Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்க - வவுனியாவில் போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வவுனியாவில் இன்று சத்தியாக்கிரக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை ஒன்பது மணியளவில் ஆரம்பமான இந்த சத்தியாக்கிரக போராட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்யவேண்டும், அல்லது அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும , பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீரங்கா உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்...

அரசாங்கத்தின் உறுதிமொழிக்கிணங்க கைதிகளின் உண்ணாவிரதம் ஒத்திவைப்பு!

தடுப்புக் காவலிலுள்ள அரசியல் கைதிகளின் கோரிக்கைகளுக்கு ஒருமாத காலத்தினுள் தீர்வு காண்பதாக நேற்று நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டதையடுத்து கைதிகளின் உண்ணாவிரதம் ஒருமாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்...

நாடாளுமன்றில் நேற்று அமைச்சர் கூறிய வாக்குறுதியை இன்று - கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கைதிகளிடம் எடுத்துக் கூறினோம். என்னுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான விநாயகமூர்த்தி மற்றும் ஸ்ரீதரன் ஆகியோரும் அங்கு வந்திருந்தனர். இந்த வாக்குறுதிகளை தாங்கள் எப்படி நம்புவது என்று கைதிகள் கேட்டார்கள். நாங்கள் கூறினோம் நீங்கள் வாக்குறுதியை நம்பி உண்ணாவிரதத்தை கைவிடத் தேவையில்லை. ஆனால், உங்கள் பிரச்சினைகளை ஒரு மாதகாலத்தில் தீர்த்து வைப்பதாக வாக்குறுதி தந்திருக்கிறார்கள். ஆகையினால் அந்த ஒரு மாத காலத்திற்காவது உங்களின் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டோம்.

நாங்கள் விடுத்த இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு விளக்கமறியல் சிறையிலுள்ள அரசியல் கைதிகள் தங்களது உண்ணாவிரதத்தினை ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தனர். இவர்களது முடிவினை ஏனைய சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளுக்கும் அறிவித்திருக்கிறோம். எனவே அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறதுஎன்று கூறினார்.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் நடைபெற்றுவரும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் தொடரும்எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமரந்திரன் மேலும் தெரிவித்தார்.

நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, அவர்கள் குற்றமிருப்பின் வழக்கு தாக்கல் செய்யுமாறும் அல்லது விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தியே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது...

புலி என கூறி சரணடைந்தவர்களை அரசு புனர்வாழ்வளித்து விடுதலை செய்கிறது: ஆனால் புலி என்ற சந்தேகத்தில் கைது செய்தவர்களை சிறையில் வைத்துள்ளளனர்-.ஸ்ரீரங்கா!

தமிழ் அரசியல் சிறை கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைப்பதானால் கருணா, பிள்ளையான் மற்றும் கேபி ஆகியோரையும் தடுத்து வைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து இன்று காலை முதல் வவுனியா நகர சபை மைதானத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.

இவ்வுண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், செல்வன் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா, ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு ஊடகவியலாளர்களில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா,

"பல அரசியல் கைதிகளை சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்துள்ளனர்.
ஆனால் இந்த நபர்களுக்கு பூரணமாக செயற்பட அனுமதி அளித்த தலைமைத்துவம் வழங்கிய கருணா அம்மான், கேபி, பிள்ளையான் போன்றோர் சுதந்திரமாக பாராளுமன்றில் உள்ளனர். அரச வீடுகளில் உள்ளனர். அவர்களுக்கு நீர், உணவு வழங்கியவர்கள் 10, 15 வருடங்கள் சிறையில் சந்தேகத்தின் பேரில் உள்ளனர். இது எவ்வகையில் நியாயம் என நாம் கேட்கிறோம். இவர்களை சிறையில் வைத்திருப்பதானால் கேபி, கருணா அம்மான், பிள்ளையான் போன்றோரையும் உள்ளே எடுக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு சட்டம் மற்றையவருக்கு இன்னொரு சட்டம் என்பதை நாம் நிராகரிக்கிறோம். கைதிகள் சிறையில் உள்ளனர். இறுதி யுத்தத்தில் தாங்கள் புலி என கூறி சரணடைந்தவர்களை அரசு புனர்வாழ்வளித்து விடுதலை செய்கிறது. ஆனால் புலி என்ற சந்தேகத்தில் கைது செய்தவர்களை சிறையில் வைத்துள்ளளனர்.

இவர்களையும் புனர்வாழ்வு செய்யுங்கள் அல்லது நீதிமன்ற வழியில் வழக்குத் தொடரவும் அப்படியில்லாவிட்டால் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். யுத்தம் முடிந்து இன்னமும் இவர்களை தடுத்து வைத்திருப்பது மேலும் இனவாதத்தை தூண்டும் செயலாகும்".

இவ்வாறு
அவர் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com