Contact us at: sooddram@gmail.com

 

பிரபாகரனைத் தமிழனாக அல்ல... தீவிரவாதியாகவே பார்க்கிறோம்! - அழகிரி

ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், இந்தியா என்ன நிலை எடுக்கப்போகிறது என்பதை உலகத் தமிழர்கள் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். இந்த நிலையில், காங்கிரஸைச் சேர்ந்த கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரியைச் சந்தித்துப் பேசினோம். 

''கருணாநிதி தலைமையில் செயல்பட்டு வரும் டெசோ அமைப்பையும் அதன் செயல்பாடுகளையும் காங்கிரஸ் எப்படிப் பார்க்கிறது?''

''இலங்கைத் தமிழர்கள் பிரச்னைகள் பற்றி நன்கு அறிந்தவர் தலைவர் கலைஞர். அவர், 'இலங்கைப் பிரச்னையை இரண்டு விதமாக பார்க்க வேண்டும். அதாவது, ராஜீவ்காந்தி மரணத்துக்கு முன்; ராஜீவ்காந்தி மரணத்துக்குப் பின்என்று ஒருமுறை விளக்கிக் கூறியுள்ளார். அதுதான் சரியான பார்வை. இன்று, இலங்கைத் தமிழர்களுக்காக குரல்கொடுக்க ஒரு தளம் வேண்டும். அதன் மூலமாகத்தான் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க முடியும். அதற்கு ஏற்ற அமைப்பு, கலைஞர் தலைமையில் இயங்கும் டெசோ அமைப்பு என்று கருதுகிறோம்.''

''ராஜீவ் காந்தி கொலையை மனதில் வைத்து இலங்கைத் தமிழர்களை காங்கிரஸ் பழிவாங்குகிறதா?''

''நாங்கள் விடுதலைப் புலிகளைத்தான் எதிர்க்கிறோமே தவிர, இலங்கைத் தமிழர்களை எதிர்க்கவில்லை. வன்முறைக்கோ, தீவிரவாதத்துக்கோ, பயங்கரவாதத்துக்கோ நாங்கள் ஒருபோதும் ஆதரவளித்தது இல்லை. தமிழகத்தில் இருக்கிற சில கட்சிகள், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால்தான் இலங்கைத் தமிழர்கள் மீது காங்கிரஸ் அக்கறை காட்டவில்லை என்ற தவறான கருத்தைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். அன்னை இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர் சுட்டுக் கொன்றார். அவரை காங்கிரஸ் ஒரு சீக்கியராகப் பார்க்கவில்லை. அவரைத் தீவிரவாதியாகவே பார்த்தது. இந்திராவைச் சுட்டுக் கொன்றது சீக்கியர்கள் என்று நாங்கள் கருதி இருந்தால், இந்தியப் பிரதமராக மன்மோகன் சிங்கை நாங்கள் தேர்வுசெய்திருக்கவே மாட்டோம். அதேபோல்தான் விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் தீவிரவாதியாகவே பார்க்கிறோம். தமிழராகப் பார்க்கவில்லை. ராஜீவ் காந்தி கொலைக்காக ஒருபோதும் இலங்கைத் தமிழர்கள் மீது காங்கிரஸ் இயக்கத்துக்கோ, இந்திய அரசாங்கத்துக்கோ பகை எதுவும் கிடையாது.''

''இலங்கையில் தமிழர்கள் அழிவுக்கு காங்கிரஸ் அரசுதான் காரணம் என்று, வைகோ உள்ளிட்ட தலைவர்கள் குற்றம் சாட்டுகிறார்களே?''

''யுத்தம் என்று ஒன்று நடந்தால் அதில் அப்பாவி மக்களும் கொல்லப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா முன்பு ஒருமுறை மிகச் சரியாகச் சொன்னார்கள். அந்தக் கூற்றுக்கு தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலிகள் ஆதரவுக் கட்சிகள் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்க முடியாமல் சோம்பிக்கிடந்தனர். காரணம், ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வை அவர்களுக்குத் தேவை. ஆனால், அவர்கள் பாயக்கூடிய ஒரே இடம் காங்கிரஸ் இயக்கம்தான். அவர்கள், இலங்கைத் தமிழர்கள் என்று சொல்வதே விடுதலைப் புலிகளைத்தான். விடுதலைப் புலிகளைத் தவிர்த்து இலங்கையில் வாழும் எந்தத் தமிழர்களைப் பற்றியும் அவர்களுக்குக் கவலை இல்லை. இலங்கையில் போர் நடந்த பகுதி பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி. அங்கு ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்திய குற்றம் விடுதலைப் புலிகளைச் சாரும் என்று ஐ.நா. மனித உரிமைப் பிரிவு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், அதை அவர்கள் வசதியாக மறந்துவிட்டு, காங்கிரஸையும் இந்திய அரசையும் குறைசொல்வது அவர்களுடைய பேதமையைக் காட்டுகிறது.''

''தமிழர்களுக்கு அரசியல் உரிமை வழங்காத ராஜபக்ஷேவை, இந்தியாவுக்கு வரவழைத்து சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுப்பதைத் தடை செய்யலாமே?''

''ஒரு நாட்டின் தலைவர், இன்னொரு நாட்டுக்கு வருவதைத் தடைசெய்வது என்பது உலக அரங்கில் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்காது. சார்க் நாடுகள் அமைப்பில் இலங்கையும் உள்ளது. இலங்கையில் இப்போது லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இன்றளவுக்கும் வியாபாரத் தொடர்பு இருக்கிறது. ராஜபக்ஷே இங்கு வரக் கூடாது என்று தடுத்துவிட்டால், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எந்த உதவியையும் செய்யும் வாய்ப்பு கிடைக்காது.''

''ஐ.நா-வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா?''

''ஏற்கெனவே அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்தோம். இப்போது கொண்டுவர இருக்கும் தீர்மானத்தையும் இந்திய அரசு ஆதரிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ராஜபக்ஷேவுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதற்கு இந்தத் தீர்மானத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். மனித உரிமை மீறல்களுக்காக அமெரிக்கா குரல் கொடுப்பது என்பது, ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவதற்கு சமம். வியட்நாமிலும் மத்தியக் கிழக்கு நாடுகளிலும் அமெரிக்காவை விடவும் மனித உரிமைகளை மீறியவர்கள் யாரும் இல்லை. இலங்கையில் கோரமான யுத்தம் நடந்தபோதும்கூட அமெரிக்கா மௌனமாகவே இருந்தது. ஆனால், இன்று இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதைக் கண்டு, இலங்கைக்கு ஒரு அச்சத்தைக் கொடுக்க அமெரிக்கா விரும்புகிறது. அதனுடைய வெளிப்பாடே இந்தத் தீர்மானங்கள். எது எப்படி இருப்பினும், இலங்கையைக் கட்டுப்படுத்த இந்தத் தீர்மானத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.''

அதிரடியாக முடித்தார் அழகிரி!

- எஸ்.முத்துகிருஷ்ணன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com