Contact us at: sooddram@gmail.com

 

கொழும்பு, அநுராதபுரம், வவுனியா, மன்னார்

தமிழ்க் கைதிகளின் வழக்குகளை துரிதமாக்க 4 சிறப்பு நீதிமன்றங்கள்

தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை துரிதமாக விசாரணை செய்வதற்காக ஒரு மாத காலத்தினுள் கொழும்பு, அநுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் மேல் நீதிமன்றங்களை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களுடன் தொடர்புள்ள வழக்கு ஆவணங்களை ஒருமாத காலத்தினுள் நிறைவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக சட்ட மா அதிபர் திணைக்களத்தில் விசேட பிரிவொன்றை அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். முன்னாள் புலி உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதமாக நிறைவு செய்து அவர்களை விடுதலை செய்யவோ அல்லது வழக்குத் தொடரவோ அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப் பட்டுள்ள முன்னாள் பலி உறுப்பினர்கள் தம்மை விடுதலை செய்யவோ வழக்குகளை துரிதப்படுத்துமாறோ கோரி உண்ணா விரதமிருப்பது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று முன்தினம் சபையில் விசேட கூற்றொன்றை வெளியிட்டார். இது தொடர்பான அரசாங்கத்தின் பதிலை வெளியிடுகையிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் மேலும் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது,

சம்பந்தன் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தது போன்று அரசாங்கம் எந்த ஒரு அரசியல் கைதியையும் தடுத்து வைக்கவில்லை. இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது.

புலிகள் இயக்கத்தினால் முன்னெடுக்கப் பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிப்ப வர்களும் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு குற் றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டவர்களுமே சிறைகளில் உள்ளனர். குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்ட 359 சந்தேக நபர்களும் வழக்கு தொடர்வதற்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள 309 பேரும் இதில் அடங்குவர். இவர்கள் அரசியல் கைதிகளல்ல. இவர்களை அரசியல் கைதிகளாக காண்பித்து பாராளுமன்றத்தையும் சர்வதேச சமூகத்தையும் தவறாக வழிநடத்த சம்பந்தன் நடவடிக்கை எடுத்தார். இது குறித்து கவலை அடைகிறோம்.

இவர்களிடையே உள்ள அங்கவீனர்கள் புலிகளுக்காக பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாலே அங்கவீனமடைந்தனர். இவர்கள் அப்பாவி அங்கவீனர்களல்ல. மோசமான பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டே இவர்கள் அங்கவீனமுற்றனர். சம்பந்தன் எம்.பி. கூறுவது போல இவர்களை இலகுவாக விடுவிக்க முடியாது.

கைது செய்யப்பட்ட சில சந்தேக நபர்களிமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட சில முன்னாள் புலிகள் கைது செய்யப்பட்டனர். மேற்படி நபர்கள் மோசமான பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்பதால் மீண்டும் விசாரணை செய்வதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறு அளவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட 359 பேரினதும் விடுதலை தொடர்பான பிணை நீதிமன்றத்தின் பொறுப்பிலே உள்ளது.

நீதிமன்ற செயற்பாடுகளை இடைநிறுத்தி இவர்களை விடுவிக்கும் முறை எதுவும் கிடையாது. நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவில் நிரபராதிகளாக நிரூபணமானால் அவர்கள் விடுவிக்கப்படுவர்.

672 முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு பெற்று வருகின்றனர். இது தவிர 2011 ஆரம்பப் பகுதி முதல் பல் வேறு சந்தர்ப்பங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி 241 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்பு வைத்திருந்த நபர்கள், பிரதேசங்கள் குறித்து தகவல் திரட்டுவது அடங்கலான பல விசாரணைகளை முன்னெடுக்க வேண் டியுள்ளது. இதற்கு கூடுதல் கால அவகா சம் தேவை. அதன் பின்னர் அவர்கள் துரி தமாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவர்.

வழக்குத் தொடர எதிர்பார்க்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதமாக நிறைவு செய்து அவர்களை விடுவிக்கவோ வழக்கு தொடரவோ அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கும். இதற்காக சிறைச்சாலை மற்றும் புனர் வாழ்வு அமைச்சு துரித திட்டமொன்றை தயாரித்துள்ளது.

இதன் பிரகாரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்வதற்காக கொழும்பு, அநுராதபுரம், மன்னார் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் ஒரு மாத காலத்தினுள் மேல் நீதிமன்றங்கள் நிர்மாணிக்கப்படும்.

சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ள வழக்குத் தொடர்பான ஆவணங்களை ஒரு மாத காலத்தினுள் தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக சட்ட மா அதிபர் திணைக்களத்தில் விசேட பிரிவொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுய விருப்பத்தின் பேரில் புனர் வாழ்வு பெற விரும்புபவர்களில் தகுதியானவர்களுக்கு துரிதமாக புனர்வாழ்வு அளிப்பது தொடர்பில் நீதிமன்ற உத்தரவை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறைச்சாலையில் உள்ள 668 முன்னாள் புலி உறுப்பினர்களில் 229 பேர் மட்டுமே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களை விடுவிக்கவோ துரிதமாக வழக்கு விசாரணைகளை முன்னெடுக்கவோ நடவடிக்கை எடுக்குமாறே அவர்கள் கோரியுள்ளனர். இவர்களில் எவரும் நோய் வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படவில்லை. சிலர் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 11,696 பேர் இதுவரை சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். 7 புனர்வாழ்வு நிலையங்களில் தற்பொழுது 4 மட்டுமே உள்ளன.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களில் மோசமான பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய வர்களாகும். இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரவோ புனர்வாழ்வு அளிக்கவோ அல்லது விடுவிக்கவோ நடவடிக்கை எடுப்பது குறித்து நீதி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம்

கடந்த 2 ஆம் திகதி நடந்த கூட்டத்தில் இவர்களுக்கு எதிரான வழக்குகளை துரிதப்படுத்துவது தொடர்பில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. 22 ஆம் திகதி நடந்த கூட்டத்தில் அவற்றை ஒரு மாத காலத்தினுள் முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.

புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் புலி உறுப்பினர்களில் 75 பேர் எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதி சமூகத்தடன் இணைக்கப்படவுள்ளனர். ஏனையவர்கள் புனர்வாழ்வு செயற்பாடுகள் நிறைவடைந்த பின்னர் விடுவிக்கப்படுவர்.

பரமலிங்கம் தர்மகாந்தன் எனும் மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் இராணுவத்திற்கும் தொடர்பு கிடையாது. வடக்கில் இராணுவம் இருப்பதற்கும் இந்த சம்பவத்திற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படும் தறவான கருத்தை மக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

ஈட்டிய சுதந்திரத்தையும் சமாதானத்தையும் பாதுகாக்க வேண்டியது சகல மக்களினதும் பொறுப்பு என ஜனாதிபதி படை வீரர் நினைவு தின விழாவில் கூறியிருந்தார். மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்காதிருக்கவே வடக்கு, கிழக்கு பகுதிகளில் படையினர் தொடர்ந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர்.

இன ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கும் அதேவேளை மோசமான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட புலி உறுப்பினர்களுக்குக் கூட புனர்வாழ்வு வழங்க அரசாங்கம் நடவடி க்கை எடுத்து வருகிறது. கைதிகள் தொட ர்பில் மனிதாபிமானமாக அரசாங்கம் செயற் படுகிறது. எஞ்சியுள்ள கைதிகள் தொடர்பில் தேவையான சட்ட செயற்பாடுகள் உட் பட்டதாக துரித நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com