Contact us at: sooddram@gmail.com

 

கடைசி காலத்தில் கைப்பற்றப்பட்ட பின்லேடன் ஆவணங்கள் இணையத்தில் வெளியீடு

அமெரிக்கப் படையால் கொல் லப்பட்ட ஒசாமா பின்லேடனின் அபோதாபாத் வீட்டில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களில் ஒரு சிலதை அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ளது. இதில் பின்லேடன் தனது கடைசி காலங்களில் தமது அமைப்பின் வலை பின்னலை கட் டுப்படுத்துவதில் சிக்கலை எதிர் கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது. அபோதாபாத்தில் அமெரிக்க இராணுவம் நடத்திய இராணுவ நடவடிக்கையின்போது கைப்பற் றப்பட்ட இந்த ஆவணங்கள் அமெரிக்க இராணுவ அகடமியின் ஆய்வுப் பிரிவின் ஊடாக நேற்று முன்தினம் இணையத்தில் வெளியிடப்பட்டது.

இதில் முஸ்லிம்கள் மீது எதிரிகளின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு அதிருப்தி அடைந்துள்ள ஒசாமா பின்லேடன் அமெரிக்க இலக்குகள் மீது பதில் தாக்குதல் நடத்த ஒசாமா வலியு றுத்தியுள்ளார். இதன்போது அமெரிக்க இராணுவத்தால் 175 பக்கங்கள் கொண்ட 17 ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பின்லேடன் கொல்லப்பட்டு ஓர் ஆண்டு பூர்த்தியாகும் வாரத்தில் இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் தொடக்கம் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையான காலப் பகுதியில் பதியப்பட்ட ஆவணங்களே இவ்வாறு வெளியி டப்பட்டுள்ளன. இதில் ஒசாமா பின்லேடனுக்கு அந்த அமைப்பின் வேறு தலைவர்கள் எழுதிய கடிதங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த ஆவணங்கள் மூலம் ஈரானுடன் அல் கொய்தா அமைப்பு இறுக்கமான உறவையே கொண்டிருந்தது என்பது தெரியவந்துள்ளது.

இதில் ஈரான் அரசு, கைது செய் யப்பட்டுள்ள அல்கொய்தா அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பின்லேடனின் உறவினர்களை விடுவிப்பது தொடர்பில் பின்லேடன் அதிருப்தியை வெளிப்படு த்தியுள்ளமை தெரியவந்துள்ளது. இது குறித்து அந்த ஆவணத்தில்அவர்கள் எம்முடன் பேச்சுவார்த்தைகளுக்கு வருவார்கள் என்றோ அல்லது எமது அழுத்தங்களுக்கு பதில் அளிப்பார்கள் என்றோர் எதிர்பார்க்க வேண்டாம்என கூறப்பட்டுள்ளது.

எனினும் பின்லேடன் பாகிஸ்தானில் தங்கியிருப்பதற்கு அந்நாட்டு நிர்வாக மட்டத்தில் எந்த ஆதரவும் வழங்கப்பட்டதற்கு ஆவணங்களில் ஆதாரங்கள் காணப்படவில்லை. அந்த ஆவணங்களில்பாகிஸ்தான் சகோதரர்களை நம்புங்கள்என கூறப்பட்டுள்ளது. எனினும் பாகிஸ்தான் உளவுப் பிரிவு குறித்து பின்லேடன் கவலை அடைந்திருந்தார் என்பது இந்த ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பின்லேடன் பாகிஸ்தானில் 9 ஆண்டுகள் அளவு வாழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தவிர, தமது குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் வருவதற்கும் வழிகாட்டி இருப்பது ஒசாமா பின்லேடன் எழுதிய கடிதத்தில் தெரியவந்துள்ளது. இதில் அவர் தமது குடும்பத்தினரை எவரும் கண்காணிக்கமாட்டார்கள் என்பதை உறுதியளித்துள்ளார். அத்துடன் தாம் இருக்கும் வீட்டில் தமது குடும்பத்தினர் மீது பாக். உளவுப் பிரிவினர் விசாரணை நடத்தியதும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா மீது தாக்குதல் தொடுக்கும்படி தமது அமைப்பினருக்கு பின்லேடன் வலியுறுத்தியிருப்பது ஒரு சில ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு தாக்குதல் நடத்தி னால் ஏனைய எதிரிகள் தானாக அழிந்துவிடுவதாக பின்லேடன் கூறியுள்ளார்.

பிரிட்டனை தாக்க எமக்கு வாய்ப்பு இருக்கிறது. எனினும் நாம் அதனைச் செய்து எமது முயற்சியை வீணாக்கத் தேவையில்லை. அமெரிக்காவை வீழ்த்துவதில் முழு கவனத்தையும் செலுத்துவோம். அதனை செய்தால் ஏனையோர் தானாக வீழ்த்தப்படுவார்கள்என ஒரு கடிதத்தில் ஒசாமா பின்லேடன் கூறியுள்ளார்.

இதில் ஓர் ஆவணத்தில் முஸ்லிம்களிடம் இருந்து ஜிஹாத் சித்தாந்தம் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதற்கு ஒசாமா பின்லேடன் தமது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார். கடந்த 2010 ஆம் ஆண்டு ஓசாமா பின்லேடன் எழுதிய கடிதத்தில்எமது தவறுகளை நிறுத்தி புதிய வடிவில் உருவாக வேண்டும்என கூறியுள்ளார்.

ஜிஹாத் மீது நம்பிக்கை இழந்தவர்கள் மீது நம்பிக்கை அளிக்கும் மிகப் பெரிய திட்டத்தை நாம் செயற்படுத்த வேண்டும்என ஒசாமா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

இதன்படி ஒசாமா பின்லேடனின் ஆவணங்களின் சுருக்கத்தை அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது. அதில் அவர் தமது அமைப்பின் செயற்பாடுகள் மற்றும் அமைப்பின் வலையமைப்பை கட்டுப்படுத்த முடியாதது குறித்து கவலையடைந்துள்ளார்.

* ஈராக்கில் ஏற்பட்ட தோல்விகளைத் தொடர்ந்து தமது ஈராக் வலையமைப்பை துண்டிக்குமாறு அல்கொய்தா தலைவர் கலிபோர்னியாவில் பிறந்த தனது ஊடக ஆலோசகருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

* பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் முஸ்லிம்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள் மற்றும் அவர்களதுவெறுக்கத்தக்க தவறுகள்குறித்து கவலை வெளியிட்டுள்ள ஒசாமா பின்லேடன் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.

* அல்கொய்தாவின் அரேபிய பிராந்தியத்திற்கு தமது கடுமையான வார்த்தை பிரயோகத்துடன் ஒசாமா பின்லேடன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் யெமன் அரசுக்கு அல்லது அந்நாட்டு இராணுவத்திற்கு தாக்குதல் நடத்துவதை விட்டுவிட்டு அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த அழுத்தம் கொடுத்துள்ளார்.

* அல் கொய்தா ஆதரவான சோமாலியாவின் அல் ஷபாப் ஆயுதக் குழுவின் நம்பிக்கைக்கான உத்தரவாதத்தை பெற பின்லேடன் முயற்சித்துள்ளார்.

இந்த ஆவணத்தில் உள்நாட்டு ஜிஹாத் செயற்பாடுகளில் பின்லேடன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். இதில் தற்கொலை தாக்குதலுக்கு ஒருவரை அனுப்புவதை நிறுத்தி குறைந்தது இருவரையாவது அனுப்புமாறும் அவர் தமது அமைப்பினருக்கு கூறியுள்ளார். இவ்வாறான தாக்குதலுக்கு ஒருவரை அனுப்புவதால் அதன் விளைவுகள் குறைவாகவே இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் ஒசாமா பின்லேடன் எழுதிய மற்றுமொரு கடிதத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அல்லது டேவிட் பெட்ரிஸ் பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானுக்கு வருகை தரும் சந்தர்ப்பத்தில் அவர்கள் மீது தாக்குதல் தொடுக்குமாறும் தமது அமைப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார். டேவிட் பெட்ரிஸ் தப்போது அமெரிக்க உளவுப் பிரிவான சி. ஐ. ஏ. யின் இயக்குனராக உள்ளார். முன்னதாக அவர் ஆப்கானிஸ்தானுக்கான சர்வதேச படையின் கட்டளை தளபதியாக இருந்தார்.

எனினும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பைடன் மீது தாக்குதல் தொடுக்க வேண்டாம் என ஒசாமா பின்லேடன் கூறியுள்ளார்.

பைடன் ஜனாதிபதிப் பதவிக்கு தகுதியானவர் அல்ல. அவர் அமெரிக்காவுக்கு தலைமை வகித்தால் அது சிக்கலை எதிர்நோக்கும்என பின்லேடன் கூறியுள்ளார்.

கடந்த 2011 ஏப்ரலில் ஒசாமா பின்லேடன் எழுதிய கடிதத்தில் அரபு எழுச்சி குறித்து எழுதியுள்ளார். இந்த எழுச்சியை இஸ்லாமிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com