு அரசினால் மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றங்களை அகற்ற வேண்டும்'' ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன் வைத்து கடந்த பெப்பரவரி 16ம் திகதி முதல் சென்னையிலிருந்து புதுடில்லியை நோக்கிய நெடும் நடைப் பயணத்தை, 'ஈழ தேசிய ஜனநாயக முன்னணியின் போராளிகள்' கடந்த 60 நாட்களாக, 2200 கிலோ மீற்றர் தூரத்தை மிகவும் துயரத்திலும், துன்பத்திலும், ஒரு உயிர் இழப்புக்கும் மத்தியிலும், தங்களின் உடலை வருத்தி கொண்டு, எமது மக்களின் அரசியல் உரிமைகளை பெறுவதற்காக அந்த நடைப் பயணத்தினை மேற் கொள்கிறார்கள்.

அன்புக்குரியவர்களே!

எமது மக்களின் உரிமைப் போராட்டமானது அகிம்சைப் போரட்டமாக எமது தலைவர்களால் முன் எடுக்கபட்டு தோல்வியடைந்த நிலையிலும் இலங்கையில் தொடர்ந்து அமைந்த அரசுகள் பேரினவாத சிந்தனை அடிப்படையிலான சட்ட ஆக்கங்கள், ராணுவத்தை ஏவுதல்,அரச கட்டுமானங்களில் தமிழ் மக்களுக்கான வாய்ப்புகளை படிப்படியாக குறைத்தல் போன்ற பல திட்டமிட்ட அணுகுமுறைகளை மேற்கொண்டதோடு தமிழர்களின் பொருளாதார இருப்பினை அழிக்கும் நோக்கத்துடன் இனக் கலவரங்களும் தூண்டப்பட்டன. 1983 ம் ஆண்டு இனக் கலவரம் ஏற்பட்டபோது இக் கலவரம் இடம்பெற்று 6 நாட்களின் பின்னர்தான் ஜனாதிபதி ஜே ஆர் அவர்கள  கலவரம அடக்கப்பட்டுள்ளதாக தொலைக்காட்சியில் தெரிவித்தார். இதன் விளைவுகள்தான் ஆயுதப் போராட்டமாக நிலமைகள் மாற காரணமாக அமைந்தன.

இன்று ஆயுதப் போராட்டம் ஒடுக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட எம் மக்கள் சொல்லொணா துன்பங்களுக்கும் துயரங்களுக்கும்   நாள்தோறும் உள்ளாகுவதை நாம் காண்கிறோம். போராட்டக் களத்திலே நின்று போராடிய சில முக்கியஸ்தர்கள் இன்று உல்லாச வாழ்க்கையை தொடர்ந்த நிலையிலே, அப்போராட்ட களத்தில  ஈடுபட்ட அப்பாவி இளைஞர்கள் , யுவதிகளில்  பல ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயும், கொல்லப்பட்டும் சிறையிலும் உள்ள நிலையிலே தான் எமது ஈழதேசிய ஜனநாயக முன்னணியின் போராளிகள்  இந்த நெடும் பயணத்தை ஆரம்பித்து உள்ளனர்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் அதிகாரத்திற்கு வருகின்ற எந்த ஒரு சிங்கள அரசியல் தலைவரும் அதிகாரத்திற்கு வருவதற்கு முன் தமிழ் பேசும் மக்களின் உரிமை பற்றி பேசுவதும், அதிகாரத்துக்கு வந்த பின் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதும் வரலாற்று ரீதியிலான சாதரண நடவடிக்கையாகவே உள்ளது. இப்பொழுது இலங்கையிலே ஒரு கொடுரமான ஆட்சியே நடைபெறுகிறது.

எமது இனத்தை அழிப்பதையும் எமது மொழியை இல்லாமல் செய்வதையும  எமத கலாசாரத்தை  அழிப்பதையும்  எமது கடற்கரை பகுதிகளை வெளி நாடுகளுக்கு தாரைவார்ப்பதையும் எமது நிலங்களை பெறும்பான்மையினத்தினருக்கும், வெளிநாட்டவர்க்கும் பங்கு போடுவதையும்  திட்டமிட்ட குடியேற்றங்களை செய்வதையும் அதற்கு அப்பாலும் பௌத்த விகாரகளை தமிழ் பிரதேசங்களில் நிறுவுவதையும் மகிந்த அரசு கொள்கையாக கொண்டு செயற்பட்டு வருவதை நாம் காணக் கூடியதாக உள்ளது.

அதேவேளை தாம் சார்ந்தவர்களை அல்லது தீர்மானிக்கின்றவர்களை தமிழ் இனம் அரசியல் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற அரசின் நடவடிக்கைகள  தமிழ் இனத்தை பூண்டோடு அழித்து ஒழிக்கும் இன்னொரு நடவடிக்கை என்பதை தமிழ் சமூகம் மறந்து விடக்கூடாது.

எமது விடுதலை போரட்டத்திற்காக நாம் இழந்து எமது உறவுகளின் உயிர்கள் பல ஆயிரத்திற்கும் அதிகமானவை. அதிலும் திட்டமிட்டு அழிக்கபட்டவை எண்ணில் அடங்காதவை. அழிக்கப்பட்ட எமது வளங்களும் கணக்கில் அடங்காதவை. இவற்றை எல்லாம் நாம் பார்த்து கேட்டு மௌனமாக இருந்து விட முடியாது.

நாம் மௌனம் சாதிப்பதால்தான் மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் எமது இனத்தை மிகவும் திட்டமிட்ட வகையிலே அழித்து ஒழிக்க முயற்சிகளை மேற்கொள்ளுகிறார்கள். அது மட்டும் அல்லாது புலம் பெயர்ந்த நாட்டில் எமது இனத்தில் சிலரை பயண்படுத்தி அவர்கள் ஊடாக வதந்திகளை பரப்பி எமது இனத்தை பிரித்தாளும் முயற்சியில் அவர்கள் வெற்றியும் கண்டிருக்கின்றர்கள .

எனவே எமது உறவுகளே

நாம் இழந்த எமது உறவுகளின் உயிர்களை நாம் மீளப் பெறமுடியாது. ஆனால் எமது உரிமைகளை பெறுவதற்கான போராட்டங்களை   தொடர்வதன் மூலமே எமது தாயகத்தை மீட்டு எடுக்க முடியும .

நான் சார்ந்திருக்கின்ற அமைப்பான ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் தலைவர் ஞா.ஞானசேகரன் அவர்களுக்கு 1987 ம் ஆண்டு இந்தியா அன்று வழங்கிய உறுதிமொழியை அடுத்தே எமது ஆயதங்களை ஒப்படைத்து இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக்கொண்டோம்.

எனவே தான் இன்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அமுல் படுத்துவதற்கு இந்தியாவை நாம் கேட்பதற்கு உரிமையுள்ளவர்களாக உள்ளோம .

1983ம் ஆண்டு இலங்கையிலே ஏற்பட்  இனக கலவரத்தைத் தொடர்ந்து அரசியல் அமைப்பின் 6 வது திருத்தம் தமிழ்த் தலைவர்களை இந்தியா செல்ல நிர்ப்பந்தித்தது. இந்தியா சென்ற தமிழ் தலைவர்கள் மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா சந்தித்து நிலமைகளை விளக்கினார்கள்.அதனைத் தொடர்ந்து வெளிநாட்டமைச்சர் நரசிம்மராவ் அவர்கள் பார்த்தசாரதி அவர்களை இலங்கைக்கு சிறப்பு பிரதிநிதியாக அனுப்பினார். பார்த்தசாரதி அவர்களின் முயற்சிதான் இலங்கையில் சர்வகட்சி மாநாட்டுக்கு வித்திட்டது.

இந்த மாநாட்டில்தான் அதிகார பரவலாக்கல் தொடர்பான கருத்துக்கள் முதன் முதலாக விவாதிக்கப்பட்டன. அதேவேளை இந்த மாநாட்டில் பங்கு கொள்ள பௌத்த சங்கங்களுக்கு ஜே .ஆர். ஜயவர்தன அழைப்பு விடுத்தார். இதனால் தமிழ்த் தலைவர்கள் ஏமாற்றமடைந்தார்கள். அதனால் தான் இறுதியில் அந்த மாநாடும் தோல்வியில் முடிந்தது. இருப்பினும் இம் மாநாட்டில் விவாதிக்கப்பட்ட அம்சங்களே இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் சாராம்சமாக அமைந்தன.

இலங்கையிலே நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின் தோல்வியைத் தொடர்ந்து இந்திய அரசின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. இந்த அச்சம் காரணமாகவே இந்திரா காந்தியின் மரணச் சடங்கில் கலந்து கொண்ட ஜே. ஆர . ஜயவர்தன தமிழ் தலைவர்களுடன் மீண்டும் பேச விரும்பினார். இது தான் கால போக்கில் திம்பு பேச்சுவார்த்தைக்கு வழி வகுத்தது.

திம்பு பேச்சுவார்த்தைகளில் தமிழ் அமைப்புகள் மீது அதிக அளவு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.சத்தியேந்திரா, சந்திரகாசன், பாலசிங்கம் ஆகியோர் வெளியேற்றப்பட்டார்கள்.1985 இல் சிதம்பரம், நட்வார் சிங், ஹரி ஜெயவர்த்தன ஆகியோர் ஓர் உடன்பாட்டிற்கு வந்தார்கள். அதில் தான் அதிகாரப் பரவலாக்க அடிப்படையில் சுயாட்சி ஏற்பாட்டினை தர அவர்கள் இணங்கினார்கள்.இதில் வடக்கு கிழக்கு தமிழர்களினது பாரம்பரிய வாழ்விடம் எனவும், ஏனைய இனங்கள் அங்கு வாழ்வதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் பின் வருவனவற்றை தெளிவாக தெரிவித்திருந்தது.

- நாட்டின் ஒருமைப்பாடு

- சகல இனங்களினதும் இணக்கப்பாடு

- பிரிவினைக்கான எதிர்ப்பு

- வட கிழக்கு பாரம்பரிய வாழ்விடங்கள்

- அதிகார பரவலாக்கம்

- மாகாணம் அதிகார பரவலாக்கத்தின் குறைந்த பட்ச அலகு

- பொலீஸ், காணி அதிகாரம் வழங்குதல்

- சுயாட்சி அதிகார கட்டமைப்பு ஆகியன அதில் வலியுறுத்தப்பட்டிருந்தன.

ஆனால் இன்று என்ன நடக்கிறது?.......

- நாட்டின் ஒருமைப்பாட்டை தமிழ்த் தலைமைகள் வற்புறுத்துகின்ற போதிலும் அரசு ஏற்கத் தயாராக இல்லை.

- தமிழ்ப் பகுதிகளில் ராணுவக் குவிப்பு

- அபிவிருத்தி என்ற பெயரில் தமிழ்பேசும் மக்களின் நிலங்கள் பறிப்பு

- உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி சிங்கள மக்கள் தாமாக அரச நிலங்களில் குடியேறுவதை ஊக்குவித்தல்.

- மாகாண சபைகளை முழுமையான அதிகாரங்களோடு செயற்பட விடாது தடுத்தல்

- பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவ நிரந்தர முகாம்களை அமைத்தல்.

- தனியார் காணிகளில் விகாரைகளை அமைக்க ஊக்குவித்தல்

- அபிவிருத்தி, வர்த்தக வலயம் என்ற பெயரில் பாரம்பரியமாக வாழ்ந்த மக்கள் வெளியேற்றப்படுதல்.

- தமிழ்ப் பிரதேச குடிப்பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இடையிடையே சிங்களக் குடியிருப்பகளை அமைத்தல் பொன்றவைதான் தற்போது திட்டமிட்ட வகையில் நடக்கின்றன.

இதன் விளைவுகள் நிலைமைகள  இன்னமும் மோசமாக்கப்போகின்றன?

- இவை யாவும் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் உள் நோக்கங்களுக்கு முரணானவை.

- தமிழ்ப் பிரதேசங்களின் தனித் தன்மையை இவை அழிக்க முயலுகின்றன.

- சிறுபான்மையினர் தாம் செறிவாக வாழும் பிரதேசங்களில் சிறுபான்மையாக்கப்படுகிறார்கள்.

- படிப்படியான இனச் சுத்திகரிப்புக்கு இது வித்திடுகிறது.

- இது பாலஸ்தீனர்களின் பாரம்பரிய நிலங்களில் இஸ்ரேலிய குடியிருப்புகள் நிர்மாணிக்கப்படுவதற்கு ஒப்பானவையாகும்.

இதற்காகத்தான் நாம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை முழுமையாக அமல்படுத்தும்படி கோருகிறோம்.அதன் மூலம்தான் அரசியலமைப்பிலேயே எமது உரிமைகளை உறுதிப்படுத்த முடியும். ஏனெனில் அது அரசியல் அமைப்பின் பகுதி ஆகும்.

- பேச்சுவாத்தைக்கான நிலமைகள் தற்போது காணப்படவில்லை. ஆனாலும் எமக்கான நிர்வாகக் கட்டமைப்புக்கள் சரியாக உறுதிப்படுத்தப்பட்டு, மக்களிடம் அதிகாரம் செல்வதற்கான வழிகள் உறுதி செய்யப்பட்டு, அத்தோடு வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னமும் குறைக்கப்பட வேண்டும். இவற்றுக்கெல்லாம் ஒரு ஜனநாயக சூழல் அவசியம். அதனையும் இந்த இலங்கை- இந்திய ஒப்பந்தத்தினாலேயே கொண்டுவரமுடியும்.

இவற்றை வலியுறுத்தியே இந்த நெடும் பயணம் மேற்கொள்ளப்படுகின்றது. அதற்கு ஆதரவு தர முன்வந்த உங்கள் அனைவருக்கும் எமது தாழ்மையான நன்றிகள் உரித்தாகுக. புலம்பெயர் மக்கள  இந்தியாவின் உதவியை பெற்று எமது மக்களின் உரிமை பெறுவதற்க்கு ஒன்றினைந்து செயற்பட அனைவரின் ஆதரவினையும்  தருமாறு உங்களை பணிவாகக் கேட்டுக்கொள்கிறேன். என லண்டனில் நடைபெற்ற கூட்டத்தில் ரிபிசி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com