Contact us at: sooddram@gmail.com

 

ஊழலின் காரணமாக திமுக வீழ்ச்சி  அமெரிக்க துணைத்தூதரிடம் தயாநிதி மாறன் கூறியது அம்பலம்

ஊழலின் காரணமாக திமுக வீழ்ச் சியடைந்து கொண்டிருக்கிறதுஎன்றும்ஆட்சி அதிகாரத்திலிருக்கும்போது, ஆட் சியாளர்கள் பணம் பண்ணத் தொடங்கி விடுகிறார்கள்என்றும் 2008ல் தயாநிதி மாறன், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரியிடம் தெரிவித்ததாக, விக்கி லீக்ஸ் அம்பலப் படுத்திய ரகசியத்தைதி இந்துநாளிதழ் (23.5.2011) முதல் பக்கச் செய்தியாக வெளியிட்டுள்ளது. 2008 பிப்ரவரியில் அமெரிக்கத் தூதர கத்தின் கன்சல் ஜெனரலிடம் அப்போது திமுக நாடாளுமன்ற உறுப்பின ராக இருந்த தயாநிதி மாறன் மனந்திறந்து உரையாடியிருக்கிறார். அப்போது அவர், தன் கட்சியில் நிலவும் ஊழல் குறித்தும், மக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிராக அதி கரித்து வரும் மனோபாவம் குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார்.

அமெரிக்கத் தூதரகத்தில் கன்சல் ஜெனரலாக இருந்த டேவிட் டி.ஹோப்பர், 2008 பிப்ரவரி 23 அன்று அனுப்பிய கேபிள் செய்தியில் (இதனை விக்கிலீக்ஸ் மூலம் பெற்று, ‘தி இந்துநாளிதழ் வெளியிட்டி ருக்கிறது) அமெரிக்க அரசாங்கத்திற்கு, தயாநிதி மாறன் தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசாங்கம் குறித்து, தன்னிடம் மனம் திறந்து கூறியவற்றைத் தெரிவித் திருக்கிறார். மேலும் அவர் தெரிவித் திருப்பதாவது:

இப்போதுள்ளபடியே விஷயங்கள் தொடரும்பட்சத்தில், தமிழ்நாட்டில் திரா விட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், தாங்கள் தற்போது மக்களவையில் பெற்றிருக்கும் இடங்களில் பாதியை இழந்துவிடும் என்று மாறன் ஊகிக்கிறார். மேலும், மக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிராக உள்ள மனோ பாவம் குறித்து மாறன் கூறுகையில், “திமுக பிரதானமாக ஒரு ஊழல் கட்சி என்று குறிப்பிட்டு, ஆட்சி அதிகாரத்திற்கு வந்த வுடனேயே, அனைத்தையும் மறந்து விட்டு, பணம் பண்ணுவது ஒன்றிலேயே குறியாக செயல்படத் தொடங்கிவிடுகிறார் கள்என்று மக்கள் மத்தியில் பொதுவான கருத்து இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

புதுதில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துடன் ஒருங்கிணைக்கப்பட் டுள்ள அந்தக் கேபிள் செய்தியானது, 2008 பிப்ரவரி 15 அன்று சென்னை கன்சு லேட் ஜெனரல் அலுவலகத்தில் உள்ள அரசியல் அலுவலர் (ஞடிடவைiஉயட டீககiஉநச), தமிழக முதல்வரும் திமுகவின் தலைவருமான கருணாநிதியுடன் தகராறு ஏற்பட்டதை அடுத்து, 2007 மே மாதத்தில் மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்து கழட்டி விடப்பட்டபின் முதன்முதலாக தயாநிதி மாறனை சந்தித்தார். அப்போது மாறன், தமிழக அரசுஇலவசங்கள்அளித்துவருவதில் உள்ள ஆபத்துக் களைச் சொல்லியிருக்கிறார். ஆட்சிக்கு வந்தால் டி.வி.வழங்குவோம் என்று சொல்வதில் உள்ள பிரச்சனை என்ன வெனில், இலவசமாகப் பெற்ற டி.வி.யை மக்கள் விரைவில் மறந்துவிடுவார்கள். பின் அவர்கள், இப்போது எனக்காக என்ன செய்தீர்கள் என்றுதான் கேட்கி றார்கள்என்று கூறியிருக்கிறார்.

திமுக- தலைமையுடன் மனக் கசப்புடன் இருந்தபோதிலும், மீண்டும் மத்திய ஜவுளித்துறை அமைச்சராகி யிருக்கும் மாறன், ஹோப்பரிடம் 15ஆவது மக்களவைத் தேர்தலில் ஐ.மு.கூட்டணி யின் வெற்றி வாய்ப்புகள் குறித்துமிகவும் அடக்கிவாசித்திருக்கிறார். ஐ.மு.கூட் டணி, குறிப்பாக குஜராத்திற்குப்பின், மிக வும் கடினமான வடிவத்தில் இருப்பதாகமாறன் கருதியிருக்கிறார். தென்னிந்தியா விலும் கூட ஐ.மு.கூட்டணியினருக்கு கணிசமான இழப்புகள் எதிர்பார்க்கப்படு வதாகமாறன் குறிப்பிட்டிருக்கிறார். ஆந் திரப் பிரதேசத்திலும் காங்கிரசின் செல் வாக்கு குறித்து அவர்நம்பிக்கையற்ற வராகவே இருந்தார். முதல்வர் ஒய்.எஸ். ஆர். ரெட்டியின் செல்வாக்கு சரிந்து வரு கிறது என்றும், எனவே தற்போதுள்ள 29 மக்களவை இடங்களையும் காங்கிரஸ் இழக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக வும்மாறன் கூறியிருக்கிறார். ஆனால், “ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் இவ் வாறு எதிர்பார்க்கப்படும் இழப்புகள் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தோல்விகளிலிருந்துதான் ஏற்படுகிற தென்றும், அவை வலுவான எதிர்க் கட்சி களால் அல்லஎன்றும் அவர் மேலும் கூறியிருக்கிறார்.

திமுக தலைமையுடன் மாறனுக்கு இருந்த உறவு முறிவுக்கு, “நிதிக் கார ணங்கள்” (கiயேnஉயைட சநயளடிளே) ஒரு முக்கிய மான பகுதி என்றும், “திமுக அடித்த கொள்ளையில் தனக்கு வரவேண்டிய பங்கு, தனக்கு வராமல் தட்டிப்பறிக்கப் பட்டதன் காரணமாகவே, “சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்என்ற மனோபாவத்தில் மாறன் இவ்வாறு தன் கருத்துக்களைப் பிரதிபலிக்கிறார் என்றும் மிகவும் அனு பவம் வாய்ந்த ராஜதந்திரியான ஹோப்பர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர், மாறனின் டிவி-யும் மற்றும் சில இலவசத் திட்டங்களும் 2006 மாநிலத் தேர்தலில் திமுக வெற்றி பெற உதவியது என்றும் கன்சல் ஜெனரல் அந்தக் கேபிளில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதில் மிகவும் குறிப்பிடப்பட வேண் டிய அம்சம் என்னவெனில், தயாநிதி மாறன் தான் சார்ந்திருக்கும் திமுக-வின் மீது அவதூறுகளை அள்ளிவீசும் அதே சமயத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை வானளாவப் புகழ்ந் திருப்பதுதான். 2009 மக்களவைத் தேர்த லின்போது ராகுல் காந்திதான் பிரதமர் என்று அறிவித்திருக்க வேண்டும் என்று வாதிடுகிறார். இதற்கு நீண்ட காலம் ஆகலாம் என்று மாறன் கருதினாலும், “ராகுல் மட்டுமே அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்புஎன்று வாதிடுகிறார்.

தென்னிந்தியாவில் ராஜீவ் காந்திக்கு இருக்கும் செல்வாக்கின் பாரம்பரியப் பயனை ராகுலும் பெற்றிடுவார் என்று மாறன் மேலும் கூறுகிறார். நேரு குடும்பத் திலிருந்து ராகுல் வருவது தென்னிந்தியா வில் மிக நன்றாக வேலை செய்யும் என்று குறிப்பிடும் மாறன், ‘‘நீங்கள் கவனிக்கா மல் இருக்கிறீர்கள் எனில், நாங்கள் வாரிசு அரசியலை அமல்படுத்துவதில் பிரச்ச னையே கிடையாது. உண்மையில் நாங் கள் அதனை வெகுவாக விரும்புவது போன்றே தெரிகிறதுஎன்றும் கூறியிருக் கிறார்.

மேலும் மாறன், ராகுலை காங்கிரசின் வேட்பாளராக சித்தரிப்பதன்மூலம், இளம் வாக்காளர்களை ஈர்த்திட முடியும் என்றும், ஆனால் அவரை வழி நடத்தப்படுபவர்களால் அவர் பின்னுக்கு இழுக்கப்ப டுகிறார் என்றும், அவரிடம் பல விஷயங் களைக் கொண்டு செல்லாமல் மறைத்து விடுகிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார். ‘‘ராகுலுக்கு உள்ள மிகப் பெரிய பிரச் சனை, அவரை உண்மையான மக்களைப் பார்க்க விடுவது இல்லை’’ என்று மாறன் கூறியதாக ஹோப்பர் குறிப்பிடுகிறார்.

மாறன் இவ்வாறு ராகுல் காந்தி குறித்து கூறுவதன் மூலம் மாறனின் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்த அகத் தூண்டுதல் உணர்ச்சிகளையும் ஹோப்பர் தான் அனுப்பியுள்ள கேபிளில் கடைசியில் மிகவும் கூர்மையாகக் குறிப்பிட்டிருக் கிறார். “காங்கிரசில் ராகுல் காந்திக்கு முக் கிய இடம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கருதுவதிலிருந்து, தமிழ்நாட்டில் திமுக-வில் தானும் அதேபோன்று இளம் அரசியல்வாதியாகக் கருதப்பட வேண் டும் என்று விரும்பியதாகத் தெரிகிறது. ராகுல் செல்லுமிடங்களில் எல்லாம் அவருக்கு வருவதுபோல் தனக்கும் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக மாறன் கருதிக்கொண்டிருந்தார்என்று ஹோப்பர் குறிப்பிட்டிருக்கிறார்.

2008 டிசம்பர் 1ல் மாறன் மீண்டும் திமுக-வுடன் சேர்ந்து அவரது தாத்தா கருணாநிதிக்கு இனியவரானார். 2009 மக் களவைத் தேர்தல் வந்தபோது, தமிழ் நாட் டில் அவரது யூகங்கள் அடிபட்டுப்போ யின. பணபலம் பெரும் பங்கு வகித்து, அஇஅதிமுக 9 இடங்கள் பெற்ற நிலையில் திமுக 18 இடங்களைக் கைப்பற்றி யது. திமுக கூட்டணி அதன் போட்டிக் கூட்டணி பெற்ற 12 இடங் களுக்கு எதிராக 27 இடங்களைக் கைப் பற்றியது. ஆந் திரா தொடர்பான மாறனின் நம்பிக்கையின்மையும் தவறாகிப்போ னது. அங்கே ஒய்.எஸ்.ஆர். செல்வாக்கின் கீழிருந்த காங்கிரஸ் மொத்தம் உள்ள 42 மக்களவை இடங்களில் 33ஐ எடுத்துக் கொண்டது. மாறன் அஇஅதிமுக தலைவர் ஜெயலலிதாவின் பங்கினை முற்றிலும் தவறாகப் புரிந்துகொண் டுவிட்டார். ஆயினும் திமுக ஊழல் கார ணமாக வீழ்ந்துகொண் டிருக்கிறது என் கிற அவரது யூகம் 2011ல் தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் மிகப் பெரிய அளவில் உண் மையாகிப்போனது.

இவ்வாறுதி இந்துநாளிதழ் தெரி வித்துள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com