Contact us at: sooddram@gmail.com

 

இலங்கை அணி இறுதி போட்டிக்கு தெரிவு விடைபெற்றார் முரளி

கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்தி தனது சொந்த மண் ணில் விடை பெற்றார் இலங்கை நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன். இந்த உலகக் கிண்ண போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முத்தையா முரளிதரன் நேற்று அரையிறுதியில் தனது சொந்த மண்ணில் விளையாடி னார். ஆர் பிரேமதாச மைதானத்தில் நேற்று நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் முரளி தனது 10 ஓவர்களுக்கும் 42 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் அவர் தனது சொந்த மண்ணில் வீசிய கடைசி பந்தில் ஸ்கொட் ஸ்னரிஸை எல்.பி.டபிள்யூ. முறை யில் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. இதேபோன்று முரளி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனது கடைசி பந்துக்கு விக்கெட் வீழ்த்தியமை குறிப்பிட்டத்தக்கது.

இதன்படி முரளி தனது சொந்த மண்ணில் 109 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 154 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனினும் அவர் சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியோர் வரிசையில் 4 ஆவது இடத்தையே பிடித்தார். இந்த சாதனை பட்டியலில் தென்னாரிபிக்க முன்னாள் வீரர் ஷோன் பொலக் 193 விக்கெட்டுகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

அடுத்து வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் முரளி விளையாடவுள்ளார். இதுவே அவர் கிரிக்கெட் வாழ்க்கையில் விளையாடும் கடைசி ஆட்டமாகவும் அமையவுள்ளது.

நியூசிலாந்தை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தி

இறுதிப் போட்டியில் இலங்கை அணி

நியூஸிலாந்துடனான அரையிறுதியில் 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய இலங்கை அணி உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் விளையாட மீண்டும் ஒருமுறை தகுதிபெற்றது. இதன்படி வரும் சனிக்கிழமை மும்பை வென்கட் அரங்கில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இலங்கை அணி விளையாடவுள்ளது. இன்று நடைபெறும் இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதியில் வெற்றிபெற்ற அணியுடன் கிண்ணத்தை வெல்வதற்காக இலங்கை மோதும். இலங்கை அணி இதற்கு முன்னர் 1996 மற்றும் கடந்த 2007 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில் 1996 ஆம் ஆண்டு தொடரில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை வென்றது.

கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் 218 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி எனப் பதிலெடுத்தாடிய இலங்கை அணிக்கு உப்புல்தரங்க, டில்சான் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். உப்புல் தரங்க 31 பந்துகளை எதிர்கொண்டு 4 பெளண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடங்கலாக 30 ஓட்டங்கள் பெற்ற போது செளத்தியின் பந்தில் ரைடரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் டில்சானுடன் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் சங்கக்கார இனைந்தார். இருவரும் 2 வது விக்கெட்டுக்காக 120 ஓட்டங்களைக் குவித்தனர். டில்சான் 93 பந்துகளை எதிர்கொண்டு 10 பெளன்டரி, மற்றும் ஒரு சிக்சர் அடங்கலாக 73 ஓட்டங்களைப் பெற்றபோது ஆட்டமிழந்தார்.

பின்னர் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்ட மஹேல ஜயவர்தன 3 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ஓட்டம் பெற்ற போது ஆட்டமிழந்து சென்றார். பின்னர் அணித் தலைவர் சிறப்பாக ஆடிக்கொண்டு இருக்கையில் 54 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். அவர் 79 பந்துகளை எதிர்கொண்டு 7 பெளன்டரி உட்பட ஒரு சிக்சரைப் பெற்றார்.

இதேவேளை இப்போட்டியைக் கண்டுகளிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மைதானத்திற்கு வருகை தந்து இலங்கை வீரர்களை உட்சாகப்படுத்தினார்.

உலகக் கிண்ணப் போட்டியில் திலகரத்ன டில்சான் 467 ஓட்டங்களைப் பெற்று அதிக ஓட்டங்கள் பெற்ற வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இதேவேளை அணித்தலைவர் குமார் சங்கக்கார 417 ஓட்டங்களைப் பெற்று 2வது இடத்தில் உள்ளார்.

நியூசிலாந்த அணி நேற்றைய போட்டியில் 6 தடவை அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகி 6 தடவையும் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இலங்கை அணி 83 போட்டிகளில் விளையாடி 51 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது.

அத்துடன் 5 விக்கெட்டுக்காக இணைந்த சாமர சில்வா 25 பந்துகளை எதிர்கொண்டு 2 பெளன்டரியுடன் 13 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். அப்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 185 ஆகும். பின்னர் திலான் சமரவீரவுடன் இணைந்த அஞ்சலோ மெத்திவ்ஸ் அபாரமாக ஆடி 18 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்சர், ஒரு பெளன்டரியுடன் 14 ஓட்டங்களையும், சமரவீர 38 பந்துகளை எதிர்கொண்டு 2 பெளன்டரி உட்பட 23 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

இலங்கை அணி 47.5 ஓவர்களில் 220 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டால் வெற்றியீட்டியது. நியூசிலாந்து அணி 5 விக்கெட்டால் தோல்வியைத் தழுவி 6 வது தடவை அரையிறுதியில் தோற்ற அணியாக இடம்பிடித்துக் கொண்டது.

பந்து வீச்சைப் பொறுத்தவரை செளத்தி 3 விக்கெட்டையும், விட்டோரி, மெக்காஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

இப்போட்டியிகள் ஆட்ட நாயகனாக சங்கக்கார தெரிவானார்.

உலகக் கிண்ண முதலாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 48.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றது.

நியூசிலாந்து அணியின் ஸ்கொட் ஸ்டைரிஸ் தனியாளாக நின்று 57 ஓட்டங்கள் பெற்றார்.

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய நியூசிலாந்து அணித் தலைவர் தனது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். அதற்கு இணங்க அவ்வணியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக மாட்டின்குப்தில், பிரன்டம் மெக்கலம் ஆகியோர் களமிறங்கினர்.

மெக்கலம் 21 பந்துகளை எதிர்கொண்டு 21 பெளண்டரிகள், ஒரு சிக்சர் அடங்கலாக 13 ஓட்டங்கள் பெற்றபோது ரங்கன ஹேரத்தின் பந்தில் போல்ட் ஆனார். அப்போது நியுசிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை 32 ஆகும். பின்னர் குப்திலுடன் இணைந்த ஜெசிரைடர் இருவரும் சற்று நிதானமாக ஆடிக்கொண்டிருந்தபோது முரளிதரனின் பந்தில் விக்கெட் காப்பாளர் சங்கக்காரவிடம் பிடிகொடுத்து ரைடர் 34 பந்துகளை எதிர்கொண்டு 3 பெண்டரி உட்பட 19 ஓட்டங்கள் பெற்றார்.

அப்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 69 ஓட்டங்களாகும். குப்தில் 39 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் டைலருடன் ஜோடி சேர்ந்த ஸ்டைரிஸ் ஆகியோர் இணைந்து 4வது விக்கெட்டுக்காக 77 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று சரிவிலிருந்த அணியை மீட்டெடுத்த வேளை டைலர் மென்டிசின் பந்து வீச்சுக்கு உப்புல் தரங்கவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

அவர் 55 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பெளண்டரியுடன் 36 ஓட்டங்களைப் பெற்றார்.

பின்னர் ஸ்டைரிசுடன் இணைந்த இளம் துடுப்பாட்டவீரர் வில்லியம்சன் 14 பந்துகளை எதிர்கொண்டு 3 பெளண்டரிகள் அடங்கலாக 22 ஓட்டங்களைப் பெற்றார்.

அப்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 192 ஆகும். பின்னர் 6வது விக்கெட்டுக்காக நியுசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் நதன் மெக்கலம் ஸ்டைரிசுடன் இணைந்துகொண்டார்.

இதேவேளை இப்போட்டியில் முத்தையா முரளிதரன் விளையாடமாட்டார் அவருக்கு காயம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டாலும் அவர் நேற்றைய போட்டியில் களமிறங்கினார்.

இலங்கை அணி சார்பாக இந்தப் போட்டியிலும் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் களமிறங்கினர். இது இலங்கை அணிக்கு ஒரு வகையில் சாதகம் என்று கூறலாம்.

நியூசிலாந்து அணி முதலாவது பவர்பிளேயில் ஒரு விக்கெட்டை இழந்து 38 ஓட்டங்களையும், இரண்டாவது பவர் பிளேயில் 22 ஓட்டங்களையும் பெற்றது.

3வது பவர் பிளேயில் 42 ஓட்டங்களையும் 2 விக்கெட்டுகளையும் இழந்தது. இதேவேளை முத்தையா முரளிதரன் நேற்றைய போட்டியுடன் உலகக் கிண்ணப் போட்டியில் 68 விக்கெட்டை வீழ்த்தினார்.

மெக்கலம் அதிரடியாக ஆட நினைக்கையில் மலிங்கவின் பந்தில் விக்கெட் காப்பாளரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 9 பந்துகளை எதிர்கொண்டு 9 ஓட்டங்களைப் பெற்றார். இவர் ஒரு சிக்சர் அடித்தார்.

சிறப்பாகவும் நன்றாகவும் விளையாடிக்கொண்டிருந்த ஸ்டைரிஸ் 76 பந்துகளைக எதிர்கொண்டு 5 பெளண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 213 ஆகும். இதேவேளை பின்னர் வந்த வீரர்கள் சார்பாக இலங்கை வீரர்களின் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் ஆட்டமிழந்தனர்.

நியூசிலாந்து அணியில் கடை 5 விக்கெட்களும் 25 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. பந்து வீச்சைப் பொறுத்தவரை மலிங்க, மெண்டிஸ் தலா 3 விக்கெட்டையும் முரளிதரன 2 விக்கெட்டையும் டில்சான், ஹேரத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதேவேளை முத்தையா முரளிதரன் இலங்கையில் விளையாடும் கடைசிப் போட்டி என்பதால் அவர் கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி ரசிகர்களுக்கு அந்த விக் கெட்டை பரிசாக வழங்கி பிரியாவிடை பெற்றுச் சென்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com