Contact us at: sooddram@gmail.com

 

13க்கும் அப்பால் தீர்வினை காண்பதற்கு துணை நிற்போம்

தமிழர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரதும் அபிலாi'களை நிறைவேற்ற வழிவகுக்கும்

* மீனவர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு

* திருமலையை எரிபொருள் கேந்திரமாக மாற்ற இந்தியா உதவும்


13வது திருத்தச் சட்டத்தை விரைவில் முழுமையாக அமுல்படுத்துவது அல்லது அதற்கும் அப்பால் செல்வதானது தமிழர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரின் அபிலாஷைகள் நிறைவேற்றும் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் என இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். இரு நாட்டுக்கும் இடையிலான மீனவப் பிரச்சினை, மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் மனிதாபிமான விடயங்களை உள்ளடக்கியது என்பதால் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண சிறிது காலம் எடுக்கும். இரு நாடுகளும் இணைந்து நீண்டகாலத் தீர்வொன்றைக் காண்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேநேரம், பிராந்தியத்தின் பெற்றோலிய கேந்திரநிலையமாக திருகோணமலையை மாற்றுவதற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி செயலகத்தில் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இருநாடுகளுக்குமிடையில் நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இதன் பின்னர் உரையாற்றும்போதே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழர்கள் உள்ளடங்கலான சகல இனங்களினதும் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும், சமத்துவத்தைப் பேணுவதற்கும் நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் துணையாக நிற்போம்.

13வது திருத்தச்சட்டமூலத்தை விரைவில் முழுமையாக அமுல்படுத்துவது அல்லது அதற்கு அப்பால் செல்வதானது இந்த முயற்சிகளுக்கு மேலும் பலம்சேர்க்கும் என இந்தியா நம்புகிறது.

இலங்கைக்கு வருகைதந்திருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். 1987ஆம் ஆண்டுக்குப்பின்னர் இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வந்திருப்பது வரலாற்று சிறப்புமிக்கதாகும்.

கடந்த மாதம் இலங்கை ஜனாதிபதி முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்திருந்தார். அவருடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இரு நாட்டுக்கும் இடையிலான எதிர்கால உறவுகள் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையை இது தோற்றுவித்திருந்தது. அவரை மீண்டும் இங்கு சந்திப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

அயல் நாட்டுத் தலைவர்கள் இவ்வாறு தான் அடிக்கடி சந்தித்துக் கொள்ளவேண்டும். இதன் மூலமே இரு நாட்டுக்கும் இடையே உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன் உறவுகளை வலுப்படுத்த முடியும்.

பொருளாதாரமே இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகளுக்குத் தூணாக அமைந்துள்ளது. இந்த நிலையில் பொருளாதார ஒத்துழைப்புக்களை எமக்குள் பகிர்ந்துகொள்ளவுள்ளோம். இரு நாட்டுக்கும் இடையிலான வர்த்தகம் கடந்த தசாப்தத்தில் அதிகரித்துள்ளது. இந்தியாவுடனான வர்த்தகம் தொடர்பில் இலங்கை கூடுதல் கவனம் செலுத்துவது குறித்து நான் அறிவேன். இதனை நாம் கவனத்தில் எடுப்போம் என டில்லியில் கூறியிருந்தேன்.

இருநாட்டு சுங்க அதிகாரிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் இதற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் அமையும், இரு நாட்டு வர்த்தகத்தையும் இது இலகுபடுத்தும்.

நாம் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை மாத்திரம் எதிர்பார்க்கவில்லை. புதிய வாய்ப்புக்களை எதிர்பார்த்துள்ளோம். இன்று லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்துக்கும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டுள்ளது. இதற்கமைய திருகோணமலை சீனக்குடாவில் இணைந்த பெற்றோலிய தாங்கிப் பண்ணையொன்று அமைக்கப்பட வுள்ளது. இது தொடர்பாக இணைந்த செயலணியொன்று விரைவில் நடவடிக்கை எடுக்கும்.பெற்றோலிய கேந்திர நிலையமாக திருகோணமலையை மாற்றுவதற்கு இந்தியா தயாராக உள்ளது.

அதேநேரம் சம்பூர் அனல்மின்நிலையத்தை ஆரம்பிப்பதற்கு ஏற்கனவே நாம் விருப்பம் தெரிவித்திருந்தோம். இது இலங்கையின் சக்தி தேவையை நிறைவேற்றும் முக்கியமான திட்டமாக அமையும்.

சமுத்திரப் பொருளாதாரம் முக்கியதொரு விடயமாக மாறியுள்ள நிலையில் இரு நாடுகளும் இணைந்து சமுத்திர பொருளாதாரம் தொடர்பான இணைந்த செயலணியொன்றை உருவாக்க எதிர்பார்த்துள்ளோம்.

மக்களே எமது உறவுகளுக்கான இதயங்களாக உள்ளனர். அவர்களுக்கிடை யிலான தொடர்புகளை அதிகரிக்கும் துறைகளான உல்லாசப் பயணத்துறை போன்றவற்றையும் அபிவிருத்திசெய்ய வேண்டும். எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் திகதி தமிழ், சிங்கள புத்தாண்டு முதல் வருகை விசா வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். எயார் இந்தியா கூடிய விரைவில் புதுடில்லிக்கும் கொழும்புக்கும் இடையில் நேரடி விமான சேவையொன்றை ஆரம்பிக்கவுள்ளது.

இராமாயணத்துடன் தொடர்புடைய இலங்கையின் புராதன இடங்கள் மற்றும் இந்தியாவிலுள்ள பெளத்த புராதன இடங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இரு நாட்டுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவுள்ளோம். இவ்வருட இறுதியில் இந்திய விழாவொன்றை இலங்கையில் நடத்தவுள்ளோம். இதன்போது பெளத்த கலாசாரம் தொடர்பான கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்படும்.

இளைஞர் விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் இரு நாட்டுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் ரயில்வேத்துறைக்கு 318 மில்லியன் அமெரிக்க டொலர் வரை கடனுதவி வழங்கவுள்ளோம். இது புதிய ரயில் பாதைகள் மற்றும் பழைய ரயில் பாதைகளின் புனரமைப்புக்கு உதவியாகவிருக்கும். மாத்தறை றுஹ¥ணு பல்கலைக்கழகத்தில் ரவீந்திரநாத் தாகூர் கேட்போர்கூடமொன்றை அமைத்துக் கொடுக்க வுள்ளோம். இந்திய உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களை நான் பார்வையிடவுள்ளேன்.

இலங்கை மத்திய வங்கியும், இந்திய ரிசேவ் வங்கியும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நாணய மாற்றுத் தொடர்பில் ஒப்பந்தமொன்றுக்கு வந்துள்ளன. இது இலங்கையின் நாணயப் பெறுமதியை உறுதியாக வைத்திருக்க உதவும்.

இரு நாட்டுக்கும் இடையிலான மீனவர் பிரச்சினை தொடர்பில் நாம் கலந்துரையாடியுள்ளோம். இது மீனவர்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் மனிதநேயத்துடன் தொடர்புடய சிக்கலான பிரச்சினை. இப்பிரச்சினையில் இந்த இரண்டு பக்கங்களையும் பார்க்க வேண்டும். அதேநேரம் இப்பிரச்சினைக்கு நீண்டகால தீர்வொன்றை நாம் காணவேண்டும்.

இலங்கை மற்றும் இந்திய மீனவர் சங்கங்கள் கூடிய விரைவில் சந்திப்பொன்றை ஏற்படுத்தி இந்த விடயத்தில் தீர்வொன்றுக்கு வரவேண்டும். அங்கு எட்டப்படும் தீர்மானத்தை இருநாட்டு அரசாங்கங்களுக்கும் முன்வைக்க முடியும்.

இலங்கையின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி சிறிசேனவின் முயற்சிகளுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை நோக்கிய இலங்கையின் புதிய பயணத்துக்கு எமது ஒத்துழைப்பையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இன்றைய சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக அமைந்தது என்றும் அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com