Contact us at: sooddram@gmail.com

 

சிகிரியா விவகாரம்

மகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் தாய் வேண்டுகோள்

சிகிரியாக் குன்றிலுள்ள கண்ணாடிச் சுவரில் தனது பெயரை உதயா எனப் பொறித்மைக்காக 2 வருட சிறைத் தண்டனை அனுபவித்துவரும் சித்தாண்டியைச் சேரந்த சின்னத்தம்பி உதயசிறியை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அவரது தாயான தவமணி சின்னத்தம்பி வயது (61, ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை முன்வைத்துள்ளார்.'தமிழ் மக்களாகிய நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தோம். இந்த நிலையில் எந்தக் குற்றமும் புரியாத எனது மகள் மட்டக்களப்பு மாணிக்கக் கற்கள் பட்டை தீட்டும் பயிற்சிக் கல்லூரியில் கடந்த 3 வருடங்களாக பயிற்சி பெற்று வருகின்றார்.

வார இறுதி நாட்கள் தவிர ஏனைய நாட்களில் காலையில் வேலைக்குச் சென்று மாலையில் வீடு வந்து சேருவார். மிகவும் அடக்க ஒடுக்கத்தோடு கண்ணை இமை காப்பது போல் எனது பிள்ளையை அன்போடு வளர்த்து வந்தேன். மாணிக்கக் கற்கள் பட்டை தீட்டும் பயிற்சிக் கல்லூரியில் உள்ள பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து சிகிரியாவின் ஓவியங்களைப் பார்ப்பதற்காக ஒரே நாளில் சென்று திரும்புவதாகவும் பணம் ரூபாய் 350 மட்டுமே செலவாகும் என என்னிடம் அனுமதி கேட்டார். நான் அனுமதி கொடுக்காதவிடத்து அவர் தொடர்ந்து அடம்பிடித்ததிற்கு இணங்க நானும் பாதுகாப்பாக சென்று வருமாறு அனுமதியளித்தேன்.

எனது மகள் கூறிய 350 ரூபாய் போல் எத்தனை மடங்கு பணம் செலவு செய்தும் வாழும் வளரும் இன்ப சுகம் மற்றும் துன்பங்களை அறியாத எனது மகள், சிறையில் வாடுவதைப் பார்த்தால் எனது உயர் பிரிந்து விடும் போல் தோன்றுகின்றது. சில ஊடகங்களில் எனது மகள் காதலர் தினத்தன்று தனது அன்புக்குரிய காதலனின் பெயரை சுவரில் பொறித்ததாக செய்திகள் வெளியாகின. இது முற்றிலும் பொய்யான தகவல்.

மலையிலிருந்து இறங்கும் போது முன்பாக வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் சென்றதனால் அவர்களின் பின்னால் நிதானமாக மெதுவாக இறங்கும் போது நேரம் சென்று கொண்டிருக்கையில் மலையில் உள்ள கண்ணாடிச் சுவரில் பெயர்கள் எழுதப்பட்டிருந்த நிலையில் தனது தலை முடியில் உள்ள ஊசியை எடுத்து தனது பெயரின் முதல் உள்ள உதயா என்ற சொல்லை மட்டும் தான் அவர் பொறித்திருந்தார்.

அவர் பெயரை பொறித்து விட்டு நகர்ந்து வரும் போது இடையில் சிகிரியா பொலிஸார் வந்து உதயா யார் எனக் கேட்போது நான்தான் எனக் கூறியதும் பொலிஸார் உடனே அவளை கைது செய்து பெயரை எழுதிய குற்றத்திற்காக 5 இலட்சம் தண்டப் பணமும் மற்றும் 5 வருடங்கள் சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதனைக் கேட்ட எனது அன்பு மகள், தலையில் அடித்துக்கொண்டு அழுதபடி மலையிலிருந்து குதித்து தன்னை மாய்ப்பதற்கு முயற்சிக்கையில் அவரை அழைத்துச் சக நண்பர்கள், அவளை அரவணைத்து பொலிஸார் கூறுவதுபோல் ஒன்றும் நடக்காது என ஆறுதல் கூறினர். பின்னர், அவளைக் கைது செய்த பொலிஸார், பின்னர் அவளை தம்புள்ளை பொலிஸாரிடம் ஒப்படைத்ததை அடுத்து அநுராதபுரம் நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

நான் 1987.04.22ஆம் திகதியன்று வாழைச்சேனை காகித ஆலையில் கடமைபுரிந்த சின்னத்தம்பி என்பவரை திருமணம் செய்தேன். எனது மகள் உதயசிறி 3 மாத குழந்தையாக இருக்கும்போதும் மற்றும் எனது மூத்த மகள் 12 வயதாக இருக்கும் போதும் எனது கணவர் காலமானார். கணவனைப் பிரிந்த சோகத்தோடு எந்த உதவிகளும் இன்றி பிள்ளைகளின் நிலையை எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு 5 பெண் பிள்ளைகளும் 1 ஆண்பிள்ளையுமாக 6 பிள்ளைகள் இருந்தனர்.

மிகுந்த சிரமத்தின் மத்தியில் தந்தையின் பராமரிப்பு இல்லாமல் தாய் அன்பை மட்டும் ஊட்டி மிகவும் கட்டப்பாட்டுடன் வளர்த்தேன். 3 பெண் பிள்ளைகள் திருமணம் முடித்துவிட்டனர். ஒரு கண் பார்வையை இழந்த நான், இவர்களை வளர்ப்பதற்காக உடம்பை சாறாய் பிழிந்து பல கஷ்டங்களை அனுபவித்தேன். நெல் குத்தியும், அவல் இடித்தும், அப்பம் சுட்டும், வீட்டில் மரக்கறி தோட்டம் போட்டு மரக்கறி விற்பனை செய்தும் சம்பாதித்த பணத்தைக் கொண்டு மிகவும் எழிமையாக எனது குடும்பத்தை வளர்த்தேன். அவர்களும் எனது சிரமத்தைப் பார்த்துக்கொண்டு எனக்கு எந்தவித் தொந்தரவும் கொடுக்காமல் வாழ்ந்து வந்தார்கள்.

இந்த நிலையில் தான் இந்த இடி என் தலையில் வந்து விழுந்தது. பிள்ளைகள் சமைக்கும் உணவைக் கூட நிம்மதியாக உண்ண முடியாமல் தினமும் ஏங்குகின்றேன். ஏன் இறைவன் என்னைச் சோதிக்கிறான் என நான் எனக்குள் நினைத்து அழும்போது எனது பிள்ளைகள் படும் துயரத்தை நினைந்து மனம் நொந்துவிடுகின்றேன். எனது இந்த பரிதாப நிலையை ஊடகங்கள் வாயிலாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி, அறியாமல் செய்த எனது மகளின் பிழையை மன்னித்து விடுதலை செய்யுமாறு உருக்கமான வேண்டுகோளை விடுக்கின்றேன்' என்று கூறினார் அந்த தாய்.
- See more at: http://www.tamilmirror.lk/141527#sthash.3yqhrkNF.dpuf

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com