Contact us at: sooddram@gmail.com

 

பாலையூற்று தூய லூர்து திருநாள் இன்று

தூய லூர்து அன்னையின் வருடாந்த வைபவம் மிக விமர்சையாக இன்று பாலையூற்றில் கொண்டாடப்படுகி ன்றது. திருநாளில் அடையாளமாக அன்னையின் விழாக் கொடி கடந்த 18 ஆம் திகதி ஆலய வளவில் அடியார்களின் பங்களிப்புடன் ஏற்றி வைக்கப்பட்டது. இந்த ஆரம்ப வைபவத்தில் திருகோணமலை மாவட்டத்தை சார்ந்த கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அன்னையின் ஆலயம் திருகோணமலை நகரிலிருந்து சுமார் மூன்று மைல்களுக்கப்பால் அமைந்துள்ள பாலையூற்று எனும் பிரதேசத்திலுள்ளது. இப்பிரதேசம் அன்று கொடிய மிருகங்களின் அட்டகாசத்தை கொண்ட ஒரு பிரதேசமாகும். இன்று இப்பிரதேசம் மிகவும் அபிவிருத்தியடைந்து பல துறைகளிலும் முன்னேற்றம் கண்ட பிரதேசம் என்று கூறினால் தவறில்லை.

19 ஆம் நூற்றாண்டில் எமது நாடு முழுவதும்வைசூரிஎனும் கொடிய நோய் பரவி இருந்தது. இந்த கொடிய நோயால் மக்கள் ஆயிரக் கணக்கில் இறக்க நேரிட்டது.

அவ்வேளையில் திருமலைமட்டு நகர் மறைமாவட்ட ஆயராக செயல்பட்ட அதிவணக்கத்திற்குரிய ஹெம்பேக்கர் அடிகளார் அன்னையின் திருமுகம் பார்த்து மன்றாடினார்.

அவரின் மன்றாட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த கொடிய நோயான வைசூரி இருந்த இடம்தெரியாமல் ஓடி ஒளிந்து கொண்டது.

மக்கள் சாவிலிருந்து காப்பாற்றப்பட்டனர். அதற்கு நன்றிக்கடனாக அன்றைய ஆயர் அன்னைக்கு பாலையூற்றுப் பகுதியில் அழகான ஆலயமொன்றை அமைத்தார். அது ஆரம்பத்தில் யாத்திரிகர் ஸ்தலமாக இருந்தது.

நாளடைவில் அன்னையின் ஆலயம் சகல தேவைகளையும் பூர்த்தி செய்யும் சிறப்பான ஆலயமாக திகழ்ந்தது. பங்குத் தந்தையர்கள், மற்றும் அங்குள்ள மக்களின் பங்களிப்பால் இன்று பாலையூற்று லூர்து ஆலயம் பாரிய அபிவிருத்தியடைந்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

அந்த ஆலயம் துரித அபிவிருத்தியடைய காரணமாக இருந்தவர்கள், அப்பங்கிற்கு கடமையின் நிமித்தம் இட மாற்றலாக வரும் சகல பங்குக் குருமார்களே. அவர்கள் தத்தமது காலப் பகுதியில் தங்களது பெயர் நிலைகக் மிக அற்புதமான அடிப்படைத் தேவைக்கான பல மேம்பாட்டுப் பணிகளை அங்கு புரிந்துள்ளார்கள்.

அன்றைய வடக்குகிழக்கு மாகாண கல்வி அமைச்சுக் கூட அன்னை லூர்துவின் பெயரில் அங்கு பாடசாலை ஒன்றை நிர்மாணித்துக் கொடுத்துள்ளது. உண்மையில் அந்தப் பாடசாலை அங்குள்ள மாணவர்களுக்கு ஓர் அரிய வரப்பிரசாதமென்றே கூற வேண்டும்.

ஏனெனில் பாலையூற்றில் இருந்து திருகோணமலை நகருக்கு செல்ல வேண்டுமெனில் மூன்று மைல் தூரத்தை கடக்க வேண்டும். ஆனால் காலத்தையும், பணத்தையும் மிகுதிப்படுத்த அங்குள்ள மாணவர்களுக்கு அப்பாடசாலை உதவியுள்ளது. இதைவிட கல்வி அபிவிருத்திக்கான பல அடிப்படை வசதிகள் கூட அங்கு முழுமையடைந்துள்ளன.

அன்னை லூர்து தன்னை அண்டிவரும் அடியாளர்களை என்றுமே கைவிட்டதில்லை. அவரின் அருளும், ஆசியும் பெற்று பலன் பெற்றவர்கள் பலர்.

தூய அன்னை லூர்துவின் ஆலயம் திருகோணமலை மாவட்டத்தில் பழமை வாய்ந்ததும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்களில் அதுவும் ஒன்றாகும்.

அன்னையின் ஆலயம் அமைந்துள்ள இடம் அடர்ந்த காட்டுப் பகுதியாக அன்று காட்சியளித்தாலும் இன்று பல புதிய குடியேற்றங்களினால் அப்பகுதி அச்சம் பீதியற்ற பகுதியாக காட்சியளிக்கின்றது.

கொடிய மிருகங்கள் அன்று அங்கு வாழ்ந்தமைக்கான பல தடயங்கள் இன்று கூட அங்கு காணக்கூடியதாகவுள்ளது. இயற்கை அழகினால் நிரம்பி வழியும் திருகோணமலை நகர்ப்புறத்திற்கு அன்னையின் ஆலயப் பகுதியும் மேலும் மெருகூட்டுகின்றது.

அன்னையின் பெயரில் இலங்கையில் பல ஆலயங்களை காணக்கூடியதாக இருந்தாலும் அதில் மிகவும் பிரசித்தம் பெற்ற ஆலயம் இராகம தேவத்தை பகுதியிலுள்ளது.

இராகம பிரதேசத்திலுள்ள மக்கள் தூய லூர்து அன்னையின் பேரில் மிகுந்த பக்தியை வைத்துள்ளார்கள். அதற்கு நல்லதொரு உதாரணம்தான் அப்பகுதியிலுள்ள வீதி ஓரங்களிலும், வீடுகளிலும், அன்னையின் திருச் சுருபங்களை வைத்து மக்கள் வழிபடுவதே.

கருங்கற் குகைக்குள் தனது இரு கரங்களையும் கூப்பிய வண்ணம் வானத்தை அன்னார்ந்து பார்த்து முற்ரோசா செடியை காலால் மிதித்துக் கொண்டு காட்சி தரும் அன்னை லூர்து பலரின் குடும்பக் காவலராக விளங்குகின்றார்.

பலர் தங்கள் பெண் குழந்தைகளுக்கு அன்னையின் பெயரைச் சூடி வைத்திருப்பதன் மூலம் அவர் மேல் உள்ள பக்தியை அது வெளிக்காட்டு கின்றது.

இன்று நமது நாட்டில் ஓர் அமைதியான சூழல் நீண்ட காலத்திற்குப் பின் நிலவுகின்றது. இந்தச் சூழல் நீடித்து நிலைக்க வேண்டுமென்பது அனைவரினதும் அவா. ஆனால் இடைக்கிடையே ஏற்படும் அமைதியற்ற சூழலினால் பலர் பல அசெளகரியங்களு க்கும் அனர்த்தங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். இவைகள் நீடிக்காமல் நிரந்தரமான சுதந்திர நிலையும், அமைதியான சூழலும் எம் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்று இன்றைய திருநாளில் விசேடமாக பிரார்த்திப்போமாக.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com