Contact us at: sooddram@gmail.com

 

அடைமழை, பெருவெள்ளம்

நகரம் வெள்ளத்தில் மீண்டும் மூழ்கியது

கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையினால் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளதுடன் இரண்டரை இலட் சத்துக்கும் அதிகமான மக்கள் இடம் பெய ர்ந்துள்ளதோடு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரக்காப்பொல என்ற இடத்திலேயே இவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 7.00 மணி தொடக்கம் நேற்றுக்காலை 7.00 மணி வரையான 12 மணி நேரத்திற்குள் பெய்த பெருமழையினால் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களின் இயல்பு நிலை முற்றாக ஸ்தம்பித மடைந்தன.

கொழும்பில் மாத்திரம் 440 மி. மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ள தாக வானிலை அவதான நிலையம் தெரிவித்தது. கடந்த பதினெட்டு வருடங்களுக்குப் பின்னர் கொழும்பில் பதிவான அதிகூடிய மழை வீழ்ச்சி இதுவாகும் என்று வானிலை அவதான நிலைய பணிப்பாளர் நாயகம் ஜி.பி. சமரசிங்க தெரிவித்தார்.

தொடர்ச்சியாக பெய்த அடைமழையினால் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டதுடன் வீதிகள் நீரில் மூழ்கியதினால் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டதோடு பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன.

இந்த கடும் மழையினால் பாதிக்கப்பட்ட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் மக்கள் அருகிலுள்ள சனசமூக நிலையங்கள், பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள துடன் அவர்களுக்குத் தேவையான சமைத்த உணவுகள் விநியோகிக்கப்பட்டன.

அதிக மழைநீர் தேங்கியிருந்த பிரதேசங்களில் சிக்கித் தவித்த மக்களை உடனடியாக பாதுகாப்பாக மீட்டெடுக்கவென பொலிஸ் மற்றும் இராணுவத்துடன் விமானப் படையினரும், கடற் படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

விமானப் படையின் ஹெலிகொப்டரும், கடற்படையின் பத்து படகுகளும் மீட்புப் பணிகளுக்காக முழுமையாக ஈடுபடுத்தப்பட்டதாக விமானப் படை, கடற்படை பேச்சாளர்கள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களுக்குத் துரித கதியில் தேவையான நிவாரணங்களை உடனுக்குடன் எவ்வித தடையுமின்றி வழங்குவதற்கு சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கவும், சமைத்த உணவுகளை வழங்கவும் முதற்கட்டமாக 200 இலட்சம் ரூபா நிதியை தனது அமைச்சு ஒதுக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தேவைப்படும் பட்சத்தில் இந்த மக்களுக்குத் தேவையான மேலதிக நிவாரணங்களை வழங்குவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கத் தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு மாவட்டமே கூடுதல் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், கொழும்பு மாவட்டத்திற்கென 10 மில்லியன் ரூபாவும், கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கென தலா ஐந்து மில்லியன் ரூபாவுமே முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது என்றார்.

1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் திகதி கொழும்பில் முதற் தடவையாக 493.7 மி. மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தது. இது நடந்து 18 வருடங்களின் பின் 440 மி.மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையாகும்.

கடந்த மே மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது 330 மி.மீற்றர் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியிருந்ததுடன் சுமார் ஆறு இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். எனினும் இம்முறை வரலாற்றில் இரண்டாவது தடவையாக 440 மி.மீற்றர் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை குறைவாகவே காணப்படுவதாக தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய கால்வாய்கள், வாவிகள், வடிகான்கள் சுத்திகரிக்கப்பட்டதே காரணம் என்றும் சுட்டிக்காட்டினார்.

மீட்புப் பணிகள்...

அதிக மழை நீர் தேங்கியிருந்த பிரதேசங்களிலுள்ள வீடுகள், கட்டடங்களில் சிக்கித்தவித்த மக்களை உடனடியாக பாதுகாப்பாக மீட்டெடுக்கும் பணிகளை 2000 இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸார் மேற்கொண்டனர். அத்துடன் இவர்களுக்கு உதவியாக விமானப்படை மற்றும் கடற்படை வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

விமானப் படை

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களின் நிலைமைகளை ஆராய்ந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவென விமானப்படைக்குச் சொந்தமான “பெல்-212” ஹெலிகொப்டர் உடனடியாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக விமானப் படைப் பேச்சாளர் குறூப் கெப்டன் ஜனக நாணயக்கார தெரிவித்தார். வானிலிருந்து அவதானித்ததுடன் தேவையான நிவாரண நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடற் படை

பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் பொருட்டு அறுபது கடற்படை வீரர்கள் அடங்கிய ஒன்பது கடற்படைக் குழுக்களும் பத்து கடற் படை படகுகளும் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அதுல செனரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தை அண்மித்த பகுதிகள், பெலவத்த, பிலியந்தல, நுகேகொடை, குருபெந்த மிரிஹான, கிரேன்ட்பாஸ் ஆகிய பகுதிகளிலேயே இவர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். தேவைப்படும் பட்சத்தில் மேலதிக படகுகளை சேவையில் ஈடுபடுத்த தயார் நிலையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மின்சாரம் துண்டிப்பு

கடும் மழை காரணமாக கொழும்பு உட்பட அதனை அண்டிய பிரதேசங்களில் மின்சாரம் பாதிக்கப்பட்டதுடன் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. கலனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் உட்பட உப மின் நிலையங்கள் மழை நீரில் மூழ்கியதால் பாதுகாப்புக் கருதி நேற்று முன்தினம் இரவு தொடக்கம் வட கொழும்பு மற்றும் கொழும்பு 04, 07, 12, 13, 14 பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது. இதேவேளை சில பிரதேசங்களில் மின் கம்பிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் செயலிழந்ததுடன் அதனை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com