Contact us at: sooddram@gmail.com

 

43,000 வீடுகளை நிர்மாணிக்கும் இந்தியத் திட்டம் வேகமாக செயற்படுத்தப்படுகிறது

இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களினால் இணைந்து அமுல்படுத்தப்படும் வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் 43,000 வீடுகளை அமைப்பதற்கான இந்திய வீடமைப்புத் திட்டமானது ஆரம்பிக்கப்பட்ட தினமான 2012 ஒக்டோபர் 2ஆம் திகதியிலிருந்து துரித அபிவிருத்தியை எட்டியுள்ளது. இரண்டு அரசாங்கங்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தெரிவு முறைக்கேற்ப வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலுமிருந்து கண்டிப்பான விண்ணப்பமுறையின் மூலம் ஏற்கெனவே 8,700 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பயனாளிகளுக்கான முதற்கட்டத் தவணைப் பணத்தை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. மேலும் அத்திபார நிலைக்கு மேல் வீட்டின் நிர்மாணத்தை நிறைவு செய்த கிட்டத்தட்ட 25 வீதமான பயனாளிகள் தங்களது இரண்டாம் தவணைப் பணத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர். வட மாகாணத்தில் 10,000 வீடுகளை அமைத்து முடிக்கும் இலக்கை இந்த வருட முடிவுக்குள் அடைய இரு அரசாங்கங்களும் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளன.

இந்திய உயர் ஸ்தானிகர் கெளரவ அசோக் கே காந்தா அவர்கள் பெப்ரவரி 23, 24ஆம் திகதிகளில் தன்னுடைய வட மாகாணத்திற்கான விஜயத்தின்போது இந்தத்திட்டத்தின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட சில வீடுகளுக்கு விஜயம் செய்து இந்தத் திட்டத்தின் அபிவிருத்தி பற்றித் திருப்தி தெரிவித்துள்ளார். தன்னுடைய விஜயத்தின்போதும் அதன் பின்னர் கொழும்பு திரும்பிய பின்னரும் இந்திய உயர் ஸ்தானிகர் இதில் சம்பந்தப்பட்டோருடனும், சமுதாய நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் ஆகியவற்றுடனும் விரிவான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

மார்ச் 2ஆம் திகதி உயர் ஸ்தானிகர் அமுலாக்க முகவர்களுடன் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தார். இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது வடமாகாணத்தின் மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் பயனாளிகள் தெரிவில் ஓர வஞ்சனை இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றியும் ஆராயப்பட்டது.

பயனாளிகள் தெரிவு முறைமைகள் இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அமுலாக்க முகவர்களாலும் இலங்கை அரசாங்கத்தின் உள்ளூர் உத்தியோகத்தர்களாலும் இணைந்தே செய்யப்படுகின்றன. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த இரு அரசாங்கங்களும் இத்திட்டத்தின் பயன் உண்மையான பயனாளிகளைச் சென்றடைவதை உறுதிப் படுத்தியுள்ளனர் முறைமைகளுக்கு அமைவானதும், நீதியானதும், பாரபட்சமற்றதுமானதும் வெளிப்படையானதுமான முறையில் பயனாளிகளுக்கான தேர்வை நடத்துவதற்குச் சம்மதித்து அவ்விதமே நடைமுறைப் படுத்தப்படுகின்றது. இந்த முறைமையானது அரசியல் கட்சிகள் சிவில் சமுதாய அமைப்புகள், பாதிக்கப்பட்டோர், உள்ளிட்ட இதில் சம்பந்தப்பட்ட யாவருடனும் விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்னரே முடிவு செய்யப்படுகின்றன.

இந்தத் தெரிவு முறைமையின் கீழ் முதற் படியாக வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலுமுள்ள மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கிராமங்கள் அடையாளங் காணப்படுகின்றன. அதன் பின்னர் அக்கிராமத்திலுள்ள தற்போது நிரந்தரமாகத் தங்கள் கிராமத்தில் வசிப்பதற்குத் திரும்பியுள்ள இலங்கையின் எந்தப் பாகத்திலும் சொந்த வீட்டைக் கொண்டிராத, நேரடியாக அல்லது மறைமுகமாக வேறு எந்த நிரந்தர வீடமைப்பு உதவியையும் பெற்றிராத, தற்போது நிரந்தர வீடொன்று தேவைப்படும் அந்தக் கிராமத்தில் வசித்த அல்லது அங்கு நிரந்தரமாக வசித்தோரின் வழித் தோன்றல்களானோர்கள் முதலாவது பயனாளிகள் தெரிவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் விண்ணப்பப்படிவங்கள் மூலம் அவர்கள் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்படும்.

அவர்களால் வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கணிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. இத்தரவின் மூலம் அவர்களின் வாழ்வாதாரம், குடும்பத்தில் தங்கியுள்ளோரின் எண்ணிக்கை அவர்களின் வயது, குடும்பத்திலுள்ள அங்கவீனர்கள் போன்றவை கவனத்தில் கொள்ளப்படுகின்றன. பயனாளிகள் இவ்விதமாகக் கணிப்பெண்கள் வழங்கப்பட்டு ஒரு நியம வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் இறுதியான பயனாளிகள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவர். கணிப்பெண் வழங்கப்படும் முறைமை வெளிப்படையானதும் யாவருடையதும் பங்குபற்றுதலுடையதுமாகும்.

பயனாளிகள் முன்மொழிவுப் பட்டியல் கணிப்பெண் விபரங்களுடன் பொது இடங்களில் பார்வைக்கு வைக்கப்படும். அந்தப் பகுதியைச் சேர்ந்தோர் யாராவது முறைப்பாடுகள் ஏதாவது இருந்தால் அவற்றைச் செய்வதற்கு இருவார அவகாசம் வழங்கப்படுகின்றது. அந்தப் பகுதிப் பாராளுமன்ற அங்கத்தவருக்கும் இந்தப் பட்டியல் அனுப்பி வைக்கப்படுகின்றது. ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் பிரதேச செயலாளராலும் அமுலாக்க முகவர்களாலும் விசாரணை செய்யப்படுகின்றன. ஆதாரத்துடனான முறைப்பாடுகள் செய்யப்படாத பயனாளிகள் மட்டும் இறுதிப் பட்டியலில் உள்வாங்கப்படுவார்கள்.

இது போன்ற வழமையான முறையீடுகள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கோ அல்லது யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய உதவித் தூதராலயத்திற்கோ செய்யப்படலாம். அத்தகைய முறைப்பாடுகள் முறையான விசாரணைக் குட்படுத்தப்படும் தேர்வு முறைமையில் அழுலாக்க முகவர்களும் உள்ளூர் உத்தியோகத்தர்களும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். தேர்வு முறைமையில் விசேஷமாக குறைபாடுகள் நிவர்த்தி செய்வதில் சிவில் சமூகங்களும் உள்ளூர் சமுதாயங்களும் முக்கிய பங்கை வகிக்கின்றன.

இதில் சம்பந்தப்பட்ட பல் தரப்பினருடனும் சமீபத்தில் உயர் ஸ்தானிகர் நடாத்திய பேச்சு வார்த்தைகளில் பயனாக இந்த முறைமைகள் சமுதாய மதியுரைப் பிரிவினருடன் செய்து கொண்ட ஆலோசனைகளுக்கமைய மேலும் பலமாக்கப்பட்டுள்ளன.

எனவே வீடமைப்பு உதவிக்கான பயனாளிகளின் இறுதிப்பட்டியல் கடுமையான முறைமையின் கீழ் அடையாளம் காணப்பட்டு, சரி பார்க்கப்பட்டு முறைப்பாடுகள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே ஏற்றக்கொள்ளப்படுகின்றன. எனவே தெரிவில் காட்டப்படும் பாராபட்சம் சம்பந்தமான முறைப்பாடுகள் ஆதாரமற்றவையாகும் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் மற்றும் வீடமைப்புத்திட்டத்தின் முன்னேற்றம் சம்பந்தமான விபரங்களை இந்திய உயர் ஸ்தானிகராலய இணையத்தளம் (http:/www.hcicolombo.org/index.php?option=com pages&id=170) மூலம் தெரிந்துகொள்ளலாம்.

யுத்தத்தின் காரணமாக இடம் பெயர்ந்தோர்க்கு உதவி செய்யும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி, வடமாகாணத்தில் இயல்பு நிலையை மீட்சி பெறச் செய்வதே இந்திய வீடமைப்புத்திட்டத்தின் நோக்கமாகும். UN Habitat, International Federation of Red Cross (in participation with the Sri red Cross Habitat For Humanity மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஆகிய நான்கு அமுலாக்க முகவர்கள் மூலமாக இத்திட்டம் அமுலாக்கப் படுகின்றது. இவர்கள் இது போன்ற திட்டங்களை இலங்கையில் அமுல்படுத்துவதில் நன்கு அனுபவம் வாய்ந்தவர்கள். இவர்களால் வழங்கப்படும் தொழில் நுட்ப உதவிகளுடனேயே வீடு நிர்மாண மற்றும் திருத்த வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஜூன் 2010ம் ஆண்டில் இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது 50,000 வீடுகளின் நிர்மாணம் பற்றி இந்திய அரசு அறிவித்தது. இந்திய அரசாங்கம் இந்தத் திட்டத்திற்காக 270மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. இதன் முன்னோடித் திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் 1,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. வட மற்றும் கீழக்கு மாகாணங்களில் 43,000 வீடுகளை அமைப்பதற்கான இரண்டாவது கட்டம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு பயனாளியும் நான்கு தவணைகளில், புதிய வீட்டு நிர்மாணித்திற்காக, இலங்கை ரூபா 5,50,000மவீட்டுத் திருத்த வேலைகளுக்காக மூன்று தவணைகளில் இலங்கை ரூபா 2,50,000ம் பெற்றுக் கொள்ளுவார்.

அவர்களுக்கான கொடுப்பனவு அவர்களுடைய சேமிப்பு வங்கிக் கணக்கில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் நேரடியாக வைப்புச் செய்யப்படும் இனிவரும் மாதங்களில் மத்திய மாகாணத்திலுள்ள மக்களுக்காக 4,000 வீடுகளை அமைப்பதற்கான மூன்றாவது திட்டத்தில் முகவர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் அமுல் செய்யப்படும். முகவர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் வலுவிழந்தோர்க்கான 2,000 வீடுகளை அமைக்கும் நான்காவது கட்டம் வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமுல் செய்யப்படும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com