Contact us at: sooddram@gmail.com

 

தமிழனின் சாதிவெறி அடங்காதா?

யாழ். ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சு கலந்து, 26 மாணவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து பாடசாலை முன்றலில் வீதி மறிப்பு போராட்டம், வியாழக்கிழமை (19) முன்னெடுக்கப்பட்டது.
பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். ‘மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? சுன்னாகம் பொலிஸாரே உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யுங்கள்’ என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்ட  மரம் ஏறி சீவல் தொழிலாளல் மக்கள் வாழும் இந்த பகுதியில் இயங்கும் இந்த பாடசாலை இதுவரை காலமும் கவனிப்பாரற்று கிடந்தது. இந்த பிரதேச சனசமூக நிலையத்தின் தலைவராகவும் பனை அபிவிருத்தி சங்க தலைவராகவும் அண்மைக்காலங்கள் வரை செயல்பட்ட பசுபதி சீவரத்தினம் ஆவார். கடந்த காலங்களில் வெறும் ஐந்தாம் தரம் வரையுமே கல்வி கற்க முடிந்த இந்தபிரதேச ஒடுக்கப்பட்ட சமுக மாணவர்களுக்கு அண்மையில் இப்பாடசால தரமுயர்த்தப்பட்டதனால் தரம் 11 வரை படிக்கும் வாய்ப்பை பெற்றனர்.

இந்நிலையில் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் வளர்ச்சியை பொறுக்க முடியாத ஆதிக்க சாதி விசமிகளே மாணவர்களின் கல்வியை தடுக்க இந்தவிதமான விஷம் கலக்கும் கொடிய செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என தெரிய வருகின்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் விழிப்படைய வேண்டும். ஏழாலை மிகவும் சாதி வெறிபிடித்த கிராமங்களில் ஒன்று. புலிகள் அழிக்கப்பட்ட பின் இந்த மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டு வந்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.

மருத்துவர்கள்,பொறியியலாளர்கள் என்று தகுதி பெற்று வருகின்றனர். சாதிவெறி பிடித்த சமூகங்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி முன்னேற்றம் கண்டு அச்சமடைகின்றர்.
தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகள் சீவல் தொழிலிலிலும், வேளாளர்களுக்கு கூலிகளாக அடிமைத் தொழில் செய்வதிலும் நாட்டமின்றிப் போய்விட்டனர். கல்வியில் அக்கறை செலுத்துகின்றனர். இனி வரும் காலத்தில் இந்த சாதியை அடையாளப்படுத்தும் தொழில்களை விட்டு தாழ்ததப்பட்ட மக்கள் கல்வியில் முன்னேற வேண்டும். எல்லோரும் எங்கும் கல்வி கற்கலாம் என்ற நிலைமை இப்போது இருக்கின்றது. தமிழ்த் தேசியம் பேசும் அரசியல்வாதிகளை நம்பாது தங்கள் சொந்த நலன்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அக்கறை கொள்ள வேண்டும்.

செய்தி:

யாழ். ஏழாலை முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சு கலப்பு

நீர் நஞ்சானதால் யாழ்ப்பா ணத்தில் 27 பாடசாலை மாண வர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தி யாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களே நஞ்சு கலந்த நீரை அருந்தியதன் விளைவாக வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். பாடசாலை மாணவர்களின் குடிநீருக்காக பயன்படுத்தப் படும் நீர்த் தாங்கியிலேயே இந்த நஞ்சு கலந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காலையில் பாடசாலையில் பிரார்த்தனை இடம் பெற்று நிறை வடைந்ததைத் தொடர்ந்து வகுப்புக்கு செல்லும் வேளையில் சிறிய மாணவர்கள் சிலர் நீர் தாங்கி வைக் கப்பட்டு இருந்த இடத்திற்கு சென்ற நீர் அருந்தியுள்ளார்கள்.

இந்த நேரத்தில் நீர் அருந்த சென்ற பாட சாலையின் சிரேஷ்ட மாணவத் தலைவர் நீரைக் குடிக்க முற்பட்ட வேளையில் நீரில் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து உடனடி யாக ஏனைய மாணவர்களை நீரைக் குடிக்கவிடாது தடுத்து அதிபரின் கவனத் திற்கு கொண்டு சென்றுள்ளார். அதிபர் உடனடியாக வந்து சிரேஷ்ட மாண வர்களின் உதவியுடன் நீர் தாங் கியின் மூடியை திறந்து பார்த்த வேளை யில் நீரில் இருந்து துர்நாற்றம் வீசியதுடன் நீரும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப் பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நீர் தாங்கியை முழு மையாக அவதானித்த வேளையில் நஞ்சு போத்தல் நீர்த் தாங்கியின் அடியில் கிடப்பதை கண்டு பிடித்துள்ளார்கள். உடனடியாக இதனை கேள்விப்பட்ட பெற்றோர்கள் நலன் விரும்பிகள் பழைய மாணவர்கள் அயலவர்கள் எனப் பலரும் பாடசாலையில் கூடியதுடன் நீரைப் பருகிய மாணவர்கள் வாகனங்களில் வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப் பட்டார்கள்.

தெல்லிப்பளை ஆதார வைத் தியசாலையில் மாணவர் மூவர் ஒரு பொதுமகன் என இருவரும் யாழ்ப் பாணம் போதனா வைத்திய சாலையில் 24 பேருமாக 28 பேர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடைய நிலைமை தற்போது சீரானதாக காணப்படுவதாக வைத்தியசலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுன்னாகம் பொலிசாருக்கு அதிபர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com