Contact us at: sooddram@gmail.com

 

இறுதிப் பிரேரணையினை சமர்ப்பித்தது அமெரிக்கா

இலங்கை குறித்த அமெ­ரிக்கப் பிரே­ர­ணையின் இறுதி வரைபு பல்­வேறு திருத்­தங்­களின் பின்னர் ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைப் பேர­வையில் நேற்று அமெ­ரிக்­கா­வினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. நேற்­றுக்­காலை ஜெனிவா நேரப்­படி 11.15 க்கு மனித உரிமைப் பேர­வையில் இந்த இறுதி வரைபு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு முன்னர் கடந்த 3 ஆம் திகதி சமர்ப்­பிக்­கப்­பட்ட நகல் பிரே­ர­ணையில் மூன்­றா­வது தட­வை­யா­கவும் திருத்­தங்கள் செய்­யப்­பட்ட பின்­னரே இந்த இறுதி பிரே­ரணை மனித உரிமைப் பேர­வையில் நேற்று தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்கா சமர்ப்­பித்த்­துள்ள இந்தப் பிரே­ர­ணைக்கு பிரிட்டன் மொன்­டேக்­னரோ மெச­டோ­னியா மற்றும் மொரி­ஷியஷ் ஆகிய நாடுகள் அனு­ச­ரணை வழங்­கி­யுள்­ளன. அந்­த­வ­கையில் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழு­வினால் கவ­னிக்­கப்­பட்ட காலப்­ப­கு­தியில் இரு­த­ரப்­பி­ன­ராலும் இழைக்­கப்­பட்ட குற்­றங்கள் குறித்து, விரி­வான மற்­றும சுதந்­தி­ர­மான விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்டும் என்றுஇ ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் அலு­வ­ல­கத்தை கேட்டுக் கொள்ளல் என திருத்தம் செய்­யப்­பட்ட நிலையில் அமெ­ரிக்கப் பிரே­ரணை பேர­வையில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

ஐ.நா. அலு­வ­ல­கத்­திடம் கோரிக்கை

அத்­துடன் சம்­பந்­தப்­பட்ட நிபு­ணர்கள் மற்றும் சிறப்பு நடை­மு­றை­களின் உத­வி­யுடன்இ உண்­மை­களை நிறுவிஇ மீறல்கள் இடம்­பெற்ற சூழல் மற்றும் பொறுப்­புக்­கூ­றலை உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­ய­கத்தை கேட்டுக் கொள்­வ­தா­கவும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள இறுதிப் பிரே­ரணை வரைபில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

விசா­ர­ணைக்கு உள்­ள­டக்­கப்­படும் காலப்­ப­குதி

அதா­வது இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசா­ர­ணையில் விசா­ர­ணைக்கு உள்­ள­டக்­கப்­படும் காலப்­ப­கு­தியை பிரே­ர­ணையின் புதிய திருத்­தப்­பட்ட வரைபு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

அமெ­ரிக்கா மற்றும் பிரிட்டன் தலை­மை­யி­லான ஐந்து நாடுகள் ஏற்­க­னவே தாக்கல் செய்­தி­ருந்த பிரே­ரணை வரைபின் எட்­டா­வது பந்­தி­யி­லேயே திருத்­தங்கள் செய்­யப்­பட்டு இறுதி பிரே­ரணை தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

தேசிய செயற்­கி­ரமம் இல்லை

பிரே­ர­ணையின் எட்­டா­வது பந்­தியில் செய்­யப்­பட்­டுள்ள திருத்­தத்­தின்­படி இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் தற்­போது இடம்­பெற்­று­வரும் மனித உரிமை மீறல் சம்­ப­வங்கள் தொடர்பில் சாத்­தி­ய­மான பெறு­பே­று­களை தரக்­கூ­டிய நம்­ப­கத்­தன்மை வாய்ந்த தேசிய செயற்­கி­ரமம் ஒன்று மேற்­கொள்­ளப்­பட்டு வர­வில்லை. எனவே சர்­வ­தேச விசா­ரணைப் பொறி­மு­றையின் தேவைப்­பாடு சம்­மந்­த­மாக உயர்ஸ்­தா­னி­கரால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள பரிந்­து­ரை­க­ளையும் முடி­வு­ரை­க­ளையும் பேரவை கவ­னத்திற் கொள்­ள­வேண்டும் 

அத்­துடன் பின்­வரும் விட­யங்­களை முன்­னெ­டுத்துச் செல்­லு­மாறு உயர்ஸ்­தா­னிகர் அலு­வ­ல­கத்­தையும் பிரே­ரணை வேண்­டிக்­கொள்­கின்­றது 

கண்­கா­ணித்தல , மதிப்­பிடல்

அ. ) இலங்­கையில் மனித உரி­மைகள் நில­வ­ரத்தைத் தொடர்ந்து கண்­கா­ணித்துஇ சம்­பந்­தப்­பட்ட தேசிய மட்ட நட­வ­டிக்­கையின் முன்­னேற்­றத்தை மதிப்­பிடல்

ஆ) நல்­லி­ணக்க ஆணைக்­குழு கவனம் செலுத்­திய காலப் பகு­தியில் இலங்­கையில் இரு­த­ரப்­பி­ன­ராலும் இழைக்­கப்­பட்ட குற்­றங்கள் மற்றும் மோச­மான மனித உரிமை மீறல்கள், துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்­பாக, விரி­வான சுதந்­தி­ர­மான விசா­ர­ணையை மேற்­கொள்ளல்.

அத்­துடன் சம்­பந்­தப்­பட்ட நிபு­ணர்கள் மற்றும் சிறப்பு நடை­மு­றை­களின் உத­வி­யுடன், உண்­மை­களை நிறுவி, மீறல்கள் இடம்­பெற்ற சூழல் மற்றும் பொறுப்­புக்­கூ­றலை உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­ய­கத்தை கேட்டுக் கொள்ளல்.

28 ஆவது அமர்வில் அறிக்கை

இ) மனித உரி­மைகள் பேர­வையின் 27 வது அமர்­வின்­போது வாய்­மூல அறிக்­கையை சமர்ப்­பிக்­கு­மாறும் தற்­போ­தைய தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்தல் தொடர்­பான பரந்­த­ள­வி­லான எழுத்­து­மூல அறிக்­கையை 28 வது அமர்வில் சமர்ப்­பிக்­கு­மாறும் ஆணை­யா­ளரைக் கோரல். இவ்­வாறு 8 ஆவது பந்­தியில் திருத்தம் செய்­யப்­பட்­டுள்­ளது.

இத­வேளை பிரே­ர­ணையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள 10 பந்­தி­களில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள் வரு­மாறு

1. இலங்­கையில் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூ­றலை ஊக்­கு­விக்­கு­விப்­பது தொடர்­பாக ஐ.நா. மனி­த­உ­ரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்­தினால்இ 2013 செப்­ரெம்பர் 25இ 2014 பெப்­ர­வரி 24ஆம் திக­தி­களில் சமர்ப்­பிக்­கப்­பட்ட அறிக்­கைகள் வர­வேற்­கத்­தக்­கன.

சுயா­தீன விசா­ரணை

2. இலங்கை சர்­வ­தேச மனி­த­உ­ரிமை மற்றும் மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் தொடர்­பாக நம்­ப­க­மானஇசுதந்­தி­ர­மான விசா­ரணை நடத்திஇ அத்­த­கைய மீறல்­க­ளுக்குப் பொறுப்­பா­ன­வர்­களை பொறுப்­புக்­கூற வைக்­கவும்இ தொடரும் மனித உரிமை மீறல்­களை முடி­வுக்குக் கொண்டு வரவும் வேண்டும். தொடரும் மனித உரிமை மீறல்­களை முடி­வுக்குக் கொண்டு வரவும்இ ஐ.நா மனித உரிமை ஆணை­யாளர் அலு­வ­ல­கத்தின் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­தவும் இலங்கை அர­சாங்­கத்­துக்கு அழைப்பு விடுக்­கப்­ப­டு­கி­றது.

நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைகள்

3. நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் இடம்­பெற்­றுள்ள ஆக்­க­பூர்­வ­மான பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­தவும்இ எல்லா இலங்­கை­யர்­களும் நீதிஇ சமத்­துவம்இ பொறுப்­புக்­கூறல்இ நல்­லி­ணக்­கத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்குத் தேவை­யான அனைத்து சட்ட கடப்­பா­டு­க­ளையும் இலங்கை அர­சாங்கம் நிறை­வேற்ற வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றது 

விசா­ரணை

4. தனி­ந­பர்கள்இ குழுக்கள்இமனி­த­உ­ரிமை ஆர்­வ­லர்கள்இ மத சிறு­பான்மை குழுக்கள்இ ஏனைய சிவில் சமூகப் பிர­தி­நி­திகள் மற்றும் ஆல­யங்கள்இ மசூ­திகள்இ தேவா­ல­யங்கள்இ மீதான தாக்­கு­தல்கள் தொடர்­பாக விசா­ரணை நடத்திஇ குற்­ற­வா­ளி­களை பொறுப்­புக்­கூற வைக்க வேண்டும் என்றும் எதிர்­கா­லத்தில் அவ்­வா­றான நிகழ்­வுகள் இடம்­பெ­றாமல் இருப்­பதை தடுக்­க­வேண்டும் என்றும் அர­சாங்­கத்­துக்கு வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றது.

வெலி­வே­ரிய சம்­பவம்

5. வெலி­வே­ரி­யவில் ஆயுதம் தரிக்­காத போராட்­டக்­கா­ரர்கள் மீதான தாக்­குதல்இ மற்றும் 2013ஆம் ஆண்டின் இரா­ணுவ நீதி­மன்ற விசா­ரணை அறிக்கை உள்­ளிட்ட பாது­காப்புப் படை­களால் மேற்­கொள்­ளப்­பட்ட மீறல்கள் தொடர்­பான குற்­றச்­சாட்­டுகள் குறித்த விசா­ர­ணை­களின் முடி­வு­களை இலங்கை அர­சாங்கம் வெளி­யிட அழைப்பு விடுக்­கப்­ப­டு­கின்­றது.

13 ஆவது திருத்தச் சட்டம் 

6. 13ஆவது திருத்­தச்­சட்­டத்தின் அடிப்­ப­டையில்இ அனைத்து மாகாண சபை­களும் குறிப்­பாக வடக்கு மாகா­ண­ச­பையும்சிறந்த முறையில் ஆட்­சியை நடத்­து­வ­தனை இலங்கை அர­சாங்கம் உறு­தி­ப­டுத்­து­வதை பிரே­ரணை ஊக்­கு­விக்­கி­றது.

விசேட அறிக்­கை­யா­ளர்கள் 

7. உள்­நாட்டில் இடம்­பெ­யர்ந்தோர் தொடர்­பான அறிக்­கை­யா­ளரின் இலங்கை விஜ­யத்தை வர­வேற்­ப­தோடு ஏனைய இடம்­பெ­யர்ந்த மக்­களின் நிலைமை குறித்து நிலு­வை­யி­லுள்ள விவ­கா­ரங்கள் தொடர்­பாக ஆராய்ந்து நீ்ண்டகால தீர்­வு­க­ளுக்­கான பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்த இலங்கை அர­சாங்­கத்­துக்கு அழைப்பு விடுக்­கப்­ப­டு­கின்­றது.

மேலும் குடி­பெ­யர்ந்­த­வர்­களின் மனித உரிமை மற்றும் கல்வி உரிமை குறித்த விசேட அறிக்­கை­யா­ளர்­க­ளுக்­கான அழைப்பு வர­வேற்­கப்­ப­டு­கின்­றது.

அத்­துடன் ஏனைய விசேட ஆணை­யா­ளர்­க­ளுடன் இலங்கை அர­சாங்கம் ஒத்­து­ழைப்­புடன் செயற்­ப­ட­வேண்டும் என்றும் அவர்­களின் கோரிக்­கை­க­ளுக்கு பதி­ல­ளிக்­க­வேண்டும் என்றும் பிரே­ரணை ஊக்­கு­விக்­கின்­றது.

8. பிரே­ர­ணையின் எட்­டா­வது பந்­தியில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள் மேலே முழு­மை­யாக தரப்­பட்­டுள்­ளன.

ஒத்­து­ழைப்பு

9. மேலே சுட்­டிக்­காட்­டப்­பட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கானஇ ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளைஇ வழங்கி ஐ.நா. மனிதஉரிமை ஆணையாளரும்இ ஏனைய சிறப்பு ஆணைபெற்றவர்களும் ஒத்துழைக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.

10. இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தஇ ஐ.நா. மனிதஉரிமை ஆணையருடன் ஒத்துழைக்கும்படிஇலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது. இவ்வாறு பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை வாக்கெடுப்பு

இதேவேளை அமெரிக்காவின் பிரேரணை நேற்று சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து நாளை வியாழக்கிழமை இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் மிகவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. அந்தவகையில் அமெரிக்க மற்றும் இலங்கை தரப்புக்கள் உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெறும் நோக்கில் பாரிய இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்துள்ளன.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com