Contact us at: sooddram@gmail.com

 

மா. சபையைக் கலைக்க ஜனாதிபதி எடுக்கும் முடிவு பாஸிச ஜனநாயக ஆட்சியின் உச்ச கட்டம் - துரைரெத்தினம்

ஜனாதிபதி கிழக்கு மாகாணசபையைக் கலைக்க எடுக்கும் முடிவு பாஸிச ஜனநாயக கொடுங்கோல் ஆட்சியின் உச்சக் கட்டமே என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈ.ஆர்.எல்.எப். முக்கியஸ்தருமான இரா. துரைரெத்தினம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபை விரைவில் கலைக்கப்படுவது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் முடியும் முன்பே மாகாண சபையைக் கலைக்க ஜனாதிபதி எடுத்திருக்கும் முடிவு தமிழ் மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.

உண்மையில் ஒரு மாகாணசபை கலைப்பு என்பது பின்வரும் காரணங்களில் ஏதாவது ஒன்றை அடிப்படையாகக் கொண்டு அமைதல் வேண்டும். ஒரு மாகாண சபையின் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். ஆனால் 4 ஆண்டுகள் நிறைவுற்றபின் அம்மாகாண சபையின் முதலமைச்சரின் ஒப்புதலுடன் தகுந்த காரணங்களைக் காட்டி மாகாணசபையை ஜனாதிபதி கலைக்க முடியும். தேசத்துரோகம் அல்லது ஊழல் மோசடியில் மாகாண சபை ஈடுபட்டால் கலைக்க முடியும். இந்த வகையில் 08.05.2012 அன்றுடன் கிழக்கு மாகாணசபைக்கு நான்கு வருடங்கள் முடிவுறுகின்றன.

இந்நிலையில் கிழக்கு மாகாணசபை கலைப்பு தொடர்பாக எழுந்துள்ள வதந்திகள் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை உருவாக்கி உள்ளதோடு தமிழ் மக்களின் உணர்வுகளையும் மனங்களையும் உதாசீனப்படுத்துவதாகவும் காயப்படுத்துவதாகவும் அமைந்துள்ளன. 1988 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாண சபை தமிழ்ப் பேசும் மக்களின் அபிலாஷைகளைத் தீர்ப்பதற்கான ஆரம்பப்படியாக உருவாக்கி பல்வேறு காரணங்களைக் காட்டி இழுத்தடிப்புச் செய்து 1990 இல் இச்சபையையும் அன்றைய ஆட்சியாளர்கள் கலைத்தனர். இன்று கிழக்கு மாகாண சபை மீண்டும் உருவாக்கப்பட்டு நான்கு வருடங்கள் நிறைவுற்றபோதும் கிழக்கு மாகாண சபைக்கான ஒரு கொடிச்சின்னத்திற்கு அங்கீகாரம் தரமறுக்கும் இந்த இனவாத சித்தாந்த அரசு விற்பனைவரி தொடர்பான அதிகாரத்தை ஒருவருடம் வலது கையால் தந்து அதை இடது கையால் பறித்துக் கொண்டது.

எந்த மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக இந்த மாகாண சபை உருவாக்கப்பட்டதோ அந்த மக்களின் யுத்தப் பாதிப்பின் இழப்புகளிலிருந்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான நிதியை ஒதுக்காமலும , பொலிஸ் , காணி தொடர்பான அதிகாரங்களை வழங்காமலும் பூச்சாண்டிகாட்டி வருகின்றது. காணி தொடர்பான விடயங்களில் இனவாதப் பாணியில் மத்திய அரசின் தலையீடுகள் அமைந்துள்ளன. கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிப் பிரச்சினையை கிழக்கு மாகாண சபையாலே தீர்க்க முடியாமல் இருக்கும் போது சிறுபான்மை மக்களின் அதிகாரப் பரவலாக்கல் விடயங்களை நடைமுறைப்படுத்துவது போல் கபட நாடகம் ஆடுகின்றது.

தங்களது சொந்த அரசியல் சுயலாபத்திற்காக மட்டும் சர்வ அதிகாரங்களையும் தன்வசம் கையில் வைத்துக் கொண்டு எடுத்த எடுப்பில் கிழக்கு மாகாண சபையைக் கலைப்பது தனது அதிகார வெறியையும் மமதையும் காட்டுவதோடு ஓர் அதிகாரத்தை எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யலாம் என்பதற்கு இதைவிட சிறந்த முன்னுதாரணம் வேறொன்றுமில்லை.

இந்த வகையில் எதிர்காலத்தில் அமையவிருக்கின்ற மாகாண சபைகளையும் இடைநடுவில் சொந்த நலன்களுக்காக கலைக்க மாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது.

சர்வதேச அரங்கில் தமிழ் மக்கள் மீதான பார்வையும் பதிவும் அதிகரித்திருக்கும் வேளையில் ஜெனிவா தீர்மானத்தின்படி நல்லிணக்க ஆணைக்குழுவின் முடிவை நடைமுறைப்படுத்துமாறும் இலங்கை விவகாரத்துக்காக அமெரிக்கா, இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டும் இந்திய தூதுக் குழு இலங்கை வந்து சென்ற நிலையிலும் இராஜ தந்திர நகர்வுகள் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக வெளிச்சத்துக்கு வரும் நிலையில் பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு அழைப்புவிடும் நிலையில் தீர்வு விடயம் தொடர்பான ஆரம்ப கருத்துக்கள் வலுவடைகின்றன.

வட, கிழக்கு விடயம் உட்பட ஏனைய அதிகாரப் பரவலாக்கலை செயற்படுத்த காலம் கனிகின்ற நிலையில் மத்திய அரசு இச் சாதகமான நிலைமையை இல்லாதொழிப்பதற்கு கிழக்கு மாகாணம் தங்களது கட்டுப்பாட்டில் உள்ளது எனக்காட்டி வடக்கில் மட்டும் பிரச்சினை உள்ளது எனக்கூறுவதற்கும் மாகாண சபையைக் கலைத்து தேர்தலை நடத்தி கிழக்கில் பிரச்சினை இல்லை எனக் கூறுவதற்கும் பல தசாப்தங்களாக போராட்டம் நடத்தி வலியுடன் இருக்கும் தமிழர்கள் எவரும் சோரம் போகமாட்டார்கள்.

இவ்வாறான நிலையில் அரசின் சூழ்ச்சிவலைக்குள் சிக்காமல் இருக்க தமிழ் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் திடசங்கற்பம் பூணவேண்டும். அவ்வாறு இணைந்தவர்களை எதிர்காலத்தில் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும். விரும்பியோ விரும்பாமலோ இத் தேர்தல் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டால் தமிழ் சமூகம் எமது போராட்ட வலிமையையும் வலிமைமிக்க தியாகத்தையும் பறைசாற்றுவதற்கு தயங்க மாட்டாது.

எமது சமூகம் கடந்த கால இழப்புக்களில் இருந்து எமது சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் ஒரு தீர்வுத் திட்டத்தை நோக்கி நகர்த்துவதற்காகவும் தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவதற்கும் அதிகாரப் பரவலாக்கலை உறுதியாக செயற்படுத்துவதற்கும் நானும் எங்களது கட்சியும் தமிழர்களின் ஒற்றுமையை பலமடையச் செய்வதற்கு செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் செயற்படும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடன் ஒற்றுமையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் ஒற்றுமையைப் பலப்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் செயற்பட முடிவெடுத்துள்ளோம் எனும் செய்தியையும் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com