Contact us at: sooddram@gmail.com

 

பின்லேடனின் மறைவிடத்தை காட்டியது தொலைபேசி அழைப்பு

பின் லாடன் மீதான தாக்குதல் எவ்வாறு நடைபெற்றது...?

இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதில் இருந்தே 10 ஆண்டுகளாக பின்லேடனை அமெரிக்க உளவுத் துறை (சி ஐ ஏ) அதிகாரிகள் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இறுதியாக கடந்த ஆண்டு கிடைத்த ஒரு தொலைபேசி அழைப்பே பின்லேடனை அவர்களுக்கு அடையாளம் காட்டியுள்ளது. அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் 2001ம் ஆண்டு தகர்க்கப்பட்ட உடனேயே அல்கொய்தா தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியை அமெரிக்க இராணுவம் தொடங்கிவிட்டது. அதே நேரத்தில் பின்லேடனை பிடிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க உளவுத் துறையினரும் (சி ஐ ஏ) ரகசியமாக ஈடுபட்டு வந்தனர். இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பாக சி. ஐ. ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரித்தபோது பின்லேடனுக்கு நெருங்கிய உதவியாளரும் தகவல் கொண்டு சேர்ப்பவருமானஅபு அகமது அல் குவைதிஎன்பவரைப் பற்றி தகவல் கிடைத்தது. ஆனால், அல் குவைதியின் இருப்பிடத்தை அறிய முடியவில்லை.

இந்த நிலையில் அல்கொய்தா இயக்கத்தின் 3 வது தளபதியான காலித் சேக் முகமது என்ற தீவிரவாதியை 2003ம் ஆண்டு சி. ஐ. ஏ. கைது செய்தது. காலித்திடம் விசாரித்தபோது, ‘அல் குவைதியை தெரியும், ஆனால் அல்கொய்தா இயக்கத்துடன் குவைதிக்கு தொடர்பு கிடையாது என கூறிவிட்டார்.

பின்னர் ஈராக்கில் அசன் குல் என்ற அல்கொய்தா தளபதியை 2004ம் ஆண்டு சி. ஐ. ஏ. பிடித்தது. அவரிடம் விவசாரித்த போதுஅல்கொய்தா இயக்கத்தின் முக்கியமான ஒருவருக்கு மெசஞ்சராக அல் குவைதி பணிபுரிகிறார். பராஜ் அல்லிபி என்ற தளபதியிடம் பணி புரியலாம்என தெரிவித்தார். ஆனால் 2005 ஆம் ஆண்டு அல்-லிபி பிடிபட்டார். அவரிடம் விசாரித்தபோதுதான் தளபதி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட தகவலை ஒரு மெசஞ்சர் தெரிவித்தார். அவர் பெயர் அல்-குவைதி என தெரியாதுஎன்றார். தற்போது குவாண்டனாமோ சிறையில் அல்-லிபி அடைக்கப்பட்டுள்ளார்.

அதன் பிறகு சி. ஐ. ஏ. சுறுசுறுப்படைந்தது. முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறி அல்- குவைதியை பாதுகாக்க முக்கிய தளபதிகள் முயற்சிப்பதால் பின் லேடனுக்கு நெருக்கமாக இருக்கலாம் என சி. ஐ. ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அல்-குவைதியை பிடித்தால் பின் லேடனை நெருங்கலாம் என கணித்தனர்.

அதன்படியே அல்-குவைதி பற்றி விசாரணையை முடுக்கினர். அப்போது அவருடைய பெயர் சேக் அபு அகமது என்பதும் குவைத்தில் பிறந்த பாகிஸ்தானி என்பதும் தெரிய வந்தது.

அல்கொய்தா தளபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பான இடங்களை கண்டறிந்து கொடுப்பது. தகவல்களை கொண்டு சேர்ப்பது போன்ற பணிகளை செய்து வந்தார். அதே நேரத்தில் குவாண்டனாமோ ஆவணங்களின் படி ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படை தாக்குதலில் காயமடைந்து உயிரிழந்ததாக தெரிய வந்தது.

இதனால் சி. ஐ. ஏ. அதிகாரிகள் கையை பிசைந்து நின்ற நிலையில் தான் கடந்த ஆண்டு மத்தியில் ஒரு தொலைபேசி உரையாடல் அவர்களுக்கு கிடைத்தது. அப்போது தான் அல்-குவைதி உயிருடன் இருப்பதும் மறைந்து வாழும் பின் லேடனுடன் தொலைபேசியில் பேசியதும் தெரிய வந்தது. உடனடியாக அல்-குவைதியை சி. ஐ. ஏ. கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

ஒசாமா பின்லேடன் மீதான தாக்குதல்

அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் மீது நடத்திய தாக்குதலுக்கு ஒப்பரேஷன் ஜெரோனிமோ என அமெரிக்க அதிகாரிகள் பெயரிட்டிருந்தது தெரிந்துள்ளது. தாக்குதலின் முழு விவரமும் தற்போது தெரியவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க பத்திரிகைகளில் இதுகுறித்து வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ள தாவத :- அல் கொய்தா தலைவர் ஒசாமா பதுங்கியிருந்த இடத்தில் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தயாரானதும், அதற்கு ஒப்பரேஷன் ஜெரோனிமோ என பெயரிடப்பட்டது. ஜெரோனிமோ என்பது ஒசாமாவை குறிக்கும் சங்கேத வார்த்தை. தாக்குதல் நடத்துவதற்காக அமெரிக்காவால் அனுப்பப்பட்டவர்கள், அமெரிக்க கடற்படையின்நேவி சீல்என்ற பிரிவைச் சேர்ந்த சிறப்புப் படையினர். இந்த ஒப்பரேஷனில் 79 வீரர்கள் பங்கேற்றனர். இவர்கள் நான்கு ஹெலிகொப்டர்களில் சென்று தாக்குதல் நடத்தினர். ஆப்கானில் உள்ள ஜலலாபாத் என்ற இடத்தில் இருந்து ஹெலிகொப்டர்கள் மூலமாக தாக்குதல் நடத்த அபோதாபாத் சென்றனர். பாகிஸ்தான் செல்வது, தாக்குதலை நடத்தி முடித்து விட்டு வெற்றிகரமாக பாகிஸ்தானில் இருந்து வெளியேறுவது ஆகியவை தான்நேவி சீல்படையினரின் ஒரே குறிக்கோள். தாங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது பாகிஸ்தான் அரசுக்கு தெரியக்கூடாது என்பதில், அவர்கள் தெளிவாக இருந்தனர். அதுபோலவே தாக்குதல் நடந்து முடியும் வரை பாகிஸ்தானுக்கு இதுபற்றிய எந்த தகவலும் தெரியவில்லை.

தாக்குதல் நடந்த அன்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரிகளின்அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் பணிகளும் ரத்துச் செய்யப்பட்டன. வெள்ளை மாளிகையில் உள்ள ரகசிய ஆலோசனை அறையில் ஜனாதிபதி ஒபாமா சக அதிகாரிகளுடன் நிலைமையை கண்காணித்துக் கொண்டிருந்தார். நேவி சீல்படையினரின் ஒவ்வொரு நகர்வையும் அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி. ஐ. ஏ. இயக்குனர் லியோன் புனெட்டா வீடியோ திரையில் தோன்றி ஜனாதிபதிக்கு விளக்கிக்கொண்டிருந்தார்.

தாக்குதல் நடந்த போது பாகிஸ்தானில் நள்ளிரவு 1.00 மணி. நான்கு ஹெலிகொப்டர்களில் அமெரிக்க கமாண்டோ படையினர் அபோதாபாத்தில் உள்ள ஒசாமாவின் உயர்ந்த சுற்றுச் சுவர்கள் கொண்ட வீட்டு வளாகத்துக்குள் தரை இறங்கினர். ஹெலிகொப்டர் இறங்குவது யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். இதனால் ஹெலிகொப்டரில் இரைச்சல் அளவு குறைக்கப்பட்டது.

ஹெலிகொப்டரில் இருந்து இறங்கிய வீரர்கள் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். அப்போது உள்ளே பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், கமாண்டோ படையினரை நோக்கி சரமாரியாக சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. பயங்கரவாதிகளின் தாக்குதலை முறியடித்து கமாண்டோ படையினர் உள்ளே நுழைந்தனர். ஒரு பயங்கரவாதி, அங்கிருந்த பெண் ஒருவரை தனக்கு பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்திக் கொண்டான். அமெரிக்க படையினர் சுட்டதில் அடையாளம் தெரியாத அந்த பெண்ணும் பயங்கரவாதியும் பலியாகினர். அந்த வீட்டில் இருந்த மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். அந்த வீட்டில் மீதம் இருப்பது ஒரே ஒரு நபர் தான் என்றும் அந்த நபர் ஒசாமா தான் என்பதையும் கமாண்டோ படையினர் உறுதி செய்து கொண்டனர்.

அந்த வீட்டின் மூன்றாவது மாடியில் பதுங்கியிருந்த ஒசாமாவை, கமாண்டோ படையினர் கண்டுபிடித்தனர். சல்வார் கமீஸ் உடையை உடுத்தியிருந்த ஒசாமா, கமாண்டோ படையினரை நோக்கி சுட்டதை அடுத்து அவரை நோக்கி கமாண்டோ வீரர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒசாமாவின் இடது கண்ணுக்கு மேல் பகுதியில் குண்டு பாய்ந்து அவர் கீழே சாய்ந்தார்.

40 நிமிட ஒப்பரேஷன் ஜெரோனிமோ முடிவுக்கு வந்தது. தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒசாமாவின் மகன் ஹம்சா மற்றும் அந்த வீட்டில் வேலை பார்த்தவர்களும் அடக்கம் செய்வதென அமெரிக்க படையினர் உறுதி செய்து கொண்டனர்.

கமாண்டோ படை வீரர் ஒருவர் ஒசாமாவின் சடலத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

தாக்குதலை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்பிய கமாண்டோ படையினருக்கு நெருக்கடி காத்திருந்தது. அவர்கள் வந்த ஹெலிகொப்டரில் ஒன்று இயங்கவில்லை. இந்த ஹெலிக்கொப்டர் தவறானவர்களின் கையில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக அங்கிருந்து புறப்படுவதற்கு முன் அந்த ஹெலிகொப்டரை குண்டு வீசி தகர்த்தனர். ஒசாமா வீட்டிலிருந்த ரகசிய ஆவணங்கள், பேரும் சண்டையில் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு கணனிகள் ஆகியவற்றையும் கமாண்டோ படையினர் எடுத்துச் சென்றனர். ஒபரேஷன் வெற்றிகரமாக முடிந்ததை சி. ஐ. ஏ. இயக்குனர் பனெட்டா ஜனாதிபதி ஒபாமாவுக்கு தெரிவித்தார். இந்த தகவல் உறுதி செய்யப்பட்டதும் அதை அதிகாரப்பூர்வமாக ஜனாதிபதி ஒபாமா அறிவித்தார். இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com