Contact us at: sooddram@gmail.com

 

இனப்பிரச்சினை தீர்வுக்காக குழு ஜனாதிபதி

தமது மனதில் தமிழர் பிரச்சினை தொடர்பான தீர்வு திட்டம் இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹிந்து நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றில் இது தொடர்பாக அரசியல் கட்சிகளுடனும் பொது மக்களுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகார பரவலாக்கம் தொடர்பில் மக்கள் மனதில் இருக்கும் விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு என்ன தேவை உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இதன்போது தமது மனதில் உள்ள தீர்வு திட்டம் பொது மக்களுக்கு போதுமானதாக இல்லை என்ற நிலை ஏற்படலாம் எனவே அரசியல் கட்சிகள் மாத்திரம் அல்ல பொதுமக்களும் தீர்வு திட்டத்தை ஏற்று கொள்ள வேண்டும். இதனை அறிந்து கொள்வதற்காகவே தாம் குழுவொன்றை அமைத்து இரண்டு தரப்பினரும் கருத்துக்களை பெற்று கொள்ள உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வடக்கு மாகாண சபை தேர்தல் 2011 ஆம் ஆண்டு இடம் பெறும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். தமது முதலாம் தவணை காலத்தின் போது பயங்கரவாதத்தை ஒழித்து சமாதானத்திற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளதாக ஜனாதிபதி இந்த செவ்வியின் போது தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது ஒரே நாடு என்ற கோட்பாட்டுக்குள் வந்துள்ளது. எனவே மக்களின் மனதை வெல்வதும் அபிவிருத்தியை முன் கொண்டு சென்று மக்களுக்கு அதன் மூலம் பயன் பெற்று கொடுப்பதுமே தமது இரண்டாம் தவணையின் நோக்கம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வடக்கில் இருந்து இடம் பெயர்ந்த மூன்று லட்சம் பேரில் தற்சமயம் 18 ஆயிரம்  பேரே இடம் பெயர்ந்த முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களில் 10 ஆயிரம் பேரையாவது இந்த வருட இறுதிக்குள் மீள்குடியேற்ற முடியும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கடந்தவை கடந்தவைகளாகவே இருக்கட்டும்.

இந்தநிலையில் எதனையும் சாதகமாக பார்பதை விடுத்து பாதகமாக பார்க்க கூடாது என தெரிவித்த ஜனாதிபதி வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்கு சர்வதேச நாடுகள் உதவியளிக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

இதன் மூலம் இனங்களுக்கிடையிலான விரிசலை குறைக்க முடியும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். இதேவேளை முன்னாள் இராணுவ தளபதியின் மருமகனான தனுன திலகரட்ண ஆயுத கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுபவர் என தமக்கு தெரிந்திருந்தால் அதற்கு உரிய நடவடிக்கைகளை தாம் எடுத்திருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தனுன திலகரட்ணவிற்கு ஆலோசனைகளையும் எச்சரிக்கைகளையும் வழங்கி இருக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவின் இரு தலப்பட்சமான பொறுப்புக்களை கருத்திற் கொள்ளும் போது அவர் அந்த விடயங்களோடு செயற்படுவது கடினமான விடயம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ தளபதியோ அல்லது வேறு எவரோ தவறுகளை மேற்கொள்ளும் போது அதன் பிரதிபலன்களுக்கு முகங் கொடுக்க நேரிடும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சஹிந்து நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com