Contact us at: sooddram@gmail.com

 

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு

  • சுதந்திர இலங்கையின் 2வது சர்வதேச விமான நிலையம்

  • 23 சர்வதேச விமான நிறுவனங்கள் சேவை நடத்த விருப்பம்

  • 220 மில்.டொலரில் முதற்கட்ட பணிகள் பூர்த்தி

  • மத்தளயிலிருந்து புறக்கோட்டைக்கு அதிசொகுசு பஸ்சேவைகள்

  • உலகில் மிகப்பெரிய 380 எயார் பஸ் தரை இறங்கும் வசதி

சுதந்திர இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் இன்று 18ம் திகதி காலை, சுபநேரம் 10 மணிக்கு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படுகின்றது.

இவ்வைபவத்தையொட்டி மத்தள பிரதேசம், உட்பட ஹம்பாந்தோட்டை மாவட்டம் அடங்கலாக தென் மாகாணம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஸ்ரீ லங்கன் விமானம் மூலம் இச்சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி மத்தள விமான நிலையத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவிருக்கின்றார்.

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இச்சர்வதேச விமான நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் 220 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிறைவடைந்துள்ளன. இங்கு 3500 மீற்றர் நீளமும், 75 மீற்றர் அகலமும் கொண்ட விமான ஓடுபாதை, விமான பாதை, டெக்ஸி வீதி, சரக்கு மற்றும் பயணிகள் விமான இறங்கு தளம் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன.

உலகிலுள்ள மிகப்பெரிய விமானமான ஏயார் பஸ் 380 ரக விமானத்தைத் தரையிறக்கக் கூடிய வசதியும் இவ்விமான நிலையத்தில் உள்ளது. இங்கு பயணிகள் சேவை, பொதிகள் சேவை, சரக்குகளைக் கையாளும் சேவை என்பன இடம்பெறவிருக்கிறது. இரண்டாயிரம் ஹெக்டேயர் பரப்பைக் கொண்ட மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் ஸ்ரீ-லங்கன் கார்கோவுக்கு 5000 சதுர மீற்றர் பரப்பைக் கொண்ட 60,000 மெற்றிக் தொன் சரக்குகளைக் கையாளக் கூடிய வசதியும் உள்ளது. முதற்கட்டமாக இவ்விமான நிலையத்திலிருந்து ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் ரியாத்துக்கும், நான்கு விமானங்கள் மாலைக்கும், இரண்டு விமானங்கள் பீஜிங்குக்கும், ஒன்று சங்காய் ஊடாக பேங்கொக்குக்கும் சேவையில் ஈடுபடவிருக்கின்றன. இரண்டு மிஹின் லங்கா விமானங்கள் புத்தகாயாவுக்கு சேவையில் ஈடுபடும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன கூறியுள்ளார்.

இதேவேளை, இவ்விமான நிலையத்தின் ஊடாக சேவையில் ஈடுபடும் A 300, A 320 A 330 A 340 ரக ஏயார் பஸ் விமானங்களுக்கும் போயிங்க் 737 விமானங்களுக்கும் ஸ்ரீலங்கன் இன்ஜினியங்க் நிறுவனம் தொழில்நுட்ப பராமரிப்பு சேவைகளை வழங்கும் எனவும் அவர் கூறினார்.

இலங்கை வரலாற்றில் திறந்து வைக்கப்பட்டவுடனேயே சர்வதேச விமான நிலையம் என்ற அந்தஸ்துடன் செயற்படும் விமான நிலையமாக மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம், விளங்குவதாகவும் அவர் கூறினார்.

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் 1944 களில் பிரிட்டனின் ரோயல் விமானப் படையினது இறங்குதளமாகவே இரண்டாம் உலகப் போர் காலத்தில் இருந்தது. என்றாலும் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலைய நிர்மாண வேலைகள் 1964ம் ஆண்டில் தான் ஆரம்பிக்கப்பட்டது. அதன் நிர்மாணப் பணிகள் 1967ம் ஆண்டில் நிறைவடைந்தது. என்றாலும் 1968ம் ஆண்டில்தான் அதற்கு சர்வதேச விமான நிலையம் என்ற அந்தஸ்து கிடைக்கப் பெற்றதாகவும் அவர் கூறினார். மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக விமான சேவைகளை நடாத்துவதற்கு 23 சர்வதேச விமானங்கள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளன. இவ் விமான நிலையத்தில் தற்போது வருடத்திற்கு பத்து இலட்சம் பயணிகளை கையாளக் கூடிய வசதி உள்ளது. என்றாலும் இச்சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் பூர்த்தியானதும் வருடத்திற்கு 50 இலட்சம் பயணிகளைக் கையாளகக்கூடிய வசதியைப் பெறும் என்றும் அமைச்சர் கூறினார். இதேவேளை மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து எயார் அரபியா விமானம் தனது முதலாவது பயணத்தை இன்று சார்ஜாவுக்கு ஆரம்பிக்கும் என்று விமான நிலைய மற்றும் விமான சேவைகள் கம்பனியின் தலைவர் பிரசன்ன விக்கிரமசூரிய கூறினார்.

அதிசொகுசு பஸ் சேவை

மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு புறக்கோட்டை வரை அதிசொகுசு பஸ் சேவையொன்று இன்று 18ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட விருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளை இலங்கை போக்குவரத்து சபை மேற்கொண் டுள்ளது. இதன் கீழ் முதற்கட்டமாக பத்து பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவிருப் பதாக அதிகாரியொருவர் கூறினார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com