Contact us at: sooddram@gmail.com

 

இலங்கை பிரச்னை

போராட்டத்தில் குதித்த லயோலா கல்லூரி மாணவர்கள !

 இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க் குற்ற விசாரணை வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் லயோலா கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானத்தினால் பயன் ஏதும் இல்லை. லட்சகணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக சரவதேச விசாரணை வேண்டும், இலங்கை தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும். அதே சமயம் இந்த விசாரணையில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் பங்கேற்க கூடாது. இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும்.

மேலும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதையும் அவர்கள் கண்டித்துள்ளனர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன், சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் சண்முகப்பிரியன், ஜோ.பிரிட்டோ, பால் கெனப், லியோ ஸ்டாலின், திருக்குறள் திலீபன், பிரசாத், அந்தோணி சாஜி, அனிஷ் குமார் ஆகிய  ாணவர்கள் இன்று காலை லயோலா கல்லூரி அருகில் உள்ள ஏ.ஐ.சி.யு.எப்.எனப்படும் அகில இந்திய கத்தோலிக்க ஃபெடரேசன் அலுவலக வளாகத்திற்குள், அவர்களது அனுமதியை பெற்று சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

தொடர்ந்து அவர்கள், ராஜபக்சே ஒழிக, இந்திய அரசே பாரபட்சம் காட்டாதே, அமெரிக்காவே தீர்மானம் என்று நாடகமாடாதே, இலங்கை மீது பொருளாதார தடை விதியுங்கள், ஈழத்தமிழர்களை காப்பாற்ற பொது வாக்கெடுப்பு நடத்து...என்பது உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.மேலும் இந்த வாசகஙகள் எழுதப்பட்ட அட்டைகளையும் அவர்கள் கைகளில் தூக்கி பிடித்திருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவாக மேலும் 2 மாணவர்கள் போராட்டத்தில் இணைந்துகொண்டதை தொடர்ந்து, உண்ணாவிரதத்தில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்தது.

அதே சமயம் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக, இதர மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தினுள் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது.பின்னர் அவர்கள் அருகில் உள்ள இலங்கை தூதரகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டபோது, கல்லூரி காவலர்கள் வாயிலை மூடியதால், அவர்கள் கல்லூரி வளாகத்திலேயே அமர்ந்து முழக்கங்களை  எழுப்பியபடியே தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் வகுப்புகளுக்கு சென்றனர். இதனிடையே இது குறித்து தகவலறிந்த போலீசார் கல்லூரிக்கு விரைந்துவந்தனர். மாணவர்கள் வெளியே வந்துவிடாதவாறு, வாயிலுக்கு வெளியே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்..

வரிகொடா இயக்கம்

முன்னதாக உண்ணாவிரததிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற  லயோலா கல்லூரியின் தமிழ் துறை மாணவர்கள், ", மத்திய அரசு தங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால், அடுத்தக்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து, மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் " என்று கூறினர். மேலும் ஈழத்தமிழர் பிரச்னைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால், தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தவிடாதபடி நாங்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொள்வோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com