Contact us at: sooddram@gmail.com

 

தமிழிழத் தேசியக் கொடியைத் தனது கையில் ஏந்தாத சம்பந்தர் சிங்கக் கொடியை உயர்த்திப் பிடித்தார்

ஒரு நாளில் கூட தமிழிழத் தேசியக் கொடியைத் தனது கையில் ஏந்தாத சம்பந்தர் யாழ் மண்ணில் வைத்து சிறிலங்காவின் சிங்கக் கொடியை உயர்த்திப் பிடித்து தமிழ் இனத்திற்குத் துரோகம் செய்துள்ளார். இவர் எவ்வாறு தமிழ் இனத்திற்குத் தலைமை தாங்க முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி கேளிவி எழுப்பியுள்ளார். மே தினத்தை முன்னிட்டு ஐ.தே.கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய மே தின நிகழ்வு தொடர்பாக ஊடகமொன்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தையும் அதற்காக உயிர் கொடுத்த பொதுமக்கள் மற்றும் போராளிகளினதும் தியாகத்தை மறந்து அற்ப சொற்ப சலுகைகளுக்காக கூட்டமைப்பில் உள்ளவர்கள் தற்போது செயற்பட்டு வருகின்றனர். இது எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு தமது கொள்கை மற்றும் அரசியல் ரீதியாக பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பை தேசியத் தலைவரின் சிந்தனையின் அடிப்படையில் நாம் உருவாக்கினோம். அக்காலகட்டதில் நான்கு கட்சிகளைக் கொண்டு உருவாக்கும்போது உறுதியான கொள்கையுடனேயே உருவாக்கினோம். தமிழ் மக்களுக்குகான நிரந்தரத்தீர்வாக தமிழீழமே அமைய வேண்டும் என்பதே கொள்கையாகவும் உறுதியாகவும் இருந்தது. ஆனால் இவற்றையெல்லாம் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருப்பவர்கள் மறந்து ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளும் தீர்வே தமிழர்களுக்குத் தேவை எனவும் கூறிவருவதுடன் இன்று யாழ்ப்பாணத்தில் வைத்து மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் சம்பந்தன் அவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் சகல இனமக்களும் இணைந்து வாழும் தீர்வையே நாம் வேண்டி நிற்கின்றோம் என கூறியுள்ளார். இது தமிழ் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதுடன் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தனிநாட்டுக் கொள்கைக்கு ஆப்பு வைக்கும் செயலாக உள்ளது.

சம்பந்தன் உட்பட கூட்டமைப்பில் உள்ளவர்கள் தமது சுயநலத்திற்காகவும் அற்ப சொற்ப சலுகைகளுக்காகவும் இவ்வாறு செயற்பட்டு வருவதுடன் தமிழ் மக்களின் கொள்கையை சிறிலங்கா அரசிடமும் சிங்கள இனத்திடமும் அடவு வைக்க முற்படுகின்றனர். இது எதிர்காலத்தில் தமிழினத்திற்கு பாரிய பின்னடைவையும் தோல்வியையும் ஏற்படுத்தும்.

எமது இனம் யாரிடமும் கையேந்தியோ தலைகுனிற்தோ வாழ்ததில்லை. தமிழ் மன்னர்களின் வீரமிக்க ஆட்சி தொடக்கம் எமது விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் வரை எவரிடமும் அடிபணியாத வரலாறு உள்ளது. எமது விடுதலைப்போராட்டதின் காரணமாக இலட்சக்கணக்கான மக்களும் நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளும் தமது உயிர்களை தியாகம் செய்துள்ளனர். இதைக் கூட உணர்ந்து கொள்ளாத வகையிலேயே கூட்டமைப்பில் உள்ளவர்கள் தற்போது செயற்பட்டு வருகின்றனர்.

கூட்டமைப்பில் உள்ள இவர்கள் தமது சுயநலத்திற்காக ஒரு உள்னதமான கொள்கையுடன் அமைக்கப்பட்ட கூட்டமைப்பு என்ற அமைப்பின் பெயரைப்பயன்படுத்தி இவ்வாறு செயற்படுவது கண்டிக்கத்தக்கது. அவ்வாறு இவர்கள் செயற்படுவதாயின் கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்திக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்வதே ஆரோக்கியமானதாக இருக்கும் இல்லையேல் தொடர்ந்து இவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி எமது கொள்கைக்கு ஆப்பு வைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவார்களானால் எதிர்காலத்தில் சில சங்கடங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

தற்போது உள்ள மகிந்த அரசாங்கத்திற்கும் ரணில் தலைமையிலான ஐ.தே.கட்சிக்கும் பாரிய வேறுபாடு கிடையாது. இக்கட்சிகளும் இக்கூட்டத்தினரும் தமிழ் மக்களுக்கான விரோதப்போக்கைக் கொண்டவர்கள். தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை வழங்கக் கூடாது என்பதில் உறுதியான கொள்கை உள்ளவர்கள்.

ஐ.தே.கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே இனப்படுகொலைகள் ஆரம்பிக்கப்பட்டன ஆயிரக்கணக்கான தமிழர்கள் கிராமம் கிராமமாகவும் கூட்டம் கூட்டமாகவும் படுகொலை செய்யப்பட்டனர். இதுபோன்றே மாறிமாறி வந்த சிங்கள ஆட்சியாளர்களினால் எமது இனம் தொடர்ந்து அழிக்கப்பட்டது. இறுதியாக மகிந்த அரசு முள்ளிவாய்க்காலில் வைத்து இந்தியா மற்றும் சில சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை படுகொலை செய்தது.

அது மாத்திரமின்றி ஐக்கிய தேசியக் கட்சியே பேச்சு வார்த்தை என்ற போர்வையில் விடுதலைப்போராட்டத்திற்குள் பிழவை ஏற்படுத்தியும் போராட்டத்தை அழிக்கவும் அடிகோலியாக அமைந்திருந்தது. இந்த இலட்சணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு ஐ.தே.கட்சியுடன் கைகோர்க்க முடியும் என நான் கேட்க விரும்புகின்றேன்.

அது மாத்திரமின்றி வெட்கக்கேடான அதேவேளை தமிழ் மக்களால் என்றுமே மன்னிக்க முடியாத வரலாற்றுத் துரோகமொன்றையும் சம்பந்தன் செய்துள்ளார். மேதினக் கூட்ட மேடையில் வைத்து மிகக் கம்பீரமாக நின்று சிறிலங்காவின் சிங்கக் கொடியை அவர் உயர்த்திப் பிடித்துள்ளார். இதைவிட அவர் தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகம் எதுவாகவும் இருக்க முடியாது. இந்த வாள் ஏந்திய சிங்கக் கொடியே எமது இனத்தை அழிக்க சிங்களவர்களையும் சிங்கள அரசையும் ஊக்குவித்திருந்தது.

அது மாத்திரமின்றி இக்கொடிக்கு எதிர்ப்புத் தெரிவித்ததன் காரணமாகவும் அதை எரித்ததன் காரணமாகவும் எத்தனயோ இளைஞர்கள் சிங்கள அரசினால் படுகொலை செய்யப்பட்டனர். இவற்றையெல்லாம் மறந்து சம்பந்தர் சிங்கக் கொடியை ஏந்தியிருப்பது கேவலமான செயலாகும்.

இவர்களின் இச்செயற்பாடு நிட்சயமாக இன உணர்வுடனும் உறுதியான கொள்கையுடனும் உள்ள எமது மக்களுக்கு ஆத்திரத்தையும் வெறுப்பையும் எற்படுத்தும் என ஜெயானந்தமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com