Contact us at: sooddram@gmail.com

 

இந்தியாவிடம் இலங்கை உறுதி

13 வது திருத்தத்தின் அடிப்படையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியும்

இலங்கையின் அரசியலமைப் பின் 13ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகாரப் பரவலாக்கலை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவ தற்கான சாதகமான சூழலை உருவாக்க முடியுமென இலங்கை இந்தியாவிற்கு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்து, இந்தியாவிற்கு நிரந்தர அங்கத்துவத்தைப் பெற்றுக் கொடுக்க இலங்கை பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும், இலங்கை இந்தியாவிற்கு உறுதியளித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமையிலான உயர்மட்டக்குழு இந்தியா சென்றுள்ளது. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு டில்லி சென்றிருந்த இந்தக் குழு, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரைச் சந்தித்துப் பேசினர். மேற்படி சந்திப்புக்களையடுத்து இலங்கையும் இந்தியாவும் கூட்டறிக் கையொன்றை நேற்று விடுத்தது.

அந்தக் கூட்டறிக்கையின் விபரம் வருமாறு: வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் இம்மாதம் 15 திகதி முதல் 17ம் திகதி வரை புதுடில்லிக்கு மேற்கொண்ட விஜயத்தை மேற் கொண்டிருந்தனர். இலங்கை வெளிவிவகார அமைச்சர் தமது இந்திய விஜயத்தின் போது இந்திய பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோ சகர் சிவசங்கர் மேனன், வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் ஆகியோரை சந்தித்து பேசினார்.

இருதேச வெளிவிவகார அமைச்சர்கள் தங்கள் பிரதிநிதிகளுடன் 16ம் திகதியன்று உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்திய போது, இரு தரப்பினரும் பரஸ்பர நல்லுறவு பற்றிய சகல விட யங்களையும் விரிவான அடிப்படையில் ஆராய்ந்தார்கள். 2010ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத் திற்கு பின்னர் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் அவர்கள் ஆராய்ந்தார்கள். 2010ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கொழும்பில் வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்தில் நடத்தப்பட்ட கூட்டு ஆணைக்குழு கூட்டம் பற்றிய விபரங்களையும் அங்கு ஆராய்ந்தனர்.

இரு தேசங்களுக்கும் பொதுவான பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் குறித்தும் அங்கு ஆராயப்பட்டன. இலங்கையில் ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பத்தில் பல விடயங்களை புரிந்துணர்வுடனும், பரஸ்பர விட்டுக்கொடுக்கும் மனப் பான்மையுடனும், உண்மையான தேசிய இணக்கப்பாட்டை ஏற்படுத் துவதற்கான அரசியல் தூரதரிசனத்தை கையாள்வதற்கான அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்பதை இருதரப்பும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக இலங்கை வெளி விவகார அமைச்சர் இலங்கை அரசாங் கத்திற்கும் தமிழ் கட்சிகளுக்குமிடையில் தற்போது நடைபெற்று வரும் கலந்துரை யாடல்களை கூடிய விரைவில் வலுவான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு தமது அரசாங்கம் திடமாக இருக்கிறது என்பதை எடுத்துரைத்தார்.

இலங்கை அரசியல் சாசனத்திற்காக 13வது திருத்தத்தை அடிதளமாக அமைத்து, அதிகார பரவலாக்கலை நடை முறைப்படுத்துவதன் மூலம் இணக்கப் பாட்டை ஏற்படுத்துவதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்க முடியுமென்றும் இலங்கைத் தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் மீள்குடியேற்றம், இணக்கப்பாடு ஆகிய வற்றில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஏற்புடைய வகையில், தொடர்ந்தும் தனது கவனத்தை அரசாங்கம் கையாண்டு வருகிறதென்று கூறினார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு (LLRC) வுக்கு ஏற்புடைய வகையில் பல் அமைப்பு ஆலோசனைக்குழு (IIAC)  ுக்கு சட்டமா அதிபர் தலைவர் என்ற முறையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு (LLRC) வின் இடைக்கால சிபா ரிசுகளை தடுத்து வைத்திருத்தல், சட் டம், ஒழுங்கு, நிர்வாகம், மொழிப் பிரச்சினை, சமூக, பொருளாதார, வாழ் வாதாரப் பிரச்சினை தொடர்பான நடைமுறைப் பிரச்சினைகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்தார்.

இதற்கு பதிலளித்த இந்திய வெளி விவகார அமைச்சர் இலங்கை அரசாங்கம் இத்திட்டங்களை கால தாமதமின்றி நடைமுறைப்படுத்தி மீள் குடியேற்றத்தை யும் உண்மையான நல்லிணக்கப்பாட்டை யும் ஏற்படுத்துவதன் மூலம் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்வதற்கு வகை செய்வது டன் அவசரகால சட்டவிதிகளை கூடிய விரைவில் வாபஸ் பெற்று, மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணைக்குட்படுத்தி சகஜ நிலையை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இந்திய அரசாங்கம் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு கூடிய விரைவில் நிவாரணத்தையும், மீள்குடியேற்றத்திற்கான வசதியையும் செய்து கொடுப்பதற்கு ஏற்புடைய வகையில் தரைக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கும் வாழ்வாதாரத்திற்கு உறுதுணை புரிவதற்கும் மேற்கொண்டு வரும் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

இது தொடர்பாக உள்ளூரில் இடம் பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை அமைப் பதற்கும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் திட் டங்களை மேற்கொள்வதிலும் இப்போது நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிற தென்றும், இத்துடன் காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பு செய்வதற்கும், பலாலி துறைமுகத்தை புனரமைப்பு செய்வதற்கும், ஆஸ்பத்திரி மற்றும் பாடசாலைகளில் திருத்த வேலைகளை செய்வதற்கும் கட்டடங்களை நிர்மாணிப் பதற்கும், தொழிற்பயிற்சி நிலையங்களை அமைப்பதற்கும், யாழ்ப்பாணத்தில் கலாசார நிலையமென்றை நிர்மாணிப்பதற் கும், ரயில் சேவையை மீண்டும் ஆரம் பிப்பதற்கும், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கை புனர்நிர்மாணம் செய்வதற்கும் மேற்கொண்டுவரும் முயற்சிகள் நல்ல நிலையில் இருப்ப தற்கும் நன்றி தெரிவித்தனர்.

இலங்கையில் இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்படும் பலதரப்பட்ட ரயில் வேலைத் திட்டங்களில் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பது குறித்து இரு தரப்பினரும் திருப்தி தெரிவித்தனர். இந்தத் திட்டங்களை நேர காலத்தில் பூர்த்தி செய்வதற்கும் தாங்கள் வசதிகளை செய்து கொடுக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

2010ம் ஆண்டு ஜூன் 9ம் திகதியன்று விடுக்கப்பட்ட கூட்டு பிரகடனத்திற்கு அமைய இரு தரப்பினரும் என்.டி.பி.சி மற்றும் இலங்கை மின்சார சபைக்கும் இடையிலான கூட்டு அனல் மின்சார திட்டத்தை திருகோணமலையின் சம் பூரில் பூர்த்தி செய்வதற்கும், அதனையடுத்து ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள பலாலி காங்கேசன்துறை ரயில் பாதையை மீள் நிர்மாணம் செய்தல், புதிய சமி க்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்பை இந்தியாவிடம் இருந்து பெறுவதற்கும், முழுமையான பொருளா தார பங்காளி ஒப்பந்தத்தை (விரிஜிதி) கூடிய விரைவில் தயாரித்து முடிப்பதற்கும் இணக்கப்பாட்டைத் தெரிவித்தனர்.

இந்திய, இலங்கை மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு இடையில் தொடர்பை ஏற்படுத்துவது பற்றிய பகுப்பாய்வு தொடர்பான ஒத்துழைப்பை விரிவுபடுத்து வதற்கும் இணக்கம் தெரிவித்தனர். பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதிலும் இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் இணக்கப் பாட்டை தெரிவித்தனர்.

2011ம் ஆண்டு மார்ச் 28,29ம் திகதிகளில் புதுடில்லியில் நடைபெற்ற கடற்றொழில் பற்றிய கூட்டு செயற்குழு கூட்டத்தின் செயற்பாடுகள் குறித்தும் அங்கு ஆரா யப்பட்டது. அதிகாரத்தைப் பயன்படுத்து வதை விட கடற்றொழிலாளர்களை மனிதாபிமான முறையில் நடத்துவது அவசியம் என்ற கருத்தை இரு தரப் பினரும் ஏற்றுக்கொண்டனர்.

இந்தியத் தரப்பினர் இலங்கை கடல் எல்லைப் பிரதேசத்தில் இந்திய கடற்றொழிலாளர் களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருப் பதாக அங்கு சுட்டிக்காட்டினார்கள். இது குறித்து இந்திய அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக இரு தரப்பினரும் 2008ம் ஆண்டு ஒக் டோபர் 26ம் திகதியன்று கடற்றொழில் ஒழுங்கு முறைகள் பற்றிய கூட்டு அறிக்கையைடுத்து இப்போது இந்த வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளதை ஏற்றுள்ளனர். இலங்கைக்கும் இந்தியா விற்கும் இடையில் கடற்றொழில் துறையில் அபிவிருத்தி மற்றும் ஒத்துழை ப்பு பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்துவதற் கான நகல் ஒப்பந்தத்தை கூடிய விரை வில் பூர்த்தி செய்வதன் அவசியத்தை இரு தரப்பினரும் அங்கு வலியுறுத் தினார்கள்.

இரு தரப்பினரும் மக்களிடையே கலாசார நட்புறவையும் ஒருவர் ஒருவரு டனான தொடர்புகளை வளர்த்து, நட் புறவை பேணிப்பாதுகாப்பதற்கு உதவக் கூடிய வகையில் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும், இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்குமிடையிலான பிரயாணிகளுக்கான கப்பல் சேவையை ஆரம்பிப்பதன் அவசியத்தை வலியுறுத் தினர். இலங்கையிலுள்ள துறைமுகங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் இலங்கை யின் துறைமுக சேவைகளை விருத்தி செய்தல் தொடர்பாக இரு தரப்பினரும் பரஸ்பரம் முதலீடு செய்வதற்கும் இணக்கப்பாட்டை தெரிவித்தனர்.

இலங்கையும், இந்தியாவும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் செயற்பாடு களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கு இருதரப்பும் இணக்கம் கண்டுள்ளனர்.

ஐ.நா. சபையின் நிரந்தர உறுப்பினர் களுக்கான அங்கத்துவ நாடுகளுக்கான எண்ணிக்கையை அதிகரித்து, இந்தியா விற்கு உரித்தான ஒரு அங்கத்துவத்தை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கை தனது வலுவான ஆதரவை அளிக்கு மென்று அங்கு உறுதியளிக்கப்பட்டது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com