Contact us at: sooddram@gmail.com

 

இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம்

இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கம் என பெயர் மாற்றம்

இலங்கைத் தோட்டத் தொழிலாளர் (செங்கொடி) சங்கம் என்ற பெயரை இலங்கை தொழிலாளர் செங்கொடிச் சங்கம் என பெயர் மாற்றம் செய்ய இறுதியாக நடந்த பொதுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் மேனகா கந்தசாமி தெரிவித்துள்ளார். இலங்கை தோட்டத் தொழிலாளர் (செங்கொடி) சங்கம் நீண்டகால தொழிற் சங்க வரலாற்றை கொண்ட இடதுசாரி தொழிற்சங்கமாகும். இச்சங்கத்தில் நீண்ட காலமாக பொது செயலாளராக செயற் பட்டு வந்த தோழர் ஓ.ஏ. இராமையா 18ம் திகதி மே மாதம் காலமானார். இவர் நீண்டகாலமாக சுகயீனமுற்று இருந்த காலகட்டத்தில் சங்கத்தின் நிர்வாக குழு சங்கத்தை நடாத்தி சென்றது. இவரது கடைசி காலகட்டத்தில் ஒரு பொதுச் செயலாளராக சங்கத்துக்கு இவரது பங்களிப்பை செய்ய முடியாது போனதற்கு இவர் சுகயீனமுற்ற நிலை ஒரு முக்கிய காரணமாகும். இதன் காரணமாக சங்கத்தின் நிர்வாக குழு எடுத்த தீர்மானத் திற்கிணங்க வருடாந்த பொதுக் கூட்டம் 21.04.2013 அன்று நடைப்பெற்றதுடன், சங்கத்தின் பொதுச் செயலாளராக மேனகா கந்தசாமி அவர்கள் நியமிக் கப்பட்டார்.

இவர் கடந்த ஆறு வருட காலமாக சங்கத்தின் தலைவராக செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல சங்கத்தின் தலைவராக இச் சங்கத்தில் முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிய தோழர் வி. கே. முத்து லிங்கம் நியமிக்கப்பட்டார். பொருளாளராக நியமிக்கப்பட்டவர் ஏற்கனவே இச் சங்கத்தில் பொருளாளராக செயற்பட்டு வந்த தோழர் எஸ். ஆர். ஸ்டீபன் ஆவார். இவரும் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இச் சங்கத்தில் சேவையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஒரு தொழிற்சங்கம் என்பது தனிநபரின் சொத்தல்ல. அது தொழிலாளர்களின் பதிவு செய்யப்பட்ட ஸ்தாபனம். கடந்த காலங்களில் சங்கத்தின் வாகனங்கள், கட்டடங்கள் தனிநபர் ரீதியாக விற்கப் பட்டதாக செய்திகள் சங்கத்தின் நிர்வாக குழுவுக்கு கிடைத்துள்ளன. இன்றும் சங்கத்தின் ஹட்டன் தொழிற்சங்க காரி யாலயத்தை கடந்த ஆறுவருட காலமாக சங்க அபிவிருத்தியில் ஒரு துளியும் பங்குபற்றாத சில அந்நியர்கள் (சங்கத்துடன் சட்டரீதியாக எவ்வித தொடர்பும் இல்லாதவர்கள்) தோழர் ஓ. ஏ. இராமையாவின் மறைவிற்கு பின்னர் காரியாலயத்தை வியாபார நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ள பல்வேறு நாசகார முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இக்காரியாலயம் தொழிலாளர்களுக்கான காரியாலயம் என்பதால் மறைந்த தோழர் ஓ. ஏ. இராமையாவின் மனைவி உட்பட குடும்பத்தார் இவ் தொழிற்சங்க விடயத்தில் தலையிடுவதை ஒரு இடதுசாரி தொழிற்சங்கம் என்ற ரீதியில் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை செங்கொடி சங்க நிர்வாக குழு ஆணித்தரமாக வலியுறுத்துகின்றது.

26.05.2013 அன்று ஒரு தமிழ் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தியானசெங்கொடி சங்க காரியாலயம் உடைக்கப்பட்டதுஎன்ற செய்தியை எமது நிர்வாக குழுவினர் வன்மையாக கண்டிக்கின்றோம். ஏற்கனவே பல வருட காலமாக இயங்கி வந்த ஹட்டன் காரியாலயத்தின் திறப்பு பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் ஓ. ஏ. இராமையாவின் கையிலும் மற்றொரு திறப்பு தலைவரிடமும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தோழர் இராமையா சுகயீனமுற்று காரியாலயத்திற்கு வருகைதர முடியாது இருந்த காலகட்டத்திலும் இவ் காரியாலயம் செயற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 23.05.2013 திகதி வழமைபோல காரியாலயம் திறக்கப்பட்டு செயற்பட்ட சம்பவத்தையேஹட்டன் காரியாலயம் உடைக்கப்பட்டதாகதவறான செய்தியை வெளியிட்டுள்ளார்கள். எனவே இச் செய்தியை சங்கத்தின் நிர்வாக குழுவினர் கண்டிக்கின்றனர்.

இறுதியாக நடந்த வருடாந்த பொதுக் கூட்டத்தில் இலங்கைத் தோட்டத் தொழிலாளர் (செங்கொடி) சங்கம் என்ற பெயர் இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கம் என பெயர் மாற்றம் செய்ய அங்கத்தவர்களால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com