Contact us at: sooddram@gmail.com

 

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம், ஜெயலலிதா அமோக வெற்றி

தமிழ்நாடு மாநில தேர்தலில் ஜெயலலிதாவின் கூட்டணி மாபெரும் வெற்றியீட்டியுள்ளது. இது பணப்பலத்திற்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் அளித்த தீர்ப்பு - இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்கிறார் ஜெயலலிதா. தமிழ்நாடு மாநில சட்டசபைத் தேர்தலில் மகத்தான வெற்றியீட்டி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் அ. தி. மு. கட்சி கூட்டணியின் தலைவி செல்வி ஜெயலலிதா மூன்றாவது தடவையாக முதலமைச்சர் பதவியை மக்களின் பேராதரவுடன் ஏற்கவிருக்கிறார்.

தனது ஆதரவாளர்கள் மத்தியில் புதிய முதலமைச்சராக தெரிவு செய்யபட்டிருக்கும் செல்வி ஜெயலலிதா கருத்து தெரிவிக்கையில், தன்னையும் தனது கூட்டணியையும் வெற்றி பெற வைத்தமைக்கு தமிழ் நாட்டு மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். இந்தியாவின் தேர்தல் ஆணையாளர் இந்தத் தேர்தலை மிகவும் நல்ல முறையில் நடத்தியிருக்கிறார் என்றும் நன்றி தெரிவித்தார்.

சீர்குலைந்து போயு ள்ள தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவேன் என்றும், தமிழ் நாட்டின் ஆளுநர் தன்னை அழைத்து அரசாங்கத்தை அமைக்குமாறு அழைப்பு விடுத்த பின்னர் தாம் தனது கூட்டணி தலை வர்களுடன் கூடி புதிய அமைச்சர வையை அமைப்பது பற்றி தீர்மானம் எடுப்பதாகவும், சட் டத்தையும் ஒழுங்கையும் தமிழ்நாட்டில் நிலைநாட்டுவேன் என்று உறுதியளித்த ஜெயலலிதா இந்தத் தேர்தல் பணப்பலத்திற்கு ஏற்பட்ட படுதோல்வி என்று கூறினார்.

தமிழ்நாடு மாநில சட்டசபையிலுள்ள 234 தொகுதிகளில், ஜெயலலிதாவின் கூட்டணி கடைசியாக கிடைத்த தகவல்களின் படி, 203 ஆசனங்களை கைப்பற்றி வெற்றிவாகை சூடியிருப்பதாக தமிழகத்திலிருந்து கிடைத்துவரும் செய்திகள் ஊர்ஜிதம் செய்கின்றன.

இவரது பதவியேற்பு வைபவம் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர் னாளா தலைமையில் நாளை 15ம் திகதி யன்று இடம்பெறவுள்ளது. ஏப்ரல் மாதம் 13ம் திகதி நடந்த தேர்தலின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.

ஸ்பெக்ரம் ஊழலில் தி. மு. க.வின் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக பி. ராஜா இருந்தபோது, பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டு வலுவடைந்ததை அடுத்து, அமைச்சர் ராஜா பதவியை இராஜி நாமா செய்தார். பின்னர் இந்தியாவின் மத்திய புலனாய்வு பிரிவினர் அவரை விசாரணைக்கு உட்படுத்தியதையடுத்து விளக்கமறியலில் வைத்துள்ளனர். இந்த மோசடியில் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பத்தவர்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக தேர்தல் காலத்தில் வதந்திகள் பரவ ஆரம்பித்தன.

பி. ராஜாவுடன் நெருங்கிய நட்புறவை வைத்திருந்த கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கும் இந்த ஊழலில் தொடர்பு இருப்பதாக கூறி மத்திய புலனாய்வு பொலிஸார் அவரையும் விசாரணைக்கு உட்படுத்தி நீதிமன்றத்தில் ஆஜராக்குவதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருந்த வேலையிலேயே தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் முடிவு வெளியாகியது. இந்த முடிவுகள் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்னர் கனிமொழி நிரு பர்களிடம் கருத்து தெரிவிக்கையில், எனது அரசியல் வாழ்க்கை இத்துடன் முடிவு பெறாது என்று கூறியிருந்த போதிலும், தமிழ்நாட்டின் வாக்காளர்கள் அவரது கட்சியை இந்தத் தேர்தலில் தூக்கியெறிந்து விட்டார்கள். இதுவரை வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகளின் படி தி. மு. க. கூட்டணி 31 தொகுதிகளில் மாத்திரமே வெற்றிபெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

தி.மு.க. வின் அமைச்சர்களான பெங் களூர் பழனிச்சாமி, வீரபாண்டி ஆறுமுகம், தமிழரசி, எம். ஆர். கே. பன்னீஸ்வரன் ஆகிய பல முக்கியஸ்தர்கள் தேர்தலில் தோல்வியை தழுவிக்கொண்டுள்ளார்கள்.

தமிழ் நாடு மாநில சட்டசபைத் தேர்தலில் தி. மு. க. கூட்டணி படுதோல்வி அடைந்தமைக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. தங்கபாலு போன்றவர்களை தொடர்ந்தும் தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக வைத்திருந்தமையும், ஸ்பெக்ரம் விவகாரத்தில் மத்திய அரசாங்கம் நடந்து கொள்ளாமல் தி. மு. காவிற்கு ஆதரவாக பி. ராஜா விடயத்தில் செயற்பட்டதும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைவதற்கான ஒரு பிரதான காரணமாகும்.

மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பர்னாஜி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி 219 தொகுதிகளில் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சி இங்கும் தோல்வியடைவதை தடுத்திருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்தனர்.

புதுச்சேரி யூனியன் சட்டசபைத் தேர் தலிலும் தி. மு. க. காங்கிரஸ் கூட்டணி பின்னடைவைக் கண்டுள்ளது. இங்கு என். ஆர். காங்கிரஸ், அ. தி. மு. க. கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மிகக் குறைந்த பெரும்பான்மை தொகுதிகளைப் பெற்று (72) அதிகாரத்தைப் கைப்பற்றியுள்ளது. முன்பு ஆட்சியில் இருந்த இடதுசாரி கூட்டணியினர் 68 தொகுதியைக் கைப்பற்றி தோல்வியடைந்துள்ளது. அசாமில் காங்கிரஸ் கூட்டணி இதுவரை வெளியான முடிவுகளில் முன்னணியில் இருந்து வருகின்றது.

சென்னையில் வி. க. நகர், ராயப்புறம், அண்ணாநகர், தியாகராஜ நகர், மயிலாப்பூர், திருத்தணி, பூந்தமல்லி, ஆவடி, ஆனந்தூர், சிறிபெரும்புதூர், மதுராந்தகம், சோளிங்கள், வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி, ஒசூர், செங்கம் ஆகிய தொகுதிகளிலும் மேலும் பல தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியடைந்துள்ளது.

குளச்சல், விளவங்கோடு ஆகிய தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் வாய்ப்பைப் பெற் றுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் பாடா லூரைச் சேர்ந்த சோமு என்பவர் தி. மு. க. பொதுக்குழுவில் உறுப்பினராக இருக்கிறார். இவர் தொலைக்காட்சியில் தங்கள் கூட்டணி படுதோல்வி அடைந்ததைப் பார்த்து மாரடைப்பினால் மரணமடைந்தார்.

நேற்று வெளியான சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இந்திய மத்திய அரசாங்கத்தின் ஆளும் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இடதுசாரிகள் ஆட்சி செய்த கேரள மேற்கு வங்கம் ஆகிய மாநிலத் தேர்தலில் அவை படுதோல்வி அடைந் துள்ளன. காங்கிரஸ் கட்சியில் ஆட்சியில் இருந்த அசாம் மாநிலத்தில் மாத்திரமே காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் ரெங்கசாமி தலைமையிலான அ. தி. மு. கூட்டணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. அங்கும் ஆளும் காங்கிரஸ் கட்சி படு தோல்வியடைந்தது.

ஜெயலலிதா தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், இலங்கைத் தமிழர்களை கெளரவமான முறையில் சகல உரிமை களுடன் வாழ வைப்பதற்கு தாம் இந்திய மத்திய அரசாங்கத்தின் அனு சரணையுடன் தக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.

இதேவேளையில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதையடுத்து முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆளுநர் சுஜித் சிங் பர்னாளாவிடம் தமது இராஜிநாமா கடிதத்தை கொடுக்க முன்வந்த போதிலும் ஆளுநர் அதனை ஏற்க மறுத்து, புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதற்கு பின்னர் இராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ள முடியுமென்று தெரிவித்தார்.

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டவுடன் மாநிலங்கள் முழுவதும் பட்டாசுகளை கொளுத்தியும், தின்பண்டங்களை பரிமாறியும் ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com