Contact us at: sooddram@gmail.com

 

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் அப்படி என்னதான் உள்ளது?

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தயாரித்த தீர்மானத்தின் நகல் ஒன்று கிடைத்தது. அந்த நகலின் தமிழாக்கத்தை கீழே தருகிறோம். படித்துப் பாருங்கள். தீர்மானத்தை இன்று ஜெனீவாவில் அமெரிக்கா தாக்கல் செய்யும் நேரம்வரை, இதுதான் இறுதித் தீர்மானம் என்று அடித்துச் சொல்ல முடியாது. அவர்களிடம் வேறு ஒரு தீர்மானமும் கையில் இருக்கலாம். ஆனால், கீழேயுள்ள நகல் அவர்களிடம் இருந்தது. அவர்களிடம் இருந்துதான் கிடைத்தது. அநேகமாக இந்த தீர்மானமே சமர்ப்பிக்கப்படலாம் என்பது எமது ஊகம்.அமெரிக்கா தாக்கல் செய்யவிருந்த தீர்மானம் மாற்றப்பட்டுள்ளதாகவும், அந்தத் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கை ஏதும் இல்லாமல், ‘கவலை அளிக்கிறது’ ‘கவனித்துக் கொண்டு இருக்கிறோம்’ ‘ஏதாவது செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்என்பது போன்ற முனை மழுங்கிய வாக்கியங்களே அதிகம் இருக்கலாம் என பட்சி சொல்கிறது…” அதை மனதில் வைத்துக்கொண்டு இதை படிக்கவும்.

இதற்குத்தானா இவ்வளவு ஆர்ப்பாட்டமும், போராட்டமும்?” என்ற கேள்வி உங்களுக்கு எழுந்தால், எம்மோடு சண்டைக்கு வராதீர்கள். அது, உங்களது சொந்த கேள்வி!

  • ஐ.நா. பேரவையின் அறிக்கையின் வழிகாட்டுதலின்படியும், சர்வதேச மனித உரிமைகள் குறித்த ஐ.நா. தீர்மானத்துக்கு ஏற்பவும், அது தொடர்பான மற்றைய சர்வதேச ஒப்பந்தங்களுக்கு அமையவும்,

  • இலங்கையில் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை, மற்றும் இலங்கை அரசுக்கு உள்ள பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கான ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் தீர்மானம் 19/2 ஐ நினைவுகூர்ந்து,

  • தமது நாட்டு குடிமக்களின் சுதந்திரம், மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதும், உத்தரவாதம் கொடுப்பதும் இலங்கை அரசின் பொறுப்பு என்ற நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி,

  • இலங்கை அரசின் தேசிய செயல் திட்டம் மற்றும் எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அதன் வாக்குறுதிகளை கவனத்தில்கொண்டு,

  • தேசிய செயல் திட்டம் என்பது (இலங்கை அரசால் தயாரிக்கப்பட்ட) எல்.எல்.ஆர்.சியின் எல்லாவிதமான பரிந்துரைகளையும் நடைமுறை படுத்துவதில் போதிய அக்கறை காட்டவில்லை என்பதைக் கவலையோடு சுட்டிக்காட்டி,
  • சட்டத்துக்கு விரோதமான கொலைகள், திட்டமிட்ட முறையிலான ஆள் கடத்தல்கள் முதலானவை குறித்த நம்பகமான விசாரணையை மேற்கொள்ளுதல்; இலங்கையின் வடக்குப் பிரதேசத்திலிருந்து ராணுவத்தை முற்றாக விலக்கிக்கொள்வது. நிலங்கள் தொடர்பான புகார்கள் குறித்த நடுநிலையான விசாரணையை மேற்கொள்வது, தடுப்புக்காவல் சட்டங்கள் குறித்து மீள் ஆய்வு செய்வது, முன்னர் சுதந்திரமாக இருந்த சிவில் நிர்வாக அமைப்புகளை பலப்படுத்துவது…….

மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதற்கான அரசியல் தீர்வைக் காண்பது, அனைத்துத் தரப்பினருக்கும் பேச்சுரிமை உட்பட அனைத்து அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பதற்கான சட்டங்களை வலுப்படுத்துவதுஆகியவை தொடர்பான (இலங்கை அரசால் தயாரிக்கப்பட்ட) எல்.எல்.ஆர்.சி அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் உருப்படியான பரிந்துரைகளைக் நினைவுபடுத்தி,

  • அதேசமயத்தில் இலங்கை அரசின் தேசிய செயல் திட்டமோ, எல்.எல்.ஆர்.சி.யோ, இலங்கையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டன என்ற குற்றச்சாட்டு குறித்து போதிய அளவில் அக்கறை காட்டவில்லை என்பதைக் கவலையோடு சுட்டிக்காட்டி,
  • இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாகவும், சட்டத்தின் ஆட்சிக்கும், நீதித்துறையின் சுதந்திரத்துக்கும் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பாகவும், மாகாணங்களுக்கு அதிகாரத்தை வழங்குவது உட்பட, வாக்குறுதிகளை இலங்கை அரசு தொடர்ந்து மீறிவருவது தொடர்பாக தொடர்ந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளைப் பற்றிக் கவலை தெரிவித்து,

  1. ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் தலைவர் அளித்திருக்கும் இலங்கை தொடர்பான அறிக்கையை இந்தத் தீர்மானம் வரவேற்கிறது.

  2. (இலங்கை அரசால் தயாரிக்கப்பட்ட) எல்.எல்.ஆர்.சி.யின் உருப்படியான பரிந்துரைகளை விரைவாகச் செயற்படுத்துதல், இலங்கையின் அனைத்துக் குடிமக்களுக்கும் நீதி, சமத்துவம், இன ஒற்றுமை ஆகியவற்றை உறுதி செய்வதற்கான சட்டரீதியான நடைமுறைகளை ஏற்படுத்துதல் தொடர்பாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலைப்பாட்ட இத் தீர்மானம் மறுபடியும் வலியுறுத்துகிறது.

  3. மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பேச்சுரிமை, ஒன்றுகூடுவதற்கான உரிமை, சட்டவிரோதமான தன்னிச்சையான கொலைகள், திட்டமிட்ட முறையிலான ஆள்கடத்தல் ஆகியவை தொடர்பான ஐ. நா குழுக்களின் சிறப்பு அலுவலர்கள் இலங்கைக்குத் தடையின்றி சென்று ஆய்வுகளை நடத்த இலங்கை அரசு அனுமதிக்கவேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்துகிறது

  4. மேற்சொன்ன பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசோடு கலந்து ஆலோசனை செய்து, அதன் ஒப்புதல் பெற்று, ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் மற்றும், அவருக்கு இருப்பது போன்ற அதிகாரம் கொண்ட பிற அமைப்பினர் இலங்கை அரசுக்கு உதவிட வேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.

  5. ஐ.நா மனித உரிமைகள் குழுவின் தலைவர் மற்றும் அவருக்கு இருப்பது போன்ற அதிகாரம் கொண்ட பிற அமைப்பினர், இலங்கையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டிருப்பது தொடர்பாகவும், இன ஒற்றுமை, பொறுப்பு ஏற்றுக் கொள்ளல் குறித்து இலங்கை அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் தொடர்பாகவும், ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் 25-வது கூட்டத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.

இவர்கள் குறிப்பிடும் ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் 24-வது கூட்டம், வரும் செப்டெம்பர் 9-ம் தேதி நடக்கவுள்ளது. 25-வது கூட்டத்துக்கு இன்னமும் தேதி குறிக்கப்படவில்லை.


பின்குறிப்பு: இதில் மிக முக்கியமான சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால்…. அமெரிக்காவால் ஐ.நா. வில் சமர்பிக்கவிருந்த உத்தேச தீர்மானமானது, முன்கூடியே இலங்கையரசிடம் கையளிக்கப்பட்டு, அவர்களின் ஆலோசனைகளும் பெறப்பட்டதன் அடிப்படையிலேயே மனித உரிமைகள் பேரவையில் இத் தீர்மானம் சமர்பிக்கப்படுகிறது.

ஆகவே.., ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தயாரித்த தீர்மானத்தின் உள்ளடக்கங்களின் முழுமையான விபரங்களை இந்திய மத்திய அரசாங்கமும், இலங்கையரசாங்கமும் ஏற்கனவே அறிந்திருந்தமையால் அவர்கள் இதைபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

ஆனால்.., தமிழ் ஊடகங்களும், சனல்-4 போன்ற தொலைக்காட்சியும் தமிழர்களை நல்லா குஷிப்படுத்தி தங்கள் ஊடக (பிரச்சார) வியாபாரத்தை நடத்தி முடித்துவிட்டார்கள். 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com