Contact us at: sooddram@gmail.com

 

உழைக்கும் மக்களின் சமகால பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்போம்

பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மேதினக் கூட்டம் இல. 294, கண்டி வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தலைமை அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது. கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பலர் கலந்து கொண்ட இக்கூட்டத்திற்கு கட்சியின் யாழ் பிராந்திய செயலாளர  ோழர் மோகன்  தலைமை வகித்து உரையாற்றுகையில், முதலாளித்துவம் வளர்ச்சியுற்று தொழிற்சாலைகள் அதிகரித்துக் கொண்டிருந்த 1880 களில் நாளொன்றில் 12 மணித்தியாலங்கள் தொடக்கம் 18 மணித்தியாலங்கள் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்பட்டு வந்த காலகட்டத்தில் எட்டு மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராடினார்கள். இவர்களின் போராட்டங்களை முதலாளிகளும், முதலாளிகள் சார்பான ஆட்சியாளர்களும், ஆயுதப் படைகளை தொழிலாளர்கள் மீது ஏவிவிட்டு அவர்களது நியாயமான போராட்டங்களை அடக்கி ஒடுக்கின. தொழிலாளர்களோ தமது ஒற்றுமையை பலமான ஆயுதமாகக் கொண்டு தொடர்ந்து போராடினார்கள், இரத்தம் சிந்தினார்கள், உயிரை அர்ப்பணித்தார்கள் இந்த அர்ப்பணிப்புக்களால் கிடைத்தவை தான் 8 மணி நேர வேலை என்ற தொழிலாளர்களின் உரிமையும், மேதினமும் ஆகும்.

நம்நாட்டுத் தொழிலாளர், விவசாயிகள், கூலி உழைப்பாளர்கள் ஒரே விதமான துன்பங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்கின்ற உழைக்கும் மக்களை ஏறெடுத்தும் பார்க்காதவர்கள், இந்த நாட்டின் தொழிலாளர், விவசாயிகளுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் கூட மே தினத்தன்று தொழிலாளர் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களாக மேடையில் முழங்குகிறார்கள்.

நேரடியாகவும், மறைமுகமாகவும் தொழிலாளர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு தொழிலாளர்கள் கூட்டாக ஓர் அணியாக தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண போராட முடியாத வகையில் தொழிற்சங்கங்களை முதலாளித்துவ சக்திகள் பிரித்தாளும் முறையையே கையாளுகின்றனர். அரசியல் கட்சிகள் கட்சி ரீதியாக தொழிலாளகளை கூறு போட்டுள்ளன.

அடிப்படைத் தேவைகள் கிடைக்கக்கூடிய வகையில் அவர்களின் வாழ்வில் மாறுதலை ஏற்படுத்த வேண்டும்.
நாட்டில் இலவசக் கல்வி முறை இருந்தபோதும் தொழிலாளர்கள், விவசாயிகள் வேலையின்மை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தமது பிள்ளைகள் கல்வியின் மூலம் பயனடையும் வகையில் அவர்களுக்குக் கல்வியை வழங்க முடியாதவர்களாய் உள்ளனர். வளங்கள் நிறைந்த சிறந்த பாடசாலைகளில் கல்வி கற்கும் வாய்ப்பு அவர்களின் பிள்ளைகளுக்கு மறுக்கப்படுகின்றது. நாட்டில் இலவச மருத்துவ வசதிகள் இருந்தபோதும் அரசாங்க வைத்தியசாலைகளை நம்பியிருக்கும் உழைக்கும் மக்கள் இந்த சேவைத்துறையின் சேவைகளை முழுமையாகப் பெற்றுக்கொள்வதற்கு முடியாத நிலை காணப்படுகிறது.

உலகத் தொழிலாளர் தினத்தில் ஊர்திகளும், ஆரவாரங்களும், இசைக்கச்சேரிகள் போன்ற போலித்தனங்களும் தொழிலாளர்கள் வாழ்வில் மாற்றத்தையும் மறுமலர்ச்சியும் ஏற்படுத்தி விடாது.

உழைக்கும் மக்கள் இன்று முகம் கொடுக்கும் பிரச்சினைகளை அடையாளம் காண்பதும் அவற்றுக்குத் தீர்வு காண குரல் கொடுப்பதும், உழைக்கும் மக்களின் நலன்களில் அக்கறை கொண்ட எம் அனைவரினதும் கடமையாகும் என்றார்.

தோழர் குமார் உரையாற்றும் போது தொழிலாளர்களின் வேலை செய்யும் நேரம் எட்டுமணி நேரம் என்று வரையறுக்கப்பட்ட போதும் மலையகத்தில் பெண் தொழிலாளர்கள் காலை 7.30 மணிக்கு வேலையை தொடங்கி சென்று பின்னர் மதியம் சாப்பாட்டிற்கு ஒரு மணி நேரம் தவிர பிற்பகல் 1.30 மணி தொடக்கம் பிற்பகல் 5.00 மணி வரை வேலை செய்கிறார்கள். அவர்கள் பெறும் வேதனத்திற்காக குறிப்பிடப்பட்ட நிறை கொழுந்து (18 கி.கி) பறிக்க வேண்டும். கொழுந்து இல்லாத காலங்களில் கூட அவ்வாறே கோரப்படுகிறது.

தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து சுமார் 200 வருடங்களை கிட்டியிருந்தாலும் இன்னும் அவர்களுக்கு வீட்டுரிமை, காணி உரிமை அற்றவர்களாகவே காணப்படுகின்றனர். தாம் இறந்த பின்பும் அடக்கம் செய்வதற்குக்கூட சொந்தமான நிலம் இல்லை.

கல்வியிலும் மிகவும் பின் தங்கிய பிரதேசமாக காணப்படுகிறது. தொழிலாளர்களின் பிள்ளைகள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து பள்ளிக்கு செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதிகள் இன்றி வெகு தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை. சுகாதாரத்துறைகள் மிகவும் போசமான நிலையில் காணப்படுகிறது. போசாக்கான உணவு கிடைப்பதில்லை.

தொழிலாளர் மேதினத்தை கொண்டாடுபவர்கள் கட்சியை முன்னிறுத்தி கொண்டாடுகின்றனர். தொழிலாளர்களின் நலனிலிருந்து பார்க்கப்படுவதில்லை. தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குபவர்களே தொழிற்சங்கங்களின் தலைவர்களாகவும், பெருந்தோட்டக் கம்பனிகளில் பங்குதாரர்களாகவும் காணப்படும் போது தொழிலாளர் பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்படும்?

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய திரு. யோகராஜா இன்றைய நாள் உழைக்கும் மக்களுக்கு பிரதானமான நாள். உலகமயமாக்கல் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகள், உரிமைகள், அரசியல் நலன்களுக்கு எதிராகவே செயற்படுகின்றன.

இலங்கையில் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதி யுத்தத்தின் போது மூன்று இலட்சம் பேர் ஒன்றிணைந்தார்கள். புலிகள் வீரம் பற்றிய கற்பனையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும், வாழ்நிலங்களையும் இழந்தார்களே தவிர வேறொன்றையும் சாதிக்கவில்லை.

தற்போது தமிழர்களுக்கு தலைமை தாங்குபவர்கள் தொழிலாளர்களின் நலன்களுக்கு அப்பால் செயற்படுகின்றனர். அவர்கள் முதலாளித்துவ நலன்களையும், அதிகாரத்தையும் பாதுகாக்கக்கூடியவர்களாக காணப்படுகின்றார்களே தவிர தொழிலாளர்கள், விவசாயிகள் நலன்களை அல்ல.

13வது அரசியல் திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு பல அதிகாரங்களை கொண்டிருந்த, சட்ட ரீதியாக இயங்கத் தொடங்கிய இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை நிர்வகித்தவர்களை தமிழ் இனவாத முதலாளித்துவ சக்திகள் துரோகிகள் என்றார்கள். அதனை செயற்பட அனுமதித்திருந்தால் இன்று ஏற்பட்டுள்ள சொத்தழிவுகள், உயிரழிவுகள் ஏற்பட்டிருக்காது. அன்றைக்கு மாகாண சபைகளை நிராகரித்தவர்கள் பல வருடங்களின் பின் இப்போது ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

சமூக செயற்பாட்டாளர் மகாலிங்கம் உரையாற்றுகையில் இந்த ஆடம்பரமில்லாத இம் மேதினக் கூட்டத்தில் பங்குபற்றும் அனைவரும் உழைக்கும் மக்கள் மீது பிரக்ஞை கொண்டவர்களே. நாம் கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்தும் அனுபவங்களிலிருந்தும் இன்று பல இடங்களில் நடைபெறும் மேதினம் பற்றி சொல்லத் தேவையில்லை.

நாம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். முற்போக்குவதிகள் பிரச்சினைகளை தெளிவாக முன்வைப்பவர்கள். ஆனால், யதார்த்தத்தில் இடதுசாரி சாயல்களோடு நம் நாட்டில் 25 இற்கு மேற்பட்ட அமைப்புக்களை காணக்கூடடியதாக உள்ளது. பிற்போக்குவாதிகள் தங்கள் நலனுக்காக ஒன்றிணைந்து செயற்படுகிறார்கள். ஆனால் முற்போக்குவாதிகள் என்போர் ஒற்றுமையற்றவர்களாக இருக்கின்றமை கவலைதரும் விடயமாக உள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com