Contact us at: sooddram@gmail.com

 

கைதுகள் தொடர்பில் ஜெனீவாவில் விளக்கம்

திருமதி பாலேந்திரன் ஜெயகுமாரி மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான அருட்தந்தை பிரவீன் மற்றும் ருக்கி பெர்னாண்டோ ஆகியோர் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமை குறித்து ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகம் நேற்று விரிவான அறிக்கை ஒன்றை ஜெனீவாவில் உள்ள பல நாடுகளின் தூதரங்களுக்கும், பல்வேறு சர்வதேச அமைப்புக்களுக்கும் நேற்றைய (18) திகதியிட்டு அனுப்பியிருந்தது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- திருமதி பாலேந்திரன் ஜெயகுமாரியின் கைது மற்றும் தடுப்புக் காவல் சம்பந்தமாக ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25ஆவது அமர்வை ஒட்டி அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பான தவறான புரிந்துகொள்ளல் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக இலங்கை அரசு பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

கோபி என்று அழைக்கப்படும் செல்வநாயகம் வெளிநாட்டிலிருந்து விட்டு நாடு திரும்பி, சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் சிலர் உட்பட குறிப்பிட்ட புலிகளின் செயற்பாட்டாளர்களோடு இணைந்து புலிகள் இயக்கத்தை புத்துயிர்க்கச் செய்யும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். விடுதலைப் புலிகள் அமைப்பை மீளக் கட்டியெழுப்பவும், உள்ளூரில் வேலையற்றிருக்கும் இளைஞர்களைத் திரட்டி பயங்கரவாதச் செயல்களை முன்னெடுக்கவும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்பதும் வடக்கு, கிழக்கிலும் கொழும்பிலும் அத்தகைய ஐம்பது பேர் ஏற்கனவே இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என்பதும் புலனாய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பிணக்கின் முடிவுக்கு முன்னர் புலிகள் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் ஏனைய இராணுவ உபகரணங்களை மறைத்து வைத்திருந்தனர். அத்தகைய பொருட்களை மீட்டு இத்தகைய செயற்பாட்டாளர்களிடம் சேர்ப்பிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம். இந்த நடவடிக்கைகளை வழிநடத்தும் பிரதான நபரான கோபி என்று அழைக்கப்படும் செல்வநாயகம் தப்பி வந்துள்ளார். பல கையடக்கத் தொலைபேசிகள், தமிழீழத்துடன் தொடர்புடைய பிரசார ஆவணங்கள், மோட்டார் மற்றும் ஆர்.பி.ஜி.ரக ஆயுதங்கள், மூன்று கைக்குண்டுகள், 2.5 கிலோ கிளேமோர்க் குண்டு, ரி-56 ரகத் துப்பாக்கிக்கான தோட்டாக்கள் உட்பட பல இராணுவ உபகரணங்கள், ஆயுதங்கள் வெடிபொருட்களை தமது மேலதிக விசாரணைகளின் மூலம் பயங்காரவாதப் புலனாய்வுப் பிரிவினர் மீட்டனர்.

இந்தப் பொருட்களின் மீட்பை அடுத்து, கோபி என்ற அந்தப் பிரதான சந்தேகநபரின் இடம் பற்றிய துப்பைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் குழு அதனடிப்படையில் கிளிநொச்சியில் உள்ள பாலேந்திரன் ஜெயகுமாரியின் வீட்டுக்குச் சென்றனர். நடவடிக்கையின் போது கோபி பொலிஸாரை நோக்கிச் சுட்டு, சப் இன்ஸ்பெக்டரான ரட்ணகுமாரைக் காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றார். சப் இன்ஸ்பெக்டர் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாலேந்திரன் ஜெயகுமாரியின் வீட்டில் அவரது 13 வயது மகள் பாலேந்திரன் விபூசிகா இருந்தார். ஆயுதம் தாங்கிய கோபி அந்த வீட்டிலிருந்து தப்பிச் சென்றமையால் அந்த வீடு சோதனையிடப்பட்டது. அந்த வீட்டிலிருந்து 'எவ்-3' ரக குண்டு கண்டுபிடிக்கும் கருவி ஒன்று மீட்கப்பட்டது. கோபி தொடர்பாக மேலதிக தகவல்களை தர ஜெயகுமாரி முன்வராமையினால், விடுதலைப் புலிகளை மீள ஒழுங்கமைக்கும் கோபியின் செயற்பாடுகளுக்கு உதவி, ஒத்துழைக்கின்றார் என்ற சந்தேகத்தில் அவர் கைது செய்யப்பட்டார். தனது 13 வயது மகளை ஒப்படைப்பதற்குச் சரியான பொறுப்பாளரையோ, உறவினரையோ பாலேந்திரன் ஜெயகுமாரி தரமுடியாத நிலையில் இருந்ததால் தாயுடன் அவரும் அழைத்துச் செல்லப்பட்டு கிளிநொச்சி நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மகளை உறவினர் அல்லது பொறுப்பாளரிடம் ஒப்படைக்கவோ அல்லது சிறுவர் பாதுகாப்பு மையத்திலோ அல்லது தாயுடன் பூஸா தடுப்பு முகாமிலோ இருக்கவோ அனுமதிக்கலாம் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி விபூசிகா இப்போது சிறுவர் நன்னடத்தை, சிறுவர் நல சேவைத் தரப்பின் பராமரிப்பில் உள்ளார். மேற்படி கைது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பூஸா முகாமில் உள்ள கைதிகளை செஞ்சிலுவைச் சங்கச் சர்வதேசக் குழு சந்திக்க முடியும் என்பதும் கவனித்தக்கது.

எதிர்ப்புப் போராட்டம் ஒன்றில் பங்குபற்றிய சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது போல இந்த வழக்கை வட மாகாணசபையின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி அனந்தி சசிதரன் பிழையாக அர்த்தப்படுத்தியமை கவலைக்குரியது. எந்தச் சட்டத்திலும் விபூசிகா கைது செய்யப்படவில்லை. தாயாரின் வற்புறுத்தலின் பேரிலேயே விபூசிகாவும் அவருடன் கூட்டிச் செல்லப்பட்டு நீதிவானின் முன்னால் ஆஜர்படுத்தப்பட்டு பாதுகாப்பு உத்தரவு பெற்றப்பட்டது. இலங்கையின் சட்டத்தை நிலைநிறுத்தும் அதிகாரிகளின் இந்த நடவடிக்கை நாட்டின் சட்டத்துக்கு அமைவாக உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தாராளமாக ஜெனீவாவுக்கு வருகை தந்து இந்த அமர்வின் போது அரச சார்பற்ற தொண்டர் நிறுவனப் பிரதிநிதி போல தனது பக்கக் கதைகளை முன்வைக்கக்கூடியதாக இருக்கின்றமை இலங்கையின் ஜனநாயகத்தின் நன்மைகளை அவரால் அனுபவிக்க முடிகின்றது என்பதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு.

பயங்கரவாதம் காரணமாக மூன்று தசாப்தங்கள் கழிந்து இப்போதுதான் மாகாண சபை உறுப்பினர் சசிதரனினால் ஜனநாயகத் தொடர் செயற்பாட்டில் இப்படி பங்காளியாக முடிந்திருக்கின்றது என்பது சுட்டிக்காட்டத்தக்கது. தனது கணவனின் நடவடிக்கைகள் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருக்கமாகப் பழகிய காரணத்தால் அவர் தெரிவு செய்யும் வார்த்தைகளின் பிரயோகம் கூட புலிகளின் இலக்கையே வெளிப்படுத்துவதாக உள்ளது. உதாரணமாக, அவர் தமது பிரதேச பிள்ளைகளைப் பற்றி ஓர் அறிக்கையில் குறிப்பிடும் போது 'ஈழத்தமிழ்ப் பிள்ளைகள்' என்று கூறுகிறார். தமது முப்பது வருட இரத்தக்களரி யுத்தத்தின் மூலம் இனத்துவத் தனிநாடு ஒன்றை அமைக்க முற்பட்ட புலிகள் அதற்கு இட்ட பெயர்தான் 'ஈழம்' என்பது கவுன்ஸிலுக்கு ஏற்கனவே தெரிந்த விடயம்தான். அவர் தமது கணவர் எழிலன் அரசியல் தலைவர் என்று கூறுவது தவறானது. எழிலன் முக்கிய புலிப் பயங்கரவாதி. சிறுவர்களைப் படைக்குச் சேர்த்தமை உட்பட பல பயங்கரவாதச் செயல்களுக்குப் பொறுப்பானவர் என்று கருதப்படுபவர்.

2014 மார்ச் 11 ஆம் திகதி விஸ்வமடுவில் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை, கோபி தொடர்பாக 2014 மார்ச் 13 ஆம் திகதி தர்மபுரத்தில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவம் ஆகியவை உட்பட விடுதலைப் புலிகள் அமைப்பை மீள இயங்கச் செய்வது தொடர்பான செயற்பாட்டாளர்கள் குறித்து நடைபெறும் புலானய்வுடன் சம்பந்தப்பட்டே ருக்கி பெர்னாண்டோவுக்கும் அருட்தந்தை பிரவீனுக்கும் 2014 மார்ச் 16 ஆம் திகதி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கோபியுடன் தொடர்புடைய ஆட்களுடன் இணைந்து செயற்படுவதற்காக பெர்னாண்டோவும், அருட்தந்தை பிரவீனும் கிளிநொச்சியில் இருந்திருக்கின்றனர் என்பது புலனாய்வில் தெரியவந்துள்ளது. கோபியும்அவருடன் தொடர்புடைய ஏனையோரும் எங்குள்ளார்கள் என்பதைக் கண்டறிவதற்காகவே அவர்கள் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

எனவே, இந்தப் போக்குகள் தேசியப் பாதுகாப்புக்காக மேற்படி பயங்கரவாதக் குழுக்களின் எச்சங்கள் தொடர்பில் மிக அவதானமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றன. மூன்று தசாப்த காலப் பயங்கரவாதத்தினால் நாட்டு மக்கள் எதிர்கொண்ட கணக்கற்ற துன்ப துயரங்கள் மற்றும் சிந்திய இரத்தக்களரி ஆகியவை காரணமாக அது மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதில் அதிக கண்டிப்பை அரசு காட்டவேண்டியுள்ளது -என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com