Contact us at: sooddram@gmail.com

 

கனடாவில்

ஆக்க பூர்வ சிந்தனை செயற்பாடுகளுக்கான தமிழ் மக்கள் மையம  நடாத்திய  மேதின நிகழ்வு

இலங்கையில் தொழிற்சங்கங்களிலும், இடதுசாரி அமைப்புக்களிலும் ஈடுபட்டு இன்றுவரை இடதுசாரிகளாக தமது செயற்பாட்டை முன்னெடுத்து வரும் முதிர்ந்த பழம்பெரும் இடதுசாரித் தோழர்களால் வழமைபோல் இவ்வருடமும் தொழிலாளர் தனிமான மே தினம், மே 2ம் திகதி கனடா ரொரன்ராவில் ஒரு கலந்துரையாடல் என்ற வகையில் அனுஷ்டிக்கப்பட்டன. வழமைபோல் நானும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டேன். இடதுசாரிகளால் ஒழுங்கமைக்கப்பட்ட மேதினம் என்றாலும்; சிங்கள, முஸ்லீம் மக்கள் அற்ற ஏனைய தமிழ் பேசும் செயற்பாட்டாளர்கள் மட்டும் இதில் கலந்துகொண்டனர். மூத்த தொழிற்சங்க, இடதுசாரிச் செயற்பாட்டாளர் தோழர் தருமராஜா அவர்களின் தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.

தனது வழமையான நகைச்சுவை மிகுந்த அனுபவ, ஆரம்ப உரையுடன் கலந்துரையாடலை அவர் ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தோழர் யாழ் மணியம் மேதின வரலாற்று, அதனைத் தொடர்ந்த தொழிலாளர் போராட்டங்கள், உலகநாடுகளில் நடைபெற்ற தேச விடுதலைப் போராட்டங்கள், மேலும் உலக நாடுகளின் நடைபெற்ற பாட்டாளி வர்க்கப் புரட்சி என்று பரந்துபட்ட தளத்தில் தனது கருத்துரைகளை வழங்கினார். மேலும் அவர் தனது கருத்து தெரிவிப்பில் மக்கள் தமது உரிமைகளுக்காக இயல்பாகவே போராடிக்கொண்டே இருப்பார்கள் மாறாக ஒரு அரசியல் அமைப்புதான் போராட்டங்களை உருவாக்கிவிடுகின்றன என்பது தவறான கருத்து என்பதை எடுத்துக் கூறினார்.

8 மணி நேரம் மட்டும் வேலை என்று ஆரம்பித்த மேதினப் போராட்ட வரலாறு இதில் வெற்றி பெற்று இன்று பல் தேசியக் கம்பனிகளால் உலகெங்கும் மீண்டும் 14 மணி நேரத்திற்து மேலான வேலை என்ற நிலையில் இன்று வந்து நிற்கின்றது என்று தனது உரையை தோழர் ஜேம்ஸ் ஆரம்பித்தார். தொடர்ந்தும் அவர்கருத்து தெரிவிக்கையில் நவீன முதலாளித்துவம் மனிதர்கள் தனித்தனியாக இணையவிடாமல் தடுக்கு தந்திரோபாயங்களை கையாண்டு உரிமைகளுக்காக போராடும் மக்களை தனித்திருக்கும், ஐக்கியப்படுவதைத் தடுக்கும் நஞ்சு பூசிய போலியான ஜனநாயக செயற்பாட்டைக் கொண்டிருக்கின்றது என்றும் இதனை மக்கள் உணர்ந்துகொண்டு, இதிலிருந்து விடுபட்டு, ஐக்கிப்பட்டு தமது உரிமைகளுக்காக போராட முற்படவேண்டும் என்றார். மேலும் மேற்கு ஆபிரிக் நாடுகளில் நடைபெற்ற மக்கள் எழுச்சிகள் முற்போக்கான உறுதியான தலமைகள் அற்று இருப்பதினாலே இன்று அவ் நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியங்களும் அதன் அருவருடிகளும் உள்ளநாட்டு கலவரங்கள் என்று இடையறாத கலவரங்களை அவ் நாடுகளில் ஏற்படுத்தி இந்த யுத்தத்தில் ஆயுத விற்பனை வழங்களை சுரண்டுதல் என்று தொடர்ந்து கொண்டிருக்க வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றது. எனவே போராட்டம் ஒன்றிற்கு உறுதியான முற்போக்கு தலைமை அவசியம் என்பதை வலியுறுத்தி நின்றார். கூடவே லத்தீன் அமெரிக்கா, தென் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டிருக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இடதுசாரிச் செயற்பாடுகளை உள்வாங்கி அவர்களுடன் கைகோர்த்து உழைக்கும் வர்க்கம் தமது உரிமைகளுக்காக போராட வேண்டும் என்றும் தெரிவித்தார்.  எண்ணிக்கையில் குறைந்த அளவினர் போன்று தோற்றம் அளித்தாலும் இலங்கை உட்பட உலகெங்கும் இடதுசாரிகள் பலமான தமது செயற்பாட்டை தொடர்ந்த வண்ணமே உள்ளனர். எனவே நாம் வீழ்ந்து விட்டோம் என்று அஞ்சத் தேவையில்லை தொடர்ந்தும் நம்பிக்கையுடன் மனித குலத்தின் விடிவிற்காக தொடர்ந்தும் விடாப்பிடியாக போராடவேண்டும் என்று தனது உரையில் தெரிவித்தார். மேலும் இலங்கையில் நடைபெற்று முடிவுற்ற போர் உள, உடல் ரீதியில் வலுவிழந்த உழைக்கும் மக்களை விட்டுச் சென்றிருக்கின்றது. இவர்களை உள, உடல் ரீதியாக பலம் மிக்க சமூகமாக கட்டியமைக்க வேண்டும். இதன் மூலமே ஒரு பலம் மிக்க சமூகத்தை கட்டியமைத்தால்தான் தொடர்ந்தும் அச்சமூகம் தமது உரிமைகளுக்கான அடுத்த கட்டப் போராட்டத்தை நோக்கி நகர முடியும் என்றார்.

இதனைத் தொடர்ந்து கருத்துரை வழங்கிய மலையகத்தை பிறப்பிடமாக கொண்ட சந்திரசேகரன் மலையகத்தை மையமாக கொண்டிருந்து. தற்போதும் மலையக தொழிலாளர்களின் வாழ்கைத் தரம் உயரவில்லை. ஆனால் மாறாக தமது உரிமைகள் மறுக்கப்படுகின்றது என்பதை உணர்ந்து போராடாமல், அடிமைப்பட்டு தொடர்ந்தும் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் மலையகத்திலிருக்கும் தொழிற்சங்கங்கள் அவர்களை அறிவூட்டி தமது உரிமைகளுக்காக போராட வைப்பதற்கு பதிலாக வெறும் சந்தா உறுப்பினர்களாக வைத்துக்கொண்டும் தாம் சுகமாக வாழ்வை தலைநகரில் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய பலரும் தமது நீண்ட தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக கனடா போன்ற மேற்கத்திய நாடுகளின் தொழிற்சங்க செயற்பாடுகளுக்கும், இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளின் தொழிற்சங்க நடவடிகைகளுக்கும் இடையேயான பாரிய வேறுபாடுகள் பற்றிய தமது அனுவங்கள் பற்றி கருத்துக்களை வழங்கினர். 

அமெரிக்காவிற்கு அருகில் இருக்கும் கனடாவில் தொழிலாளர் உரிமை, தொழிற் சங்கம், சோசலிஷம் என்று பொது வெளியில் கதைக்க முற்பட்டால், ஏதோ இவர்கள் வேண்டத்தகாதவர்கள், வேலைத் தலங்களில் குழப்பங்களை விளைவிப்பவர்கள், கம்யூனிஸ்ட்டுகள், ஜனநாயக விரோதிகள் என பூச்சாண்டி காட்டி வளர்க்கப்பட்டவர்களின் எரிக்கும் பார்வைகளுக்கு உள்ளாகவேண்டிய நிலையே பெரும்பாலும் ஏற்படும். உலகின் வளர்ச்சியடைந்த முன்னணி நாடுகளில் ஒன்றாக இருக்கின்றது கனடா, இங்கு முதல்தர வாழ்க்கை உள்ளது என்று தம்பட்டம் அடித்துக்கொள்ள வாய்ப்புகளை நிறையவே உள்ளது. இது ஒன்றே இங்கு வாழும் சாமான்ய உழைக்கும் மக்களின் வாழ்வை நல்ல நிலையில் உறுதிப்படுத்தி வைக்க போதுமானதாக இல்லை. அதுவும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட்டுவரும் கனடாவிடம் நாம் வேறு எவற்றை எதிர்பார்க்க முடியும்.

வேலைத்தலங்களில் வேலைகள் சம்மந்தமான சட்டங்கள் தொழிலாளர் நலன் சார்ந்தது போன்ற தோற்றம் அழித்தாலும், உண்மையில் அவை முதலாளிகளை பாதுகாக்கும் சட்டங்களாகவே தந்திரமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. இலாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயற்படும் தொழில் முகர்வோரிடம், தொழிலாளர் நலன் சார்ந்த செயற்பாடுகளை எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே அளிக்கும். எவ் வேளையிலும் வேலை பறிபோகலாம் என்ற பதற்றமான வாழ்வு என்பது மட்டும் இங்கு உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. நிதானம் அற்ற சலனமான, பதற்றமான வாழ்வே இந்த முதல் தர பொருளாதார நாட்டில் எஞ்சியிருக்கின்றது. வேலைத் தளங்களில் தொழிலாளர்கள் கேள்வி கேட்பது என்பது எழுதப்படாத சட்டங்களால் மறுக்கப்பட்டுள்ளன. சொல்வதை தலையாட்டிக்கொண்டு சேவகம் செய்யும் செயற்பாட்டையே சிறந்த வேலையாளுக்குரிய பண்பாக இங்கு வேலைத்தளங்களில் வேலை வாங்கப்படுபவர்களால் பார்க்கப்படுகின்றது. இப்படியான சூழலில் தொழிலாளர்கள் இணைந்து தமது உரிமைகளுக்காக போராடினால் அன்றி தமது உரிமைகளை உறுதிப்படுத்த முடியாது என்பது கனடா வாழ் தொழிலாளர்கள் உணர்ந்து செயற்படவேண்டும். இதன் மூலமே இவரகள் தமது நியாயமான உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

(ரொரன்ரோ, கனடா நிருபர்) (மே 02, 2014)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com