Contact us at: sooddram@gmail.com

 

அப்பா கொடுத்த தகவலால் தான் மையூரன் கைது செய்யப்பட்டார்

என் மகன் போதைப் பொருள் கடத்தும் ஆட்களுடன் திரிகிறான். அவனைக் காப்பாற்றி என்னிடம் திருப்பி ஒப்படையுங்கள் என்று மையூரனின் நண்பரான, “அன்று சானின்” தந்தை அவுஸ்திரேலியப் பொலிசாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர்கள் இந்தோனேசிய பொலிசாருக்கு அறிவிக்க, அங்கே வைத்து தான் முதன் முதலில் மையூரன் கைதாகியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாக ஆரம்பித்துள்ளது.

ஒரு கொலையை இயல்பான மனிதர்கள் யாராலும் செய்ய முடியாது. அது மிக கொடூரமானது. எந்த செயலாலும் ஒரு கொலையை நியாயப்படுத்தவும் முடியாது. சட்டத்தின் பரிணாம வளர்சியில் மரணதண்டனை தற்போது இல்லாமல் போய் அருகி வருகிறது. பல நாடுகளில் இத்தண்டனையை இல்லாதொழித்துள்ளார்கள். ஆனால் இந்தோனேசியாவில், எட்டு உயிர்களை குருவி சுடுவதைப் போல சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். தனக்காக நிர்ணயிக்கப்பட்ட மரணத் திகதியை அறிந்துகொண்டு, தனக்காக தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியை பார்த்துக்கொண்டு, தனக்காக செய்யப்பட்ட சிலுவையைப் பார்த்துக்கொண்டு, தான் கொலை செய்யப்படும் முறையை அறிந்துகொண்டு பல வருடங்களாக கொடூர வாழ்வை வாழ்ந்துள்ளார் மையூரன்.

அன்றைய காலகட்டத்தில், இந்தோனேசியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் குழுவை இரு நாடுகளும் மிகத் தீவிரமாக தேடி வந்தன. மிகவும் சூட்சுமமாக நடத்தப்பட்ட கடத்தலை கண்டுபிடிப்பதில் இருநாடுகளும் பாரிய சவாலை எதிர்நோக்கியிருந்தன. இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய பொலிஸாருக்கு அன்று சானின் தந்தையால் ஒரு தகவல் வழங்கப்பட்டது. “எனது மகன் இந்தோனேசியாவுக்கு பயணமாகியுள்ளான். அவனுக்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு இருப்பதாக அறிகிறேன். அந்தக் கடத்தல்காரர்களிடமிருந்து என் மகனை காப்பாற்றித்தாருங்கள்” என்று அந்தத் தந்தை கூறியிருக்கிறார்.

அதனை துரும்பாகக் கொண்டு இருநாட்டுப் பொலிஸாரும் இணைந்து ,அன்று சானை மறைமுகமாக கண்காணிக்கத் தொடங்கினர். அவருடன் தொடர்புடையவர்களையும் பின்தொடர்ந்தனர். இந்நேரத்தில் இந்தோனேசியாவின் தெற்கில் அமைந்துள்ள “குட்டா” மாவட்டத்திலுள்ள விடுதியில் தங்கியிருந்த மூவர் அந்நாட்டுப் புலனாய்வுப் பிரிவினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒரு வர்தான் மயூரன் சுகுமாரன். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 334 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. அவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் பின்னர் போதைப்பொருள் கடத்தல் குழுவுக்குத் தலைவராக இருந்தார் என்று நம்பப்படுகின்ற அன்று சான் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் கடத்தலில் வலைபின்னல் போன்று செயற்பட்ட 9 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர்.

இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு கடத்தப்படவிருந்த 8.3 கிலோகிராம் போதைப்பொருள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது. இதன் பெறுமதி 3.1 மில்லியன் அமெரிக்க டொலராகும்.இவர்கள் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் உறுதிபடத் தெரிவித்தபோதும் ,இவ்விடயத்தில் தனக்கு தொடர்பு எதுவும் இல்லை என மயூரன் சுகுமாரன் இறுதிவரை தெரிவித்து வந்தார். 2006 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி இந்தோனேசியாவின் டென்பசார் மாவட்ட நீதிமன்றம் மயூரனுக்கு மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து மேன்முறையீடு செய்தபோதும் இந்தோனேசிய உயர் நீதிமன்றம் 2011 ஆம் ஆண்டு ஜுலை 6 ஆம் திகதி மரண தண்டனையை உறுதி செய்தது.

பாலி- 9 என்பதே இந்த கடத்தல் குழுவின் பெயராக இருந்துள்ளது. இதனையடுத்து ஜனாதிபதிக்கு கருணை மனு அளிக்கப்பட்டு, பல்வேறு மனித உரிமை நிறுவனங்கள் மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்தன. எனினும் அவை எதுவும் சாத்தியப்படவில்லை. மையூரன் நுசாகம்பங்கனிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது , சிறைக் கைதிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார். அடிப்படையில் கராட்டே பயின்று பெரும் பட்டம் பெற்றவர் மையூரன். சிறைச்சாலையில் ஏனைய கைதிகளுக்கு ஆங்கிலம், கணனிக் கல்வி, போட்டோஷொப் வடிவமைப்பு ஆகியவற்றை பயிற்றுவித்ததுடன் சித்திரம் வரைதலில் நுட்பங்களையும் கற்றுக்கொடுத்தார். இவ்வாண்டு பெப்ரவரி மாதம் கர்ட்டின் பல்கலைக்கழகம் மயூரனுக்கு “வரைகலை” பட்டத்தை வழங்கியது. அனைத்து கைதிகளுக்கும் முன்னுதாரண மாக திகழ்ந்ததால் சிறைச்சாலையில் 20 கைதிகளை வழிநடத்தும் தலைமைப்பொறுப்பு மயூரனுக்குக் கிடைத்தது.

அன்று சான் தன்னை மாற்றிக்கொண்டார். நிறைய மனமாற்றமடைந்து மதபோதகராக விரும்பினார். அவர் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறியிருந்தார். கணினியில் அசாதாரண அறிவுடனிருந்தவர், சிறைச்சாலை கைதிகளிற்கும் அதனை கற்றுக் கொடுத்தார். மயூரன் நிறைய சித்திரங்களை வரைய வேண்டும் என இறுதியாக ஆசைப்பட்டார். அதன்படி தன்னுடைய படங்களை வரைந்து இதயத்தில் குண்டுத் துளைப்பது போலவும் கவலையை வெளிக்காட்டுவது போலவும் பல சித்திரங்களை வரைந்தார். மயூரனின் பெற்றோர் சகோதரன், அவரது மனைவி, சகோதரி மற்றும் உறவினர்கள் சிலருடன் திறந்த வெளியில் சில மணிநேரம் கழிப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டது. அதுபோல அன்று சான் தனது குடும்பத்தாருடன் தேவாலயத்தில் பொழுதை கழிக்க வேண்டும் என விரும்பினார்.

இவ்விருவருக்கும் இருதயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் உத்தரவாகும். மரண தண்டனை நடைமுறை இவ்வாறுதான் அமைவது வழக்கம். நுசாகம்பங்கன் சிறையிலுள்ள மரண தண்டனை வழங்கப்படும் வளாகத் துக்கு கைதிகள் அழைத்துச் செல்லப்படுவர். அவர்கள் நிற்க விரும்புகிறார்களா, அல்லது உட்கார்ந்திருக்க விரும்புகிறார்களா என விசாரிக்கப்படும். அதன் பின்னர் வெள்ளை உடை அணிவிக்கப்பட்டு கை, கால்கள் கட்டப்படும். அவர்கள் தியானம் செய்வதற்காக சரியாக மூன்று நிமிடங்கள் வழங்கப்படும். கைதிகள் சுடப்படும்போது கண்கள் மூடியிருக்க வேண்டுமா அல்லது திறந்திருக்க வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும். “என்னைச் சுடும்போது கண்களை திறந்திருப்பதையே விரும்புகிறேன். நான் தைரியசாலியாக இவ்வுலகை விட்டுப் பிரியவே ஆசைப்படுகிறேன்” என மயூரனின் நெருங்கிய நண்பரும் சித்திர ஆசிரியருமான பென் குவால்டியிடம் மயூரன் குறிப்பிட்டுள்ளமையும் இங்கு நினைவுபடுத்த வேண்டும்.

கைதிகள் ஆயத்தமானவுடன் 10 மீற்றர் தூரத்தில் ஆயுதம் தாங்கிய பன்னிருவர் ஆயத்தமாக இருப்பர். மரண தண்டனைக்கான உத்தரவை பிறப்பிக்க சிறை அதிகாரியொருவரும் மரணத்தை உறுதிப்படுத்த மருத்துவர் ஒருவரும் அங்கு வருகை தந்திருப்பர். தண்டனை நிறைவேற்றப்பட்டவுடன் சடலங்களை தண்ணீரில் கழுவி , அதனை உறவினர்களிடம் ஒப்படைப்பார்கள். இந்த தண்டனையும் இதன்படியே நடந்திருக்கும் என தெரிகிறது. தண்டனை பெற்ற மயூரனுக்கும் அன்ருவுக்கும் சவப்பெட்டிகள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுவிட்டன. அதில் இருவரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டு 29.04.15 என திகதியிடப்பட்டு ஆத்மா சாந்தியடைவதாக என எழுதப்பட்டுள்ளது. மயூரனினதும் அன்ருவினதும் உறவினர்கள் சிறைச்சாலைக்கு முன்னால் கதறி அழுதனர். அவர் வரைந்த ஓவியங்களை சுமந்த வண்ணம் தாய், தந்தை, சகோதரர்கள் அழுத விதம் நெஞ்சை உருக்கியது. சிறைச்சாலைக்கு வெளியே பதாகைகளை ஏந்தியவண்ணமும் மெழுகுவர்த்திகளை ஏந்தியவண்ணமும் பலர் திரண்டிருந்தனர்.

எனினும் இவை எவையும் இந்தோனேசிய சட்டங்களை வளைக்க போதுமானவையாக இருக்கவில்லை. மரணம் அனைவருக்கும் பொதுவானது. எனினும் அது தண்டனையாக கிடைக்கப்பெறும்போது ஏற்படும் மன அழுத்தமும் விரக்தியும் கொடுமையானதாகும். அவர்கள் பொதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டார்கள் தான். அவர்களின் செயலால் பலர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதும் உண்மைதான். ஆனால், இதில் குற்றம்சாட்டப்பட்ட மயூரன் மற்றும் அன்று ஆகியோர் புனர்வாழ்விற்குட்படுத்தப்பட்ட நிலையில் உள்ளதாக, சிறையதிகாரியே சான்றிதழ் வழங்கியிருந்தார். உண்மையில் அவர்கள் முன்னுதாரணம்மிக்கவர்களாக மாறியிருந்தார்கள். இந்த தண்டனையின் மூலம், அவர்களின் திருந்திவாழும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அது தான் நடந்து முடிந்துள்ளது.

“போய் வா மையூரா” உன் ஓவியங்கள் நிச்சயம் காவியங்களாக ஒரு நாள் மாறும்!
(ஈழக்குரல்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com