Contact us at: sooddram@gmail.com

 

பாதிக்கப்பட்டோருக்கு நல்லிணக்க ஆணைக்குழு மூலம் நியாயமான தீர்வு கிடைக்கும்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க உரை

  • ஒரு நாட்டின் செயற்பாட்டை அரசுடன் இணைந்தே ஐ.நா சபை ஆராய்வது அவசியம்

  • புலம் பெயர்ந்த தமிழர்களை வடக்கு, கிழக்கு அபிவிருத்தியில் முதலீடு செய்ய அரசு அழைப்பு

  • உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் அரசாங்கம் முன்னுரிமை

யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசாங்கம் சுமார் இரண்டு இலட்சத்து 90 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கே முன்னுரிமை வழங்கி துரிதமாக செயற்பட்டது.

இந்த மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, இருப்பிடம், வாழ்வாதார உதவிகளை பெற்றுக் கொடுத்தல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் அரசாங்கம் துரிதமாகச் செயற்பட்டது. இடம்பெயர்ந்தோரில் 95 வீதத்தினர் மீள்குடியேற்றப்பட்டு ள்ளார்கள். எஞ்சியோர் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் மீள்குடியேற்றப்படுவார்களென அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் முழு மூச்சுடன் செயற்பட்டு வரும் இந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் அதிகாரிகள் பக்கச் சார்பாகச் செயற்படுவது ஐ.நா சபைக்கே பெரும் கண்டனம் ஏற்படுவதற்கான வாய்ப்பாக அமையலாம் எனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க சுட்டிக் காட்டினார்.

ஐ.நா. 17 வது மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் நேற்று ஜெனீவாவிலுள்ள ஐ.நா. தலைமையகக் கட்டடத்தில் ஆரம்பமானது. இதில் கலந்து கொண்டு இலங்கையின் சார்பில் உரை யாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, 2009ம் ஆண்டு மே மாதத்தில் பயங்கரவாதி களின் பிடியிலிருந்து எங்கள் மக்களை நாம் விடுவித்ததை யடுத்து, அரசாங்கம் எதிர்நோக்கிய பலதரப்பட்ட சவால்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்களின் அரசாங்கம் சிறந்த முறையில் முகம் கொடுத்து, மீள்குடியேற்றம், புனர் வாழ்வளித்தல், பொருளாதார அபிவிருத்தி, கட்டட நிர்மாணம், நல்லிணக்கப்பாடு ஆகியவற்றை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தி 30 ஆண்டுகால யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியைப் பிரகாசிக்க வைத்தார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசாங்கம் சுமார் 2லட்சத்து 90ஆயிரம் உள்ளூரில் இடம் பயர்ந்த மக்களை மீள் குடியேற்றுவதற்கே முன்னுரிமை வழங்கி, துரிதவேகமாக மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த மக்களுக்கு வசதியான இருப்பிடங்களை பெற்றுக் கொடுத்தல், உணவு, பாதுகாப்பு, வாழ்வாதார உதவி களை பெற்றுக்கொடுத்தல் ஆகிய வற்றிலும் அரசாங்கம் பின்நிற்கவில்லை.

இன்று, 95 சதவீதமான இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடி யமர்த்தப்பட்டுள்ளார்கள். வடபகுதி எங்கும் புதையுண்டுள்ள தரைக் கண்ணி வெடிகள் முற்றாக அகற்றப்பட்டவுடன் எஞ்சிய மக்கள் அனைவரும் மீள் குடியமர்த்தப்படுவார்கள்.

புனர்வாழ்வு செயற்பாடுகளை பொறுத்தமட்டில் முன்னாள் சிறுவர் போராளிகளுக்கு நாம் புனர்வாழ்வை அளித்து, அவர்களுக்கு கல்வி அறிவைப் பெற் றுக் கொள்வ தற்கான நிகழ்ச்சிகளை ஆரம் பித்திருப்பதுடன் தொழிற் பயிற்சியையும் அளித்து வருகின் றோம்.

அரச படைகளிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 11,644 முன்னாள் போராளிகளில் 6,530 பேருக்கு ஏற்கனவே முழு மையான புனர்வாழ்வை அளித்து அவர்களை சமூக நீரோட்டத்தில் சங்கமிக்க வைத்த சாதனையையும் அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுவதற்கான கல்வித் தகைமை களையும் பெற்றுள்ளார்கள்.

அரசாங்கம் தற்போது புனர் வாழ்வை பெற்றுவரும் எஞ்சிய முன்னாள் போராளிகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்விதம் விடுவிக்கப் படுபவர்கள் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கை யில் ஈடுபடாத வகை யில் அவர்களுக்கு புனர்வாழ்வும், வாழ்க்கையில் உண்மையான தாற்பரியத்தையும் புரிந்து கொள் வதில் நாம் வெற்றி கண் டுள்ளோம்.

நல்லிணக்கப்பாட்டையும் மக்களிடையே நல்லெண்ணத்தையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னினுரிமை அளித்து செயற்பட்டு வருகின்றது. இதனால் ஏற்கனவே எமது நாட்டு மக்கள் சமாதானத்தின் பலாபலனை அனுபவித்து வரு கிறார்கள். இந்த செயற்பாட்டினை நாம் வலுப்படுத்தி அதனை ஒரு விருட்சமாக உருவாக்குவது அவசியமாகும். சமூகப் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளை பயங்கரவாதத்தினால் முன்னர் பாதிக்கப்பட்டிருந்த பிரதேசங்களை அரசாங்கம் நாட்டில் அரசியல் சாசனத்தின் மூலமும், சட்டரீதியாகவும், ஜனநாயக அடிப்படையிலும் சீர்திருத்தங்களை மேற்கொள்வது பற்றி தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றது. வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களையும், இலங்கையில் மேம்பாட்டுக்காக தங்கள் வளங்களை இங்கு கொண்டுவந்து முதலீடு செய்ய வேண்டுமென்றும் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்கு தங்கள் பங்களிப்பை வழங்க முடியும்.

இந்த சவால்களுக்கு சிறந்த முறையில் முகம் கொடுக்கும் எண்ணத்துடன் 2010ம் ஆண்டு மே மாதத்திலிருந்து எங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்தினார். அதன் மூலம் நீதி, நியாயத்தை நிலைநாட்டி கடந்த காலத்தில் இந்த அழிவுகளுக்கு பொறுப்பாளி கள் யார் என்பதிலும் அரசாங்கம் ஆர்வம் காட்டி வருகின்றது. இந்த ஆணைக்குழுவின் பணிகள் நியமிக்கப்பட்ட திகதியில் இருந்து 3 மாதங்களில் ஆரம்பமாகும். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் தமக்கு ஆலோசனை தெரிவிக்கும் குழுவை ஆரம்பிக்கும் முன்னரே அரசாங்கம் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொண்டிருப்பது இங்கு குறிப்பிடுவது அவசியமாகும். உண்மை, நீதி, இளைத்த தவறுகளை சரிசெய்தல் ஆகிய மூன்று முக்கிய செயற்பாடுகளின் கீழ் நல்லிணக்கப்பாட்டை மேற்கொண்டு வருகின்றோம். கடந்த காலத்தில் யுத்தத்தினாலும் வேறு செயற்பாடுகளினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த ஆணைக்குழுவின் முன்வந்து தங்கள் வேதனைகளையும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பற்றியும் சாட்சி யமளித்தார்கள். இவற்றை நன்கு ஆராயும் இந்த ஆணைக்குழு அந்த மக்கள் உரிய நிவாரணத்தை பெற்றுக் கொடுப்பதற்கு தவறாது என்பதையும், நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

30 ஆண்டு கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நியாயபூர்வமான தீர்வொன்றை ஏற்படுத்தி தொடர்ந்தும் வன் முறைகள் ஏற்படுவதை தவிர்ப்பதே இந்த ஆணைக்குழுவின் நோக்கமாகும்.

இவ்வாணைக்குழு தன்னுடைய விசாரணை நடவடிக்கைகளை 2010 ஓகஸ்ட் மாதத்தில் ஆரம்பித்து தொடர்ந்தும் தனது பணியை சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டி ருக்கிறது.

இந்த ஆணைக்குழுவின் மூலம் இலங்கையில் யுத்தத்தினால் ஏற்பட்ட நிகழ்வினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயபூர்வமான தீர்வு கிடைக்குமென்ற அசையாத நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த ஆணைக்குழு இந்த மாதத் தில் பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கும் இவ்வேளையில், அதற்கு அதன் அதிகார காலம் மேலும் 6 மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல தகவல்களை பெறுவதற்காகவே இந்த கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.  எனவே, இந்த மனித உரிமைகள் பேரவை அவசரப்படாமல் இலங்கை அரசாங்கத்திற்கு தனது புனர்வாழ்வு பணிகளை சிறப்பாக நிறை வேற்றுவதற்கு சிறிது கால அவகாசம் வழங்கவேண்டுமென்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்த ஆணைக்குழுவின் சில யோசனைகளை அரசாங்கம் ஏற்கனவே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.  அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், ஓமந்தை தடுப்பு காவல் முகாமை மூடுதல், முன்னாள் போராளிகளில் பெரும் பாலானோரை விடுவித்தல், காணித்தகராறுகளுக்கு கூடிய விரைவில் தீர்வை ஏற்படுத்து வதுடன் சட்டவிரோதமாக வைத் துள்ள ஆயுதங்களை அனை வரும் கையளித்த பின்னர் எந்தவொரு குழுவும் ஆயுதங்களை கையிரு ப்பில் வைத்திருக்க கூடாது என்ற விதியை அரசாங்கம் கண்டிப்பாக கடைப்பிடித்து வருகிறது.

மனித உரிமைகளை பேணிப் பாதுகாப்பது என்ற அரசாங் கத்தின் தேசிய நடவடிக்கைத் திட்டம் இப்போது சிறப்பாக கையாளப்பட்டு வருகிறது.  சிவில் சமுதாயத்தின் பல்வேறு அமைப்புகள் உட்பட அரசாங் கத்துறையினர் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி, இந்த நடவடிக்கைகளை நடைமுறைப் படுத்துகிறார்கள்.

இந்த குழுக்களின் நடவடிக்கை திட்டம் இலங்கை அமைச்சரவை யில் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் எங்கள் நாட்டின் அரசியல் சாசனத்திற்கான 18ஆவது திருத்தச் சட்டமூலம் நிறை வேற்றப்பட்டது.

இதன் மூலம் சுயாதீன ஆணைக் குழுக்களை அரசாங்கம் இப்போது நியமித்துள்ளது. இவற்றில் பிரதானமானதாக லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான நிரந்தர ஆணைக்குழு, அரசாங்க சேவை ஆணைக்குழு மற்றும் நீதி ஆணைக்குழு ஆகியனவாகும்.

2011ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மீண்டும் ஏற்படுத்தப்பட்டு இப்போது சிறப்பாக இயங்கி வருகின்றது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மனித உரிமை மீறல் விசாரணைகளை இந்தக் குழு ஆரம்பித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் கீழ் நிறைவேற் றப்பட்டுள்ள மனித உரிமைகள் சாசனத்தை இலங்கை நெறியான முறையில் கடைப் பிடிக்கும் கடப்பாட்டினை கொண்டி ருக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகள் பற்றி நாம் காலத்துக்கு காலம் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் அதன் கிளைகளுக்கும் அறிவிக்கத் தவறவில்லை. நாம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரி களுடனும் அங்கத்துவ நாடுகளுடன் நட்புறவுடன் உண்மையான தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு என்றுமே தயக்கம் காட்டியதும் இல்லை. இலங்கை அரசாங்கம் இத்தகைய செயற்பாடுகளின் மூலம் நாட்டு மக்களிடையே நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்து வதற்கு முயற்சி செய்து வருகிறது. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கு இலங்கை விவகாரம் பற்றி ஆலோசனை தெரிவிக்கும் எண்ணத்துடன் மாத்திரமே இந்த மூன்று அங்கத் தவர்களைக் கொண்ட குழு ஆரம்பிக் கப்பட்டதென்று இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எனினும் இந்த குழுவின் அறிக்கையை பெரிதுபடுத்தி, சிலர் இலங்கை மீது குற்றம் கண்டுபிடிக்க எத்தணிப்பது நல்லதல்ல. நடைமுறையிலுள்ள அரசாங்கத்தின் ஊடாக செயற் பாடுகளுக்கு அப்பால் சென்று, இந்தக் குழுவினர் தகவல்களை திரட்டி இவ்வறிக்கையை தயாரித்திருக்கிறார்கள்.

எனவே, இவ் வறிக்கை குறித்து அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே இனிமேலாவது தவாறான நடைமுறைகளை ஊக்குவிக்காத வகையில் இந்த ஆணைக்குழுவின் அங்கத்துவ நாடுகள் செயற்பட வேண்டுமென நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். இந்தக் குழுவினர் தங்களுக்கு அளித்த அதிகார எல்லையை மீறி இவ் வறிக்கையை தயாரித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கை அரசாங்கத்தின் உள்ளூர் செயற்பாடுகள் குறித்து ஏற்கனவே தாங்களே முடிவெடுத் ததற்கு அமைய இந்த அறிக் கையை இக்குழு தயாரித்திருப்பது கண்டனத்திற்குரிய அம்சமாகும்.

இலங்கை அரசாங்கம் மேற் கொண்ட மனிதாபிமான நட வடிக்கையினால் 2லட்சத்து 90 ஆயிரம் அப்பாவி பொது மக்களை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்டெடுத்தது முக்கியத்துவம் பெறுகின்றது. இலங்கையில் பயங்கரவாதத்தை அடக்கும் மனிதாபிமான நடவடிக்கையும் இந்நாட்டு மக்களின் இறைமையை பாது காப்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நற்பணி என்று உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இலங்கை மக்களை பயங்கர வாதிகளிடமிருந்து மீட்டெடுக்க எமது ஆயுதப்படையினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை தரக் குறைவாக மதிப்பீடு செய்தது உண்மையிலேயே வேதனை யளிக்கிறது.

இலங்கையில் பயங் கரவாத நடவடிக்கையினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர் துறந்தார்கள். இந்த புள்ளி விபரங்கள் இக்குழுவின் அறிக் கையில் வெளியிடப்படவில்லை. இக்குழு ஊர்ஜிதம் செய்யப் படாத விடயங்களை சேர்த்துக் கொண் டுள்ளது. ஐக்கிய நாடுகள் சாசனத்திற்கு அமைய இலங்கை யையும், மற்ற நாடுகளைப் போன்று சரிசமமான முறையில் பாதுகாத்து வழிநடத்துவது இவ்வமைப்பின் அசைக்க முடியாத ஒரு கடமை யாகும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் அதிகாரிகள் பக்கசார்பற்ற முறையிலும் சுதந்திரமாகவும், ஒளிவுமறைவற்ற முறையிலும் செயற்படுவது மிகவும் அவசியம். இந்த அடிப்படைத் தத்துவங்களை அவர்கள் கடைப்பிடிக்காமல் இருந்தால் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கே பெரும் கண்டனம் எழுவதற்கான வாய்ப்பும் உருவாகலாம்.

எனவே, கூடியவரையில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் அரசாங்கத்துடன் இணைந்தே ஒரு நாட்டின் செயற்பாடுகள் குறித்து ஆராய்வது அவசியமென்ற கருத்தை நாம் வலியுறுத்த விரும்புகிறோம். இத்தகைய அசாதாரணமான நடைமுறைகள் இந்தப் பேரவையின் மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதில் அசையாத நம்பிக்கை

இறுதியாக பரஸ்பர கெளரவம், ஒத்துழைப்பு, ஒருவர் கருத்தை மற்றவர் புரிந்து கொள்ளல் ஆகிய நற்பண்புகளுடன் மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடு களுடனும் ஐக்கியநாடுகள் அமைப்புடனும் அதன் சர்வதேச கிளை நிறுவனங்களுடனும் நாம் எதிர்காலத்திலும் ஒற்றுமையாக இருக்க விரும்புகிறோம் என்பதை சுட்டிக்காட்டுவது எனது கடமையாகும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com