Contact us at: sooddram@gmail.com

 

மர்மம் தொடர்கிறது...

காணாமல்போன விமானம் தொடர்பில் மாறுபட்ட தகவல்கள்

கோலாலம்பூரிலிருந்து பீஜிங்கிற்கு பறந்து கொண்டிருந்த மலேசிய விமானம் காணாமல்போய் மூன்று தினங்கள் கடந்துள்ள நிலையிலும் அது எங்கே என்ற மர்மம் தொடர்ந்தும் நீடித்து வருகிறது. இந்த விமானம் கடத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்பையும் மறுக்கமுடியாது என்று மலேசிய சிவில் விமான சேவைத் தலைவர் அசாருதீன் அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார். இந்த விமானம் வீழ்ந்திருக்கக் கூடுமென்று சந்தேகிக்கப்படும் கடற்பகுதியில் நேற்று ஒரு மஞ்சள் நிற உயிர்பாதுகாப்புப் படகு ஒன்று கண்டெடுக்கப் பட்டபோது அது இந்த சம்பவத்துடன் தொடர்பற்ற பொருள் என பின்னர் உறுதிசெய்யப்பட்டது.

மலேசிய விமான சேவைக்குச் சொந்தமான எம்.எச்.370 விமானம் மூன்று தினங்களுக்கு முன்னர் ராடர் திரைகளிலிருந்து காணாமல்போனது. கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்றுகொண்டிருந்த இந்த விமானத்தில் 239 பேர் இருந்தனர். காணாமல்போனவர்களது உறவினர்கள் விமானத்துக்கு என்னவானது என்ற செய்தி வரும்வரை மலேசிய விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

இதில் களவாடப்பட்ட கடவுச்சீட்டுக்களுடன் குறித்த விமானத்தில் பயணித்த சந்தேகத்துக்கு இடமான இரு பயணிகள் தொடர்பான விபரங்களைப் பெற சீன உளவுத்துறையுடன் இணைந்து செயற்படுவதாக மலேசிய ஆயுதப்படைகளின் பிரதானி குறிப்பிட்டார்.

மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுதீன் குசைன் கூறும்போது, சந்தேகத்துக்கு இடமான இரண்டு பயணிகள் பற்றிய விபரங்களைப் பெறப் பல நாடுகளினதும் உளவுத்துறையினை அணுகியிருப்பதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தத் தேடுதல் நடவடிக்கையை மலேசிய நிர்வாகம் துரிதப்படுத்த வேண்டுமென சீனா அழுத்தம் கொடுத்துள்ளது. காணாமல்போன விமானத்தில் 150ற்கும் அதிகமான சீன நாட்டவர்கள் பயணித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மலேசிய தரப்பு நேர்மையாகச் செயற்படுகின்றபோதும் அது மந்தமாக உள்ளது. மலேசியா தமது செயற்பாட்டைத் தீவிரப்படுத்த வேண்டும்என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தனது வழமையான ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.

இந்தத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்காவின் செவின் பிZட் யுத்தக்கப்பலின் கொமாண்டர் வில்லியம் மார்க் விமானத்தின் எச்சங்கள் நீரில் மிதக்க சாத்தியங்கள் இருப்பதாகக் கூறினார்.

அமைதியான கடலில் ஒரு சொக்கர் பந்து அல்லது கூடைப்பந்து மிதந்தாலும் அதனை ராடர் சமிக்ஞை மூலம் கண்டறிய முடியும். விமானப் பதிவில் ஒலியலை சமிக்ஞைகள் எழுப்பப்படும். அவ்வாறு பயணிக்கும் விமானத்தில் சமிக்ஞை பெற முடியும். ஆனால் இதுவரை எந்தத் தடயமும் கிடைக்கவில்லைஎன்றும் அவர் விளக்கினார்.

விமானத்தின் கதவுப் பகுதி உட்பட இரு பொருட்களை தெற்கு வியட்னாம் கடற்கரைப் பகுதியில் கண்டதாக வியட்நாம் நிர்வாகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கூறியிருந்தது. இதே பகுதியில் எண்ணைத் திட்டுக்கள் இருந்ததை விமானப்படையின் விமானங்கள் கடந்த சனிக்கிழமை கண்டுள்ளன.

எனினும், இந்த விடயங்கள் இன்னும் உறுதிசெய்யப்படவில்லையென்று மலேசிய சிவில் விமான சேவைத் தலைவர் தெரிவித்தார். அதேபோன்று காணாமல்போன விமானத்தில் எந்த எச்சமும் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லையென்று அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் நேற்றுத் தெரிவித்தனர்.

எம்.எச்.370 விமானம் உள்ளூர் நேரப்படி கடந்த சனிக்கிழமை 00.41 மணிக்கு கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நோக்கிப் புறப்பட்டது. ஆனால் ஒரு மணி நேரத்துக்குள் விமானத்துடனான தொடர்பு மலேசிய மற்றும் வியட்னாமுக்கு இடையில்வைத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

என்ன தவறு நேர்ந்தது என்பது பற்றி அதிகாரிகளால் இன்னும் உறுதிசெய்ய முடியாமல் உள்ளது. எனினும், இந்த விமானம் காணாமல்போய் சில மணிநேரங்களின் பின்னர் தனது பயணப்பாதையிலிருந்து திரும்பியிருப்பது ராடர் சமிக்ஞைகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து மலேசிய நிர்வாகம் தனது தேடுதல் பரப்பை கடந்த ஞாயிற்றுக்கிழமை விரிவுபடுத்தியது.

தற்போது ஒன்பது நாடுகளைச் சேர்ந்த 40 கப்பல்கள் மற்றும் 34 விமானங்கள் வியட்நாம் மற்றும் மலேசிய கடற்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இந்தத் தேடுதல் பகுதி பல நூறு கிலோமீற்றர்களுக்கு விரிவுபடுத்தியிருப்பதாக அமெரிக்க யுத்தக் கப்பலின் கொமாண்டர் வில்லியம் மார்க்ஸ் கூறினார்.

வானிலிருந்து பொருட்கள் கை அல்லது கூடைப்பந்து அளவில் மிகச் சிறியதாகவே தென்படும். இந்த பரந்த பகுதியில் இதனைக் கண்டால் அது பெரிய விடயமாகும்என்றார்.

மறுபுறத்தில் இந்த விவகாரத்தில் தீவிரவாதத் தாக்குதல் உட்பட அனைத்துக் கோணங்களிலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதில் தீவிரவாதத் தடுப்பு நிறுவனங்கள் மற்றும் எப்.பி.ஐ புலனாய்வுப் பிரிவும் விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.

காணாமல்போன மலேசிய விமானத்தில் பிரணாப் முகர்ஜியின் இரு உறவினர்கள்

காணாமல்போன மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களில் இருவர் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உறவினர்கள் என சேலம் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் துணைத் தலைவர் மோகன் குமரமங்கலம் தெரிவித்துள்ளார்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிக்கு சனிக்கிழமை சென்ற பயணிகள் விமானம் வியட்நாம் அருகே காணாமல்போனது. கடலில் விழுந்து விபத்தில் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதில் விமானத்தில் 5 இந்தியர்கள் உட்பட 239 பேர் பயணம் செய்துள்ளனர். இந்தியர்களில் இருவர் பிரணாப் முகர்ஜியின் உறவினர்கள் என தெரியவந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே குமரமங்கலத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜமீன் குடும்பத்தைச் நேர்ந்தவர் உமா முகர்ஜி. தற்போது அவர் சென்னையில் வசித்து வருகிறார். அவரது உறவினர் முகேஷ் முகர்ஜி. கனடா குடியுரிமை பெற்று அங்குள்ள பன்னாட்டு தொழில் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

அவர் பணி நிமித்தமாக தனது சீன மனைவி ஜாமு (37) என்பவருடன் மலேசியாவில் இருந்து பெய்ஜிங் சென்றுள்ளார். அவர்கள் சென்ற விமானம் பின்னர் காணாமல்போனது. அவருக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். சென்னையில் வசிக்கும் குமரமங்கலத்தைச் சேர்ந்த உமா முகர்ஜிக்கு, கணவர் வழியில் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகவலை உமா முகர்ஜியின் உறவினரும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமரமங்கலத்தின் மகனுமான சேலம் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் துணைத் தலைவர் மோகன் குமரமங்கலம் உறுதி செய்துள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com