Contact us at: sooddram@gmail.com

 

கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனுக்கும் கூட்டமைப்பின் சுமந்திரனுக்கு. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பதிலடி?

தமக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற நம்பிக்கையுடனும், தமக்கு மட்டுமே எல்லா வல்லமைகளும் உண்டு என்ற சிந்தனையுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஒருசிலர் செயற்படக்கூடாது. சுரேஷ் பி. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை வகுப்பு என்பது ஒரு சிலர் மட்டும் மேற்கொள்ளும் ஒரு செயலாக இருக்க முடியாது அவ்வாறு வகுக்கப்படும் கொள்கைகள் வெற்றிகரமானதாகவும் அமையாதென தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பி. இன்று காலை, யாழ்ப்பாணம் - நீர்வேலியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச செயலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மற்றும் பல வட மாகாண சபை உறுப்பினர்களும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்த இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய சுரேஷ் பி-

'தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்காக, சர்வதேச மயப்பட்ட ஒரு போராட்டத்தை நாம் நடத்திவருகின்றோம். (நல்ல நகைச்சுவை)?????????????

இந்தப் போராட்டத்தில் பலதரப்பட்ட பங்குதாரர்கள் இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. ஒருசில தனி ஆட்களால் இது முன்னெடுக்கப்படுவதில்லை.' '

'முழுமையாக என்று சொல்ல முடியாதுவிடினும் கூட, சர்வதேச மட்டத்திலான இந்தப் போராட்டம் குறிப்பிடத்தக்க அளவிலான சாதகமான விளைவுகளை ஏற்கெனவே ஏற்படுத்த தொடங்கியிருக்கின்றது. அத்தகைய சாதகமான விளைவுகளில் ஒன்றுதான் - ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் ஜெனீவா அமர்வுகளில் இலங்கை தொடர்பாகத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டுவரும் தீர்மானங்கள். குறிப்பாக - சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று பற்றிக் குறிப்புணர்த்தியிருக்கும் இந்த வருட தீர்மானம். இத்தகைய வெற்றிகள் ஒருசில தனிநபர்கள் ஏற்படுத்தியது அல்ல ஒருசில தனிநபர்களால் இத்தகைய சர்வதேசமயப்பட்ட - வியாபித்த பரிமாணங்களைக் கொண்ட - வெற்றிகளை ஏற்படுத்திவிடவும் முடியாது.

இந்த வெற்றிகளுக்கு உரிமைகோரி, தனிநபர்கள் தமக்குத் தாமே கிரீடங்களைச் சூடிக்கொள்ளவும் கூடாது.' 'இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்ற எல்லோரது அறிவும், உணர்வும், அனுபவமும், உழைப்பும் கலந்ததால்தான் இந்த வெற்றிகள் சாத்தியமாகின என்ற உண்மையை உணர்ந்து, அதனை ஏற்றுக்கொள்ளும் பண்பும், எல்லோரோடும் சேர்ந்தியங்கும் மனப்பாங்கும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் - அடுத்த கட்ட நகர்வுகளை நன்கு திட்டமிட்டு ஆக்கபூர்வமானதாக ஆக்குவற்கு ஏற்ற ஒத்தழைப்பு எல்லோரிடமிருந்தும் கிடைக்கும்' என்று குறிப்பிட்டார்.

சுரேஷ் பி அங்கு தொடந்து உரையாற்றும் போது - இன்று சர்வதேச அரங்கிலே தமிழர்களுடன் தொடர்புபட்ட, அல்லது தமிழர்களைத் தொடர்புபடுத்திய பல ராஜதந்திரக் காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 2009ஆம் ஆண்டுக்கு முன்னைய போர்க் காலத்தில் நிகழ்ந்த குற்றங்களை மையப்படுத்தி உலகின் முதன்மையான சில மேற்குலக நாடுகள் இந்த காய்நகர்த்தல்களைச் செய்கின்றன. இந்த நகர்வுகள் எல்லாமே தமிழர்களுக்காகவே செய்யப்படுகின்றன என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் சொல்லுகின்ற போதும், அதுவே முழுமையான உண்மையும் அல்ல.

இந்த நாடுகள் எல்லாமே தத்தமது தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் சார்ந்தே இந்த காய்நகர்த்தல்களைச் செய்கின்றன. அத்தோடு - தமிழர்களுக்காகச் செய்யப்படுவதாகச் சொல்லப்படும் இந்த காய்நகர்த்தல்கள் உண்மையில் தமிழர்களால் செய்யப்படுவதும் இல்லை. மாறாகநமது நலன்களை முன்னிறுத்தி காய்களை நகர்த்தும் மூலகர்த்தாக்களாக நாமே இருப்பதற்குப் பதிலாக - தமது நலன்களை முன்னிறுத்தி உலக நாடுகள் செய்யும் சதுரங்க நகர்த்தல்களில் வெறும் காய்களாகவே இன்றுவரை நாம் இருக்கின்றோம் என்பதுதான் உண்மை. கூட்டு முயற்சியின் காரணமாக - ஜெனீவாத் தீர்மானம் போன்ற மிக மிகச் சிறிய தொடக்கப்படிகளில் நாம் சில சாதகமான விளைவுகளைப் பெற்றிருக்கின்ற போதும், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகளால் நகர்த்தப்படும் காய்களாகவே இன்றுவரை தமிழர்களும் தமிழர் பிரச்சனையும் இருக்கின்றது.

அத்தோடு - இன்னுமொரு விடயத்தைக் கருத்தில் எடுக்கவும் நாம் தவறக்கூடாது. போர்க் காலத்தில் நடந்த நிகழ்வுகள் மீது விசாரணைகள் நடந்து, அவற்றுக்குப் பொறுப்பானவர்களுக்குத் தண்டனைகள் வழங்கப்பட்டாலும் கூடதமிழ் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்துவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஏனெனில் - ஜெனீவா தீர்மானமும், அது பரிந்துரைக்கின்ற சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறையும் தமிழ் தேசிய இனப்பிரச்சனை பற்றியோ, அல்லது அதற்கான ஒரு அரசியற் தீர்வு பற்றியோ எதுவும் பேசவில்லை என்பதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். ஏனென்றால் - தமது தேசிய நலன்களைக் காப்பதற்கான காய்நகர்த்தல்களைச் செய்யும் சக்திகளுக்கு, தமது நோக்கங்களை அடைவதற்கேற்ற ஒர் ஆட்சிமாற்றமே இங்கு அவசியமானதாக இருக்கின்றதே அல்லாமல், தமிழர் பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வு அல்ல.

அவ்வாறான ஒர் ஆட்சிமாற்றம் இங்கு நிகழ்ந்தால் கூட, தமிழர் பிரச்சினைக்கு ஒர் அர்த்தமுள்ள தீர்வை அடுத்த ஆட்சி வழங்கும் என்பதற்கோ, அல்லது அந்த முயற்சியில் அவர்கள் விசுவாசமாகச் செயற்படுவார்கள் என்பதற்கோ எந்த உத்தரவாதமும் இல்லை.

. தமக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற நம்பிக்கையுடனும், தமக்கு மட்டுமே எல்லா வல்லமைகளும் உண்டு என்ற சிந்தனையுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஒருசிலர் செயற்படக்கூடாது.

ஒருவருக்குத் தெரிந்த பல விடயங்கள் இன்னொருவருக்குத் தெரியும் என்றில்லை அவருக்குத் தெரிந்த பல விடயங்கள் அடுத்தவருக்குத் தெரியும் என்றில்லை. அதனால் - தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான நேர்த்தியான ஒர் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கை வகுக்கப்படும் போது - இவர்கள் எல்லோருடைய அறிவும் அனுபவமும் உளப்பூர்மாக உள்வாங்கப்படும் போது - நிச்சயமாக அந்தக் கொள்கை உருவாக்கம் வலுவானதாகவே அமையும். இத்தகைய நீண்ட அனுபவமும் பட்டறிவும் உள்ளவர்களது சிந்தனைகளை உதாசீனம் செய்துவிட்டு ஒருசிலர் மட்டும் வகுக்கும் கொள்கைகள் வெற்றியளிக்காது என்பதும், இன்றுவரை பெரிய வெற்றிகள் எதனையும் அது தரவில்லை என்பதுமே யதார்த்தம். கூட்டமைப்பு என்பது கூட்டிணைந்து இயக்கும் ஒரு கூட்டணியாகவே இருக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com