Contact us at: sooddram@gmail.com

 

ரூ.3கோடி 80 இலட்சம் வங்கி அட்டையில் மோசடி

பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, புதுக்குடியிருப்பு, தர்மபுரம், களுவாஞ்சிக்குடி பிரதேசங்களைச் சேர்ந்த ஐவர் கைது

மற்றவர்களுக்கு சொந்தமான வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி தனியார் வங்கிகளிலிருந்து சுமார் மூன்று கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடியாக பெற்ற ஐந்து சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்பல்வேறு பிரதேசங்களில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 46 வங்கி அட்டைகளையும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் ஒரு தொகையையும் சி. ஐ. டி. யினர் பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார். மிகவும் சூட்சுமமான முறையில் பண மோசடிகளை மேற்கொண்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தர்மபுரம், பருத்தித்துறை, வல்வெட்டி த்துறை, புதுக்குடியி ருப்பு மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த ஐந்து சந்தேக நபர்களையே கைதுசெய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சி. ஐ. டியினரால் கைது செய்யப்பட்ட மேற்படி மோசடி கும்பலில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த இரு பெண்களும் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது: 2012 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி காலை 9.00 மணி நேரமளவில் பிரான்ஸ் கனடா வங்கிகளினால் விநியோகிக்கப்பட்ட வங்கி அட்டைகளை பயன்படுத்தி ஏ. ரி. எம். இயந்திரங்கள் மூலம் 3 கோடி 28 இலட்சத்து 71 ஆயிரம் ரூபா பணம் மோசடியாக பெறப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய விசாரணைகளை ஆரம்பித்த சி. ஐ. டி.யினர் மூன்று கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் மோசடியாக தன்னியக்க இயந்தி ரங்களி லிருந்து வங்கி அட்டைகளை பயன்படுத்தி பெறப்பட்டுள்ளமை உறுதி செய்துள்ளனர். இதனை அடுத்து விசாரணைகளை பல்வேறு கோணங்களில் மேற்கொண்டு வந்த சி. ஐ. டி.யினர் சுமார் ஒரு வருட காலம் மேற்கொண்ட விசாரணைகளுக்கு பின்னர் கடந்த மாதம் 24 ஆம் திகதி கொழும்பில் வைத்து தர்மபுரம், பருத்தித் துறை மற்றும் வல்வெட்டித்துறை பிரதேசங்களைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களையும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த பெண் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கொழும்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களிடமிருந்து 46 வங்கி அட்டைகளையும் அவர்களது வங்கிக் கணக்குகளிலிருந்து 19 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த 25 ஆம் திகதி புதுக்கடை 3 ஆம் இலக்க நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர்களை இம்மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பில் தொடர்ச்சி யாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி இந்த மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை யாழ்ப்பாணம் பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப் படையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். இவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின  அடிப்படையில் அவரது கள்ளக் காதலியான களுவாஞ்சிக்குடி பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணை மடக்கிப் பிடித்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 14 இலட்சத்து 86 ஆயிரத்து 797 ரூபா பணத்தையும் அவரது வங்கிக் கணக்கிலிருந்து 89 இலட்சத்து 27 ஆயிரத்து 811 ரூபாய் பணத்தையும் பெற்றுள்ளனர். சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸாரின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு தொடர்ந்தும் விசாரணைக்குட் படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com