Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணையும் காலம் கனிகிறத  - அமைச்சர் ஹக்கீம்

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணையும் காலம் கனிகிறது. ஜனநாயக ரீதியான போராட்டங்களின் மூலமாக சகல இனங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சமத்துவமானதும், சாத்தியதுமான தீர்வுகளை நோக்கி நகரும் கட்டத்திற்கு எம்மை புடம்போட்டுக் கொள்ளவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்

வீரகேசரி வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியர் இரத்தின சபாபதி பிரபாகனின் தரிசனம் நூல் வெளியீட்டுவிழா பேராசிரியர் சபாஜயராஜா தலைமையில் நேற்றைய தினம் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றதுஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் நீதியரசரும் வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டதோடு சிறப்பு அதிதிகளாக இலங்கைக்கான பிரதி இந்தியத் தூதுவர் பீ.குமரன், முஸ்லிம்காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தமிழருவி சிவகுமாரன், விரிவுரையாளர் ஸ்ரீபிரசாந்தன் ஆகியேர் பங்கேற்றதோடு, அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், மதத்தலைவர்கள், இலக்கிய ஆய்வாளர்கள், சமூகவியலாளர்கள், ஊடகவியலாளர்கள், வீரகேசரி நிறுவன ஊழியர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

அமைச்சர் ஹக்கீம் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நேற்றைய தினம(சனிக்கிழமை) இந்நாட்டில் வெளியாகும் பிரபல சிங்கள நாளேட்டில் என் தொடர்பான கேலிச்சித்திரமென்று வெளியாகியிருந்தது. ஆதில் என்னுடன் இருக்கும் அமைச்சரவை சகபாடிக்கு ஜனாதிபதி சாப்பிடும் போது மாத்திரம் தான் வாயைத்திறக்க வேண்டும் எனக் கூறுகின்றார். 

பின்னர் அவர் என்னைப்பார்த்து சாப்பிடும் போது மாத்திரம் தான் வாயை திறக்கும் படி சொல்கின்றார். ஆகவே நாம் வாயைத்திறப்பதற்கு சங்கடப்படும் காலமாக இருக்கின்ற போதும் பத்திரிகை ஆசிரியர் ஒருவரின் ஆசிரியர் தலையங்கங்களை வெளியிடும் இந்நிகழ்வில் தையிரியமாகப் பேசலாம். காரணம் எனது பேச்சில் இருக்கும் ஏதாவது ஒரு விடயத்தை பயன்படுத்தி ஆசிரியர் தலையங்கத்தை தீட்டினால் எனது தலையும் தப்பிக்கொள்ளும் என கருதுகின்றேன்.

சரியான விடயத்தை சரியான நேரத்திலேயே செய்தாகவேண்டும் பிழையான நேரத்தில் செய்யும் சரியான விடயமும் பிழையாகப் போய்விடும் என எமது தலைவர் அஷ்ரப் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைவு என்பது சரியான விடயமாகும். ஆனால் கடந்த காலங்களில் பிழையான நேரமென்பதால் அவ்வாறான பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்குச் செல்லவில்லை. நாம் கிழக்கு மாகாணத்தில் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்ற முடிவை எடுப்பதற்காக கட்சி மட்டங்களில் சந்திப்புக்களை நடத்திக் கொண்டிருந்தபோது சம்பந்தன் அவர்கள் மு.கா. கிழக்கு தேர்தலில் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட வேண்டும். இல்லையேல் தனித்துப் போட்டியிட வேண்டும் அவ்வாறில்லாது விட்டால் அது தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகமாக போய்விடும் என காட்டமான கருத்தை முன்வைத்திருந்தார். எனது கட்சி மட்டத்திலும் இது குறித்துப் பலர் வாதங்களை முன்வைத்திருந்தனர். என்னைப்பொறுத்தவரையில் அன்று நாம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்திருந்தால் ஆட்சியமைத்திருக்கலாம். இருப்பினும் நாம் எடுத்த முடிவில் தூரநோக்கமொன்றிருந்தை இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.

தற்போது சர்வதேசம் பலவிடயங்களை கூறியிருக்கும் போதும் அதனை நடைமுறைப்படுத்துவதில் அரசு தாமதப்படுத்துகின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் மு.கா தனித்துப் போட்டியிட்டிருந்தால் அரசுக்கு வடமாகாணத்தை நடத்தும் துணிவு சிறிதளவிலும் வந்திருக்காது. அரசியலைப் பொறுத்தவரையில் ஆட்களை பறிப்பதென்பது அவ்வளவு கடினமான விடயமில்ல என்பதை அனைவரும் சூட்சுமமாக அறிவார்கள். மு.கா எடுக்கும் முடிவுகள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதையும் சிந்திக்க வேண்டும். பல விடங்களை துணிகரமான பேசுவதற்கு சந்தர்ப்பம் வரும்வரை காத்திருக்க வேண்டியுள்ளது. அதன் அடிப்படையிலும் பட்டறிவைக் கொண்டவன் என்பதன் அடிப்டையிலும் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் செயற்படுவன் என்பதன் அடிப்படையிலும் முடிவுளை எடுக்க வேண்டியேற்பட்டது. தமிழ் முஸ்லிம் சமூங்களை தமிழ் பேசும் சமூகம் என்பதன் அடிப்படையில் எமது வருங்கால நகர்வுகள் அதற்கான சரியான சூழலில் அமையும் காலம் வெகுதொலைவில் இல்லையென்பதை சிவசிதம்பரத்தின் நினைவுப்பேருரையில் அன்றைய தினம் தெரிவித்திருந்தேன். தற்போது எம்மைச் சூழ நடக்கும் விடங்களை பார்க்கும் போது அதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்ற என்பது தெளிவாகத் தெரின்றது.

அதேநேரம் நடக்கும் அநீதிகளை அரசுடன் இருக்கும் போது தடுப்பதற்கான அந்தஸ்தும் எமக்கு கிடைக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் பத்திரிகையாளர்களை குற்றவியல் சட்டக்கோவையின் கீழ் தண்டிப்பதற்கான சட்டத்தினை தண்டனை சட்டக் கோவையில் இருந்து மிகுந்த கடினத்திற்கு மத்தியில் அகற்றியிருந்தோம். அதன் பின்னர் 2005 ஆண்டிலிருந்து 2007வரையிலான காலப்பகுதியில் அதனை மீண்டும் நடைமுறைப்படுத்தியே தீரவேண்டும் என்ற நிலையில் ஆட்சியாளர்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்தபோது அமைச்சர்கள் யாருமே எதிர்த்து கருத்து வெளியிட முடியாதிருந்த நிலையில் அமைச்சரவையில் நான் இருந்ததன் காரணத்தினால் அதனை தடுகக்க கூடியதாகவிருந்தது. அதேபோன்று 13ஆவது திருத்தச்சட்டத்திருத்தச்சட்தின் முக்கியமான விடயங்களை மாற்றுவதற்கான அமைச்சரவையின் அனுமதியைப் பெற முனைந்த போது எனது உத்தியோக ப+ர்வ வெளிநாட்டு விஜயத்தை இடைநடுவில் நிறைவு செய்து விட்டு நேரடியாக அமைச்சரவைக்குச் சென்று அதற்கெதிராக குரல்கொடுக்க நான் எடுத்த போராட்டத்தின் ஊடாக அதனை மீட்கக் கூடியதாக இருந்தது. அடுத்து மு.கா கிழக்கு மாகாணத்தில் எதிர்க்கட்சியில் இருந்த போது நாடுநகர அபிவிருத்திச் சட்டமூலத்தை கொண்டுவந்திருந்த நாம் உயர்நீதிமன்றதிற்கு சென்று வாதாடியிருந்தன் காரணத்தால் அனைத்து மாகாணசபைகளின் அங்கீகாரம் இல்லாது நிறைவேற்றமுடியாது என்ற நிலைமைக்குக் கொண்டுவந்திருந்தோம்

தெற்கில் இருப்பவர்களுடன் முட்டி மோதிக்கொண்டு நாம் எமது நிலைப்பாடுகளை நிலை நிறுத்துவதற்கு போராடுவதைவிடவும் புரிந்துணர்வுடன் சிலவிடயங்களை சாதிப்பதற்கு ஆர்வம் காட்டவேண்டும். சமூகங்களுக்கிடையில் காணப்படும் துருவப்படுத்தலை எதிரொலியாக ஊடகங்கள் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. தெற்கில் இருப்பவர்களின் மனப்பாங்கை வெல்வற்கு ஜனநாயக ரீதியான போராட்டங்களின் மூலமாக சகல இனங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சமத்துவமானதும், சாத்தியதுமான தீர்வுகளை நோக்கி நகரும் கட்டத்திற்கு எம்மை புடம்போட்டுக் கொள்ளவேண்டும். யுத்தத்திற்கு பின்னரான சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அதனை சாத்தியப்படுத்துவது குறித்து பரந்துபட்ட அறிவை வளர்க்கக் கூடிய நிலைமைகளை ஏற்படுத்தவேண்டும். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற நிலையில் தீவிரமானவர்கள் இருதரப்பிலும் இருக்கின்ற நிலையில் நடுநிலையான தீர்வினை எடுப்பதற்கு எமது நிலைப்பாடுகளில் வெற்றி பெறுவதற்கு கடினமாக இருக்கின்ற போதும் அரசியல் ரீதியான இணக்கப்பாடுகளை முன்னெடுப்பதற்கான காலம் கனிந்து வருகின்றது என்பதில் நான் நம்பிக்கையோடு இருக்கின்றேன் என்றார்.

ஆட்சியாளர்கள் சங்கடத்திற்குள்ளாகும் விடயங்களை அடிக்கடிப் பேசுவதால் நாம் சங்கடத்திற்குள்ளாகும் நிலைமை அடிக்கடியேற்படுகின்றது. இந்த நாட்டின் சிவில் சமூகம் நல்லாட்சிக்கான விடங்களில் புத்தூக்கதோடு ஈடுபட வேண்டும் என எண்ணுகின்றார்கள். நல்லாட்சிக்கான விடங்கள் தொடர்பில் பல விடயங்கள் பேசப்படுவதுண்டு. ஏதிர்காலத்தில் நல்லாட்சிக்கான முக்கியதொரு அச்சாணியான விடயமொன்று நடைபெறவேண்டுமென்றால் தகவல் அறிவதற்கான சட்டமூமொன்ற இந்நாட்டில் வந்தாக வேண்டும். இந்தய விடயம் சிலரால் ஜீரணிக்க முடியாத விடயமாக இருக்கின்ற போதும் இதனை வலியுத்தும் அழுத்தமான சிவில் சமூக போராட்டமொன்று அவசரமாக முன்னெடுக்கப்படவேண்டும். இவ்வாறான செயற்பாடுகளை எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்னெடுக்கும் போது ஆளும் தரப்பில் இருந்தாலும் நான் நிச்சயமாக பங்கெடுப்பேன். இந்த நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு அச்சானியான இவ்விடயம் அவசரமாக செயற்படுத்த வேண்டியிருக்கின்றது என மேலும் குறிப்பிட்டார்.

வடமாகாண முதலமைச்சரின் நம்பிக்கை

இதேவேளை அமைச்சர் ஹக்கீமின் கூட்மைப்புடன் இணைவு தொடர்பிலான கருத்து தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்படுகையில், எமது இரு கட்சிகளும் சேரப்போகும் காலம் வெகுதூரத்தில் இல்லை. விரைவில் அந்நிலைமை ஏற்படுவதற்கான காலம் தென்படுகின்றது என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com