Contact us at: sooddram@gmail.com

 

இலங்கையின் ஏகோபித்த குரலுக்கு செவிசாய்க்குமா அமெரிக்கா?
 

க்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 19வது மாநாடு ஜெனீவா வில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமான இம்மாநாடு நாளை 23 ஆம் திகதி (மார்ச் மாதம் 2012) நிறைவ டையவிருக்கின்றது. என்றாலும், இம்மாநாடு இல ங்கையர் மத்தியில் அதிக முக்கியத் துவம் பெற்றிருக்கின்றது. இதனை பரவலாக அவதானிக்க முடிகின்றது. இந்நாட்டில் வாழுகின்ற எல்லா மக்களும் இம்மாநாடு தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். ஏனென்றால் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணையொன்றை சமர்ப்பித்திருப்பதே இதற்கான அடிப்படைக் காரணம். அமெரிக்காவானது அபிவிருத்தி அடைந்த ஒரு வல்லரசு நாடு. இது இலங்கை போன்ற வளர்முக நாடுகளின் மேம்பாட்டுக்கு உதவி களையும், ஒத்துழைப்புகளையும் நல்க வேண்டும். அதுவே வளர்ச்சி அடைந்த நாட்டின் முதிர்ச்சியை வெளிப்படுத்தும் இதனை ஒரு தார்மீக கடமையாகக் கருதி செயற்பட வேண்டியது அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளின் பொறுப்பாகும்.

ஆனால் அமெரிக்காவோ சுமார் முப்பது வருடங்கள் புலிப் பயங் வரவாதத்தின் பிடியில் சிக்குண்டிரு ந்த இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பிரேரணை ஒன்றை கொண்டு வந்திருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் தான் புலிப் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து இந்த நாடு முழுமையாக விடுவிக்கப்பட்டது. இதன் பின்னர் தான் இலங்கை சுதந்திரமாக மூச்சு விட ஆரம்பித்து இருக்கின்றது. அதுவும் கடந்த 30 மாதங்களாகத் தான் இந்த நிலமை ஏற்பட்டிருக்கின்றது. அதற்கிடையில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக இவ்வாறான பிரேரணையொன்றைக் கொண்டு வந்திருக்கின்றது.

அப்படியென்றால் இலங்கை தொடர்ந்தும் பயங்கரவாதத்தின் பிடியில் இருப்பதையா அமெரிக்கா விரும்புகின்றது என்றொரு வினா எழுகின்றது. அதேநேரம் இலங்கை சுயமுயற்சிகளின் ஊடாகத் தனித் துவமான முறையில் முன்னேறுவதை அமெரிக்கா விரும்பவில்லையா எனவும் கேட்கத் தோன்றுகின்றது.

இருப்பினும் இவ்வாறான ஒரு பிரேரணையை அமெரிக்கா ஒரு போதும் எழுந்தமானதாகக் கொண்டு வந்திருக்காது. இதற்குப் பின்னணி யில் பல உள் நோக்கங்களும் இருக்கவே செய்யும். அத்தோடு பெரும் சதிகளும், சூழ்ச்சிகளும் நிச்சயம் இருக்கும். இவை எதுவும் இலங்கைக்கோ, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கோ, முஸ்லிம் களுக்கோ, சிங்களவருக்கோ எதுவித நன்மையுமே பெற்றுத் தராது. இதற்கு ஈராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன் போன்ற நாடுகள் நல்ல முன்னு தாரணங்களாக விளங்கிக் கொணடி ருக்கின்றன. அமெரிக்கா அண்மைக் காலத்தில் தலையீடு செய்த எந்த நாட்டிலும் அமைதியோ, சமாதானமோ ஏற்படவில்லை. இதனை அமெ ரிக்காவே மறுக்காது. அந்த நாடுகளில் எல்லாம் மனித உரிமை மீறல் என்பது சர்வசாதாரணமான நிலையை அடைந்துள்ளது.

இதன் விளைவாகத்தான் அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் இப்பிரேர ணையை இலங்கை மக்கள் எதிர்க்கின்றனர். ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். அவர்கள் மத ரீதியாகவோ, இன ரீதியாகவோ, மொழி ரீதியாகவோ, பிரதேச ரீதியாகவோ பிரிந்து நின்று தம் எதிர்ப்பைக் காட்டவில்லை. எல்லோரும் ஒன்றுபட்டு இலங்கையர் என்ற அடையாளத்துடன் இப்பிரேர ணையை எதிர்க்கின்றனர். நாட்டுப் பற்றுடன் தேசிய கொடியின் கீழ் ஒன்றுபட்டவர்களாக எதிர்க்கின்றனர். இந்த எதிர்ப்பை உள்நாட்டில் மாத்திரமல்லாமல் வெளிநாடுகளிலும் முன்னெடுக்கின்றனர். ஜெனீவா மனித உரிமை பேரவை மாநாட்டுக்கு வெளியிலும் கூட ஆர்ப்பாட்டம் நடத்தி இப்பிரேரணைக்கு இலங் கையர் தம் எதிர்ப்பை வெளிப் படுத்தியுள்ளனர். இப்பிரேணைக்கான எதிர்ப்பு, ஆர்ப்பாட்டங்களாகவும், ஊர்வலங்களாகவும், சத்தியாக்கிரகப் போராட்டங்களாகவும், சர்வ மத வழிபாடுகளாகவும், கையெழுத்து வேட்டைகளாகவும் விசேட பிரா ர்த்தனைகளாகவும் வெளிப்படுத் தப்படுகின்றது. இந்தப் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத பிரதேசமே இலங்கையில் இல்லை. புலிப் பயங்கரவாதம் முப்பது வருடங்கள் கோலோச்சிய பிரதேசங்களில் வாழும் மக்களும் கூட இப்பிரேரணைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

சாதாரணதர பொதுமக்கள் முதல் சர்வ மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், சமூக முக்கியஸ்தர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் என இந்நாட்டில் வாழுகின்ற எல்லா மட்டத்தினருமே இப்பிரேரணைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களில் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்று கின்றார்கள்.

'நாம் அனுபவிக்கின்ற அமைதி, சமாதானத்தை, அச்சம், பீதியற்ற சூழலை சீர்குலைத்து விடாதீர்கள். எம்மை மீண்டும் இருண்ட யுகத்திற்குள் தள்ளி விடாதீர்கள். அமைதியாகவும், சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் எம்மை வாழ விடுங்கள்' என்று தான் ஆர்ப்பாட்டங்களிலும், ஊர் வலங்களிலும் பங்குபற்றுபவர்கள் சர்வதேச சமூகத்தினரிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஏனென்றால், இந்நாட்டில் பயங்கரவாதம் தலைவிரித்தாடிய முப்பது வருடங்களுக்கும் இந்நாட்டு மக்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஒவ்வொரு வினாடியுமே அச்சம், பீதியுடனேயே கழிந்தது. பயங்கரவாதம் மனித இரத்தத்தை ஆறாக ஓடச் செய்தது. கண்கள் கண்ணீர்க் குளங்களாக நிரம்பி வழிந்தன. இவை இனங் களுக்கிடையே சந்தேகங்களையும், ஐயங்களையும் ஆழப்படுத்தின. அகலப்படுத்தின.

இந்நாட்டில் நிலவிய புலிப் பயங்கரவாதம் இங்கு வாழுகின்ற எல்லா இன மத மக்களையுமே

க்கள் அப்பிரதேசங்களை விட்டு வெளியேறினார்கள். அதேநேரம் இப்பயங்கரவாதம் வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை 24 மணிநேர காலக்கெடுவுடன் உடுத்த உடையோடு வெளியேற்றியது. வட மாகாணத்தில் பல நூற்றாண்டுகள் வாழ்ந்த முஸ்லிம்கள் வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட்டனர். அத்தோடு இப்பயங்கரவாதத்தை ஏற்றுக் கொள்ளாத தமிழ் மக்களும் கூட அப்பகுதிகளிலிருந்து விரட்டப் பட்டனர்.

இவ்வாறு மிக மோசமான பேரழி வுகளை சுமார் மூன்று தசாப்தங்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்த புலிப் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவோ மேற்குலக நாடுகளோ அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இவ்வாறான சூழ்நிலை தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தூர நோக்கின் அடிப்படையிலான தலைமைத்துவத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி புலி பயங்கரவாதம் முழுமையாக ஒழித்துக் கட்டப்பட்டது. இதன் பயனாக சுமார் மூன்று தசாப்தங்கள் நாட்டில் நிலவிய அச்சம், பீதி முடிவுக்கு வந்தது. இரத்தம் ஆறாகப் பெருக்கெடுப்பது முற்றுப்பெற்றது. எல்லோரும் சுதந்திரமாகச் சுவாசிக்கும் நிலமை உருவானது. மக்களின் வாழ்வில் நம்பிக்கையும், சுபீட்சமும் உருவாகி இருக்கின்றது.

இதேநேரம் பயங்கரவாத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட நாட்டைத் துரிதமாக அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான வேலைத் திட்டங்களையும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் விரிவான அடிப்படையில் முன்னெடுத்து வருகின்றது. அதாவது இப்பயங்கர வாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் ஒருபுறம் நாட்டில் அச்சம், பீதியில்லாத அமைதி, சமாதானம் ஏற்பட்டிருக் கின்றது. மறுபுறம் முழு நாடுமே துரித அபிவிருத்தியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இவ்வாறான சூழ் நிலையில்தான் ஜெனீவா மனித உரிமை பேரவை மாநாட்டுக்கு அமெரிக்கா இப்பிரே ரணையைக் கொண்டு வந்திருக்கின்றது. இதன் ஊடாக பயங்கரவாதம் ஒழிக் கப்பட்ட பின்னர் அனுபவிக்கும் சுதந்திரத்தையும், அமைதி, சமாதானத் தையும் இழப்பதற்கு இலங்கையர் எவருமே விரும்பவில்லை. அதேநேரம் பயங்கரவாதத்தின் கோரப் பிடிக்குள் மீண்டும் செல்ல இந்நாட்டவர் எவ ருமே தயாரில்லை. அதன் வெளி ப்பாடுதான் அமெரிக்காவின் இப் பிரேணைக்கான இலங்கையரின் எதிர்ப்பு ஆட்சோபனை.

ஆகவே, இந்நாட்டில் வாழுகின்ற இருபது மில்லியன் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து செயற்பட வேண்டுமேயொழிய மேற்கு நாடுகளில் சுகபோகங்களுடன் தொடர்ந்து வாழ விரும்பும் ஒரு சிலரின் அபிலாஷையை நிறைவேற்றுவதற்காக அமெரிக்கா செயற்படக் கூடாது அதுவே இலங்கையரின் எதிர்பார்ப்பு.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com