Contact us at: sooddram@gmail.com

 

இலங்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வெடித்தது!

இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் நடந்து வருகிறது. இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க கோரியும், உண்ணாவிரதம் இருந்து வந்த சென்னை லயோலா கல்லூரி மாணவர்களின் கைதை கண்டித்தும் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடி அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் 2200 பேர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர். மேலும், இலங்கை உடனான உறவுகளை இந்தியா முறித்து கொள்ள வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர். இலங்கைக்கு
ஆதரவு தெரிவித்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிசுவாமி உருவ பொம்மையை எரி்த்து மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டினர்.

திருச்சி புனித வளனார் கல்லூரி மாணவர்கள் 70 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி எல்.என்.ஜி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 1500 பேர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், லயோலா மாணவர்களை விடுதலை செய்யக் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிவபட்டன், சாயல்ராமன் ஆகியோர் களத்தில் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பொறியியல் கல்லூரி மாணவர்கள் ராஜபக்சேவை கண்டித்து முழக்கப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, லயோலா கல்லூரி மாணவர்கள் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர். காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் லயோலா கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வரும் மாணவர் காரல்மார்க்ஸ் மாணவர்களை இன்று சந்தித்து ஆதரவு கேட்டார். பின்னர், 100 மாணவர்களை திரட்டி அங்குள்ள அம்பேத்கர் சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார். இதற்கு காவல்துறை அனுமதியளிக்காததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கண்ணதாசன் மணிமண்டபம் அருகில் உண்ணாவிரதம் இருக்க காவல்துறை அனுமதி அளி்த்தது. இதையடுத்து காரல்மார்க்ஸ் தலைமையில் 4 மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு
நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

லயோலா கல்லூரி மாணவர்களை விடுதலை செய்யக் கோரி தூத்துக்குடி காமராஜர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். சென்னை அடையாறில் சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மதுரையி்ல் பாரத ஸ்டேட் வங்கியில் புகுந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் வங்கிக் கதவை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி ஊழியர்கள் பணிகள் செய்ய முடியாமல் தவித்தனர். நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினம் காதர்மொய்தீன் கல்லூரி மாணவர்கள்  3 ஆயிரம் பேர் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப் போராட்டங்கள் சம்பந்தமாக சில தமிழ்நாட்டுப் பொது மக்களின் கருத்துக்கள்....

……மாணவர்களே! படிக்கும் பொழுது படிக்கும் வேலையைப் பாருங்கள். நாங்கள் மாணவர்களாக இருந்த பொழுது முதலில் இலைங்கைக்கு இராணுவத்தை அனுப்பு என்று போராட்டம் செய்தோம். திரும்ப இராணுவத்தைப் பெறு என்று போராடினோம். மாதக் கணக்கில் பள்ளிகளும் கல்லூரிகளும் மூடி இருந்தன. என்ன பயன். இந்த அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதே உங்கள் எதிர் காலத்திற்கு நல்லது!.....

……… இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தியவர்களின் கதி என்ன? அதைத் தூண்டிவிட்டவர்களின் குழந்தைகள் ஹிந்தி பேசி சட்ட சபையில் உரையாடுகிறார்கள். மாணவர்களின் கவனம் படிப்பில் இருப்பதே சிறப்பு. போர் நடக்கும் சமயம் போராடியிருந்தால் உயிர்களையாவது காப்பாற்றி இருக்கலாம். இப்பொழுது நடக்கும் போராட்டம் தகுதியில்லாத அரசியல் கட்சிகள் வளர்வதற்குத்தான் உபயோகப்படும்…….

…….மதுரையி்ல் பாரத ஸ்டேட் வங்கியில் புகுந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் வங்கிக் கதவை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி ஊழியர்கள் பணிகள் செய்ய முடியாமல் தவித்தனர்.--- இதெல்லாம் தவறு. உங்கள் வாழ்க்கையை பாதிக்கும். எவனாவது தவறான உசுப்பேத்தலின் பெயரில் விட்டில் பூச்சியாகாமல் ஜாக்கிரதையாக போராடவேண்டும்………

…….இப்போராட்டம் தமிழர்களை ஒன்றுபடுத்தும் போராட்டம்; இதை யாரும் கொச்சை படுத்த வேண்டாம். அனைத்து பிரச்சனைகளிலும் தமிழ்நாட்டின்,தமிழர்களின் நலனுக்கு எதிராக அரசியல் செய்யும் பித்தலாட்ட அரசியல்வாதிகளுக்கு எதிரான போராட்டம்; மத்திய அரசாங்கத்தை உலூக்கும் போராட்டம்; தேவை அமைதியான அதே சமயம் அழுத்தமான , விட்டுக்குடுக்காத போராட்டமாக இருக்கவேண்டும். லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் அடக்கப்பட்டதன் விளைவே இன்று தமிழகம் முழுவதும் போராட்டம். இந்த தருணத்தில் வைகோ போன்ற தலைவர்கள் மக்கள் சக்தியை ஓன்று திரட்டி மொத தமிழகமும் இதில் பங்குபெற செய்யவேண்டும். இப்பொழுது ஒற்றுமை இல்லாவிட்டால் இனிமேல் தமிழ்நாட்டின் எந்த பிரச்சனைக்கும் ஒற்றுமையாக போராடமுடியாது. மக்களே நியமாக போராடும் மாணவர்கள் பின்னால் அணி திரளுங்கள் ………

(நன்றி: விகடன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com