Contact us at: sooddram@gmail.com

 

கருணாநிதியின் ஆதரவு வாபஸும் தமிழக அரசியல் களமும்

மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் என அறிவித்திருக்கும் தி.மு.க, தங்களுடைய‌ அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்வார்கள் என அறிவித்திருக்கிறது. ஆனால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் விவகாரத்தில் மு.க.அழகிரி மாற்றுக் கருத்துக் கொண்டிருப்பதாக மதுரையில் இருந்து வரும் செய்திகள் சிறகடிக்கின்றன.

கிரானைட் வழக்குகள், பொட்டு சுரேஷ் கொலை என அழகிரிக்கு நெருக்கடிகளை கொடுத்து தி.மு.க.வை கலகலக்க வைக்க அ.தி.மு.க. தரப்பில் அத்தனை சூழ்ச்சிகளும் நடக்கின்றன. ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் பகையை வளர்த்துவிட்டு அதன் மூலம் கழகத்தை உடைக்க முடியுமா என்று கூட தந்திர வேலைகளை செய்து பார்த்தது. இன்னமும் செய்து கொண்டே இருக்கிறது. இருந்த போதும் அழகிரியை அ.தி.மு.க. அரசு இன்னமும் முழுமையாக நெருக்க முடியாமல் இருப்பதற்கு காரணமே அவர் வகிக்கும் மத்திய கேபினட் அமைச்சர் பதவி தான்.

இதற்கு முன்பும் ஆதரவு வாபஸ் பேச்சுக்கள் கிளம்பிய போது, 'அதெல்லாம் வேண்டாம். மத்திய அரசில் நாம் அதிகாரத்தில் இல்லாவிட்டால் ஜெயலலிதா ஆட்சியில் அத்தனை பேரும் உள்ளே தான் இருக்கணும். இதுக்கு சம்மதம்னா வாபஸ் வாங்குங்க‌" என்று சொல்லி அதற்கு தடை போட்டாராம் அழகிரி. இந்த நிலையில் இப்போது ஆதரவு வாபஸ் நிலைப்பாடு எடுப்பதற்கு முன்பாக அழகிரியிடம் கருத்துக் கேட்கப்பட்டதாக சொல்லும் மதுரை தி.மு.க. புள்ளிகள்,

''இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் அழகிரி அண்ணனுக்கு எப்போதுமே அதிக அக்கறை உண்டு. ஆனால், தீர்மானங்களோ போராட்டங்களோ இலங்கை தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றி விடாதுங்குறது அவரோட கருத்து. இன்று எடுக்கப்பட்ட முடிவு குறித்து அவரிடம் விவாதிக்கப்பட்ட போது, 'இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த நேரத்தில் இந்த காரியத்தை நாம் செய்திருக்க வேண்டும். அப்போது விட்டுவிட்டு இப்போது ஆதரவை விலக்கிக் கொள்வதால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.

அப்படியே, தீர்மானத்தை இந்தியா ஆதரித்து விட்டால் மட்டும் இலங்கை தமிழர்களுக்கு பெருசா எந்த நன்மையும் கிடைத்துவிடப் போவதில்லை. வாபஸ் வாங்கி வெளியில் வருவதைவிட உள்ளே இருந்து கொண்டு இந்தப் பிரச்னையில் அழுத்தம் கொடுத்து அரசை நிர்பந்திப்பது தான் ராஜதந்திரம்'னு அண்ணன் சொல்லிருக்காரு. அதையும் மீறி தலைவர், வாபஸ் முடிவை அறிவித்திருக்கிறார். நேத்து ராத்திரி வரைக்கும் வாதப் பிரதிவாதங்கள் நடந்துக்கிட்டே இருந்துச்சு. ராத்திரிலருந்து அண்ணோட  செல்போன் ஆஃப் ஆகிக் கிடக்கு. அவரு என்ன முடிவு எடுக்கப் போறாருன்னு தெரியல" என்கிறார்கள்.

அ.தி.மு.க. தரப்பிலோ, ''அழகிரியின் அமைச்சர் பதவிக்கு எந்த ஆபத்தும் வரப் போவதில்லை. தமிழகத்தில் மாணவர் போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. இந்த நேரத்தில் அமைதியாக இருந்தால் தி.மு.க.வுக்கு சிக்கலாகிவிடும். அதனால், கருணாநிதியின் டெல்லி அரசியல் ஆலோசகரான ப.சிதம்பரம் உள்ளிட்டவர்கள் போட்டுக் கொடுத்த பிளான்படி இப்ப ஒரு டிராமா நடந்துக்கிட்டு இருக்கு. அதற்கான கதை வசனத்தை விளக்கிச் சொல்வதற்காகத்தான் மத்திய அமைச்சர்கள் மூன்று பேர் நேற்று கருணாநிதியை வந்து சந்தித்துவிட்டுப் போனார்கள்.

அந்தத் திட்டப்படி, காங்கிரஸின் அனுமதியோடு ஆதரவு வாபஸ் நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார் கருணாநிதி. அத்தோடு மைக்கை நிறுத்தி இருந்தால் கூட நம்பி இருக்கலாம். ஆனால், மத்திய அரசு தீர்மானத்தில் திருத்தங்களை கொண்டுவர உதவினால் தங்களது முடிவையும் மறுபரிசீலனை செய்வோம் என்று அவர் சொல்லி இருக்கிறார். நாளையோ நாளை மறுதினமோ பல்டி அடிக்க வசதியாக கருணாநிதி இப்படிச் சொல்லி இருக்கிறார். அமெரிக்க தீர்மானத்தில் என்ன இருக்கிறது இவர்கள் என்ன திருத்தம் சொன்னார்கள் என்பது இதுவரை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்துத்தான் இந்தியா வாக்களிக்கப் போகிறது. தி.மு.க. கொடுத்த நெருக்கடியால் தான் இந்தியா ஆதரித்து ஓட்டளித்தது என்று காட்டிக் கொள்வதற்காக  'ஆதரவு வாபஸ்' என்ற டிரெய்லரை கருணாநிதி இன்று ஓடவிட்டிருக்கிறார்.
கூடிய சீக்கிரமே மெயின் பிக்சரும் திரைக்கு வரும் என்கிறார்கள்.

கருணாநிதியின் விலகல் அறிவிப்பு இலங்கைத் தமிழர்கள் முதுகில் குத்தும் நடவடிக்கை - ஜெயலலிதா

மத்திய ஆட்சியிலிருந்து விலகுவதாக கருணாநிதி அறிவித்திருப்பது, இந்திய அரசை காலம் கடக்க வைத்து, இலங்கைத் தமிழர்கள் முதுகில் குத்தும் நடவடிக்கையாகவே  அமைந்துள்ளது.என்றும், கருணாநிதியின் இதுபோன்ற எண்ணற்ற நாடகங்களை மக்கள் கண்டு அலுத்துப் போயுள்ளனர். என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
 
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தன்னலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதில் தனக்கு நிகர் யாருமில்லை என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
 
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, “அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை பெருமளவிற்கு நீர்த்துப் போக விட்டதோடு, தி.மு.க. முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை.
 
எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் தி.மு.க. நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால் தி.மு.க. மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது “கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.
 
2009-ம் ஆண்டு இலங்கையில் உச்சக்கட்டப் போர் நடந்தபோது, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர் கருணாநிதி. அப்போது மத்திய அமைச்சரவையிலிருந்து விலகவோ, மத்திய அமைச்சரவைக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ளவோ நடவடிக்கை எடுக்காமல், மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகம் நடத்தி தமிழர்களை ஏமாற்றியவர் கருணாநிதி.
 

இலங்கையில் போர் முடிந்துவிட்டது என்று பிரகடனப்படுத்தி தமிழினத்தை நம்ப வைத்து பதுங்குக் குழிகளில் பாதுகாப்பாக இருந்த இலங்கைத் தமிழர்களை வெளிவரச் செய்து அவர்கள் அனைவரும் ஈவு இரக்கமின்றி இலங்கை அரசின் குண்டு மழையினால் கொன்று குவிக்கப்பட்டதற்கு கருணாநிதிதான் காரணம்.
 
இந்தச் சமயத்தில் கருணாநிதி மத்திய அமைச்சரவைக்கு அளித்திருந்த ஆதரவை விலக்கிக் கொண்டிருந்தால் இலங்கைத் தமிழர்கள் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். இதை கருணாநிதி செய்யவில்லை.  இது தமிழர்களுக்கு எதிரான மிகப்பெரிய துரோகம்.
 
இதைத்தான் செய்யவில்லை என்றாலும், இலங்கைக்கு எதிராக மத்திய அரசு ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வந்து போர்க் குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் எனது தலைமையிலான அரசு கொண்டு வந்த தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கவாவது மத்திய அரசை வலியுறுத்தி இருக்க வேண்டும்.  இதையும் கருணாநிதி செய்யவில்லை. இது கருணாநிதி இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இழைத்த இரண்டாவது துரோகம்.
 
கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் அமெரிக்காவின் சார்பில் கொண்டு வரப்பட்ட ஓரளவு வலுவான தீர்மானத்தை இந்திய அரசு வலுவிழக்கச் செய்த போதாவது கருணாநிதி அதனைக் கண்டித்து இருக்க வேண்டும்.  கருணாநிதி இதிலும் தான் ஏமாற்றப்பட்டதாக சொல்லிக் கொள்ளலாம்.  ஆனால், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்ததே இந்தியாதான் என்று பட்டவர்த்தனமாக அனைவருக்கும் மத்திய அரசே பாரதப் பிரதமரின் கடிதத்தை வெளியிட்டு தெரியப்படுத்தியது.
 
அப்போதும் கருணாநிதி அதைப்பற்றி வாய் திறக்கவில்லை. இது இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கருணாநிதியின் மூன்றாவது துரோகம்.
 
ஒருவேளை, அவ்வாறு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நீர்த்துப் போக செய்த சூழ்ச்சியில் கருணாநிதிக்கும் பங்கு உள்ளது போலும்! எனவேதான் அதைப்பற்றி அப்போது அவர் எதையும் சொல்லவில்லை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
 
இவ்வாறு மத்திய அரசை எதிர்த்து வலிமையாக குரல் கொடுக்கக்கூடிய சந்தர்ப்பங்களை எல்லாம் நழுவவிட்டு, இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள சொல்லொணாத் துயரங்களுக்கு எல்லாம் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டிய கருணாநிதி, தன்னுடைய பொறுப்பிலிருந்து நழுவும் வகையில், தமிழக மக்களை ஏமாற்றும் வகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகுவது என்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.
 
இது மட்டுமல்லாமல், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் தொடர்பாக இந்தியா அமைதி காத்து வருவது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றும், இப்பிரச்சனையில் இந்தியா வலுவான வரலாற்று சிறப்புமிக்க உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும், அந்தத் தீர்மானத்தை வலுவடையச் செய்ய என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்றும் நான் விரிவான கடிதம் ஒன்றை பாரதப் பிரதமருக்கு நேற்று எழுதியுள்ளேன்.
 
இந்த நிலையில், 18.3.2013 அன்று ஏ.கே. அந்தோணி, ப. சிதம்பரம், குலாம் நபி ஆசாத் ஆகியோர் சந்தித்ததும் கருணாநிதி அளித்த பேட்டியில், இலங்கை தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை போர்க்குற்றங்கள் என்றும், இனப் படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும் என்றும், இலங்கை தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இந்தத் திருத்தங்கள் அடங்கிய தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்திலும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தான் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
இலங்கைக்கு எதிராகவும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், வலுவான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டால்தான் இலங்கைக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க இயலும். ஆனால், கருணாநிதி, இந்திய நாடாளுமன்றத்தில் இதைப்போன்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சொல்லியுள்ளார்.
 
அவரது இன்றைய (19.3.2013) பேட்டிக்குப் பின் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, 21.3.2013 வரை காலம் இருப்பதாகவும், அதற்குள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் தி.மு.க. தனது முடிவை மறுபரிசீலனை செய்யும் என்றும் கூறியுள்ளார்.
 
இலங்கைக்கு எதிராக இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது என்பது தற்போதைய சூழ்நிலையில் உறுதியான பயனளிக்கக் கூடியது அல்ல. மாறாக,  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக்கூட்டத்தில்தான் தீர்மானங்களுக்கு திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அதுவும் உடனடியாக கொண்டு வரப்பட வேண்டும்.
 
அவ்வாறு செய்யாமல், இந்திய அரசை காலம் கடக்க வைத்து, இலங்கைத் தமிழர்கள் முதுகில் குத்தும் நடவடிக்கையாகவே தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
 
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இதுபோன்ற எண்ணற்ற நாடகங்களை மக்கள் கண்டு அலுத்துப் போயுள்ளனர். மீண்டும் கொண்டு வரப்பட்ட டெசோ அமைப்பிற்கு மக்களிடமும், மாணவர்களிடமும் எந்தவித ஆதரவும் இல்லாத நிலையில் தற்போது அரங்கேற்றியுள்ள நாடகத்தின் மூலம் தன் மீது ஏற்பட்டுள்ள நீங்காத பழியை குறைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் நிறைவேறாது.  இந்த கபட நாடகங்களுக்கு தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என்பது திண்ணம்" என்று கூறியுள்ளார். .

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com