Contact us at: sooddram@gmail.com

 

ஜெனீவா தீர்மானம்

மக்கள் வீண் அச்சமடைய தேவையில்லை; பொருளாதார தடைகளும் விதிக்க முடியாது

எந்தவித வெளிநாட்டுத் தலையீட்டிற்கும் அரசாங்கம் தலைசாய்க்காது. எமது நாட்டு மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற என்ன தேவையோ அதனையே அரசாங்கம் முன்னெடுக்கும். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எமது மக்களின் நலன்களுக்கேற்ற அடிப்படையில் அமுல்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கைக்கு எதிராக எதுவித பொருளாதாரத் தடையும் விதிக்க முடியாது. இது குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவை யில்லை எனவும் இதனால் எமது பொருளாதாரம் பாதிக் கப்படாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டது குறித்து விளக்க மளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இதில் இலங்கை தூதுக் குழுவில் அங்கம் வகித்த அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, நிமல் சிறிபால டி சில்வா, அநுர பிரியதர்சன யாப்பா, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா மற்றும் சஜின் வாஸ் குணவர்தன ஆகியோர் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

ஜெனீவா மனித உரிமைப் பேரவை பெறுபேறு குறித்தும் எதிர்கால நடவடிக் கைகள் குறித்தும் விளக்கிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

ஜெனீவாவில் இலங்கை தொடர்பில் எத்தகைய பெறுபேறு ஏற்பட்டாலும் அதற்கு தலைசாய்ப்பதில்லையென நாம் முன் கூட்டியே தெளிவாக முடிவு செய்திருந்தோம். இலங்கை தொடர்பில் எத்தனை தீர்மானம் எட்டப்பட்டாலும் அதற்கு இணங்கா திருக்கவும் நாம் முன்னரே தீர்மானித் திருந்தோம்.

எமது இந்தத் தீர்மானத்தை பல நாடுகளும் வரவேற்றிருந்தன.

தேசிய மட்டத்தில் நல்லிணக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டு கட்டம் கட்டமாக முன்னெடுக்கையில் இவ்வாறு சர்வதேச தலையீடு செய்வதனை ஏற்க முடியாது. எமது மக்களின் அபிலாசைப்படி நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் திடமாக உள்ளது.

30 வருட யுத்தத்தினால் ஏற்பட்ட பிரச்சினைக்கு துரிதமாக தீர்வுகாண முடியாது. நாம் இதற்கு தீர்வு கண்டு வரும் நிலையில் இந்த தீர்மானத்தினூடாக தேவையற்ற நெருக்கடி ஏற்படும்.

வெளிநாட்டு அழுத்தத்தினாலே நாம் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அபிப்பிராயம் ஏற்படும்.

அமெரிக்கா முன்வைத்த பிரேரணை ஒரு மேலதிக வாக்கினாலே நிறைவேறியது. 24 நாடுகள் ஆதரவளித்த போதும் 23 நாடுகள் அதனை நிராகரித்துள்ளன. வாக்களிப்பில் பங்கேற்காத 8 நாடுகள் கூட அமெரிக்காவின் பிரேரணையை எதிர்த்தன. அமெரிக்க சகல மட்டத்திலும் அழுத்தம் பிரயோகித்தும் கூட ஒரு மேலதிக வாக்கினாலேயே யோசனை நிறைவேறியது.

ஆபிரிக்க மற்றும் அரபு நாடுகள் எமக்கு ஆதரவளித்தது பெருமை தரும் விடயமாகும். எத்தகைய அழுத்தம் வந்தபோதும் அவை தமது நிலைப்பாட்டை மாற்றவில்லை.

4 அரபு நாடுகளில் 3 நாடுகள் எமக்கு ஆதரவளித்ததோடு ஒரு நாடு வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்த பிரேரணையூடாக மனித உரிமை பேரவையின் நம்பகத்தன்மை தொடர்பில் பெரும் சந்தேகம் எழுவதாக பிரேரணைக்கு எதிராக வாக்களித்த நாடுகள் தெரிவித்தன. இந்த செயற்பாடினூடாக மோசமான முன்னுதாரணம் அளிக்கப்பட்டுள்ளது. இதனூடாக வேறு நாடுகள் மீது அளவீடுகளோ கொள்கையோ இன்றி பெரிய நாடுகள் தலையீடு செய்யும்.

இந்த பிரேரணையினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாத போதும் சர்வதேச தலையீட்டை விரும்பாததாலே இதனை எதிர்த்தோம். நாட்டின் இறைமை ஆள்புல ஒருமைப்பாடு என்பவற்றை பாதுகாக்கவே நாம் கடும் பிரயத்தனம் மேற்கொண்டோம்.

இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதும் மனித உரிமைப் பேரவையுடனான எமது தொடர்புகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறும். இலங்கை குறித்து ஆர்வமுள்ள நாடுகளுடன் நாம் தொடர்ந்து பேச்சு நடத்துவோம்

சர்வதேச சமூகம் எமது உள்ளக விடயத்தில் தலையீடு செய்ய இடமளிக்க மாட்டோம். நாட்டினதும் நாட்டு மக்களினதும் நலனை கருத்திற்கொண்டே நாம் செயற்படுவோம். அது தவிர வேறு எந்த தலையீட்டையோ அழுத்தத்தையோ ஏற்க மாட்டோம்.

இந்த பிரேரணை குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை. இதனூடாக நாட்டிற்கு பாதிப்போ தடையோ ஏற்படாது. இது பாதுகாப்பு சபை தீர்மானமல்ல. இதற்கு முன்னரும் மனித உரிமை பேரவையில் இவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.

இலங்கையின் ஆதரவுடனே இந்த பிரேரணையை கொண்டு வருவதாக அமெரிக்கா கூறியது. இந்த நிலையிலே ஜெனீவா மாநாட்டுக்கு முன்னதாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளரை சந்திப்பதை நான் தவிர்த்தேன். இதனூடாக இலங்கையின் ஒத்துழைப்புடன் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்படுவதாக ஏனைய நாடுகள் கருதும் - அது இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

நான் அமெரிக்க ராஜாங்க செயலாளரை சந்தித்து எமது எதிர்கால திட்டங்களையும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகள் செயற்படுத்துதல் குறித்தும் விளக்குவேன். ஜெனீவாவில் முன்வைத்த அதே விடயங்களை அங்கும் முன்வைப்போம். எம்மிடம் ஒரே நிலைப்பாடே உள்ளது. அது காலத்துக்கு காலம் தி!சி!ஜி என்றார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவது,

நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை முன்னெடுக்க சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. இதற்கு சட்ட ரீதியான அல்லது யதார்த்தமான தேவை கிடையாது.

நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை நூறு வீதம் அமுல்படுத்துமாறு எவருக்கும் கூற முடியாது. இதனை எவ்வாறு அமுல்படுத்துவது என அரசாங்கமே இறுதி முடிவு எடுக்கும். இந்த பரிந்துரைகளில் எதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதும் நாமே முடிவு செய்வோம்.

நாட்டின் தனித்துவத்தையும் இறைமை யையும் பாதுகாக்கவே நாம் பாடுபட்டோம். அமெரிக்காவோ வேறு நாடோ சொல்வதற்காக நல்லிணக்க ஆணைக்குழு சிபார்சுகளை முன்னெடுக்க நாம் தயாரில்லை. தேவை என கருதுபவற்றையே எமது அரசு முன்னெடுக்கும். நல்லிணக்க ஆணைக்குழு சில சந்தர்ப்பங்களில் தனது ஆணையை தாண்டி செயற்பட்டுள்ளது குறித்தும் கவனிக்கப்படும் என்றார்.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியதாவது,

கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறிய வேண்டாமென இந்தப் பிரேரணையை முன்வைத்த நாடுகளுக்கே கூறினேன். சர்வதேச சமூகம் சில நாடுகள் விடயத்தில் இரட்டை வேடம் பூணுகிறது.

மனித உரிமை பேரவையின் வருடாந்த மீளாய்வு கூட்டம் ஒக்டோபரில் நடைபெற உள்ளது. இதில் எமது நல்லிணக்க செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து நாமாக தெளிவுபடுத்துவோம். இது புதிய விடயமல்ல. இதற்கு முன்னரும் நாம் எமது செயற்பாடுகளின் முன்னேற்றத்தை விளக்கியுள்ளோம்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியதாவது,

ஒரு சில அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடாகாது. நல்லிணக்கம் ஏற்படுத்தும் செயற்பாட்டில் சர்வதேச சமூகம் தேவையற்ற தலையீடு செய்துள்ளது. நல்லிணக்கம் ஏற்படுத்த தேவையான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள குறைபாடுகள் குறித்து நாம் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன் கூறியதாவது:

அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிரான நிலைப்பாட்டை 23 நாடுகள் கொண்டிருந்தன. 30 வருட யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நிம்மதியாக வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை அநேக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இலங்கை குறித்து அவை தமது நம்பிக்கையை வெளியிட்டுள்ளன. இந்த நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் இலங்கை செயற்படும். எமக்கு ஆதரவாக வாக்களித்த அரபு, ஆபிரிக்க ஆசிய நாடுகளுக்கு எமது நன்றிகள் உரித்தாகட்டும்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியதாவது,

நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கைக்கும் ஜெனீவா மாநாட்டிற்கும் முன்பாகவே இலங்கை அரசாங்கம் வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகிறது. அந்த நடவடிக்கை தொடரும். அதிலுள்ள விடயங்கள் நல்லிணக்க ஆணைக் குழுவிலும் அமெரிக்க பிரேரணையிலும் உள்ளது. மக்களை இலக்காகக் கொண்ட எமது கொள்கை தொடரும் என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com