Contact us at: sooddram@gmail.com

 

நம்பிக்கை ஒளியை ஏற்றியது

மதுரையில் நடைபெற்ற அச்சகத் தொழிலாளர் கருத்தரங்கம்

மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம  மதுரை ,செல்லூர், 50 அடி ரோடு, தியாகி பாலு 2-வது தெருவில் உள்ள மகாலட்சுமி திருமண மண்டபத்தில் மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் சார்ப்பாக   19.04.2012  அன்று மாலை 4 மணியளவில்  நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அச்சகத் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த தோழர்.கதிரவன் தலைமை தாங்கினார்.

அவர் தனது தலைமையுரையில் அச்சகத் தொழிலாளர்கள் இரவு பகல் பார்க்காமல் மிகக்குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்கிறார்கள், ஆனால் தொழிலாளர் நலச்சட்டங்களின் படியான பயன்கள் எதையும் அவர்கள் பெறுவதில்லை. அச்சகத் தொழிலாளர்களின் அனைத்து பிரச்சனைகளும் தீர வேண்டுமெனில் அச்சகத் தொழிலாளர்களின் ஓன்று பட்ட போராட்டத்தின் மூலமே சாத்தியமாகும் என்று பேசினார்.

விருதுநகர் மாவட்டம் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர்.ஜெகனாதன் பேசும்போது வரலாற்றில் தொழிலாளர்களுக்கு கிடைத்த உரிமைகள் அனைத்துமே தொழிலாளர்களின் ஓன்று பட்ட போராட்டத்தின் மூலம் கிடைத்ததே ஆகும். நாம் ஓன்று பட்டு போராடினால் நமது கோரிக்கைளை அடைவது சாத்தியமே என்று பேசினார். அச்சகத் தொழிலாளர்கள் யாருக்கும் பி.எப்., இ.எஸ்.ஐ. ஆகியவை பிடித்தம் செய்யப்படுவதில்லை, கண்டிப்பாக பி.எப். , இ. எஸ்.ஐ. பிடித்தம் செய்ய வலியுறுத்த வேண்டும். விலை வாசி உயர்வுகேற்றவாறு அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால் 16 மணி நேரம் உழைக்கும் தொழில்நுட்பம் தெரிந்த அச்சகத் தொழிலாளர்களுக்கு சமபள உயர்வு என்பது கானல் நீராகவே உள்ளது என்று மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கப் பொருளாளர் தோழர். நாகராஜ் பேசினார்.

விருதுநகர் மாவட்ட பட்டாசுத் தொழிலாளர் சங்கத் தலைவர் தோழர்.தங்கராஜ் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் உழைப்ப , 8 மணி நேரம் ஓய்வு , 8 மணி நேரம் சமூகப் பணி என்பதெல்லாம் கனவாக மாறிவிட்டது. இன்று அச்சகத் தொழிலாளர்கள் மட்டுமல்ல அனைத்து தொழிலாளர்களுக்குமே 8 மணி நேரம் தூக்கம் போக மிச்ச நேரம் முழுவதும் முதலாளிகளுக்கு உழைத்து கொடுப்பதே விதியாகி தொழிலாளர்கள் மீது காட்டுத்தனமான சுரண்டல் கட்டவிழ்த்துவிடப்படுகிறது,இத தடுக்கப்பட வேண்டும் என்று பேசினார்.

மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர்.பாண்டி பேசும் போது அச்சகத் தொழிலாளர்கள் இரவு நேரமும் பணி செய்ய வேண்டியுள்ளது ஆனால் அதற்கு என்று எந்த சிறப்பு ஊதியமும் அளிக்கப்படுவதில்லை. இரவு நேரப்பணிக்கு இரட்டை   ஊதியம் வழங்கும் கோரிக்கைய  ுதலாவதாக எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். விருதுநகர் மாவட்டம் அச்சகத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர், தோழர் செல்வராஜ்    பேசும் போத ,ஒரே மாதிரியான வேலை செய்யும்  ஊழியர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் படியான சம்பள ஏற்றத்தாழ்வு என்பது நிர்வாகம் தொழிலாளர்களுக்குள் ஒற்றுமை வந்துவிடக்கூடாது என்பதற்காக செய்கிறது. சமூகத்தில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்து உலகை அழகுற இயக்குபவர்கள் தொழிலாளர்கள் ஆனால், முதலாளித்துவம் அப்படிப்பட்ட பாட்டாளிகளை பிச்சைகாரர்களை போல கையேந்த வைத்துள்ளது, தொழிலாளர்களின  உரிமைகள்  காக்கப்பட ஒன்றுபடுவோம் என்று பேசினார்.

மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர். பாலாஜி அவர்கள் பேசும் போது அச்சகத் தொழிலாளர்கள் என்பவர்கள் தொழில்நுட்ப அறிவு மிகுந்தவர்களாக இருந்த போதும் அதற்குரிய ஊதியம் கொடுக்கப்படுவதில்லை இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மாற்றுக்கருத்து ஆசிரியரும் இந்த சங்கத்தின் சட்ட ஆலோசகருமான தோழர்.த.சிவக்குமார், சங்கம் பதிவு செய்தல் போன்ற நடைமுறை வேலைகள் மட்டுமே அந்த சங்கத்தை வெற்றிகரமாக ஆக்கிவிடாது. தொழிலாளர்கள் ஓன்று பட்டு முழுமையான அரசியல் புரிதலுடன் படிப்படியாக போராட்டங்களை கைகளில் எடுப்பதன் மூலமே சங்கம் வெற்றிகளை ஈட்டமுடியும் என்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட COITU வின் தென் இந்திய பொது செயலாளர் தோழர்.அ.ஆனந்தன் அவர்கள் தனது சிறப்புரையில் முன்பு தொழிற்சங்க இயக்கங்கள் வலுவாக இருந்த போது, அரசானது முதலாளிகளின் நலனை காப்பதற்காக சமரசம் செய்து வைக்கும் அமைப்பா  ொழிலாளர் நல அலுவலங்களை  துவங்கியது, ஆனாலும் தொழிற்சங்க இயக்கங்கள் வலுவாக இருந்ததால் தொழிலாளர் நல அலுவலகங்களை சிறப்பாக பயன்படுத்த  தொழிற்சங்கங்களால் முடிந்தது. ஆனால் தற்போத  ொழிற்சங்க இயக்கங்களும் வலுவாக இல்லை. அப்படி இருக்கும் சில தொழிற்சங்கங்களும் சமரசப் பாதையிலையே பயணிக்கின்றன. புதிய வரலாறு படைக்கப்பட்ட வேண்டிய இடத்தில் மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் இருக்கிறது.  இந்த சங்கம  ெற்றிப்பாதையில் அயராமல் பயணிக்கும் என்பதற்கு கட்டியம் கூறும் வகையில் இந்த சங்கத்தின்  செயல்பாடுகள் நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்துயுள்ளது என்று குறிப்பிட்டதோடு தொழிற்சங்க இயக்கத்தை வளர்த்தெடுக்க கைகொள்ளவேண்டிய விசயங்களை  விரிவாக எடுத்துரைத்தார்.

இறுதியாக கருத்தரங்கத்தில் கீழ் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அச்சகத்தில் வேலைசெய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பி.எப். , இ.எஸ்.ஐ. பிடித்தம் செய்யப்பட வேண்டும்.

ஒவ்வொரு தொழிலாளருக்கும் வருடத்திற்கு இரண்டு யூனிபார்ம் கொடுக்கப்பட வேண்டும்

தொழிலாளர்களுக்கு கட்டாயம  ோனஸ் வழக்கப்பட வேண்டும்

பல இடங்களில் நிர்ணக்கப்பட்ட மாத ஊதியம் என்பது இல்லாமல் இருக்கிறது. அனைவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

அரசு விடுமுறை நாள்களில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு வருடத்திற்கும் 15 நாள்கள் கேசுவல் லீவ் விடப்பட வேண்டும்.

அச்சகத் தொழிலாளர்களுக்கு என தனி நலவாரியம் அமைக்கப்பட வேண்டும்

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நூற்றுக்கணக்கான அச்சகத் தொழிலாளர்கள் கலந்து கொண்ட இந்த கருத்தரங்கம் அச்சகத் தொழிலாளர் மனதில  ுதிய நம்பிக்கை ஒளியை  ஏற்றியது என்றால் அது மிகை இல்லை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com