Contact us at: sooddram@gmail.com

 

நேட்டோ மாநாடும் நேச நாடுகளின் நலனும்

நேட்டோ அமைப்பின் மாநாடு இன்றும் நாளையும் அமெரிக்காவின் சகானோ மாநிலத்தில் நடைபெறுகின்றது. ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தாயக மாநிலத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் தீர்மானங்கள் எதிர்கால செயற்பாடுகள் என்பன பராக் ஒபாமாவின் அடுத்த அரசியல் தலைவிதியை தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றும் என்பது எல்லோரதும் எதிர்பார்ப்பு. நேட்டோவின் இராணுவ நடவடிக்கைகள் கடந்த ஒரு தசாப்தமாகப் பாரிய சவால்களைச் சந்தித்து வரும் சூழ்நிலையில் இன்று மாநாடு ஆரம்பமாகியுள்ளது.

1999ம் ஆண்டு நேட்டோ மாநாடு கடைசியாக நடைபெற்ற பின்னர் இன்று இந்த அமைப்பின் தலைவர்கள் ஒன்றுகூடியுள்ளனர். 1949ம் ஆண்டு இந்த நேட்டோ அமைப்பு ரஷ்யாவின் சவாலுக்கு எதிராகத் தோற்றம் பெற்றது. இன்றைக்கு 28 நாடுகள் இந்த அமைப்பிலுள்ளன. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், டென்மார்க், பெல்ஜியம், ஐஸ்லாந்து, இத்தாலி, நோர்வே, நெதர்லாந்து உள்ளிட்ட முக்கிய நாடுகளும் நேட்டோவில் உள்ளதுடன் சோவியத் யூனியன் உடைந்து சிதறிய போது அதிலிருந்த சில நாடுகளும் இதில் இணைந்து கொண்டன. நேட்டோவின் தலைமைக் காரியாலயம் லண்டனில் இயங்கி பின்னர் பிரான்சுக்கு மாற்றப்பட்டு 1966ம் ஆண்டு நிரந்தரமாக புருஸெல்ஸிற்கு மாற்றப்பட்டது. பாதுகாப்பையே முக்கிய இலக்காகக் கொண்டு நேட்டோ செயற்படும். 1999ம் ஆம் ஆண்டு நேட்டோ மாநாடு கூடிய இரண்டு வருடத்தில் 2001 அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டதன் எதிரோலியே நேட்டோவின் கட்டமைப்பையும் கடமைகளையும் கூர்மையடையச் செய்தன. பயங்கரவாதத்துக்கெதிரான போர் என்ற பெயரோடு பல நாடுகளில் படையெடுக்கப்பட்டன.

இந்தப் படையெடுப்புக்களின் எச்ச சொச்சங்களை லிபியா, ஈராக், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், சோமாலியா போன்ற நாடுகளில் காணலாம். அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் படையெடுப்புகள், இராணுவ நடவடிக்கையால் எத்தனையோ நாடுகளில் ஆட்சிமாற்றங்கள்- புரட்சிகள் ஏற்பட்டுள்ளன. நீண்டகாலமாக தொடரும் இந்த இராணுவ நடவடிக்கைகளால் நேட்டோ அங்கத்துவ நாடுகளிடையே இழுபறிகள். மனக் கசப்புகளும் ஏற்பட்டமை தெரிந்ததே. சர்வதேச பயங்கரவாதம் ஆழமாக பலநாடுகளிலும் அகலக் காலூன்றியுள்ளதால் நேட்டோவைப் பயன்படுத்த வேண்டுமென்ற தேவையுடனே இன்றைய மாநாடு ஆரம்பித்துள்ளது.

ஆப்கானிஸ்தானைக் கட்டி எழுப்புதல், பாகிஸ்தான் சிரியா, யெமன் உள்ளிட்ட நாடுகளின் எதிர்கால நிலைமைகள் பாதுகாப்புகள் அமெரிக்கா, ஐரோப்பாவிற்கு பயங்கரவாதத்தால் ஏற்படுள்ள அபாயங்கள் அவற்றை இல்லாமற் செய்வதற்கான உபாயங்கள் இந்த இரண்டு நாள் மாநாட்டில் சூடுபிடிக்கும். பாகிஸ்தானில் நேட்டோ விமானங்களின் குண்டு வீச்சக்களால் ஏற்பட்டுள்ள வொஷிங்டன்- இஸ்லாமாபாத் முரண்பாடுகளைக் களையவும் இங்கு முயற்சி மேற்கொள்ளப்படும். அண்மையில் பாகிஸ்தான் பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் கைபர் கணவாயை மீண்டும் திறந்த ஆப்கானிஸ்தானுடனான எல்லைகளைத் திறப்பது சம்பந்தமாகக் கடுமையான விவாதங்கள் இடம்பெற்றன. பாகிஸ்தான் பிரதமர் நேட்டோ மாநாட்டில் பங்கேற்றுள்ளார். சர்வதேச நாடுகளின் தலைவர்களால் கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள இஸ்லாமாபாத் வேறு வழியின்றி கைபர்கணவாயை மீண்டும் திறக்கும்.

இதன் மூலம் ஆப்கானிஸ்தானிலுள்ள ஆயிரக்கணக்கான நேட்டோ வீரர்களுக்கான உணவு, மருந்து, ஆயுதம், எரிபொருள் என்பன மீண்டும் கொண்டு செல்லப்பட பாகிஸ்தான் சம்மதிக்கும் என்று எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். நேட்டோ படைகளின் விமானக் குண்டு வீச்சில் 21 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறான விமானத்தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் செயல்படுகின்றமை பாகிஸ்தானில் சாதாரண விடயமாகிப் போய்விட்டது. பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என்று வகைதொகையின்றி பொதுமக்கள் கொல்லப்படுவதால் பாகிஸ்தானில் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள், வன்முறைகள் என்பன எழுவதுண்டு. கடைசியாக 21 இராணுவ வீரர்கள் பலியானதையடுத்து பாகிஸ்தான் அரசாங்கம் ஆப்கானிஸ்தான் எல்லையுடனான கைபர்கனவாய் பாதையை முடியது. இதனால் அமெரிக்காவும் நேட்டோவும் வழியின்றித் தவித்தது.

இந்தப் பாதை தொடர்ந்தும் முடப்பட்டுக் கிடந்ததால் ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோபடையினர் பட்டினியால் வாட பேண்டிவரும். இதனால் இவ்வளவு முக்கியம் வாய்ந்த பாதையை திறக்கவைக்கவும், வொஷிங்டன்- இஸ்லாமாபாத் உறவுகளைத் தொடர்ந்து பேணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டுக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ படைகள் அனைத்தும் வாபஸ் பெறப்படவுள்ளன. இன்னுமுள்ள இரண்டு வருடங்களில் ஆப்கானிஸ்தான் வீரர்களை நன்றாகப் பயிற்றுவிக்க வேண்டியுள்ளது. எஞ்சியுள்ள தலிபான், அல்கைதா முகாம்களையும் போராளிகளையும் அழித்து ஒழிக்க வேண்டிய தேவையும் உள்ளது. இதனால் கைபர் கணவாயைத் திறந்தே ஆகவேண்டும் என்ற தேவை நேட்டோவுக்கு எழுந்துள்ளதில் வியப்பில்லை. பாகிஸ்தானின் எண்ணெய் விநியோக கம்பனியின் தலைவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்நாட்டின் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் கணவாய்ப் பாதைகள் திறக்கப்படவுள்ளதால் எண்ணெய், பெற்றோல் என்பவற்றை தயார் நிலையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

நாற்பது அடி நீளமுள்ள பாரிய கெண்டைனர்களில் எண்ணெய் எடுத்துச்செல்ல 100 டொலர் அறவிடப்பட்டது. இப்போது 320 அமெரிக்க டொலரிலிருந்து 500 அமெரிக்க டொலர்வரை இந்த கெண்டெய்னர்களில் ஏற்றிச் செல்லும் எண்ணெய்களுக்கு அறவிடப்படவுள்ளன. இதே போல மருந்து, உடை, ஆயுதம் உள்ளிட்டவையும் கைபர் கணவாயூடாக மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதால் கைபர் கணவாய் பாதைகளிலுள்ள பிரேஞ்சுப் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஏ.ஜீ.எம். தெளபீக்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com