Contact us at: sooddram@gmail.com

 

இலங்கையருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்குவதில் புதிய நடைமுறை

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் இரட்டைப் பிரஜா உரிமையை பெற்றுக் கொள்வதற்கான புதிய நிர்வாக முறையொன்றை இலங்கை அரசாங்கம் நேற்று அமுலாக்கியுள்ளது. இதனடிப்படையில் வெளிநாடுகளில் வாழும் சகல இலங்கையர்களும் இரட்டைப் பிரஜா உரிமைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமையை பெறுவதுடன் இரட்டைப் பிரஜாவுரிமைக்காக விண்ணப்பிக்கவும் முடியும். அத்துடன் இலங்கையில் தங்கள் சிவில் உரிமையை முழுமையாக பெற்றுக் கொள்ளும் வகையில் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் ஒழுங்கு, கிறிஸ்தவ அலுவல்கள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

இரட்டைப் பிரஜா உரிமையை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பதாரி 250,000 ரூபாவை கட்டணமாக செலுத்த வேண்டும். அவ்வாறே, துணைவி அல்லது கணவன் ஆகியோர் 50,000 ரூபாவையும் 22 வயதுக்கு குறைவான, மணம் முடிக்காத ஒரு பிள்ளைக்காக 50,000 ரூபாவையும் செலுத்த வேண்டும்.

இதேவேளை, ஜப்பான், மத்தியகிழக்கு நாடுகளில் வாழும் இலங்கையர்கள் பல்வேறு காரணங்களுக்காக அந்நாட்டு குடியுரிமையை பெற்றுக் கொண்டுள்ள போதிலும் இலங்கைக்கான குடியுரிமையை இழந்தே அந்நாட்டு குடியுரிமையை பெற்றுக் கொண்டுள்ளனர். மீண்டும் இவர்கள் இலங்கைக்கான குடியுரிமை பெற வேண்டுமென்றால் அந்த நாட்டின் குடியுரிமையை இழக்க வேண்டும். இவர்கள் இரட்டைப் பிரஜாவுரிமைக்காக விண்ணப்பிக்க முடியாத நிலை காணப்படுகிறது.

எனினும், ஐக்கிய இராச்சியம், கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, இத்தாலி, சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இரட்டைப் பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் காணப்படுகின்றன. இந்நாடுகளில் வாழும் இலங்கையர்கள் இரட்டைப் பிரஜாவுரிமையைப் பெற்றுக் கொள்ள முடியும். அந்த நாடுகளில் மீண்டும் இலங்கை குடியுரிமையைப் பெற்றுக் கொள்ளும் போது அந்நாட்டு குடியுரிமை பறிக்கப்பட மாட்டாது.

இதனடிப்படையில் மேற்படி 9 நாடுகளில் வாழும் இலங்கையர்கள் அந்நாடுகளில் இருந்தவாறே இரட்டைப் பிரஜாவுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும். அவ்வாறில்லையானால் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியிலும் குடிவரவு, குடிய கல்வு திணைக்களத்திற்கு வருகை தந்து விண்ணப்பிக்கலாம். அல்லது www.immigration.gov.lk என்ற இணை யத்தள முகவரிக்கு சென்று விண் ணப்பங்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்து அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதுவராலய இரண்டாம்மட்ட உத்தியோகத்தரின் உறுதிப்படுத்தலுடன் இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக் கொள்வது தொடர்பான விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையில் நேற்று நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

2011ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்படுவது திடீரென நிறுத்தப்பட்டது. ஆனால், கடந்த அரசாங்கத்தினால் சட்டவிரோதமான முறையில் யாருக்கும் தெரியாமல் வெளிநாடுகளில் உள்ள சிலருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப் பட்டுள்ளது. சுமார் 350 – 400 இற்கும் மேற்பட்டோர் இரட்டைப் பிரஜாவு ரிமைக்காக விண்ணப்பித்து அதற்கான கட்டணத்தையும் செலுத்தியிருந்தனர். ஆனால், அவர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படவில்லை.

எனினும் சட்டவிரோதமான முறையில் வழங்கப்பட்ட இரட்டைப் பிரஜா உரிமை தொடர்பாக நாம் ஆராய்ந்து பார்த்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

மேலும் கடந்த அரசாங்கத்தில் கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்திருந்தவர்களுக்கு உடனடியாக அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து முதன்முதலில் இரட்டைப் பிரஜாவுரிமைக்கான சான்றிதழ் வழங்கப்படும்.

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் சிலர் இரட்டைப் பிரஜாவுரிமை இன்மையால் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களின் சேவை தொடர்ந்து நாட்டுக்கு தேவை என்பதால் இந்த முறையை இலங்கையில் அறிமுகப்படுத்த உள்ளோம். அரசியல் தராதரம் பாராது, தகுதியா னவர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்படும்.

இதேவேளை, இரட்டைப் பிரஜாவு ரிமையைப் பெற்றுக் கொள்வதற்காக நபர் ஒருவர் 55 வயதை பூர்த்தியடைந்திருந்தா லும் இதற்காக விண்ணப்பிக்க முடி யும். அவ்வாறே, தொழில் அடிப்படை யிலும் இரட்டைப் பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்க முடியும்.

மேலும், இலங்கையில் 25இலட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்கு உரிமையுடை யவராயிருத்தல் அல்லது மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கியொன்றில் 25 இலட்சம் ரூபாவை மூன்று வருட நிலையான வைப்பில் சேமித்திருத்தல், வெளிநாட்டு வங்கிக் கணக்கில் 25ஆயிரம் அமெரிக்க டொலரை மூன்று வருட நிலையான வைப்பில் வைத்திருத்தல் போன்ற ஏதாவதொன்றை விண்ணப்பதாரி கொண்டிருந்தால் இரட்டைப் பிரஜாவுரி மைக்காக விண்ணப்பிக்க முடியும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com